November 18, 2022

ஜபம்-பதிவு-899 மரணமற்ற அஸ்வத்தாமன்-31 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-899

மரணமற்ற

அஸ்வத்தாமன்-31

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஆணை விட

பெண் தான்

உயர்ந்தவள்

 

அதனால் நீ தான்

பெயர்

வைக்க வேண்டும்

 

கிருபி :

ஏன் இவ்வாறு

சொல்கிறீர்கள்

 

துரோணர் :

ஒரு செயல்

நடைபெறும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படக்கூடிய

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தில்

இரண்டோ அல்லது

மூன்றோ தான்
ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஆனால்

ஐந்து புலன்களும்

ஒரே சமயத்தில்

ஆணுக்கு

ஒரு முறையும்

பெண்ணுக்கு

இரண்டு முறையும்

இணைந்து செயல்படும்

 

அதனால் தான்

ஆணை விட

பெண் என்பவள்

உயர்ந்தவள்

என்கிறேன்

 

கிருபி :

எந்த விஷயத்தில்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

துரோணர் :

பிரபஞ்ச ரகசியங்கள்

என்று

சொல்லிக் கொண்டு

மறைத்து

வைக்கப்பட்டிருப்பவை

அனைத்தும்

நாம்

அறிந்தவைகளாகத்

தான் இருக்கும்

 

கிருபி :

இதுவும் எனக்குத்

தெரிந்தது தான்

என்கிறீர்களா

 

துரோணர் :

அது நான் சொன்ன

பிறகு தான்

தெரியும்

 

கிருபி :

நீங்கள் சொன்னாலே

அது புதியதாகத்

தான் இருக்கும்

 

சொல்லுங்கள்

 

துரோணர் :

ஆண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படும்

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தும்

ஒன்றாக

இணைந்து செயல்படும்

 

இந்த ஒரு

முறையில்

மட்டும் தான்

ஆணுக்கு

ஐம்புலன்களும் ஒன்றாக

இணைந்து

செயல்படும்

 

ஆனால்,
பெண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஒரு முறையும்

பெண்

குழந்தையைப்

பெற்றெடுக்கும் போது

ஒரு முறையும்

ஆக இரண்டு

முறைகளில்

பெண்களுக்கு

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஒரு முறையில்

மட்டுமே

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

ஆண் உயர்ந்தவனா

அல்லது

ஐம்புலன்களும்

இரண்டு முறைகளில்

இணைந்து செயல்படும்

பெண் உயர்ந்தவளா

 

கிருபி :

ஆண் உயர்ந்தவனா

பெண் உயர்ந்தவளா

என்று எனக்குத்

தெரியாது

ஆனால் எனக்கு

ஒன்று மட்டும்

தெரியும்

 

என்னைப்

பொறுத்தவரை

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

அனைத்தையும்

அறிந்தவர் நீங்கள்

 

சகலத்தையும்

கற்றவர் நீங்கள்

 

கலைகளில்

சிறந்தவர் நீங்கள்

 

அதுமட்டுமல்ல

நீங்கள்

என் மேல்

அன்பைப் பொழிபவர்

 

என்னை

வருத்தப்படாமல்

பார்த்துக் கொள்பவர்

 

என்னை பாதுகாப்பாக

வைத்துக் கொள்பவர்

 

எனவே

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment