November 18, 2022

ஜபம்-பதிவு-901 மரணமற்ற அஸ்வத்தாமன்-33 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-901

மரணமற்ற

அஸ்வத்தாமன்-33

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

என்ற

பெயரைக்

கேட்டாலே

உடலில் ஒரு

புத்துணர்ச்சி

ஏற்படும்

 

அது தான்

அஸ்வத்தாமன்

என்ற பெயரின்

சிறப்பு

 

கிருபி :

நம்முடைய மகனின்

வருங்கால

வாழ்க்கை

எப்படி இருக்கும்

 

துரோணர் :

மனிதன் இந்த

உலகத்தில்

பிறப்பதே

கர்மாவைக்

கழித்து

இறைவனாகவே

மாற வேண்டும்

என்பதற்காகத் தான்

 

ஆனால்

அந்த இறைவனே

மனிதனாகப்

பிறந்திருக்கிறான்

என்றால்

அந்த

இறைவன்

தன்னுடைய

கர்மாவைக்

கழிப்பதற்காகவா

பிறந்திருக்கிறான்

 

அப்படியே

கர்மாவைக்

கழிப்பதற்காகப்

பிறந்தாலும்

கர்மாவைக்

கழித்த பிறகு

இறைவன்

என்னவாக

மாறுவார்

 

கடவுள்

ரகசியங்களைப்

புரிந்து

கொள்ளவே

முடியாது

 

புரிந்து கொள்ள

முயற்சித்தாலும்

நம்மால்

புரிந்து கொள்ள

முடியாது

 

புரிந்தவர்கள்

சொன்னால்

ஒழிய நம்மால்

புரிந்து கொள்ள

முடியாது

 

நடக்கப்போகும்

நிகழ்வுகளை

நம்மைப் போன்ற

சாதாரண

மனிதர்களால்

வேடிக்கை

மட்டுமே பார்க்க

முடியும்

எதற்காக என்று

அறிந்து கொள்ள

முடியாது

 

மேலும்

கடவுள் ரகசியத்தை

அறிந்து கொள்ள

முயற்சி செய்யவும்

கூடாது

 

நிர்ணயிக்கப்பட்டது

நிர்ணயிக்கப்பட்டது

போல் நடக்க

இருக்கிறது

 

அதனால்

அஸ்வத்தாமனின்

வருங்காலத்தைப்

பற்றி யோசித்துக்

கொண்டிராமல்

அமைதியாக

ஓய்வு எடு

 

நடக்கப்போகும்

நிகழ்வை

நாம் மட்டுமல்ல

இந்த உலகமே

பார்க்கப் போகிறது

 

அதற்காகத்

தயாராக இரு

 

கிருபி :

அஸ்வத்தாமன்

உறங்க

வேண்டிய

நேரம் வந்து

விட்டது

 

துரோணர் :

உறக்கம் என்பது

மனதில்

நிம்மதி இருந்தால்

மட்டுமே வருவது

 

நிம்மதியின்றி

தவிக்கும் போது

உறக்கம் என்பது

வருவதே இல்லை

 

அஸ்வத்தாமனை

நிம்மதியாக

உறங்க விடு

 

அவன் விரும்பும்

வரை நிம்மதியாக

உறங்கட்டும்

 

வருங்காலத்தில்

அஸ்வத்தாமனுக்கு

நிம்மதி கிடைக்குமா

உறங்குவானா

என்ற

கேள்விக்கான பதில்

அஸ்வத்தாமனை

பார்ப்பவர்களுக்கு

மட்டுமே தெரிந்த

ரகசியம்

 

என்று சொல்லி

விட்டு

கிருபி இருந்த

அறையை

விட்டு

துரோணர்

சென்று விட்டார்

 

அஸ்வத்தாமன்

பிறந்து விட்டான்

 

கிருஷ்ணனின்

சுதர்சன

சக்கரத்தையே

தடுத்து நிறுத்தியவன்

பிறந்து விட்டான்

 

மரணமற்ற

அஸ்வத்தாமனை

சந்திக்கத்

தயாராகுங்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

ஜபம்-பதிவு-900 மரணமற்ற அஸ்வத்தாமன்-32 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-900

