November 23, 2020

அறிய வேண்டியவை-174

 

ஜபம்-பதிவு-666

(அறிய வேண்டியவை-174)

 

துரியோதனன் :

“துச்சாதனா………….”

 

(துச்சாதனன்

ஓடி வருகிறான்)

 

“நான் என்னுடைய

அறையில்

வைத்திருக்கும்

என்னுடைய

பகடைகளை

எடுத்து வா”

 

(என்று

கட்டளையிட்டான்

துரியோதனன்

 

துரியோதனனின்

கட்டளையை ஏற்று

துச்சாதனன் சகுனி

துரியோதனனிடம்

ஏற்கனவே கொடுத்து

வைத்திருந்த

சகுனியின்

குழந்தைகளான

பகடைகளை

எடுத்துக் கொண்டு

வந்து தன்னுடைய

அண்ணனான

துரியோதனனிடம்

கொடுத்தான்)

 

துரியோதனன் :

“சித்தப்பா

விதுரர் அவர்களே

என்னுடைய

பகடைகளை

அஸ்தினாபுரத்தின்

பகடைகளை

நான் என்னுடைய

மாமாவிற்கு

கொடுப்பதில்

தங்களுக்கு

எந்தவிதமான

ஆட்சேபணையும்

இல்லையே”

 

விதுரர் :

“நான் ஏற்கனவே

சொல்லி விட்டேன்

எனக்கு

எந்தவிதமான

ஆட்சேபணையும்

இல்லை”

 

(துரியோதனன்

தன்னுடைய கையில்

இருந்த பகடைகளை

தன்னுடைய மாமா

சகுனியிடம்

கொடுத்தான்

அதனைப் பெற்றுக்

கொண்ட சகுனி

தன்னுடைய கைகளில்

தன்னுடைய

பகடைகளை

வைத்துக் கொண்டு

அதனையே பார்த்தார்

 

சகுனியின்

குழந்தைகளான

சகுனியின்

பகடைகளே

சகுனியின்

கைகளுக்கு

வந்து சேர்ந்தது

 

அந்த பகடைகளை

கைகளில்

வைத்துக் கொண்டு

சிரிப்புடன்

விதுரரைப்

பார்த்தான் சகுனி.

 

சகுனி சிரித்த

சிரிப்பின் அர்த்தம்

விதுரருக்கு

மட்டுமில்லை

அந்த அவையில்

இருந்த யாருக்கும்

தெரியவில்லை.

 

ஆனால்

துரியோதனனும்,

கர்ணனும்

சகுனியின்

இந்த சிரிப்புக்கு

என்ன அர்த்தம்

என்பதைத்

தெரிந்து

கொண்டனர்

 

சரித்திரத்தை

மாற்றியமைக்கப்

போகும் பகடை

விளையாட்டானது

சகுனியின்

குழந்தைகளான

பகடையுடன்

தொடங்க

ஆயத்தமாகியது.

 

சகுனியின் கைகளில்

இருந்த பகடையானது

தரையில்

உருளத் தொடங்கியது

வருங்காலத்தில்

பல பேர்களுடைய

தலைகள் உருளப்

போவது தெரியாமல்

 

சகுனியின் பகடைகள்

மூலம் சரித்திரத்தை

மாற்றியமைக்கப்போகும்

நிகழ்வானது

நடக்கத்

தொடங்கியது )

 

அறிய வேண்டியவை :

“இந்த கதையின்

மூலம் நாம்

அறிய வேண்டியது

என்னவென்றால்  

நாம் எந்த

செயலைச்

செய்தாலும்

அந்த செயலைச்

செய்வதற்கு

முன்னர்

அந்த செயலைத்

தடுக்கக் கூடிய

எதிரி யார்

என்பதையும்

எதிரி எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான்

என்பதையும்

எதிரி எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதையும்

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்.

