May 30, 2019

பரம்பொருள்-பதிவு-18


                     பரம்பொருள்-பதிவு-18

(1) அனுக்ஞை
(அனுமதி வாங்குதல்)
“கும்பாபிஷேகம்
தொடங்குவதற்கு முன்பு 
கும்பாபிஷேகத்தை
முன்னால் நின்று
நடத்தி வைப்பதற்கு
தகுதி வாய்ந்த
ஒருவரை  ;
ஆன்மீகத்தில்
நாட்டம் கொண்ட
ஒருவரை ;
ஆன்மீக செயலில்
உயர்ந்த ஒருவரை ;
பொது மக்கள்
தேர்ந்து
எடுக்கிறார்கள் “

“இவ்வாறு
பொது மக்களால்
தேர்ந்தெடுக்கப் பட்டவர்
கும்பாபிஷேகத்தை
தலைமையேற்று
முன்னால் நின்று
நடத்தி வைப்பதற்கு ;
எல்லாம் வல்ல
இறைவனின்
அனுமதியைப்
பெற வேண்டும் ;
இதற்கு அனுக்ஞை
என்று பெயர் ;”

(2) விக்னேஸ்வர பூஜை
“கும்பாபிஷேகம்
எந்தவிதமான
இடையூறும்
இல்லாமல் ;
எந்தவிதமான
தடையேதும்
இல்லாமல் ;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல் ;
நடைபெறுவதற்காக
விநாயகப் பெருமானை
வழிபடுகிறார்கள் “

“விநாயகப் பெருமானை
வழிபடுவதற்கு
கணபதி ஹோமம்
செய்கிறார்கள் ;
இச்செயலுக்கு
அக்னியைப் பயன்
படுத்த வேண்டும்
என்று ஆகமங்கள்
எடுத்து உரைக்கின்றன ;”

“பூதகணங்களால்
இடையூறுகள்,
தாக்குதல்கள்
ஏற்படாதவாறு
கணங்களின்
தலைவனாகிய
மகாகணபதியை
நினைத்து அவருக்குப்
பிரியமான பொருளை
அக்னியில் சமர்ப்பிக்கும்
வேள்விதான்
மகாகணபதி ஹோமம் “

(3)வாஸ்து சாந்தி
“ஆகமங்களிலும்
சிவமகா புராணத்திலும்
வாஸ்து புருஷனைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது “

“அந்தகாசுரன்
என்பவனை
கொல்வதற்காக
தேவர்கள்
சிவபெருமானிடம்
கோரிக்கை வைத்தனர் ;
சிவபெருமானுடைய
வியர்வைத் துளி
நிலத்தில் விழுந்தது
அதிலிருந்து
மூவுலகத்தையும்
விழுங்கத்தக்க
ஒரு பூதம்
தோன்றியது ;”

“அந்த பூதம்
சிவனுடைய
அருளைப் பெற்று
அந்தகாசுரனுடைய
உதிரத்தைக் குடித்து
அதைக் கொன்றது”

“பின்னர் அந்த பூதம்
சிவபெருமானை
நோக்கித் தவம்
இருந்து பல
வரங்கள் பெற்று
உலகத்தை மிகப்
பெரும் துன்பத்திற்கு
உள்ளாக்கியது ;
சிவபெருமான் அக்கிரமம்
செய்து கொண்டிருக்கும்
அந்த பூதத்தை அடக்க
வேண்டும் என்பதற்காக
அதிபவன் என்பவரை
சிருஷ்டித்து
அனுப்பினார் ; “

“அதிபவன் அந்தப்
பூதத்தை மாயா
பாசங்களால் கட்டிக்
கீழே தள்ளினார் ;
பின்னர்- அந்த
பூதத்தின் உடலின்
மீது 53 தேவதைகளை
வசிக்கச் செய்தார் ;
அவர்களும்
அந்தப் பூதத்துக்குக்
கெடுதி செய்யாமல்
அதனைப் பாதுகாத்து
வருகின்றனர் ;”

“தேவர்கள் அந்த அரக்கன்
மீது வசித்ததால்  
அந்த அரக்கனுக்கு
வாஸ்து புருஷன்
எனப் பெயர்
கிடைத்தது “

“இந்த வாஸ்து புருஷனால்
குடமுழுக்கு செயலுக்கு
கெடுதி வராமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக -  அந்த
53 தேவதைகளுக்கும்
பூஜை பலி ஹோமம்
ஆகியவற்றால்
சாந்தி செய்யும்
செயலுக்கு
வாஸ்து சாந்தி
எனப் பெயர் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 29-05-2019
/////////////////////////////////////////////////////