மரணமற்ற

அஸ்வத்தாமன்-32

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நம்முடைய மகனுக்கு

நீங்கள் தான் பெயர்

வைக்க வேண்டும்

இது தான்

என்னுடைய விருப்பம்

 

மனைவியின்

விருப்பத்தை

நிறைவேற்ற

வேண்டியது

கணவனின்

கடமையல்லவா

 

சிவன்

உங்களுடைய

விருப்பதை

நிறைவேற்றியது போல்

என்னுடைய

விருப்பத்தை

நீங்கள் தான்

நிறைவேற்ற

வேண்டும்

 

சிவனே மகனாகப்

பிறந்திருக்கும் போது

சிவனுக்கே பெயர்

வைக்கும் தகுதி

உங்களுக்குத் தான்

இருக்கிறது

 

சிவனுக்கே

நீங்கள் தான்

பெயர் வைக்க

வேண்டும்

 

துரோணர் :

சிவனே

மகனாகப் பிறந்த

காரணத்தினால்

சிவன் பெயரையே

வைத்து விடுவோம்

 

கிருபி :

என்ன பெயர்

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

 

கிருபி :

அஸ்வத்தாமன்

என்றால்

 

துரோணர் :

உயர்வான

அர்த்தத்தைத்

தன்னுள்

கொண்டது

 

கிருபி :

என்ன அர்த்தம்

 

துரோணர் :

இந்த உலகத்தில்

உள்ளவர்களில்

பெரும்பாலானவர்கள்

அர்த்தம்

இல்லாத பெயரை

வாயில் நுழைய

முடியாதபடி

புரியாத வகையில்

வைத்து விட்டு

அந்த

பெயருக்கென்று

ஒரு அர்த்தத்தை

தாங்களாவே

உருவாக்கிக் கொண்டு

உயர்ந்த பெயர்

நல்ல பெயர் என்று

சொல்லிக் கொண்டு

திரிந்து கொண்டு

இருக்கின்றனர்

 

அர்த்தம் நிறைந்த

பழைய பெயர்களை

ஒதுக்கி விட்டு

புதிய முறையில்

பெயர் வைக்கிறேன்

என்று சொல்லி விட்டு

புரியாத வகையில்

அர்த்தம் இல்லாத

பெயர்களை

வைத்து விட்டு

பெயருக்கான

அர்த்தத்தை

தேடிக் கொண்டு

அலைந்து கொண்டு

இருக்கின்றனர்

 

ஆனால் நாம்

வைக்கப்போகும்

அஸ்வத்தாமன்

என்ற பெயர்

பிறப்பிற்கான

அர்த்தத்தைத்

தெரிவிக்கும் பெயர்

 

நம்முடைய

மகன்

எதற்காகப்

பிறந்தான்

என்பதை இந்த

உலகத்திற்குத்

தெரிவிக்கும் பெயர்

 

கிருபி :

என்னவென்று

சொல்லுங்கள்

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

என்றால்

சிவன் என்று

பொருள்

 

கிருபி :

சிவனா

 

துரோணர் :

ஆமாம்

சிவனே தான்

 

சிவனே நமக்கு

மகனாப் பிறந்து

சிவ அவதாரம்

எடுத்து இருப்பதால்

சிவன் என்று

பொருள் படும்

அஸ்வத்தாமன்

என்ற பெயரை

வைக்கலாம்

 

கிருபி :

அஸ்வத்தாமன்

என்ற பெயர்

அருமையாக

இருக்கிறது

 

பெயரைச்

சொன்னாலே

உடலில்

ஒரு அதிர்வு

ஏற்படுகிறது

 

உணர்வுகள்

மேலிடுகிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

 

 

900-வது பதிவு

 900-வது பதிவு

 

ஜபம்-பதிவு-900

 

அன்பிற்கினியவர்களே!

 

2011-ஆம் ஆண்டு

முதல்

இணையதளத்தில்

திருக்குறள்

பழமொழிகள்

சித்தர் பாடல்கள்

இலக்கியங்கள்

ஆகியவற்றுக்கு

விளக்கங்கள்

எழுதத் தொடங்கிய

நான்

அதனைத் தொடர்ந்து

பல்வேறு

கதைகளை

உரையாடல்

நடையில் எழுதத்

தொடங்கினேன்

 

அவ்வாறு

எழுதத் தொடங்கிய

நான்

எழுதிய

என்னுடைய

இரண்டு கதைகளை

புத்தகமாக

வெளியிட்டு

இருக்கிறேன்

 

இன்னும்

சில புத்தகங்களை

வெளியிடுவதற்கான

தயாரிப்பு

பணிகள்

தற்போது

நடைபெற்று

வரும் வேளையில்

ஜபம் தன்னுடைய

900 பதிவை

அடைந்திருப்பதைக்

கண்டு நான்

மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

இத்தகைய

மகிழ்ச்சியை

எனக்கு அளித்த

என் உயிரில்

கலந்திருக்கும்

அனைத்து

அன்புள்ளங்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்வதோடு

இனி

வருங்காலங்களில்

தமிழை

நேசிப்பவர்களுக்கு

என்னுடைய

எழுத்துக்கள்

சுவாசமாக

இருக்கும் என்று

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18.11.2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-899 மரணமற்ற அஸ்வத்தாமன்-31 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-899

மரணமற்ற

அஸ்வத்தாமன்-31

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஆணை விட

பெண் தான்

உயர்ந்தவள்

 

அதனால் நீ தான்

பெயர்

வைக்க வேண்டும்

 

கிருபி :

ஏன் இவ்வாறு

சொல்கிறீர்கள்

 

துரோணர் :

ஒரு செயல்

நடைபெறும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படக்கூடிய

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தில்

இரண்டோ அல்லது

மூன்றோ தான்
ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஆனால்

ஐந்து புலன்களும்

ஒரே சமயத்தில்

ஆணுக்கு

ஒரு முறையும்

பெண்ணுக்கு

இரண்டு முறையும்

இணைந்து செயல்படும்

 

அதனால் தான்

ஆணை விட

பெண் என்பவள்

உயர்ந்தவள்

என்கிறேன்

 

கிருபி :

எந்த விஷயத்தில்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

துரோணர் :

பிரபஞ்ச ரகசியங்கள்

என்று

சொல்லிக் கொண்டு

மறைத்து

வைக்கப்பட்டிருப்பவை

அனைத்தும்

நாம்

அறிந்தவைகளாகத்

தான் இருக்கும்

 

கிருபி :

இதுவும் எனக்குத்

தெரிந்தது தான்

என்கிறீர்களா

 

துரோணர் :

அது நான் சொன்ன

பிறகு தான்

தெரியும்

 

கிருபி :

நீங்கள் சொன்னாலே

அது புதியதாகத்

தான் இருக்கும்

 

சொல்லுங்கள்

 

துரோணர் :

ஆண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படும்

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தும்

ஒன்றாக

இணைந்து செயல்படும்

 

இந்த ஒரு

முறையில்

மட்டும் தான்

ஆணுக்கு

ஐம்புலன்களும் ஒன்றாக

இணைந்து

செயல்படும்

 

ஆனால்,
பெண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஒரு முறையும்

பெண்

குழந்தையைப்

பெற்றெடுக்கும் போது

ஒரு முறையும்

ஆக இரண்டு

முறைகளில்

பெண்களுக்கு

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஒரு முறையில்

மட்டுமே

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

ஆண் உயர்ந்தவனா

அல்லது

ஐம்புலன்களும்

இரண்டு முறைகளில்

இணைந்து செயல்படும்

பெண் உயர்ந்தவளா

 

கிருபி :

ஆண் உயர்ந்தவனா

பெண் உயர்ந்தவளா

என்று எனக்குத்

தெரியாது

ஆனால் எனக்கு

ஒன்று மட்டும்

தெரியும்

 

என்னைப்

பொறுத்தவரை

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

அனைத்தையும்

அறிந்தவர் நீங்கள்

 

சகலத்தையும்

கற்றவர் நீங்கள்

 

கலைகளில்

சிறந்தவர் நீங்கள்

 

அதுமட்டுமல்ல

நீங்கள்

என் மேல்

அன்பைப் பொழிபவர்

 

என்னை

வருத்தப்படாமல்

பார்த்துக் கொள்பவர்

 

என்னை பாதுகாப்பாக

வைத்துக் கொள்பவர்

 

எனவே

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////