January 06, 2022

ஜபம்-பதிவு-680 (சாவேயில்லாத சிகண்டி-14)

 ஜபம்-பதிவு-680

(சாவேயில்லாத

சிகண்டி-14)

 

கிருபாச்சாரியார் :

என்ன

செய்யப் போகிறீர்கள்

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் தான்

செய்தது தவறு என்று

உணரச்

செய்யப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

எப்படி

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் தன்

மகள்களுக்காக நடத்தும்

சுயம்வரத்தில்

கலந்து

கொள்ளப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

கலந்து கொண்டு

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன் மகள்கள்

மூன்று பேரையும்

கடத்தி கொண்டு

வரப்போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

கடத்தி வந்து

 

பீஷ்மர் :

விசித்திர வீர்யனுக்கு

திருமணம்

செய்யப் போகிறேன்

 

கிருபாச்சாரியார் :

இது தான்

உங்கள் முடிவா

பீஷ்மர் :

ஆமாம்

 

கிருபாச்சாரியார் :

இறுதியான முடிவா

 

பீஷ்மர் :

இல்லை

உறுதியான முடிவு

 

கிருபாச்சாரியார் :

சரியான முடிவு

என்றா

சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

தவறான முடிவை

என்றுமே

நான் எடுப்பதில்லை

 

கிருபாச்சாரியார் :

உங்கள் செயலை

இந்த உலகம்

தவறாக

எடுத்துக் கொண்டால்

 

பீஷ்மர் :

தவறாக

எடுத்துக் கொள்வதற்கு

வாய்ப்பே இல்லை

 

கிருபாச்சாரியார் :

இதனால்

அஸ்தினாபுரத்திற்கு

ஏற்பட்ட களங்கம்

தீர்ந்து விடுமா

 

பீஷ்மர் :

இனி வரும்

காலங்களில்

அஸ்தினாபுரத்திற்கு

அவமானத்தை

ஏற்படுத்தும்

செயல்களை யாரும்

செய்ய மாட்டார்கள்

 

அஸ்தினாபுரத்தை

அவமானப் படுத்தினால்

என்ன நடக்கும்

என்பது

நான் செய்யப் போகும்

செயல் ஒரு

பாடமாக அமையும்

 

அஸ்தினாபுரத்தை

அவமானப்

படுத்த வேண்டும்

என்ற எண்ணமே

யாருக்கும் தோன்றாது

தோன்றவும் கூடாது

 

கிருபாச்சாரியார் :

அமைதியாக இருக்கிறார்

 

(பீஷ்மர்

சத்தியவதியிடம்

செல்கிறார்)

 

பீஷ்மர் :

என்னை

ஆசிர்வதியுங்கள் தாயே

 

சத்தியவதி :

வெற்றி உண்டாகட்டும்

 

(தாய் சத்தியவதியிடம்

ஆசி பெற்ற

பீஷ்மர் வெளியே

வருகிறார்

 

ரதத்தில் ஏறுகிறார்

 

வேட்டைக்குச்

செல்லும்

ஒரு புலியென

 

இரை தேடச்

செல்லும்

ஒரு கழுகென

 

குமுறும்

எரிமலையென

 

ஆர்ப்பரிக்கும்

கடலென

 

ரகத்தை

விரைவாகச்

செலுத்தி

காசி நாட்டை

நோக்கி சென்று

கொண்டிருக்கிறார்

பீஷ்மர்

 

தன் நாட்டை

நோக்கி ஒரு

புயல் கிளம்பி

வருகிறது

என்பதையும்

அந்தப் புயல்

தன் நாட்டைத்

தாக்கப் போகிறது

என்பதையும்

அறியாமல்

காசி நாட்டு

மன்னன்

தன்னுடைய

மூன்று மகள்களின்

சுயம்வரத்தை

நடத்துவதற்கு

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்து

கொண்டிருந்தான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment