November 19, 2011

சூக்குமப் பயணம் - பதிவு - 1


சூக்குமப் பயணம் - பதிவு - 1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சூக்குமப் பயணம் தவத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒரு பயிற்சி முறையாக இருந்து வருகிறது.
தவத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒரு பயிற்சி முறையாக சூக்குமப் பயணம் இருக்கின்ற காரணத்தினால் இன்றைய உலகில் சூக்குமப் பயணம் விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

சூக்குமப் பயணத்தின் முறைகள் சரியாக தெரியாத காரணத்தினாலும் அதைச் செய்பவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காத காரணத்தினாலும் சூக்குமப் பயணம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது அழிந்து கொண்டு வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூக்குமப் பயணம் அழிவதற்கு முக்கிய காரணம் சூக்குமப் பயணத்தின் மதிப்புகள் மகிமைகள் மனிதர்கள் உணர்ந்து கொள்ளாததும் புரிந்து கொள்ளாததும் தான்.
சூக்குமப் பயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் மகிமைகளையும் மதிப்புகளையும் வார்த்தைகளில் எழுதிட முடியாது அதன் பலன்களைக் கணக்கிட முடியாது இருந்தாலும் ஒரு சில முக்கியமான மகிமைகளை மட்டும் நாம் தெரிந்து கொள்வோம்.

சூக்குமப் பயணத்தின் மகிமைகள் :
1 ஆன்மா பிற ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் தன்மையைப் பெறுகிறது
2 உலகியலில் தனக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ஆயுதமாக இருக்கிறது
3 அருளியலில் உயர்வான நிலைகளை அடையும் ஒரு திறவு கோலாக இருக்கிறது
4 பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்ளும் நிலையினை பெற முடிகிறது
5 எங்கும் எந்த இடத்திற்கும் சென்று வரும் தன்மையினைப் பெறுகிறது
6 சூட்சும உலகத்துடன் தொடர்பு கொள்ளும் நிலையினை அடைகிறது
7 ஞானத்தின் திறவுகோல்கள் அனைத்தையும் பெற முடிகிறது

சூக்குமப்  பயணம் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களால் பல்வேறு முறைகளில் செய்யப் படுகிறது இருந்தாலும்,
உலகின் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை ,
சூக்குமப் பயணம் செய்து அதன் பலனைக் கண்டவர்கள் பயன்படுத்திய முறை,
சூக்குமப் பயணம் பயிற்சியில் ஈடுபட்டு இந்த முறை தான் அருமையானது, எளிமையானது என்று அதன் பலனைச் சுவைத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு சான்றளிக்கப் பட்ட முறை,
என்பதின் அடிப்படையில் கீழ்க்கண்ட முறை கொடுக்கப் பட்டுள்ளது

சூக்குமப் பயணம் செய்ய தெரிந்து இருக்க வேண்டியவை :
சூக்கும பயணம் தெளிவாக செய்ய வேண்டுமென்றால் சூக்கும பயணத்தின் பலன் நமக்கு நிறைவாக கிடைக்க வேண்டுமென்றால் கண்ணாடிப் பயிற்சியை குறைந்தது மூன்று வருடங்களாவது செய்து இருக்க வேண்டும்.
கண்ணாடிப் பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் பொழுது உயிருக்கு ஒரு அதிர்வு உண்டாகி உயிரானது உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெறுகிறது.
உயிரானது உடலிலிருந்து பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெற்றாலும் உயிரானது உடலிலிருந்து தனியாகப் பிரிந்து வெளியே செல்ல முடியாது.

உயிரை உடலிலிருந்து பிரித்து வெளியே செல்ல வைக்க பயன்படுவது தான் மணிப்பூரகத் தவம் ஆகும் மணிப்பூரகத் தவம் என்பது ஆறாதாரத் தவத்தில் ஒரு பிரிவு ஆகும் ஆறாதாரத் தவம் செய்தால் மட்டுமே மணிப்பூரகத்தின் பலனை நாம் பெற முடியும்
ஆறு ஆதாரங்கள் எனப்படுபவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி ,ஆக்கினை ஆகியவை ஆகும்
சூக்குமப் பயணம் செய்வது என்று முடிவெடுத்தால் ஆறு ஆதாரத் தவத்தில் மணிபூரகத்தில் கூடுதலாக நேரம் ஒதுக்கிச் செய்து பழக வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியும் ஆறு ஆதாரத் தவமும் தொடர்ந்து செய்து வருபவர்களால் மட்டுமே சூக்கும பயணம் எளிதாக செய்ய முடியும் சரியாக செய்ய முடியும் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்


சூக்குமப் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை:
1 சூக்குமப் பயணத்தை அதிகாலை 04.00 மணி முதல் அதிகாலை 06.00 மணிக்குள் செய்ய வேண்டும
2 சூக்குமப் பயணத்தை கண்டிப்பாக அதிகாலை 06.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது
3 அதாவது சூக்குமப் பயணத்தை சூரிய உதயத்திறகு முன்பே செய்து விடுவது நல்லது
4 சூக்குமப் பயணத்தை செய்வதற்கு முந்திய தினம் இரவு குறைவாக சாப்பாடு சாப்பிட வேண்டும்
5 சூக்குமப் பயணத்தை செய்வதற்கு முந்திய தினம் இரவு உடல் உறவு கொள்ளக் கூடாது
6 சூக்குமப் பயணம் செய்த அன்றைய தினம் அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது   .  அலைச்சல்கள் கூடாது பிரயாணங்கள் செய்யக் கூடாது.
7 இந்த பயிற்சியை அடிக்கடி செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும் .
8 சூக்குமப் பயணம் செய்பவர்கள் காப்பு மந்திரம் தெரிந்தால் காப்பு மந்திரம் கண்டிப்பாக போட்டுக்  கொள்ள வேண்டும்.
9 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு ,திக்கு கட்டு மந்திரங்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.
10 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு, திக்கு கட்டு மந்திரங்கள் தெரியாதவர்கள் இந்த பயிற்சியைக் கண்டிப்பாக செய்யக் கூடாது தயவு செய்து செய்ய வேண்டாம் 

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”