December 22, 2018

திருக்குறள்-பதிவு-73


                      திருக்குறள்-பதிவு-73

எனக்கு
வாழ்வதற்காக
பணம் தேவைப்பட்டதால்
குழந்தைகளுக்கு
Art of Memory
என்ற பாடத்தை
கற்பிக்கும் தொழிலை
நோலியிலும்
லிகுரியாவிலும்
செய்தேன்

டுரினை விட்டு
வெளியேறி
போ என்ற
ஆற்றைத் தொடர்ந்து
சென்று முதன்
முறையாக வெனிஸ்
சென்றேன்

வெனிஸ் நகரத்தில்
ஒரு மாதமாக
தொழிலாளி
ஒருவருடைய
வீட்டில் தங்கினேன்

அவருடைய பெயரை
என்னுடைய நினைவுக்கு
கொண்டு வர
என்னால்
முடியவில்லை

எனக்கு உடல்நிலை
சரியில்லாமல் போன
காரணத்தினால் நான்
வெனிஸ் நகரத்தை
விட்டு வெளியேறி
படோவா சென்றேன்

ஆல்ப்ஸ் மலையைக்
கடந்து ஜெனிவா
சென்றேன் ஜெனிவா
கல்வானிஸ்டிகளால்
ஆளப்பட்டு வந்தது

அதனைத் தொடர்ந்து
நான் டௌலோவ்
சென்றேன்
அங்கு இரண்டு
ஆண்டுகள்
தங்கி
பல்கலைக் கழகத்தில்
கற்பித்தல் தொழிலை
செய்தேன்

என்மீது
தொடுக்கப்பட்ட
மதப்போர்களின்
காரணமாக நான்
பாரிஸில் இருந்து
வெளியேறினேன்

ஹென்றி 3
என்னிடம்
கேட்டுக் கொண்டதற்கு
இணங்க நான்
Art of Memory
கற்பித்தேன்

ஐந்து வருடங்கள்
பாடம் கற்பித்த பிறகு
சபர்போன்னில்
மதத்தின் பெயரால்
மதப் போர்கள்
என்மீது
நடத்தப்பட்டன
மதக் குற்றங்கள்
சுமத்தப்பட்டன
அங்கிருந்து வெளியேறி
லண்டன் சென்றேன்

ராணி எலிசபெத்
எனக்கு மரியாதை
செலுத்தி
கௌரவித்தார்

ருடால்ப் 2
வான் ஹப்ஸ்பர்க்
அறிவியலின்
மிகப் பெரிய ஞானி
நான் செய்த
பல்வேறு வேலைகளில்
ஜியோமேட்ரிக்
வேலைக்காக மட்டும்
எனக்கு 300 தாலர்ஸ்
கொடுத்தார்

புத்தக சந்தையில்
கலந்து கொள்ள
வேண்டும் என்று
ஜியோவானி
மொசிங்கோ
அழைப்பிதழ் அனுப்பி
அழைத்ததின் பேரில்
வெனிஸ் வந்தேன்

நான் வெனிஸ்
வந்து உங்களால்
குற்றவாளி என்று
குற்றம் சாட்டப்பட்டு
உங்கள் முன் நின்று
கொண்டிருக்கிறேன்

இது தான்
என்னுடைய வாழ்க்கை
வரலாற்றின் சுருக்கம்
என்று சிங்கமென
கர்ஜித்து முடித்தார்
ஜியார்டானோ புருனோ

சிங்கத்தை பிடித்து
கூண்டில் அடைத்து
சித்திரவதை செய்தாலும்
சிங்கம் சிங்கமாகத்
தான் இருக்குமே
தவிர பூனையாக
மாறாது என்பதை
நிரூபித்து விட்டு ;
முதல் விசாரணை
முடிந்து விட்ட
காரணத்தினால்
அடுத்த விசாரணை
நடக்கும் வரை
சிறையில்
சித்திரவதைகளை
அனுபவிக்க சிறைக்கு
சிங்கமென நடந்து
சென்று கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவையே
வைத்த கண் மாறாமல்
பார்த்துக் கொண்டு
நின்று கொண்டு
இருந்தனர்
கிறிஸ்தவ மத
போதகர்கள்
  
இறப்பைக் கண்டு
பயப்படுபவன்
வாழ்க்கையைக்
கண்டும் பயப்படுவான் ;
இத்தகையவனை யார்
வேண்டுமானாலும்
எளிதாக அடிபணிய
வைத்து விடலாம் ;
ஆனால்
இறப்பைக் கண்டு
பயப்படாதவனை
அந்த ஆண்டவனே
வந்தாலும் அடி
பணிய வைக்க
முடியாது ; என்பதை
அவர்கள் உணரத்
தவறிவிட்டனர்

 ---------  இன்னும் வரும்
---------  21-12-2018
///////////////////////////////////////////////////////////