அப்படி செய்தால்

தான் நாம்

செய்யும் செயலில்

வெற்றி

பெற முடியும்

யோசிக்காமல்

களத்தில்

இறங்கினால்

இழப்புகளும்

கவலைகளும்

தான் நமக்கு

ஏற்படும்

என்பது தான்

இந்த கதையின்

மூலம் நாம்

அறிய வேண்டிய

உண்மை ஆகும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-173

 ஜபம்-பதிவு-665

(அறிய வேண்டியவை-173)

 

யோசிக்காமல்

களத்தில்

இறங்கினால்

இழப்புகளும்

கவலைகளும் தான்

நமக்கு ஏற்படும்

என்று சகுனி

சொன்னது

கர்ணனுடைய

நினைவிற்கு

வந்தது.

 

எதிரியை

வீழ்த்துவதற்கு

சகுனி மேற்கொண்ட

நடவடிக்கைகளை

நினைத்து

வியந்து நின்றான்

 

சகுனியின்

அபார

அறிவுத்

திறனைக்

கண்டு

ஆச்சரியத்தில்

நின்றான்

 

சகுனியைப்

பார்த்தபடியே

நின்று

கொண்டிருந்தான்

கர்ணன்

 

சரித்திரம்

கண்டிராத

ஒரு மாபெரும்

அறிவாளியான

சகுனி அந்த

அவையில்

தன்னந்தனியாக

அனைவரையும்

எதிர்த்து நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

சகுனி

எந்தவிதமான

அச்சமும்

இல்லாமல்

அந்த அவையில்

உள்ள

அனைவரையும்

தைரியமாக

எதிர்த்து நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

அனைவருக்கும்

எதிராக ஒரே

ஒரு ஆளாக

யோசித்து

செயல்பட்டுக்

கொண்டு

சகுனி நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்.

 

உலகத்திலேயே

சிறந்த

அறிவாளிகள் என்று

சொல்லப்படக்

கூடியவர்களும்,

வீரர்கள் என்று

சொல்லப்படக்

கூடியவர்களும், 

திறமைசாலிகள்

என்று

சொல்லப்படக்

கூடியவர்களும்,

நிறைந்திருந்த

அந்த அவையில்

உள்ளவர்கள்

யாராலும்

செய்ய முடியாத

செயல்களை

சகுனி நிகழ்த்திக்

காட்டிக் கொண்டு

நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

இந்த உலகத்தால்

உணர்ந்து கொள்ள

முடியாத

இந்த உலகத்தால்

அறிந்து கொள்ள

முடியாத

இந்த உலகத்தால்

தெரிந்து கொள்ள

முடியாத

ஒரு மாபெரும்

அறிவாளியாக

சகுனி நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

அவனுடைய

சிந்தனை

ஓட்டத்தை

தடை செய்யும்

வகையில்

என் மாமாவிற்கு

நான் இருக்கிறேன்

என்ற சத்தம்

கேட்டது

 

உணர்வு வந்தவனாய்

சத்தம் வந்த

திசையை நோக்கி

திரும்பினான்

துரியோதனன்

பேசத்

தொடங்கினான்)

 

துரியோதனன் :

“என்னுடைய

மாமாவிற்கு

நான் இருக்கிறேன்”

 

“அஸ்தினாபுரத்தின்

பகடைகள்

இருக்கிறது”

 

“அதை நான் என்

மாமாவிற்கு

தருகிறேன்”

 

“அந்த பகடைகளை

தருவதற்கு

எந்த விதமான

தடையும்

கிடையாதே

சித்தப்பா

விதுரர்

அவர்களே!”

 

விதுரர் :

“அதில் எனக்கு

எந்தவிதமாக

ஆட்சேபணையும்

இல்லை”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-172

 

ஜபம்-பதிவு-664

(அறிய வேண்டியவை-172)

 

விதுரர் :

“காந்தார அரசே

தங்கள் கைகளில்

வைத்திருக்கும்

பகடைகளை

என்னிடம்

கொஞ்சம்

கொடுங்கள்

நான் பார்க்க

வேண்டும்”

 

(என்று விதுரர்

கேட்டவுடன் சகுனி

தன் கையில் இருந்த

பகடைகளை

எந்தவிதமான

மறுப்பும்

சொல்லாமல்

விதுரரின் கைகளில்

கொடுத்தார்

 

பகடைகளை பெற்றுக்

கொண்ட விதுரர்

பகடைகளை

தன்னுடைய கைகளில்

வைத்துக் கொண்டு

நன்றாகப் பார்த்தார்.

 

பிறகு சகுனியைப்

பார்த்து பேசத்

தொடங்கினார்)

 

விதுரர் :

“நீங்கள் விளையாடும்

பகடை விளையாட்டில்

நீங்கள் வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

சூழ்ச்சியை

கையாள்கிறீர்கள்

என்று பல பேர்கள்

சொல்வதை நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன் “

 

“நீங்கள் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

வேண்டும்

என்பதற்காக

எத்தகைய

தந்திரத்தையும்

கையாள்வீர்கள்

என்று நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“உங்களுடைய

பகடைகள்

உங்கள் சொல்படி

தான் நடக்கும் என்று

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“நீங்கள் பகடையை

உருட்டினாலும்

உங்களை எதிர்த்து

விளையாடும் எதிரி

பகடையை

உருட்டினாலும்

நீங்கள் என்ன

எண்னை

நினைக்கிறீர்களோ

அந்த எண் தான்

உங்கள் பகடையில்

விழும் என்று

கேள்விப் பட்டு

இருக்கிறேன்”

 

“சூழ்ச்சி நிறைந்த

உங்களுடைய

பகடைகளை

நீங்கள்

பயன்படுத்தக்கூடாது “

 

(என்று சொல்லிக்

கொண்டே சகுனி

தன்னிடம் கொடுத்த

பகடைகளை விதுரர்

சுக்கல் சுக்கலாக

உடைத்து விட்டு

அதன் துகள்களை

தரையில் போட்டார்,

 

விதுரரின் இந்த

செயலைக் கண்டு

அந்த அவையில்

உள்ளவர்கள்

அனைவரும்

அதிர்ச்சியால்

வாயடைத்துக்

கொண்டு

இருந்தார்கள் .

 

ஆனால் அதிக

அளவில் அதிர்ச்சி

அடைந்தது

துரியோதனனும்

கர்ணனும் தான்

 

ஏனென்றால் சகுனி

நேற்று தங்களிடம்

என்ன பேசினாரோ

என்ன நடக்கும்

என்று சொன்னாரோ

அது தான் நடந்து

கொண்டிருந்தது.

 

விதுரர் என்ன

பேசுவார்

விதுரர் என்ன

செய்வார் என்று

சகுனி சொன்னது

அப்படியே தங்களுடைய

கண்கள் முன்னால்

நடப்பதைக் கண்டு

துரியோதனனும்,

கர்ணனும் அதிர்ச்சியில்

நின்று கொண்டிருந்தனர்.

 

சகுனியின் அறிவுத்

திறனைக் கண்டு

கர்ணன் மலைத்து

நின்று விட்டான்

 

எதிரி எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான்

எதிரி எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதை

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்.

அப்படி செய்தால்

தான் நாம்

செய்யும் செயலில்

வெற்றி பெற

முடியும்

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-171

 

ஜபம்-பதிவு-663

(அறிய வேண்டியவை-171)

 

(அஸ்தினாபுரம்

அவையில்

திருதராஷ்டிரன்

தலைமையில்

பாண்டவர்கள்

கௌரவர்கள்

பீஷ்மர், துரோணர்,

விதுரர், கிருபர்,

சகுனி உட்பட

பலர் அமர்ந்து

இருந்தார்கள். 

