February 02, 2013

இயேசு கிறிஸ்து-குதம்பைச்சித்தர்-காலனை-பதிவு-60



              இயேசு கிறிஸ்து-குதம்பைச்சித்தர்-காலனை-பதிவு-60  

              “”பதிவு அறுபதை விரித்துச் சொல்ல      

                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

அவர்  தேவாலயத்தில் வந்து , உபதேசம் பண்ணுகையில் ,பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து:  நீர்  எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர்  யார்? என்று கேட்டார்கள்.”

------மத்தேயு - 21 : 23

இயேசு பிரதியுத்தரமாக :  நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்,  அதை எனக்குச் சொல்லுவீர்களானால் , நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.”

------மத்தேயு - 21 : 24

யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று ? என்று கேட்டார் . அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் , பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்  ; ”

------மத்தேயு - 21 : 25

மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் , ஜனங்களுக்குப் பயப்படுகிறோம்,  எல்லாரும் யோவானைத் தீர்க்க தரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணி ,

------மத்தேயு - 21 : 26

இயேசுவுக்கு பிரதியுத்தரமாக : எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது ,  அவர்;  நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார் . ”

------மத்தேயு - 21 : 27

ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்  இருந்தார்கள்  ; மூத்தவனிடத்தில் அவன் வந்து :  மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய் என்றான்.”

------மத்தேயு - 21 : 28

அதற்கு அவன்: மாட்டேன் என்றான் ;ஆகிலும் பின்பு அவன் மனஸ்தாபப் பட்டுப் போனான்.”

------மத்தேயு - 21 : 29

இளையவனிடத்திலும் அவன் வந்து ,அப்படியே சொன்னான் ; அதற்கு அவன் : போகிறேன் ஐயா , என்று சொல்லியும் , போகவில்லை.”

------மத்தேயு - 21 : 30

இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின் படி செய்தவன் என்று கேட்டார் ;  அதற்கு அவர்கள் : மூத்தவன் தான் என்றார்கள் . அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி : ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

------மத்தேயு - 21 : 31

ஏனென்றால் , யோவான் நீதி மார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை ; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள் ; அதை நீங்கள் கண்டும் , அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.”

------மத்தேயு - 21 : 32


சரியானவைகள் அனைத்தும்

சரியானவைகள் என்று கூற முடியாது.

தவறானவைகள் அனைத்தும்

தவறானவைகள் என்று கூற முடியாது.

சரியானவைக்குள்ளும் தவறானவைகள் இருக்கலாம் ;

தவறானவைக்குள்ளும் சரியானவைகள் இருக்கலாம் ;


சரி? என்பது எது

தவறு? என்பது எது - என்பது

அவரவர்  மனநிலையைப் பொறுத்து மாறுபடுகிறது .

சூழ்நிலையைப் பொறுத்து வேறுபடுகிறது.

சரியானவைகளையும் தவறானவைகளையும்

புரிந்து கொள்வதில் சமுதாயம் இரண்டு விதமான

கருத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது :

ஒன்று              : ஒரு பிரிவினருக்கு சரியாகப்படுவது

                               மற்றொரு பிரிவினருக்கு தவறாகப் படுகிறது.

மற்றொன்று : ஒரு பிரிவினருக்கு தவறாகப் படுவது

                               மற்றொரு பிரிவினருக்கு சரியாகப் படுகிறது.


சமுதாயத்தால் அனாதையாக்கப்பட்ட  ,

சமுதாயத்தால் விலக்கப்பட்ட ,

சமுதாயத்தால் வெறுக்கப்பட்ட ,

சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல்

ஒதுக்கப்பட்ட குழந்தை  ,

தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகவும்

குடும்ப வறுமை காரணமாக

அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல்

தவிக்கும் குடும்பத்திற்காகவும் வேலைக்கு வந்த குழந்தை ,

பல்வேறு நிலைகளில் பல்வேறு செயல்களால்

பாதிக்கப் பட்ட குழந்தை ,

வறுமையில் தள்ளாடும் ஆதரவற்ற குழந்தை ,

பசியில் தள்ளாடும் நிர்க்கதியான குழந்தை ,

என்று பல்வேறு நிலைகளில் உள்ள குழந்தை ,

தன்னைக் காப்பாற்றுவதற்காகவும்

தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும்

வேலை செய்யும் போது ,

அதை பார்க்கும் ஒரு பிரிவினர்

இளம் வயதில் வேலை செய்வது கொடுமையான செயல்

இருந்தாலும் பிச்சை எடுக்காமல் உழைக்கின்றனர்

அவர்கள் செய்வது சரி என்கின்றனர்  ஒரு பிரிவினர்.


குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது  ;

இளம் பிஞ்சுகளின் வாழ்வை கருக விடக் கூடாது ;

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் படி

நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்கின்றனர்  மற்றொரு பிரிவினர் .


சமுதாயத்தில் நடைபெறும் ஒரு செயல்

ஒரு பிரிவினருக்கு சரியாகத் தெரிகிறது                                                 

மற்றொரு பிரிவினருக்கு தவறாகத் தெரிகிறது.


சின்னத் திரையிலும், பெரிய திரையிலும்

குழந்தைகள் நடிக்கிறார்கள்,

அவர்களை நாம் குழந்தைத் தொழிலாளர்கள்

என்று சொல்வதில்லை ;

குழந்தைகளை வைத்து பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்

என்று சொல்வதில்லை ;

பெற்றோர்கள் புகழுக்காக ஆசைப்படுகிறார்கள்

என்று சொல்வதில்லை ;

பணத்திற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்

என்று சொல்வதில்லை ;

தங்கள் ஆசைகளை , தேவைகளை குழந்தைகள் மேல் திணிக்கிறார்கள்

என்று சொல்வதில்லை ;

பெற்றோர்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத கனவுகளை

குழந்தைகள் மனதில் திணிக்கிறார்கள்

என்று சொல்வதில்லை ;

படிப்பு சொல்லித் தராமல் உழைக்க அனுப்பி இருக்கிறார்கள்

என்று பெற்றோரை நாம் குறை சொல்வதில்லை ;

அவர்களை குழந்தைத் தொழிலாளர் என்று சொல்லாமல்

குழந்தை நட்சத்திரம் என்கிறோம் ;

உயிர் வாழ்வதற்காக உழைப்பவரை

குழந்தைத் தொழிலாளர்  என்கிறோம் ;


இது என்ன பாராபட்சம் என்று பெரிய திரையிலும்

சின்ன திரையிலும் குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது.

அவ்வாறு நடிக்க வைப்பது தவறான செயல்

என்கின்றனர் ஒரு பிரிவினர்.


இளம் வயதில் என்ன ஞானம்

இளம் வயதில் எத்தகைய திறமை ;

அறிவாற்றல் சிறந்து விளங்குகிறது ;

திறமை மேலோங்கி இருக்கிறது ;

கலை குடிக்கொண்டு இருக்கிறது  ;

என்ன அழகாக பாடுகிறார் ;

என்ன அழகாக நடனம் ஆடுகிறார் ;

என்ன அழகாக நடிக்கிறார் ;

என்று குழந்தைகளை பாராட்டுகின்றனர் .

குழந்தைத் தொழிலாளர்  என்று சொல்லாமல்

குழந்தை நட்சத்திரம் என்கின்றனர்  மற்றொரு பிரிவினர்.


ஒரு செயல் சமதாயத்தில் ஒரு பிரிவினருக்கு தவறாகப்பட்டது ;

சமுதாயத்தில் மற்றொரு பிரிவினருக்கு சரியாகப்படுகிறது.


ஒரு நாள் இயேசு கிறிஸ்து ஆலயத்தினுள் சென்று

நற்கருத்துக்களை ,

அனைவருக்கும் உகந்த கருத்துகளை  ,

வாழ்க்கை நெறிமுறைகளை  ,

உண்மையின் தத்துவங்களை  ,

உபதேசமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிரதான ஆசாரியரும் , ஜனத்தின் மூப்பரும்

 அவரிடத்தில் வந்து ,

நீர்  எந்த அதிகாரத்தில் செயல் புரிகிறீர்

உமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவர்கள்

யார்  ? என்று கேட்டார்கள்.


இயேசுவின் கருத்துக்களை ,

இயேசுவின் வழிகாட்டுதல்களை    ,        

இயேசுவின் அறிவுரைகளை ,

இயேசுவின் விளக்கங்களை ,

இயேசுவின் உவமைகளை ,

இயேசுவின் தத்துவங்களை ,

இயேசுவின் நன்னெறிகளை - ஏற்றுக் கொண்டவர்கள்  ;

இயேசுவே உண்மையான தேவன் என்று உணர்ந்தவர்கள் ;

பிதாவின் குமாரன் இயேசு என்பதை அறிந்தவர்கள் ;

இயேசு செய்யும் செயல்கள் சரியானவை என்று

அவர்  பின்னால் சென்றனர் .

இயேசுவின் செயல்கள் உண்மையானவைகள்

சரியானவைகள் என்பதை உணர்ந்து

அவர்  பின்னால் சென்றனர்,

சமுதாயத்தில் ஒரு பிரிவினர் .


