November 02, 2020

அறிய வேண்டியவை-157

 

ஜபம்-பதிவு-649

(அறிய வேண்டியவை-157)

 

கர்ணன் :

“இவர்களை ஏன்

இவ்வாறு

சொல்கிறீர்கள்?”

 

“ஏன் இவ்வளவு

கடினமாக

வார்த்தைகளைப்

பயன்படுத்தி

அவர்களை

இழிவு படுத்தும்

விதத்தில்

பேசுகிறீர்கள்?”

 

“இவர்கள்

நால்வரும்

தான்

அஸ்தினாபுரத்தின்

தூண்கள்”

 

“அஸ்தினாபுரத்தின்

நம்பிக்கை

நட்சத்திரங்கள்”

 

“இந்த

சமுதாயத்தில்

உள்ள

அனைவராலும்

மதிக்கப்படுபவர்கள்”

 

சகுனி ;

“இந்த

சமுதாயத்தால்

மதிக்கப்படுபவர்கள்

என்று சொல்லாதே

கர்ணா !”

 

“இந்த

சமுதாயம்

தன்னை

மதிக்க வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள்

என்று சொல்”

 

“இந்த சமுதாயம்

தன்னை மதிக்க

வேண்டும் என்று

இரட்டை

வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினால் தான்

அவர்கள்

நால்வரையும்

போலியான

வாழ்க்கை

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்தில்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ

முடியாதவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்தில்

தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக்

கொண்டு

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்திற்கு

பயந்து கொண்டு

இரட்டை

வாழ்க்கை

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“அதனால் தான்

பீஷ்மர்

துரோணர்

விதுரர்

கிருபர்

ஆகிய

நால்வரையும்

போலியான

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

கர்ணன் :

“ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள்?”

 

சகுனி :

“மாற்று

பாலினத்தவர்களைப்

பற்றி நான்

இவ்வளவு

விளக்கங்கள்

கொடுத்தும்

இன்னும் நீ

இந்த

நால்வரையும்

புரிந்து

கொள்ளவில்லையா

கர்ணா !”

 

கர்ணன் :

“நீங்கள்

என்ன சொல்ல

வருகிறீர்கள்

என்பதை

என்னால்

புரிந்து கொள்ள

முடியவில்லை”

 

துரியோதனன் :

“என்னாலும்

புரிந்து கொள்ள

முடியவில்லை

மாமா

அவர்களே !”

 

சகுனி :

“சரி நான்

சொல்வதைக்

கேளுங்கள்”

 

(என்று சொல்ல

ஆரம்பித்தார்

சகுனி)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-156

 

ஜபம்-பதிவு-648

(அறிய வேண்டியவை-156)

 

சகுனி :

“அர்த்தம் இல்லாத

எந்த ஒரு

வார்த்தையையும்

இந்த சகுனி

பயன்படுத்த

மாட்டான் என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா”

 

“இந்த சகுனியின்

வாயிலிருந்து

ஒரு வார்த்தை

வருகிறது என்றால்

அதில் ஆயிரம்

அர்த்தங்கள் இருக்கும்

ஆயிரம்

அர்த்தங்களைக் கொண்ட

ஒரு வார்த்தையை

இந்த சகுனி

பேசினான் என்றால்

அதற்கு பின்னால்

மிகப்பெரிய திட்டம்

இருக்கும் என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா?”

 

“ஒரு விஷயத்தை

இவ்வளவு தெளிவாக

யோசித்து உனக்கு

சொல்கிறேன் என்றால்

அதன் பின்னால்

உள்ள காரணத்தை

நீ அறிவில்லையா

கர்ணா!”

 

கர்ணா :

“நீங்கள் பேசும்

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தை

என்னால்

புரிந்து கொள்ள

முடியவில்லை

காந்தார அரசே!”

 

சகுனி :

“சகுனியின்

வார்த்தையில்

உள்ள

அர்த்தத்தை

நீ

புரிந்து கொள்ள

வேண்டும்

என்றால்

கர்ணா

நீ

சகுனியாக

இருக்க

வேண்டும்”

 

“நீ

சகுனியாக

மாறாமல்

கர்ணா

உன்னால்

இந்த சகுனியின்

வார்த்தையில்

உள்ள

அர்த்தத்தை

உன்னால்

புரிந்து கொள்ள

முடியாது

கர்ணா !”

 

துரியோதனன் :

“இப்போது

என்ன செய்ய

வேண்டும்

மாமா

அவர்களே!”

