February 13, 2020

பரம்பொருள்-பதிவு-130


            பரம்பொருள்-பதிவு-130

(கிருஷ்ணன்
பாண்டவர்களை
சந்திக்க செல்கிறார்
பாண்டவர்கள்
கிருஷ்ணனை
வரவேற்று உபசரித்து
அவரிடம் பேசத்
தொடங்குகின்றனர்)

பீமன் :
“எல்லாம்
நல்லபடியாக
முடிந்ததா பரந்தாமா ?”

கிருஷ்ணன் :
“நல்லது எது
என்பதை புரிந்து
கொள்ள முயற்சி
செய்யாதவர்கள்
இருக்கும் போது
எப்படி அனைத்தும்
நல்லபடியாக முடியும் ?”

பீமன் :
“நல்லதை
சொல்வதற்கு நீங்கள்
இருந்துமா
இப்படி நடக்கிறது “

கிருஷ்ணன் :
“நல்லது சொல்வதற்கு
நான் எப்போதும்
தயாராகத் தான்
இருக்கிறேன்
ஆனால் - அதைக்
கேட்டு நடப்பதற்கத்
தான் யாரும்
தயாராக இல்லை.”

பீமன் :
“அரவானை
சந்தித்தீர்களா  ?”

கிருஷ்ணன் :
“சந்தித்தேன்”

பீமன்:
“துரியோதனனுக்காக
களப்பலி ஆக
வேண்டாம் என்று
சொன்னீர்களா  ? “

கிருஷ்ணன் :  
“துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே
என்று நான் எப்படி
சொல்ல முடியும்  ?  “

“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறான்
அரவானால்
கொடுத்த வாக்கை
மீற முடியாது  ;
நானும் கொடுத்த
வாக்கை மீறச்
சொல்ல முடியாது ;”

“அதனால் அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும்  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும் ;
எடுத்துச் சொன்னேன் “

“நான் சொன்னதில்
உள்ள நியாய
தர்மங்களைப்
புரிந்து கொண்ட
அரவான்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
அரவானைக்
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று எனக்கு வாக்கு
கொடுத்திருக்கிறான் “

தர்மர் :
“ஏதேனும் ஒரு
செயலைச் செய்து
பச்சிளம் பாலகனான
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
செயலைச் செய்ய
முடியாதா பரந்தாமா ? “

“போரில் வெற்றி
பெறுவதற்காகத்
தானே களப்பலி
கொடுக்கிறோம்
அதற்கு காட்டெருமை
யானை பன்றி
குதிரை ஆடு
கோழி மான்
போன்றவைகளை
பலி கொடுக்கலாமே ?”

“எதற்காக அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆடு மாடுகளை
பலியாகக்
கொடுப்பதற்கு
இந்த போரை என்ன
சாதாரணமான போர்
என்று நினைத்து
விட்டாயா ? - தர்மா
நடைபெறப்போவது
குருஷேத்திரப் போர் “

“போரின் முடிவு
எப்படி இருக்கும்
என்பதை யாராலும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாத
குருஷேத்திரப் போர் “

“இந்த உலகம்
இதுவரை கண்டிராத
இனியும் காண
முடியாத
மிகப்பெரிய
குருஷேத்திரப் போர் “

“உலகமே
இரண்டாகப் பிரிந்து
கெளரவர்கள் அணி
ஒரு புறமாகவும் ;
பாண்டவர்கள் அணி
ஒரு புறமாகவும்
நின்று போர்
செய்யப் போகும்
மிக உக்கிரமான
குருஷேத்திரப் போர் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------13-02-2020
//////////////////////////////////////////