December 12, 2021

VEDHACHALAM-UFT-COMPUTER-DONATION

 அன்பிற்கினியவர்களே !

UNIFIED FORCE

TRUST-னால்

செயல்படுத்தப்பட்டு

நடைமுறைப்

படுத்தப்பட்ட

அதன்

நலத்திட்டங்கள்

அதன்

செயல்பாடுகள்

அதன்

நடவடிக்கைகள்

ஆகியவற்றை

முறைப்படி

இந்திய

அரசியலப்புச்

சட்டத்திற்கு

உட்பட்டு ஆவணப்

படுத்துவதற்கு

UNIFIED FORCE

TRUST-க்காக

திரு.K.வேதாச்சலம்

அவர்கள்

வாங்கிக் கொடுத்த

ஐம்பதாயிரம்

ரூபாய்

(ரூ.50,000/-)

மதிப்புள்ள

கணிப்பொறியை

(COMPUTER)

 

(1) THIRU.

P.PRATHIBA

FOUNDER/

MANAGING TRUSTEE

UNIFIED FORCE TRUST

 

(2) THIRU.

K.BALAGANGADHARAN

HONORARY SECRETARY

UNIFIED FORCE TRUST

 

(3) THIRU.

M.SARAVANAN

MANAGER (PROJECT)

UNIFIED FORCE TRUST

 

(4) THIRU.

M.RAJESH

JOINT MANAGER

(PROJECT)

UNIFIED FORCE TRUST

 

(5) THIRU.

KRISHNAKUMAR

MEMBER

UNIFIED FORCE TRUST

 

(6) THIRU.

RAJA

MEMBER

UNIFIED FORCE TRUST

 

ஆகியோர்

பெற்றுக் கொண்டனர்

 

திரு.K.வேதாச்சலம்

அவர்கள்

UNIFIED FORCE

TRUST-ன் மீது

அதிக அளவு

அன்பும்

மரியாதையும்

கொண்டு அதன்

செயல்பாடுகளில்,

நடவடிக்கைகளில்,

தன்னை

அர்ப்பணித்துக்

கொண்டவர்;

அமைதியே

உருவானவர் ;

அன்புள்ளம்

கொண்டவர் ;

ஆன்மீகத்தில்

உயர்ந்தவர் ;

பண்பில்

சிறந்தவர் ;

உழைப்பால்

உயர்ந்தவர் ;

பழகுவதற்கு

இனியவர் ;

ஒழுக்கத்தில்

சிறந்தவர்;

 

இத்தகைய

உயர்ந்த

பண்புகளைக்

கொண்ட

திரு.K.வேதாச்சலம்

அவர்களுக்கு

UNIFIED FORCE

TRUST

சார்பாக

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

----என்றும் அன்புடன்

-----K.BALAGANGADHARAN

-----HONORARY SECRETARY

-----UNIFIED FORCE TRUST

 

-----12-12-2021

//////////////////////////////////////////////















November 17, 2021

பதிவு-7-முடிவும்- திருக்குறள்

 பதிவு-7-முடிவும்-

திருக்குறள்

 

விழாவை

தொடங்குவதற்கு

முன்பு,

விழாவை

நடத்தும் போது,

விழாவை

நடத்தி

முடித்த பின்பு

என்று மூன்று

நிலைகளில் எப்படி

செயல்பட

வேண்டும்

என்பதை அறிந்து

திட்டம் தீட்டி

விழாவினை

நடத்தும்

போது தான்

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்,

 

எந்த ஒரு

விழாவினை

எடுத்துக்

கொண்டாலும்

பல பேர்கள்

பல செயல்களைச்

செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள்

உழைப்பை

கொடுத்திருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள் அறிவைப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்,

எவ்வளவு

பணத்தை

ஒவ்வொருவரும்

செலவு செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

எந்த ஒரு

விழாவினையும்

நடத்துவது

எவ்வளவு சிரமம்

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

அவ்வளவு

எளிதாக நடத்தி

விட முடியாது

என்பதையும்,

ஒரு விழாவினை

நடத்துவதற்கு

பல பேருடைய

ஒத்துழைப்பு

தேவை

என்பதையும்,

பல பேர்கள்

ஒன்று பட்டு

ஒற்றுமையாக

இணைந்து

செயல்களைச்

செய்தால் தான்

விழாவினை

நடத்த முடியும்

என்பதையும்,

தனிப்பட்ட

ஒருவரால்

எந்த ஒரு

விழாவினையும்

நடத்த முடியாது

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

தலைமை ஏற்று

நடத்துபவருக்கு

பொறுமை

நிதானம்,

தொலைநோக்கு

பார்வை,

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்,

அனைவரையும்

கட்டுப் படுத்தும்

திறமை

ஆகிய ஐந்தும்

இருக்க வேண்டும்

என்பதையும்

தெரிந்து

கொள்ளலாம்.

 

எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

அந்த செயலை

செய்யும் போது

ஏற்படும்

தடைகள்

முடிவில்

கிடைக்கும் பயன்

ஆகியவற்றை

எண்ணிப் பார்த்து

பிறகே செய்தல்

வேண்டும்

என்பதைத் தான்

 

“”முடிவும்

இடையூறும்

முற்றியாங்கு

எய்தும்

படுபயனும்

பார்த்துச்

செயல்”””

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

பதிவு-6-முடிவும்- திருக்குறள்

 பதிவு-6-முடிவும்-

திருக்குறள்

 

விழாவில்

எடுக்கப்பட்ட

புகைப்படங்கள்,

வீடியோக்கள்

ஆகியவற்றை வாங்கி

பத்திரப்படுத்தி

வைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல

விழாவிற்கான

அழைப்பிதழையும்

பத்திரப்படுத்தி

வைக்க வேண்டும்.

