November 23, 2020

அறிய வேண்டியவை-167

 

ஜபம்-பதிவு-659

(அறிய வேண்டியவை-167)

 

சகுனி :

"ஏனென்றால்

அவர்

மதியூக மந்திரி

அறிவை

உபயோகிப்பவர். "

 

"அறிவை

உபயோகிப்பவர்களிடம்

நாம் எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

என் அன்பு

மருமகனே!"

 

துரியோதனன் :

"அப்படி என்றால்

தாத்தா பீஷ்மர்

அவர்கள்"

 

சகுனி :

"பீஷ்மர்

விதுரர் அளவிற்கு

யோசிக்க மாட்டார் ;

விதுரர் அளவிற்கு

யோசித்து களத்தில்

இறங்க மாட்டார் ;

வீரத்திற்காக

செலவிடும் நேரத்தை

அவர் யோசிப்பதற்காக

செலவிட மாட்டார்;"

 

"தன்னுடைய

சந்தேகத்தை

தீர்ப்பதற்காக

அவரே விதுரர்

துணையைத்

தான் நாடுவார்."

 

"அதனால்

நான் பகடையை

உருட்டத்

தொடங்கும் போது

என் முன்னால் வந்து

தடுக்கக் கூடியவர்

விதுரர் மட்டும் தான்"

 

கர்ணன் :

"எப்படி இவ்வளவு

உறுதியாகச்

சொல்கிறீர்கள்"

 

"விதுரர் தான்

வந்து நிற்பார்

என்பதை

உங்களால் எப்படி

இப்போதே உறுதியாகச்

சொல்ல முடியும்"

சகுனி :

"கர்ணா !

களத்தில்

இறங்கி போர்

செய்வதற்கு முன்னர்

உனக்கு எதிராக

நின்று

போர் செய்யும்

எதிரி

எத்தகைய

திறமையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

தன்மையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

சிந்தனையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

துணைகள் இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

வலிமை இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

பலம் இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

போர்த்திறமை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

வீரத்தை உடையவன்

என்பதை அறியாமல் ;

போர் செய்வதற்கு

களத்தில்

இறங்குவாயா

கர்ணா ?"

 

கர்ணன் :

"அது எப்படி முடியும்

எதிரியின்

விவரங்களைப் பற்றி

எதுவும் தெரியாமல்

எப்படி

போரிட முடியும்

எதிரியின்

விவரங்களைப் பற்றி

எதுவும் தெரியாமல்

போர்க்களத்தில்

இறங்கி போரிட்டால்

எப்படி வெற்றி

பெற முடியும்."

 

"எதிரியைப்

பற்றிய விவரங்கள்

எதுவும் தெரியாமல்

போர்க்களத்தில்

இறங்கி

போரிடக்கூடாது. "

 

"எதிரியைப்

பற்றித் தெரிந்த

பின்னர் தான்

போர்க்களத்தில்

இறங்கி

போரிட வேண்டும் "

 

சகுனி :

"அதைப்

போலத் தான்

பகடை விளையாட்டை

விளையாடும் போது

பகடை

விளையாட்டைத்

தடுக்க

வருபவர் யார்

என்பதையும்,

அவர் என்ன

பேசுவார்

என்பதையும்,

அவர் என்ன

செயல் செய்ய

வருவார்

என்பதையும்

அறிந்து

அதற்கேற்றவாறு

நடவடிக்கைகளை

மேற்கொண்ட

பிறகு தான்

பகடை

விளையாட்டை

விளையாட வேண்டும்"

 

"இவ்வாறு யோசித்து

பகடை விளையாட்டை

விளையாடவில்லை

என்றால்

நம்மால் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

முடியாது"

 

கர்ணன் :

"நீங்கள் சொல்வது

ஒன்றும்

புரியவில்லை"

 

துரியோதனன் :

"எனக்கும்

புரியவில்லை

மாமா அவர்களே!"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment