December 18, 2019

பரம்பொருள்-பதிவு-101


           பரம்பொருள்-பதிவு-101

(அரண்மனைக்குள்
உள்ள ஒரு
அறையில் சகுனி
தீவிரமான சிந்தனையில்
ஆழ்ந்து இருக்கும்
போது துரியோதனன்
உள்ளே நுழைகிறான்)

துரியோதனன்  :
“மாமா ! எதைப் பற்றி
தாங்கள் தீவிரமாக
சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்கள் “

சகுனி :
“போரில் எப்படி
வெற்றி பெறுவது
என்பதைப் பற்றி
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதில் யோசிக்க
வேண்டியது என்ன
இருக்கிறது மாமா !
போரில் வெற்றி
பெறப்போவது
நாம் தானே ! “

சகுனி :
“எதையுமே
சாதாரணமாக
எடுத்துக் கொள்ளக்
கூடாது மருமகனே  !

“மாயங்கள் செய்வதில்
வல்லவனும் ;
சூழ்ச்சி வலை
பின்னுவதில் திறமை
படைத்தவனும் ;
கண்கட்டு வித்தை
காட்டுவதில்
கை தேர்ந்தவனும் ;
ஏமாற்றுச் செயல்கள்
புரிவதில்
தன்னிகரற்றவனும் ;
கபட வேடதாரியுமான
கிருஷ்ணன்
பாண்டவர்கள் பக்கம்
இருக்கும் வரை
நாம் எதையுமே
சாதாரணமாக
எடுத்துக்
கொள்ளக்கூடாது
மருமகனே ! “

“பாண்டவர்களை
வெற்றி பெறச்
செய்வதற்கு எத்தகைய
குறுக்கு வழிகளையும்
கையாள்வான் ;
அந்த குறுக்கு
புத்திக்கார
கிருஷ்ணன் ;
நாம் அதற்கு
இடம் கொடுக்கவே
கூடாது மருமகனே ! “.

துரியோதனன் :
“என்ன செய்ய
வேண்டும்
என்று சொல்ல
வருகிறீர்கள் மாமா ! “

சகுனி :
“நாம் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்றால்
கண்டிப்பாக
களப்பலி கொடுக்க
வேண்டும்
என்பதை மறந்து
விட்டாயா மருமகனே ! “

துரியோதனன் :
“மறக்கவில்லை
மாமா !
களப்பலி
கொடுப்பதைப் பற்றி
பேசத் தான்
நான் உங்களிடம்
வந்தேன் “

சகுனி :
“ களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும் வெல்ல
முடியாது என்ற
விவரம்
உனக்கு தெரியுமா ? ”
மருமகனே !”

துரியோதனன் :
“தெரியும் மாமா ! “

சகுனி :
“போரில் நாம்
வெல்வதற்கு
களப்பலி கொடுக்க
வேண்டிய நாள்
எந்த நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்
யார் என்றும் ;
அறிந்து
கொள்ள வேண்டும்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதனை
துல்லியமாகக்
கணித்து சொல்லக்
கூடிய
சோதிட சாஸ்திரம்
தெரிந்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள்
மாமா ! “

சகுனி :
“ஒருவன்
இருக்கிறான்
மருமகனே ! “

துரியோதனன் :
“யார் மாமா………….?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 18-12-2019
//////////////////////////////////////////