April 04, 2020

144-கடிதம்


அன்பிற்கினியவர்களே,

கொரோனா வைரஸ்
தொற்று காரணமாக
144 தடையுத்தரவு
போட்டதால்
வீட்டில் தனிமையில்
இருக்கும் நான்
வீட்டில் இருந்த படியே
பல விஷயங்களைச்
செய்து கொண்டிருக்கிறேன்

ஜபம் என்ற
தலைப்பில் நான்
WHATS APP
Kbalagangadharan.blogspot.com
FACE BOOK
ஆகியவற்றில்
பல்வேறு கட்டுரைகளை
எழுதிக் கொண்டு
வருவதை
அனைவரும் அறிவீர்கள்

தற்போது
அரவான் களப்பலி
கதையை
உலகில் உள்ள
பெரும்பான்மையானவர்களின்
அமோக ஆதரவுடனும்
உங்கள் அனைவரின்
பேராதரவுடனும் எழுதிக்
கொண்டு வருகிறேன்

அரவான் களப்பலி
கதை முடியும்
தருவாயில் இருப்பதால்
அரவான் களப்பலி
என்ற தலைப்பில்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறேன்

அதற்கு
என்னுடைய சீடர்கள்
என்னுடைய நண்பர்கள்
என்னுடைய உறவினர்கள்
என்மேல் அன்புள்ளம்
கொண்ட
உயர்ந்த உள்ளங்கள்
ஆகிய அனைவரும்
எனக்கு உதவிகள்
செய்து கொண்டு
வருகிறார்கள்

அரவான் களப்பலி
கதையை
COPY RIGHT
வாங்கி
வெளியிட இருக்கிறேன்

அனைத்து பணிகளும்
முடிவடைந்த பின்னர்
என்னுடைய
அரவான் களப்பலி
புத்தகம்
என்னுடைய முதல்
நூலாக வெளிவரும்
என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்

என்னுடைய முதல்
நூலாக
அரவான் களப்பலி
என்ற கதை
வெளியிடப்படும்போது
அனைவரும்
அழைக்கப்பட்டு
அந்த விழாவில்
கலந்து கொண்டு
சிறப்பிக்கும் வகையில்
என்னுடைய முதல்
புத்தக வெளியீட்டு
விழா நடைபெற
இருக்கிறது

இதற்காக வீட்டில்
என்னுடைய
நேரங்களை ஒதுக்கி
வேலை செய்து
கொண்டிருக்கிறேன்
இருந்தும் எனக்கு
நேரம் போதவில்லை

இவைகளுக்கு நடுவில்
நான் பல சித்தர்
பாடல்களுக்கு
விளக்கங்களும்
பல கதைகளையும்
கட்டுரைகளையும்
பழமொழிகளுக்கு
விளக்கங்களையும்
வரலாற்றுக்
கட்டுரைகளையும்
ஆய்வுக் கட்டுரைகளையும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

இவைகளை தொடர்ந்து
உங்களுக்காக
வெளியிட இருக்கிறேன்
படித்து
பயன் பெறவும்

கொரோனா வைரஸ்
தொற்று காரணமாக
144 தடையுத்தரவு
போட்டதால்
நான் வீட்டில்
இருக்கும் போது
எடுக்கப்பட்ட என்னுடைய
புகைப்படங்கள்

----------என்றும் அன்புடன்
----------K.பாலகங்காதரன்
----------04-04-2020
/////////////////////////////////////////////