August 28, 2018

திருக்குறள்-பதிவு-9


                        திருக்குறள்-பதிவு-9

“”””எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு””””

உலகில் செய்யப்படும்
செயல்களை எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : விளைவு
        தெரிந்த செயல்

இரண்டு:விளைவு
        தெரியாத செயல்

ஒரு செயலைச்
செய்யும்போது
இத்தகைய விளைவு
தான் ஏற்படும்
என்று தெரிந்து
செய்யப்படும் செயல்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

ஒரு செயலைச்
செய்யும்போது
இத்தகைய விளைவு
தான் ஏற்படும்
என்று தெரியாமல்
செய்யப்படும் செயல்
விளைவு தெரியாத
செயல் எனப்படும்

ஒரு செயல்
கடந்த காலத்தில்
செய்யப்பட்ட செயலாக
இருந்தாலும் சரி;
நிகழ்காலத்தில்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயலாக
இருந்தாலும் சரி;
எதிர்காலத்தில்
செய்யப்படும்
செயலாக
இருந்தாலும் சரி;
விளைவு ஒரே
மாதிரியாக வந்தால்
அந்த செயல்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

ஒரு செயல்
கடந்த காலத்தில்
செய்யப்பட்ட செயலாக
இருந்தாலும் சரி;
நிகழ்காலத்தில்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயலாக
இருந்தாலும் சரி;
எதிர்காலத்தில்
செய்யப்படும்
செயலாக
இருந்தாலும் சரி;
விளைவு
மாறிக்கொண்டே
இருந்தால்,
அந்த செயல்
விளைவு தெரியாத
செயல் எனப்படும்

அதாவது விளைவு
தெரிந்த செயல்
எந்தக் காலத்திலும்
மாறாது; ஆனால்
விளைவு தெரியாத
செயல் மாறிக்
கொண்டே இருக்கும்;


நெருப்பைத்
தொட்டால் சுடும்
என்பது தெரியும்
நெருப்பைத்
தொடும் போது
இறந்த காலத்திலும்
சுட்டது;
நிகழ்காலத்திலும்
சுடுகிறது;
எதிர்காலத்திலும் சுடும்;
அதாவது
நெருப்பைத் தொடுவது
என்ற செயலுக்குரிய
விளைவானது
மாறாது என்றும்
ஒரே மாதிரியாகத்
தான் இருக்கும்
இது தான்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

நாம் ஒரு வியாபாரம்
செய்யப்போகிறோம்
வியாபாரம் செய்வதால்
இலாபம் என்ற
நன்மையான செயல்
நடக்குமா
நஷ்டம் என்ற
தீமையான செயல்
நடக்குமா
என்று தெரியாது
இது தான் விளைவு
தெரியாத செயல்
அதாவது விளைவு
நன்மையான விளைவாகவும்
இருக்கலாம் அல்லது
தீமையான விளைவாகவும்
இருக்கலாம்

இது தான் மாறிக் கொண்டே
இருக்கும் விளைவு
இது தான் விளைவு
தெரியாத செயல் எனப்படும்

விளைவு தெரிந்து
செயல்களைச் செய்பவர்கள்
விளைவு தெரிந்து
செய்வதால்,
அவர்கள் விளைவைப்
பற்றி கவலைப்பட
வேண்டிய அவசியம்
இல்லை ஆனால்
விளைவு தெரியாமல்
செயலைச் செய்பவர்கள்
கவலைப்பட வேண்டிய
அவசியம் இருக்கிறது

எண்ணித் துணிக
கருமம் என்றால்,
விளைவு தெரியாத
ஒரு செயலைச்
செய்யும் போது
அதாவது நன்மையான
விளைவைத் தருமா
அல்லது தீமையான
விளைவைத் தருமா
என்பதைத் தெரியாமல்
செயலைச் செய்யும்போது
பலமுறை யோசிக்க
வேண்டும்
யோசித்தப் பிறகே
விளைவு தெரியாத
செயலைச் செய்ய
வேண்டும் என்று பொருள்

துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு என்றால்,
விளைவு தெரியாத
செயலைச் செய்து விட்டு
தீமையான விளைவு
ஏற்பட்டால் அதைப்பற்றி
கவலைப்படுவதால்
ஒரு பயனும் இல்லை
என்று பொருள்

ஒருவர் ஒரு விளைவு
தெரியாத செயலைச்
செய்யும் போது
அதாவது ஒரு வியாபாரம்
செய்யும் போது
பலமுறை யோசித்து
பிறகே செய்ய வேண்டும்
யோசித்து அந்த
வியாபாரத்தை
செய்த பின் அதனால்
நஷ்டம் வந்தால்
நஷ்டத்தைப்பற்றி
கவலைப்படுவதால்
ஒரு பயனும் இல்லை
என்பதைத் தான்
எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு
என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  28-08-2018
//////////////////////////////////////////////////