January 06, 2022

ஜபம்-பதிவு-676 (சாவேயில்லாத சிகண்டி-10)

 ஜபம்-பதிவு-676

(சாவேயில்லாத

சிகண்டி-10)

 

பீஷ்மர் :

இரண்டு

தினங்களுக்குள்

 

சத்தியவதி :

அதுவரை

 

பீஷ்மர் :

பொறுத்திருப்போம்

 

சத்தியவதி :

எதற்காக

 

பீஷ்மர் :

இரண்டு

தினங்களுக்குள்

மாற்றம் நிகழலாம்

அல்லவா

 

சத்தியவதி :

மாற்றம்

நிகழுமா

 

பீஷ்மர் :

சில

விஷயங்களை

நாம்

காலத்திடம்

ஒப்படைத்து

விட வேண்டும்

 

காலம் தான்

அனைத்திற்கும்

மருந்து

 

காலம் தான்

அனைத்து

பிரச்சினைகளுக்கும்

தீர்வு

 

காலம் தான்

அனைத்து

கேள்விகளுக்கும்

விடை

தர முடியும்

 

குற்றம்

சுமத்தப்பட்ட

குற்றவாளிக்கு

அவன்

குற்றமற்றவன்

என்பதை

நிரூபிக்க

வாய்ப்பு

தரப்படும் போது

ஏன்

காசி நாட்டு

மன்னனுக்கு

நாம் ஒரு

வாய்ப்பு

தரக்கூடாது

அவன் தன்னை

குற்றமற்றவன்

என்பதை

நிரூபிக்க

 

காசி நாட்டு

மன்னனுக்கு

இரண்டு

தினங்கள்

தருவோம்

 

அழைப்பிதழ்

வரவில்லை

எனில்

அவன் குற்றவாளி

என்று முடிவு

எடுப்போம்

 

அழைப்பிதழ்

வந்தால்

அவன்

குற்றமற்றவன்

என்று

முடிவு

எடுப்போம்

 

காத்திருப்போம்

 

இரண்டு தினங்கள்

பொறுத்திருப்போம்

 

பின்னர் முடிவு

எடுப்போம்

 

சத்தியவதி :

அழைப்பிதழ்

வரவில்லை

எனில்

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும்

நாட்டுக்கு

எத்தகைய

விளைவுகள்

ஏற்படும்

என்பதை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து

கொள்வார்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment