September 05, 2022

சிகண்டியாகி பீஷ்மரைக் கொன்ற அம்பை புத்தக வெளியீடு

 அன்பிற்கினியவர்களே!

 

காஞ்சி சங்கர மடம்

தமிழ்நாட்டின்

காஞ்சிபுரத்தில்

அமைந்துள்ள ஓர்

இந்து சமய துறவியர்

இருப்பிடமாகும்.

 

இது காஞ்சி

காமகோடி பீடம்

என்றும்

அழைக்கப்படுவதுண்டு.

 

காமகோடி பீடம்

ஆதி சங்கரரால்

ஸ்தாபிக்கப்பட்டது

ஆகும்.

அதன் முதல்

பீடாதிபதியும் அவரே.

கி.மு.480-ல் அவர்

பதவி ஏற்றார்.

 

அன்று தொட்டு

இன்று வரை

காஞ்சி காமகோடி பீடம்

தொடர்ச் சங்கிலியாய்

2000 ஆண்டுகளாகப்

பீடாதிபதிகளைக்

கொண்டுள்ளது.

 

காஞ்சி காமகோட்டி

பீடத்தின் 70-வது

சங்கராச்சாரியார்

ஜகத்குரு ஶ்ரீ சங்கர

விஜயேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகள் அவர்கள்

ஆவார்.

 

03-09-2022-ம் தேதி

சனிக்கிழமை மாலை

 

“””சிகண்டியாகி பீஷ்மரைக்

கொன்ற அம்பை”””

 

என்ற தலைப்பைக்

கொண்ட என்னுடைய

மூன்றாவது

படைப்பானது

டைப் செய்யப்பட்டு

பிரிண்ட் எடுக்கப்பட்டு

SPIRAL BINDING

செய்யப்பட்டு இருந்த

என்னுடைய

படைப்பிற்கு

உயிர் அளிக்கும்

வகையில்

காஞ்சி காமகோட்டி

பீடத்தின் 70-வது

சங்கராச்சாரியார்

ஜகத்குரு ஶ்ரீ சங்கர

விஜயேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகள்

அவர்கள் தன்னுடைய

அன்பு அருள் ஆசி

ஆகியவற்றை

அளித்து

ஆடிட்டர் குருமூர்த்தி

அவர்களின்

அரவணைப்பில்

ஆந்திராவில்

காக்கிநாடாவில் உள்ள

ஆசிரமத்தில்

பொது மக்கள்

முன்னிலையில்

புத்தகமாக வெளிவர 

இருக்கும் என்னுடைய

படைப்பை

வெளியிட்டு என்னை

வாழ்த்தியருளினார்

 

இத்தகைய

பெரும் பயனை

அடைவதற்கு

எனக்கு வழிகாட்டிய

மனிதருள் மாணிக்கம்

திரு.கிருஷ்ணன்,

தொழில் நுட்பப் பிரிவு,

தலைமையகம்

அவர்களுக்கு

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நடந்த நிகழ்வுகளின்

காட்சிகளை

உங்களுடைய

கண்களுக்கு விருந்தாகப்

படைப்பதில்

நான் மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

--------என்றும் அன்புடன்

 

---------எழுத்தாளர்

---------K.பாலகங்காதரன்

 

-------05-09-2022

-------திங்கட் கிழமை

//////////////////////////////////////////////