இவைகள் தான்

நாம் விழாவை

நடத்தியதற்கான

ஆவணங்கள்

மற்றும்

நம்முடைய

மறக்க முடியாத

நினைவுகள் ஆகும்.

 

விழா

நடத்துவதற்கு

முன்பு

விழாவை

இப்படித் தான்

நடத்த வேண்டும்,

இந்த

வரிசையில் தான்

நடத்த வேண்டும்,

என்று

துல்லியமாக

எவ்வளவு தான்

திட்டம் போட்டு

முறைப்படி செய்து

இருந்தாலும்

விழாவை

நடத்தும் போது

நாம் போட்ட

திட்டத்தின் படி

வரிசையாக

நடக்கவே நடக்காது.

நடப்பதற்கு

வாய்ப்பே இல்லை

பல நிகழ்வுகள்

மாறி மாறித் தான்

நடந்து இருக்கும்.

 

எந்த ஒரு

விழாவை

எடுத்துக்

கொண்டாலும்,

விழாவை நடத்த

வேண்டும் என்று

திட்டம்

போட்டாலும்,

விழாவை

நடத்தினாலும்,

விழாவை நடத்தி

முடித்தாலும்

அதில் இரண்டு

பேர்கள் கண்டிப்பாக

இருப்பார்கள்

 

ஒருவர்      :

அறிவுரை

சொல்பவர்

இரண்டாமவர்  :

குறை சொல்பவர்

 

அறிவுரை

சொல்பவர் யார்

குறை

சொல்பவர் யார்

என்பதைக்

கண்டறியத் தெரிந்து

வைத்திருக்க

வேண்டும்.

வேறுபாடு காண

தெரிந்து வைத்து

இருக்க வேண்டும்

 

நம்முடைய நலனில்

அக்கறை கொண்டவர்

அறிவுரை சொல்வார்.

நம் மேல்

பொறாமைப்படுபவர்

குறை சொல்வார்.

 

அறிவுரையில்

வாழ்த்துவதும்

இருக்கும்,

திட்டுவதும் இருக்கும்.

ஆனால்

குறை

சொல்வதில்

குறை சொல்வது

மட்டும் தான்

இருக்கும்.

 

அறிவுரை

சொல்பவர்களையும்,

குறை

சொல்பவர்களையும்

பேதம் பிரித்து

பார்க்கக்

கற்றுக் கொண்டு

குறை

சொல்பவர்களின்

குறைகளை

காதில் வாங்கிக்

கொள்ளாமல்,

அறிவுரை

சொல்பவர்களின்

அறிவுரைகளைக்

காது கொடுத்து

கேட்டு அதை

செயல்படுத்தினால்

நாம் நடத்தும்

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும்

நன்மையாகத்

தான் முடியும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

பதிவு-5-முடிவும்- திருக்குறள்

 பதிவு-5-முடிவும்-

திருக்குறள்

 

விழாவிற்கு

வருபவர்களின்

வயிறு

நிறைந்தால் தான்

அவர்கள்

மகிழ்ச்சியாக

இருப்பார்கள்.

அவ்வாறு

மகிழ்ச்சியாக

இருக்கும்

போது தான்

விழாவினை

விழாவை

மகிழ்ச்சியாக

கண்டு களிப்பார்கள்

விழாவை

ரசிப்பார்கள்

விழா

நடத்தியவர்களை

போற்றுவார்கள்

எனவே, இந்த

விஷயத்தில்

அதிக கவனம்

செலுத்த வேண்டும்.

 

பணத்தை பற்றி

கவலைப்படாமல்

நல்ல

சாப்பாட்டிற்கு

ஏற்பாடு

செய்ய வேண்டும்.

 

விழாவினை

போட்டோ

எடுப்பதற்கும்,

வீடியோ

எடுப்பதற்கும்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்ய வேண்டும்.

ஏனென்றால்,

போட்டோக்களும்,

வீடியோக்களும் தான்

நம்முடைய

நினைவுகளாக

இருக்கக்

கூடியவைகள்

என்பதை

கவனத்தில் கொண்டு

அதற்கு

தனிக் கவனம்

செலுத்த வேண்டும்.

 

விழா முடிந்து

செல்பவர்கள்

அவர்கள்

செல்ல வேண்டிய

இடங்களுக்குச்

செல்லத் தேவையான

நடவடிக்கைகளை

மேற்கொள்ள

வேண்டும்.

 

பொதுவாக

சொல்ல வேண்டும்

என்றால்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி,

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

விழாவினை

நடத்துவதற்கு

தனித்திறமை

வேண்டும்

துணிச்சல்

வேண்டும்.

திறமை

வேண்டும்.

தலைமைப் பண்பு

வேண்டும்.

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை வேண்டும்.

இவைகள்

இருந்தால் மட்டுமே

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்

 

மூன்று :

விழா நடத்துவதற்கு

முன்பு விழாவிற்கு

எவ்வளவு பணம்

செலவு ஆகும்.

எவ்வளவு பணத்தை

செலவு செய்ய

வேண்டும் என்று

கணக்கு போட்டு

வைத்திருந்தோமோ

அதை விட

கூடுதலாகத் தான்

பணம் செலவு

ஆகுமே தவிர

குறைவாக

செலவு ஆகாது.

 

விழாவிற்குரிய

விழா

நிகழ்வுகளை

நடத்துவதற்கு

யாருக்கு எல்லாம்

ஏற்கனவே பணம்

கொடுத்து

இருக்கிறோமோ

அவர்களுக்கு

எல்லாம் விழா

முடிந்தவுடன்

மீதி எவ்வளவு

பணம் கொடுக்க

வேண்டுமோ

அவ்வளவு பணத்தை

கணக்குப் பார்த்து

கொடுக்க வேண்டும்,

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////