November 18, 2022

ஜபம்-பதிவு-901 மரணமற்ற அஸ்வத்தாமன்-33 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-901

மரணமற்ற

அஸ்வத்தாமன்-33

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

என்ற

பெயரைக்

கேட்டாலே

உடலில் ஒரு

புத்துணர்ச்சி

ஏற்படும்

 

அது தான்

அஸ்வத்தாமன்

என்ற பெயரின்

சிறப்பு

 

கிருபி :

நம்முடைய மகனின்

வருங்கால

வாழ்க்கை

எப்படி இருக்கும்

 

துரோணர் :

மனிதன் இந்த

உலகத்தில்

பிறப்பதே

கர்மாவைக்

கழித்து

இறைவனாகவே

மாற வேண்டும்

என்பதற்காகத் தான்

 

ஆனால்

அந்த இறைவனே

மனிதனாகப்

பிறந்திருக்கிறான்

என்றால்

அந்த

இறைவன்

தன்னுடைய

கர்மாவைக்

கழிப்பதற்காகவா

பிறந்திருக்கிறான்

 

அப்படியே

கர்மாவைக்

கழிப்பதற்காகப்

பிறந்தாலும்

கர்மாவைக்

கழித்த பிறகு

இறைவன்

என்னவாக

மாறுவார்

 

கடவுள்

ரகசியங்களைப்

புரிந்து

கொள்ளவே

முடியாது

 

புரிந்து கொள்ள

முயற்சித்தாலும்

நம்மால்

புரிந்து கொள்ள

முடியாது

 

புரிந்தவர்கள்

சொன்னால்

ஒழிய நம்மால்

புரிந்து கொள்ள

முடியாது

 

நடக்கப்போகும்

நிகழ்வுகளை

நம்மைப் போன்ற

சாதாரண

மனிதர்களால்

வேடிக்கை

மட்டுமே பார்க்க

முடியும்

எதற்காக என்று

அறிந்து கொள்ள

முடியாது

 

மேலும்

கடவுள் ரகசியத்தை

அறிந்து கொள்ள

முயற்சி செய்யவும்

கூடாது

 

நிர்ணயிக்கப்பட்டது

நிர்ணயிக்கப்பட்டது

போல் நடக்க

இருக்கிறது

 

அதனால்

அஸ்வத்தாமனின்

வருங்காலத்தைப்

பற்றி யோசித்துக்

கொண்டிராமல்

அமைதியாக

ஓய்வு எடு

 

நடக்கப்போகும்

நிகழ்வை

நாம் மட்டுமல்ல

இந்த உலகமே

பார்க்கப் போகிறது

 

அதற்காகத்

தயாராக இரு

 

கிருபி :

அஸ்வத்தாமன்

உறங்க

வேண்டிய

நேரம் வந்து

விட்டது

 

துரோணர் :

உறக்கம் என்பது

மனதில்

நிம்மதி இருந்தால்

மட்டுமே வருவது

 

நிம்மதியின்றி

தவிக்கும் போது

உறக்கம் என்பது

வருவதே இல்லை

 

அஸ்வத்தாமனை

நிம்மதியாக

உறங்க விடு

 

அவன் விரும்பும்

வரை நிம்மதியாக

உறங்கட்டும்

 

வருங்காலத்தில்

அஸ்வத்தாமனுக்கு

நிம்மதி கிடைக்குமா

உறங்குவானா

என்ற

கேள்விக்கான பதில்

அஸ்வத்தாமனை

பார்ப்பவர்களுக்கு

மட்டுமே தெரிந்த

ரகசியம்

 

என்று சொல்லி

விட்டு

கிருபி இருந்த

அறையை

விட்டு

துரோணர்

சென்று விட்டார்

 

அஸ்வத்தாமன்

பிறந்து விட்டான்

 

கிருஷ்ணனின்

சுதர்சன

சக்கரத்தையே

தடுத்து நிறுத்தியவன்

பிறந்து விட்டான்

 

மரணமற்ற

அஸ்வத்தாமனை

சந்திக்கத்

தயாராகுங்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment