January 06, 2022

ஜபம்-பதிவு-674 (சாவேயில்லாத சிகண்டி-8)

 ஜபம்-பதிவு-674

(சாவேயில்லாத

சிகண்டி-8)

 

(சத்தியவதி

அறை-

சத்தியவதியைப்

பார்ப்பதற்காக

பீஷ்மர்

வருகிறார்)

 

பீஷ்மர் :

வணங்குகிறேன்

தாயே !

 

சத்தியவதி :

என் ஆசிர்வாதம்

உனக்கு

எப்போதும்

உண்டு மகனே

நீடூழி வாழ்க!

 

(ஆசிர்வாதம்

செய்கிறாள்)

 

விஷயம்

கேள்விப்பட்டாயா

மகனே?

 

பீஷ்மர் :

அனுதினமும்

இந்த

உலகத்தில்

ஆயிரக்கணக்கான

விஷயங்கள்

நடந்து கொண்டு

தானே

இருக்கிறது

 

அதில்

எதைப் பற்றிச்

சொல்கிறீர்கள்

தாயே

 

சத்தியவதி :

நான் சொல்ல

வந்தது

 

காசி நாட்டைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜனைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜனின்

மூன்று

மகள்களைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜன்

தன் மூன்று

மகள்களான

 

அம்பை,

அம்பிகை,

அம்பாலிகை

 

ஆகியோருக்கு

திருமணம்

செய்வதற்காக

சுயம்வரம்

நடத்துவதற்கான

ஏற்பாடுகளைச்

செய்து

கொண்டிருப்பதைப்

பற்றி

 

அனைத்து

நாடுகளுக்கும்

அழைப்பிதழ்

அனுப்பி விட்டு

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததைப்

பற்றி

 

பீஷ்மர் :

ஒரு வேளை

அஸ்தினாபுரத்தில்

திருமண

வயது வந்த

அரசர்கள்

இளவரசர்கள்

யாரும் இல்லை

என்று நினைத்து

இருக்கலாம்

 

சத்தியவதி :

விசித்ர வீர்யன்

இருப்பதை

மறந்து

விட்டார்களா

 

பீஷ்மர் :

மறந்து விட்ட

காரணத்தினால்

தான் காசி

நாட்டு மன்னன்

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

என்று

நினைக்கிறீர்களா?

 

சத்தியவதி :

வேறு என்ன

நினைக்கத்

தோன்றும்?

 

பீஷ்மர் :

அழைப்பிதழ்

அனுப்பி

இருப்பார்கள்.

வருவதற்கு

காலதாமதம்

ஏற்பட்டு

இருக்கிறது

இரண்டு மூன்று

நாள்களில்

வந்துவிடும்

என்று

கூட

நினைக்கலாமே

 

சத்தியவதி :

நான் அவ்வாறு

நினைக்கவில்லை

 

பீஷ்மர் :

ஏன்

 

சத்தியவதி :

நம் நாட்டை

விட்டு

வெகுதூரத்தில்

உள்ள

நாடுகளுக்கு

எல்லாம்

அழைப்பிதழ்

சென்று

இருக்கிறதே

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரம்

அருகில்

உள்ள நாடு

தானே

அழைப்பிதழை

பொறுமையாக

அனுப்பலாம்

 

தொலை தூர

நாடுகளுக்கு

முதலில்

அழைப்பிதழ்

அனுப்பலாம்

என்று

முடிவெடுத்து

இருக்கலாம்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment