November 03, 2018

திருக்குறள்-பதிவு-45


                       திருக்குறள்-பதிவு-45

பிரபஞ்சத்தின்
மையப்பகுதி பூமி
இந்த பூமியை
மையமாக வைத்துத்தான்
சூரியன் சுற்றி
வருகிறது என்ற
பூமி மையக்
கோட்பாட்டை
(Geo-Centric Theory)
தாலமி (கி.பி.85-165)
சொன்னார்

எகிப்து நாட்டின்
விஞ்ஞானியான
தாலமி பூமி மையமாக
இருப்பது போலவும்
பூமியைச் சுற்றி
8 கோள வளையங்களில்
முறையே சந்திரன்,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
மற்றும் நிலையான
நட்சத்திரங்கள்
இருப்பது போலவும்
ஒரு வரைபடத்தை
உருவாக்கினார்
இந்த வரைபடம்
பிரபஞ்சத்தில் உள்ள
கோள்களை
தொலை நோக்கியால்
ஆராய்ந்து பார்த்து
வரையப் படவில்லை

இந்த வரைபடம்
பிரபஞ்சத்தில் உள்ளவற்றை
வெறும் கண்களால்
மட்டுமே பார்த்து
குறிப்பிட்ட அனுமானத்தை
அடிப்படையாகக் கொண்டு
பொருட்களின் இயக்கத்தைப்
பற்றி விளக்கியது

டாலமி வரைந்த
வரைபடம்
விஞ்ஞான ரீதியாக
இல்லாமல் இருந்தாலும்
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஒத்துக் கொள்ளப்பட்ட
காரணத்தினால்
உலகம் தாலமியின்
கண்டுபிடிப்பான
பூமி மையக் கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டது

பூமி மையக்
கோட்பாட்டை தாலமி
சொன்ன நாள் முதல்
பல நூற்றாண்டுகளாக
பூமி தான் பிரபஞ்சத்தின்
மையப்பகுதி என்றும்
அதனையே சூரியன்
சுற்றி வருகிறது என்றும்
நம்பப்பட்டு வந்தது

தாலமிக்கு பல
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வந்த போலந்து
நாட்டைச் சேர்ந்த
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் (1473 - 1543)
என்பவர் சூரியன்
நிலையானதாக அமைந்து
பூமி உட்பட கோள்கள்
அதனைச் சுற்றி
நுட்பமாக வட்டப்
பாதையில் இயங்குகின்றன
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை
(Heliocentric Theory) கூறினார்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
சேகரித்து வைத்த
தகவல்கள் மற்றும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து வைத்த
தகவல்கள் ஆகியவற்றைச்
சேர்த்து வைத்து
பல நூற்றாண்டுகளாக
மக்கள் சரியானது என்று
நம்பிக் கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டிற்கு பதில்
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்னார்

மேலும், அறிவியல்
மூலம் ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்டு
சேகரித்து வைக்கப்
பட்டிருக்கும்
பல்வேறு தகவல்களை
அடிப்படையாகக் கொண்டு
எந்த கண்டு பிடிப்பை
நாம் கண்டு பிடித்துக்
கொண்டிருக்கிறோமோ
அந்த கண்டுபிடிப்பு
இப்படித் தான்
இருக்க வேண்டும் என்ற
முடிவுக்கு வரலாம்
என்ற வழிமுறையை
புதியதாக ஏற்படுத்தினார்

டாலமியால் சொல்லப்பட்ட
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
இருந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
அதனால் உலகம்
ஏற்றுக் கொண்டது

ஆனால்,
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸால் சொல்லப்பட்ட
சூரிய மையக் கோட்பாடு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை
எனவே, உலகம்
ஏற்றுக் கொள்ள்வில்லை

இவர்கள் இருவருக்கும்
பிறகு வந்த கலிலியோ
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும்;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக்
கோட்பாடே சரி என்றும்;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
தனது கருத்தை
சொன்ன காரணத்தினால்,
உலகில் உள்ள அனைத்து
கிறிஸதவ மதவாதிகளும்
ஓரணியில் திரண்டு
கலிலியோவிற்கு
எதிராக நின்றனர்.

கலிலியோ தன்னுடைய
கண்டுபிடிப்பான
சூரிய மையக் கோட்பாட்டை
மக்கள் மத்தியில்
கொண்டு செல்வதற்கு
கிறிஸ்தவ மதவாதிகளுக்கு
எதிராக அவர் நடத்திய
போராட்டங்கள்
மனித வரலாற்றில்
ஒரு மைல்கல் என்று
கம்யூனிஸ சிந்தனையாளர்
பிரடெரிக் ஏங்கல்ஸ்ஸால்
புகழ்ந்து உரைக்கப்பட்ட
வார்த்தைகளை நாம்
நினைக்கும் போது
கலிலியோ எவ்வளவு
தன் வாழ்க்கையில்
கஷ்டப்பட்டிருப்பார்
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்

கலிலியோ தன்னுடைய
கண்டுபிடிப்பை
மக்கள் மத்தியில்
கொண்டு செல்வதற்கு
கிறிஸ்தவ மதவாதிகளுக்கு
எதிராக அவர் நடத்திய
போராட்டங்களைப்
பற்றி இனி பார்ப்போம்

---------  இன்னும் வரும்
---------  02-11-2018
///////////////////////////////////////////////////////////