 

சகுனி :

“அப்படி கேள்

என் அன்பு

மருமகனே!”

 

“பீஷ்மர்,

துரோணர்,

விதுரர்,

கிருபர்

ஆகிய இந்த

நான்கு பேரும்

உண்மையான

வாழ்க்கையை

வாழ்வதாக

இந்த சமுதாயத்தை

நம்ப வைத்துக்

கொண்டு போலியான

வாழ்க்கையை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள்

நான்கு பேரும்

போலியாக

தங்களுடைய

வாழ்க்கையை

நடத்திக்

கொண்டிருப்பவர்கள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து

இரட்டை வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழாமல்

வாழ்வதற்கு

தைரியம் இல்லாமல்

போலியாக

வாழ்க்கையை

ஓட்டிக்

கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள்

நால்வரும்

தைரியம்

இல்லாத கோழைகள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழும் கோழைகள்”

 

“தன்னுடைய

உணர்வுகளை

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வெளிப்படுத்தி

வாழ முடியாத

கோழைகள்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-155

 

ஜபம்-பதிவு-647

(அறிய வேண்டியவை-155)

 

“இத்தகைய

செயல்கள்

அனைத்தையும்

கண்டாலும்,

இதே நிலை தான்

தனக்கும் ஏற்படும்

என்பதை

உணர்ந்திருந்திருந்தாலும் 

தன்னுடைய பாலினத்தை

ஆணிலிருந்து

பெண்ணாக

மாற்றி - தான்

பெண்ணாக மாறி

இந்த உலகத்தில்

வாழும் போது

தனக்கும்

கிடைக்கும் என்பது

தெரிந்திருந்தும்

ஒருவர்

ஆணிலிருந்து

பெண்ணாக

மாறுகிறார் என்றால்

அவர் எத்தகைய

மனதைரியம்

கொண்டவராக

இருக்க வேண்டும்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து

இந்த சமுதாயத்தின்

முன்னிலையில்

ஆணாகவும்

இந்த சமுதாயம்

பார்க்காத போது

மறைவாக

பெண்ணாகவும்

வாழாமல்

இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

பெண்ணாகத்

தான் வாழ்வேன்”

 

“இந்த சமுதாயத்திற்குப்

பயந்து சில

இடங்களில்

ஆணாகவும்

சில இடங்களில்

பெண்ணாகவும்

போலியாக வாழ்க்கை

வாழ மாட்டேன்

 

“இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

பெண்ணாகத்

தான் வாழ்வேன்”

 

“இந்த சமுதாயம்

தன்னை

நல்லவராகவோ

அல்லது

கெட்டவராகவோ

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழாமல்

இந்த சமுதாயம்

தன்னை

இப்படித் தான்

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழாமல்

இந்த சமுதாயம்

தன்னை மனிதராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்வேன்”

 

“இந்த சமுதாயத்தின்

எல்லா இடங்களிலும்

பெண்ணாகத் தான்

வாழ்வேன்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்வேன்

உண்மையாக

வாழ்க்கையைத்

தான் வாழ்வேன்

என்று

இந்த சமுதாயத்தில்

வாழ்ந்து

கொண்டிருக்கும்

மாற்று

பாலினத்தவர்கள்

இந்த சமுதாயத்தில்

தன்னுடைய

வாழ்க்கையை

உண்மையாக

வாழ்பவர்கள்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள்”

 

“இந்த

மாற்று

பாலினத்தவர்கள்

தான் தன்னுடைய

வாழ்க்கையை

உண்மையாக

வாழ்பவர்களுக்கு

இந்த சமுதாயத்தில்

எடுத்துக் காட்டாக

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“அவர்கள்

இந்த சமுதாயத்திற்கு

உண்மையாக

வாழ்க்கையை

வாழ்பவர்களுக்கு

உதாரணமாக

இருப்பவர்கள்”

 

கர்ணன் :

“எதற்காக இதை

இப்போது சொல்கிறீர்கள்”

 

“இதை சொல்ல

சொல்ல வேண்டிய

அவசியம் இப்போது

என்ன நேர்ந்தது”

 

“இதை சொல்வதற்கு

காரணம் என்ன?”

 

சகுனி :

“இந்த சகுனி

எந்த ஒரு

வார்த்தையையும்

தேவையில்லாமல்

பேசமாட்டான்

என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா?”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-154

 

ஜபம்-பதிவு-646

(அறிய வேண்டியவை-154)

 

“அவர்கள் தான்”

 

“ஆணிலிருந்து

பெண்ணாகவும்

பெண்ணிலிருந்து

ஆணாகவும்

மாறியவர்கள் தான்”

 

“அவர்கள் தான்”

 

“மாற்று

பாலினத்தவர்கள் தான்

இந்த சமுதாயத்தில்

உண்மையாக

வாழ்பவர்களுக்கு

எடுத்துக்காட்டாக

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள் ;

தன்னுடைய

வாழ்க்கையை

போலியாக வாழாமல்

உண்மையாக

வாழ்பவர்கள் ;

தன்னுடைய

வாழ்க்கையை

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள் ;”

 

“தனக்குள் எழுந்த

உணர்வுகளை

உணர்ந்து

அதற்கு உயிர்

கொடுத்து வாழ்பவர்கள் ;

தன்னுடைய ஆசையின்

முக்கியத்துவத்தை

உணர்ந்து

அந்த ஆசையின்

வடிவமாகவே

வாழ்பவர்கள் ;

தாங்கள்

எப்படி வாழ

வேண்டும் என்று

நினைக்கிறார்களோ

அப்படியே

தன்னை

மாற்றிக் கொண்டு

தங்களுடைய

வாழ்க்கையை

வாழ்பவர்கள் “

 

“இந்த சமுதாயத்தில்

ஆணாகப் பிறந்து

ஆணுக்குரிய உடலுடன்

இருக்கும் ஒருவர்

ஒரு குறிப்பிட்ட

வயதில் அவருடைய

உடலுக்குள்

பெண்ணுக்குரிய

தன்மைகள்

உணர்வுகளாக

பூத்துக் குலுங்கும் போது ;

தனக்குள்

பெண்ணுக்குரிய

மாற்றங்கள்

ஏற்படுவதைக் கண்டு ;

பெண்ணிற்குள்ள

உணர்வுகள் தனக்குள்

மலருவதைக் கண்டு ;

தனக்குள் ஏற்படும்

பெண்ணுக்குரிய

மாற்றத்தை கண்டு ;

தனக்குள் இருக்கும்

பெண்மையின்

உணர்வுகளைக் கண்டு ;

அந்த பெண்மையை

ஆண் என்ற

உடலுக்குள்

மறைத்துக் கொள்ளாமல்

பெண்ணுக்குரிய

உடலாக

தன்னை

மாற்றிக் கொண்டு

பெண் தன்மையை

வெளிப்படுத்த வேண்டும்

என்று நினைக்கும்

அளவில்

இந்த சமுதாயத்தில்

ஏற்கனவே

ஆணிலிருந்து

பெண்ணாகவும்

பெண்ணிலிருந்து

ஆணாகவும்

மாறியவர்களையும்

பார்க்க நேரிடுகிறது “

 

“இவ்வாறு

மாறியவர்கள்

அடையும் கஷ்டம்

நிறைந்த வாழ்க்கையை

பார்க்க நேரிடுகிறது”

 

“அவர்களை

இந்த சமுதாயம்

எப்படி புறக்கணிக்கிறது

என்பதை பார்க்க

நேரிடுகிறது”

 

“அவர்களை

இந்த சமுதாயம்

எப்படி

இழிவு படுத்துகிறது

என்பதை

பார்க்க நேரிடுகிறது”

 

“பெற்றோர்களாலும்,

உடன்பிறந்தவர்களாலும்,

சுற்றத்தார்களாலும்,

நண்பர்களாலும்,

உறவினர்களாலும்

ஆதரிக்கப்படாமல்

புறக்கணிக்கப்பட்டு

தனியாக

இந்த சமுதாயத்தில்

அனாதையாக

விடப்பட்டு வாழ்ந்து

கொண்டிருப்பதைக்

காண நேரிடுகிறது”

 

“வசிப்பதற்குக் கூட

வீடில்லாமல்,

வாழ்வதற்கு

வேலை இல்லாமல்,

உண்ண உணவிற்கு

வழியில்லாமல்,

உடுத்துவதற்கு

நல்ல உடை

இல்லாமல்,

அன்பு காட்டுவதற்கு

நல்ல மனம்

படைத்தவர்

இல்லாமல்,

கனிவுடன் பேசுவதற்கு

கருணை இதயம்

கொண்டவர் இல்லாமல்,

உதவி செய்தவற்கு

உயர்ந்த குணம்

இல்லாதவர்கள்

இல்லாமல் அவர்கள்

படும் கஷ்டத்தைப்

பார்க்க நேரிடுகிறது”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////