 

அவை ஆரம்பித்த

பின்னர் பகடை

விளையாட்டை

தொடங்குவதற்கு

முன்னால் பகடை

விளையாட்டை

எப்படி நடத்துவது

எந்த விதத்தில்

நடத்துவது,

எந்த முறையில்

நடத்துவது,

எந்த விதிகளைப்

பின்பற்றி நடத்துவது,

பகடை விளையாட்டை

நடத்துவதற்கு

ஏற்கனவே இருக்கும்

விதிமுறைகள்

போதுமானவையா

அல்லது புதியதாக

ஏதேனும்

விதிமுறைகள்

உருவாக்கப்பட

வேண்டுமா என்ற

முறையில்

பல்வேறு கேள்விகள்

அவையில் எழுப்பப்பட்டு

அந்த கேள்விகளின்

மேல் பல்வேறு

கருத்துக்கள், பேச்சுக்கள்,

கேள்விகள், சந்தேகங்கள்

என்று அவையில்

உள்ளவர்களால்

பல்வேறு

நிலைகளில்

விவாதங்கள்

நடத்தப்பட்டு

விவாதங்களின் முடிவில் 

பகடை விளையாட்டை

நடத்துவதற்குத்

தேவையான

விதிமுறைகளை

அனைவரும்

ஒன்று சேர்ந்து

உருவாக்கி விட்டு,

உருவாக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

பகடை விளையாட்டை

விளையாட வேண்டும்,

உருவாக்கப்பட்ட

விதிகளை மீறி

பகடை விளையாட்டை

விளையாடக்கூடாது

அவ்வாறு நடத்தினால்

பகடை

விளையாட்டானது

பாதியில் நிறுத்தப்படும்

என்றும் பகடை

விளையாட்டானது

கண்ணியத்துடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

கட்டுப்பாட்டுடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

வரையறுக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

அறிவுரை வழங்கிவிட்டு

அதனை அவையில்

உள்ள அனைவராலும்

ஏற்றுக் கொள்ளப்பட்டு

பகடை விளையாட்டை

தொடங்கலாம் என்று

அனுமதி அளிக்கப்பட்டு

விட்டது.”

 

துரியோதனனிடமும்,

கர்ணனிடமும்

சகுனி என்ன

பேசினாரோ

அந்த விஷயங்கள்

அனைத்தும்  

அப்படியே

நடைபெற்றுக்

கொண்டிருந்தது

 

சகுனி பகடையை

கைகளில் எடுத்து

உருட்டத் தொடங்கும்

போது நிறுத்துங்கள்

என்று ஒரு சத்தம்

அந்த அவையை

கிழித்துக் கொண்டு

அந்த அறை முழுவதும்

எதிரொலித்தது.

 

அவையில் உள்ள

அனைவரும் சத்தம்

வந்த திசையையே

நோக்கி பார்த்தனர்

சத்தத்தை

எழுப்பியது யார்

பகடை விளையாட்டை

நிறுத்தச் சொன்னது

யார் என்று அறிவதற்காக

அனைவரும் சத்தம்

வந்த திசையை

நோக்கி தங்கள்

பார்வையைத்

திருப்பினர்.

 

நிறுத்துங்கள் என்று

சொல்லிக் கொண்டே

விதுரர் தன்னுடைய

இருக்கையில்

இருந்து எழுந்து

சகுனியிடம் வந்தார்

 

சகுனி இருக்கும்

இடத்தை நோக்கி

நடந்து வந்தார்.

 

சகுனியின் எதிரே

வந்து நின்றார்

 

சகுனியிடம் பேசத்

தொடங்கினார்.

 

விதுரர் என்ன பேசப்

போகிறார் என்று

அந்த அவையில்

உள்ள அனைவரும்

கவனித்துக்

கொண்டிருந்தனர்

 

துரியோதனனும்,

கர்ணனும் நடக்கும்

நிகழ்வுகள் அனைத்தும்

சகுனி சொன்னது

போலவே நடந்து

கொண்டு இருப்பதை

நேரில் தங்களுடைய

கண்களால் கண்டு

ஆச்சரியத்தால்

நின்று கொண்டிருந்தனர்

 

விதுரர் சகுனியிடம்

பேசத் தொடங்கினார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////