January 06, 2022

ஜபம்-பதிவு-680 (சாவேயில்லாத சிகண்டி-14)

 ஜபம்-பதிவு-680

(சாவேயில்லாத

சிகண்டி-14)

 

கிருபாச்சாரியார் :

என்ன

செய்யப் போகிறீர்கள்

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் தான்

செய்தது தவறு என்று

உணரச்

செய்யப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

எப்படி

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் தன்

மகள்களுக்காக நடத்தும்

சுயம்வரத்தில்

கலந்து

கொள்ளப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

கலந்து கொண்டு

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் மகள்கள்

மூன்று பேரையும்

கடத்தி கொண்டு

வரப்போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

கடத்தி வந்து

 

பீஷ்மர் :

விசித்திர வீர்யனுக்கு

திருமணம்

செய்யப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

இது தான்

உங்கள் முடிவா

பீஷ்மர் :

ஆமாம்

 

கிருபாச்சாரியார் :

இறுதியான முடிவா

 

பீஷ்மர் :

இல்லை

உறுதியான முடிவு

 

கிருபாச்சாரியார் :

சரியான முடிவு

என்றா

சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

தவறான முடிவை

என்றுமே

நான் எடுப்பதில்லை

 

கிருபாச்சாரியார் :

உங்கள் செயலை

இந்த உலகம்

தவறாக

எடுத்துக் கொண்டால்

 

பீஷ்மர் :

தவறாக

எடுத்துக் கொள்வதற்கு

வாய்ப்பே இல்லை

 

கிருபாச்சாரியார் :

இதனால்

அஸ்தினாபுரத்திற்கு

ஏற்பட்ட களங்கம்

தீர்ந்து விடுமா

 

பீஷ்மர் :

இனி வரும்

காலங்களில்

அஸ்தினாபுரத்திற்கு

அவமானத்தை

ஏற்படுத்தும்

செயல்களை யாரும்

செய்ய மாட்டார்கள்

 

அஸ்தினாபுரத்தை

அவமானப் படுத்தினால்

என்ன நடக்கும்

என்பது

நான் செய்யப் போகும்

செயல் ஒரு

பாடமாக அமையும்

 

அஸ்தினாபுரத்தை

அவமானப்

படுத்த வேண்டும்

என்ற எண்ணமே

யாருக்கும் தோன்றாது

தோன்றவும் கூடாது

 

கிருபாச்சாரியார் :

அமைதியாக இருக்கிறார்

 

(பீஷ்மர்

சத்தியவதியிடம்

செல்கிறார்)

 

பீஷ்மர் :

என்னை

ஆசிர்வதியுங்கள் தாயே

 

சத்தியவதி :

வெற்றி உண்டாகட்டும்

 

(தாய் சத்தியவதியிடம்

ஆசி பெற்ற

பீஷ்மர் வெளியே

வருகிறார்

 

ரதத்தில் ஏறுகிறார்

 

வேட்டைக்குச்

செல்லும்

ஒரு புலியென

 

இரை தேடச்

செல்லும்

ஒரு கழுகென

 

குமுறும்

எரிமலையென

 

ஆர்ப்பரிக்கும்

கடலென

 

ரகத்தை

விரைவாகச்

செலுத்தி

காசி நாட்டை

நோக்கி சென்று

கொண்டிருக்கிறார்

பீஷ்மர்

 

தன் நாட்டை

நோக்கி ஒரு

புயல் கிளம்பி

வருகிறது

என்பதையும்

அந்தப் புயல்

தன் நாட்டைத்

தாக்கப் போகிறது

என்பதையும்

அறியாமல்

காசி நாட்டு

மன்னன்

தன்னுடைய

மூன்று மகள்களின்

சுயம்வரத்தை

நடத்துவதற்கு

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்து

கொண்டிருந்தான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

ஜபம்-பதிவு-679 (சாவேயில்லாத சிகண்டி-13)

 ஜபம்-பதிவு-679

(சாவேயில்லாத

சிகண்டி-13)

 

(சத்தியவதியை

சந்திக்க வருகிறார்

பீஷ்மர்.

அறையில்

கிருபாச்சாரியார்

இருக்கிறார்)

 

பீஷ்மர் :

அவமானம்

ஏற்பட்டு விட்டது

 

கிருபாச்சாரியார் :

யாருக்கு

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்திற்கு

 

கிருபாச்சாரியார் :

யாரால் ஏற்பட்டது

 

பீஷ்மர் :

காசி நாடால்

 

கிருபாச்சாரியார் :

யார் ஏற்படுத்தினார்கள்

 

பீஷ்மர் :

காசிநாட்டு மன்னர்

 

கிருபாச்சாரியார் :

எதை வைத்து

சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

சுயம்வரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததை

வைத்து

 

கிருபாச்சாரியார் :

யாருடைய

சுயம்வரத்திற்கு

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன்

காசிராஜன்

மகள்களின்

சுயம்வரத்திற்கு

 

கிருபாச்சாரியார் :

ஏன்

அனுப்பவில்லை

 

பீஷ்மர் :

அவமதித்ததின்

காரணமான

 

கிருபாச்சாரியார் :

ஏன்

அவமதித்தார்கள்

 

பீஷ்மர் :

பழைய பகை

 

கிருபாச்சாரியார் :

பகை தொடர்கிறதா

 

பீஷ்மர் :

பகையை

அவர்கள் தொடர

விரும்புகிறார்கள்

 

கிருபாச்சாரியார் :

சரியான செய்தியா

 

பீஷ்மர் :

சரியான

செய்தி தான்

 

கிருபாச்சாரியார் :

எப்படி சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

உண்மையானவர்கள்

எனக்கு

நம்பிக்கையுடையவர்களாக

இருக்கின்ற

காரணத்தினால்

உண்மை எது

என்று

என்னால்

தெரிந்து கொள்ள

முடிகிறது

 

கிருபாச்சாரியார் :

இரண்டு

தினங்கள்

பொறுத்திருப்போம்

அவகாசம்

கொடுப்போம்

மனம்

மாறுவதற்கு

வாய்ப்பு

உண்டல்லவா

 

சத்தியவதி :

ஏற்கனவே

இதைப் பற்றி

நானும் பீஷ்மனும்

இரண்டு நாட்கள்

முன்பே

பேசியிருக்கிறோம்

 

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததைப் பற்றி

 

தேவையான

கால அவகாசம்

கொடுத்தாகி

விட்டது

 

காசி நாட்டு

மன்னன் மனம்

மாறவில்லை

மிகப்பெரிய

தவறு

செய்திருக்கிறான்

 

பீஷ்மர் :

செய்த தவறை

உணர வைப்போம்

 

கிருபாச்சாரியார் :

அதுவும்

சரியான வழியில்

இருக்க வேண்டும்

 

பீஷ்மர் :

தவறான வழியை

நான்

தேர்ந்தெடுப்பதே

இல்லை

 

கிருபாச்சாரியார் :

அஸ்தினாபுரத்திற்கு

என்று தனிப்பட்ட

பாராம்பரியம்

இருக்கிறது

 

மதிப்பு

இருக்கிறது

 

மரியாதை

இருக்கிறது

 

அது கெடாத

வண்ணம்

பார்த்துக்

கொள்ள வேண்டும்

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்திற்கு

ஏற்பட்ட

களங்கத்தை

துடைப்பதற்கு

முயல்கிறேன்

 

களங்கத்தை

ஏற்படுத்துவதற்காக

அல்ல

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

ஜபம்-பதிவு-678 (சாவேயில்லாத சிகண்டி-12)

 ஜபம்-பதிவு-678

(சாவேயில்லாத

சிகண்டி-12)

 

அமைச்சர்:

அஸ்தினாபுரத்துடன்

பகை வேண்டாம்

என்கிறேன்

 

காசி நாட்டு

மன்னன் :

அஸ்தினாபுரத்தில்

உள்ளவர்கள்

என்ன

நினைக்கிறார்கள்

 

அமைச்சர்:

அவர்களும்

பகை வேண்டாம்

என்று தான்

நினைக்கிறார்கள்

 

காசி நாட்டு

மன்னன் :

எப்படி சொல்கிறீர்கள்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லாததால்

அஸ்தினாபுரத்தில்

உள்ளவர்கள்

காசி நாட்டுக்கு

எதிராக எந்த ஒரு

விரும்பத்தகாத

செயலையும்

செய்யவில்லையே

அதை வைத்துத்

தான் சொல்கிறேன்

 

காசி நாட்டுக்கும்,

அஸ்தினாபுரத்திற்கும்

உள்ள

உறவு முறை

பகை என்ற

வாளால்

வெட்டப்பட

வேண்டாம் என்று

நினைக்கிறேன்

 

காசி நாட்டு

மன்னன் :

நானும்

அப்படித் தான்

நினைக்கிறேன்

 

அமைச்சர்:

என்னவென்று

 

காசி நாட்டு

மன்னன் :

அஸ்தினாபுரத்திற்கு 

அழைப்பிதழ்

அனுப்பவே

கூடாது என்று

 

அமைச்சர்:

இதனால்

ஏற்படக்கூடிய

பின்விளைவுகள்

 

காசி நாட்டு

மன்னன் :

என்னவென்று

எனக்கு தெரியும்

 

அமைச்சர்:

அத்தகைய

விரும்பத்தகாத

விளைவுகள்

ஏற்பட்டு

விடக்கூடாது

என்பதற்காகக்

கூறினேன்

 

காசி நாட்டு

மன்னன் :

என்னுடைய

மகள்களின்

திருமணத்தில்

அஸ்தினாபுரத்தைச்

சார்ந்தவர்கள் கலந்து

கொள்வதை நான்

விரும்பவில்லை

 

அதனால்

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

அனுப்பவும்

மாட்டேன்

 

அமைச்சர்:

முடிவை

மாற்றிக்

கொள்ளலாமே

 

காசி நாட்டு

மன்னன் :

மாற்றிக் கொண்டால்

 

அமைச்சர்:

நல்லது

 

காசி நாட்டு

மன்னன் :

யாருக்கு

 

அமைச்சர்:

மக்களுக்கு

நாட்டுக்கு

 

காசி நாட்டு

மன்னன் :

மாற்றிக் கொள்ளும்

எண்ணம் இல்லை

 

அமைச்சர்:

அமைச்சர் என்ற

முறையில்

என்னுடைய

கருத்தைச்

சொன்னேன்

 

உங்கள் விருப்பம்

எதுவோ

அதன்படியே

நடக்கட்டும்

 

காசி நாட்டு

மன்னன் :

நான் நினைப்பதை

நடத்திக்

கொண்டிருக்கிறேன்

வேறு ஏதேனும்

செய்தி உண்டா

 

அமைச்சர்:

இல்லை

 

காசி நாட்டு

மன்னன் :

என்னுடைய

மகள்களின் 

சுயம்வரத்தை

நடத்துவதற்குத்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்யுங்கள்

 

அமைச்சர்:

அப்படியே

ஆகட்டும்

 

(அந்த இடத்தை

விட்டு

அமைச்சர்

நகருகிறார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////