இயேசுவின் செயல்கள் தவறானவை

மக்களை தவறாக வழி நடத்துகிறார் ;

மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் ;

மக்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார் ;

தவறான கருத்துக்களை பரப்புகிறார் ;

இத்தகைய செயல்களை மேற்கொள்ளும்

இயேசுவின் செயல்கள் தவறானவை

என்ற எண்ணம் கொண்டு இருந்தனர்

சமுதாயத்தில் மற்றொரு பிரிவினர் .


இயேசு செய்யும் செயல்கள் சமதாயத்தில்

ஒரு பிரிவினருக்கு சரியானவைகளாகத் தெரிந்தது

மற்றொரு பிரிவினருக்கு தவறாகத் தெரிகிறது.


நீர்  எந்த அதிகாரத்தில் செயல் புரிகிறீர்

உமக்கு இந்த அதிகாரத்தை தந்தது யார்?

கேள்வியில் உள்ள ஆணவத்தையும்

அதிகாரத் திமிரையும்

கண்டு கொண்ட இயேசு ,

உண்மையிலேயே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்

என்று ஆசைப்படுபவர் ;

ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்

என்று நடிப்பவர் ;

இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்

என்று அதிகாரத்துடனும் ஆணவத்துடனும்

நடந்து கொள்பவர் ;

ஆகியோர்  கேட்கப்படும் கேள்விகளுக்குள் வேறுபாடு இருக்கிறது.

வேறுபாடுகளை உணர்ந்து கொண்ட இயேசு

கேள்வியின் தன்மைகளை அறிந்து கொண்ட இயேசு

பதில் சொல்லாமல் ஒரு கேள்வியை கேட்டார்.


ஆம் , இல்லை என்று கேட்கப்படும்

சில கேள்விகளுக்கு பதில்

ஆம் என்றும் சொல்ல முடியாது.

இல்லை என்றும் சொல்ல முடியாது.

ஆம் என்று சொன்னாலும் மாட்டிக் கொள்வோம்

இல்லை என்று சொன்னாலும் மாட்டிக் கொள்வோம்    

இப்படியொரு கேள்வியைத் தான் இயேசு கேட்டார்.


யோவான் கொடுத்த முழுக்கு கடவுளால் உண்டாயிற்றா? அல்லது

மனிதரால் உண்டாயிற்றா என்று இயேசு கேட்டார்.


கடவுளால் உண்டாயிற்று என்றால்

ஏன் அவரைப் பின்பற்ற வில்லை ,           

அவர்  மேல் நம்பிக்கை கொள்ள வில்லை ,

அவரை விசுவாசிக்கவில்லை ,

என்னும் கேள்வி எழும் .


மனிதரால் உண்டாயிற்று என்றால்

யோவான் இறையருள் பெறாதவர்  என்று ஆகிவிடும்.

யோவான் ஸ்நானகன் இறையருள் பெற்றவர்  என்று

மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு விரோதமாக ஆகிவிடும் ;

மக்களுக்கு விரோதமாகி விடும் ;

மாற்று கருத்துக்கு எதிர்ப்பு வந்து விடும் ;

தவறான கருத்தாக மாறி விடும்  ;

என்று நினைத்தனர்

அதனால் அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்றனர்.


நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை

நான் கேட்ட கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரியவில்லை

நான் கேட்ட கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்தால்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்து விடும்

நான் கேட்ட கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியாவிட்டால்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியாது

நான் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியாத போது

நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னால்

உங்களுக்கு எப்படி தெரியும்


என்பதன் அடிப்படையில் ,

நானும் எந்த அதிகாரத்தால் இவைகளைச் செய்கிறேன்

என்று சொல்ல மாட்டேன் என்று கூறினார்  இயேசு .


பின்பு ஒரு கதையைச் சொன்னார்:

ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர் .

தகப்பன் தன்னுடைய மூத்த குமாரனிடம்

திராட்சத் தோட்டத்திற்கு சென்று ,

வேலை செய்யும் படி கூறினான் .

அவன் போக முடியாது என்று மறுப்பு கூறி விட்டு

பின்பு தான் மறுத்துக் கூறியதற்கு

வருத்தப்பட்டு வயலுக்கு சென்று பணியாற்றினான்.


தான் எடுத்த முடிவு தவறு என்று தெரிந்ததும்

வேலைக்கு போக மாட்டேன் என்று

 தவறான முடிவை கைவிட்டு

சரியான முடிவை தேர்ந்தெடுத்து

வேலைக்கு சென்று வயலுக்கு சென்று பணியாற்றினான்.


இளைய மகனிடம் அவ்வாறே சொன்னான்

அவனோ போகிறேன் என்று சொன்னான்

ஆனால் போகவில்லை .

அவன் வயலுக்கு சென்று பணி செய்யவில்லை .

தான் செய்த செயல் தவறான செயல்

என்பதை உணரவில்லை இளையமகன்.


மூத்தமகன் தனக்கு தவறாகப்படுவதை

சரியாக மாற்றிக் கொண்டான் .

இளையமகன் தவறானதை தவறானதாக பார்க்காமல்

சரியானதாக பார்த்தான்.


மூத்தமகன் வேலை செய்யாமல் இருப்பது

தவறான செயல் என்பதை உணர்ந்து

வேலை செய்யும் நல்ல செயலாக சரியான செயலாக

தன்னை மாற்றிக் கொண்டான்.

ஆனால் இளைய மகனோ வேலை செய்யாமல் இருப்பது

தவறான செயல் என்பதை உணராமல்

தான் செய்வது தான் சரி என்ற நினைப்பில்

தவறாக வேலை செய்யாமல் இருந்தான்.


ஒருவருக்கு தவறாக பட்டது மற்றவருக்கு சரியாகப் படுகிறது.

அவரவர்  எண்ணத்தைப் பொறுத்து

சரியானவைகளும் தவறானவைகளும் வேறுபடுகிறது.


இவர்கள் இருவரில் எவன் தகப்பனுடைய

மனவிருப்பத்தின் படி செய்தவன் என்று கேட்டார் .

அவர்கள் மூத்தவன் தான் என்று பதில் சொன்னார்கள்.


மூத்தவன் உண்மையாக இருந்தான்

இளையவன் போலியாக இருந்தான்

ஏமாற்றுக்காரனாக இருந்தான்


மூத்தமகன் போகமாட்டேன் என்று சொல்லும் போதும்

உண்மையாக இருந்தான் ;

வேலைக்கு போகிறேன் என்று சொல்லும் போதும்

உண்மையாக இருந்தான் ;

உண்மையாக செயல்பட்டான் ;

நேர்மையாக இருந்தான் ;


இளையமகன் பொய் சொன்னான்

ஏமாற்றுக்காரனாக நடந்து கொண்டான்.


அதனால் மூத்தவனை ,

உண்மையாக நடந்து கொண்டவனை ,

தகப்பனுடைய மன விருப்பத்தின் படி செய்தவனை

தகப்பனுடைய மனவிருப்பத்தின் படி செய்தவன்

மூத்தவன் என்று பதில் சொன்னார்கள்.


அப்பொழுது இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி ,

உங்களுக்கு முன்பு ஒழுக்கமற்றவர்களும் , விலைமாதரும்

விண்ணரசில் போய்ச் சேருவார்கள் என்று

உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

ஒழுக்கமற்றவர்களும் , விலைமாதர்களும்

சமுதாய பாதிப்பால் தான் தன் வாழ்க்கை நிலையை

மாற்றிக் கொண்டிருப்பார்களே ஒழிய

தானாகவே விருப்பப்பட்டு இத்தகைய

ஒரு தவறான பெயருடன் உலா வர மாட்டார்கள் .

இத்தகையவர்கள் தவறுகளை செய்தவர்கள்

தாங்கள் செய்வது தவறு என்று உணர்ந்தால்

தாங்கள் செய்வது பாவம் என்று உணர்ந்தால்

தவறுகள் மன்னிக்கப்பட்டு

விண்ணரசுக்கு போய்ச் சேருவார்கள்.

தாங்கள் செய்யும் செயல்கள் தவறு என்பதை

உணர்ந்தவர்கள் விண்ணரசில் போய்ச் சேருவார்கள்.


தாங்கள் செய்வது சரியானவை அல்ல

தவறானவை என்று உணர்ந்து

தவறானவைக்காக வருத்தப்படுபவர்   ; 

வேதனைப்படுபவர்;

உண்மையாக இருக்கிறார்  .

தாங்கள் செய்வது சரி என்று சொல்லிக் கொண்டு

தவறானவைகளை செய்து கொண்டு வருபவர்

தவறானவைக்காக வருத்தப் படாமல் இருப்பவர்

பொய்யாக இருக்கிறார் .

போலித்தனமாக வாழ்கிறார் .


தாங்கள் செய்வது தவறு என்று உணர்ந்து

தாங்கள் செய்யும் தவறுகளுக்காக வருத்தப்பட்டு

உண்மையாக இருப்பவர்

உங்களுக்கு முன்பு விண்ணரசில் போய்ச் சேருவார்கள்.

தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும்

சரியானவைகளை தேர்ந்தெடுக்காமல் போலியாக வாழ்பவர்

விண்ணரசால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள் .


தவறுகளை உணர்ந்து உண்மையாக வாழ்பவர்கள்

விண்ணரசில் உங்களுக்கு முன்பு போய்ச் சேருவார்கள்

என்கிறார்  இயேசு.


ஏனென்றால் , யோவான்

நீதிமார்க்கமாய் வந்திருந்தும் ,

உங்களிடத்தில் வந்திருந்தும் ,

உங்களுக்காக வந்திருந்தும் ,

நீங்கள் அவன் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை

அவனை விசுவாசிக்கவில்லை .


தாங்கள் செய்யும் செயல்கள் தவறு என்றும்

அதனால் விளைவது பாவம் என்றும்

இத்தகைய தவறுகளினால் ஏற்படும் பாவங்களை நீக்கி

தவறானவைகளை விலக்கி சரியானவைகளை கைக்கொள்ள

நேர் வழியில் செல்ல ஆதரவுக் கரம் நீட்டி

தங்களை அழைத்துச் செல்ல ஒருவர்  தேவை

என்று எண்ணுபவர்களுக்கு மட்டுமே

நல்வழியை காட்டுபவர்

நல்வழிக்கு அழைத்துச்செல்பவர்

நம் கண் முன்னால் வரும் போது

அத்தகையவரை,

நீதிமார்க்கமாய் உணர்ந்தவரை உணர முடியும்.

ஆயக்காரரும் , வேசிகளும்

யோவானை உணர்ந்தனர் ; விசுவாசித்தனர் ;

ஆனால் நீங்கள் அவரை விசுவாசிக்கவில்லை .


ஆயக்காரரும் , வேசிகளும் விசுவாசிக்கிறார்களே

என்ன காரணம் என்று யாரும் யோசிக்கவில்லை.

அவர்கள் அவனை விசுவாசிக்க என்ன காரணம்

என்று நீங்கள் ஆராய்ந்து பார்க்கவில்லை .

சிந்தனை செய்யவில்லை .

நீங்கள் ஆராய்ந்து பார்த்து இருப்பீர்களானால்

ஆயக்காரரும் ,வேசிகளும்

அவரை ஏன் விசுவாசிக்கிறார்கள்  - என்று

நீங்கள் யோசித்துப் பார்த்து இருப்பீர்களானால்

உண்மை உங்களுக்கு விளங்கியிருக்கும் .


அநத உண்மை உங்களுக்கு விளங்காதபடியால்

நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை .

வாழ்க்கையை உண்மையாக

வாழ்பவருக்கே உண்மைகள் தெரியும் .

வாழ்க்கையை உண்மையாக வாழாமல் போலியாக

வாழ்பவர்க்கு உண்மைகள் தெரியாது என்கிறார்  இயேசு .



குதம்பைச் சித்தர்:

“”காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

            கோலங்க ளேதுக்கடி - குதம்பாய்

            கோலங்க ளேதுக்கடி”””

                        -----குதம்பைச் சித்தர்-----பெரியஞானக் கோவை----


ஒருவருக்கு தவறாகப் படுவது ;

மற்றவருக்கு சரியாகப் படுகிறது .


பெண் என்பவர் ,

அடக்கமாக இருக்க வேண்டும் ;

அமைதியாக இருக்க வேண்டும் ;

பேசுவதற்கு எதிர்  பேச்சு பேசக்கூடாது ;

கோபத்துடன் வார்த்தைகளை கொட்டக் கூடாது ;

தரை அதிரும் படி நடக்கக் கூடாது

பொறுமையுடன் நடக்க வேண்டும் ;

நிதானமாக நடக்க வேண்டும் ;

தலை தரையை நோக்கி குனிந்த நிலையில் இருக்கும்படி

வைத்துக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும் ;

தலை தரையை நோக்கி குனிந்த தலையில் இல்லாமல்

நடந்து செல்லக் கூடாது ;

பெரியோர்  நிற்கும் இடத்தில் வந்து நிற்கக் கூடாது ;

அவர்கள் முன் வாய் திறந்து பேசக் கூடாது ;

எதிர் கேள்வி கேட்கக் கூடாது ;

விதாண்டாவாதம் செய்யக் கூடாது ;

உடல் தெரியும் படி உடை உடுத்தக்கூடாது ;

மற்றவர்  பார்வை உறுத்தும் படி 

அலங்காரம் செய்யக் கூடாது ;

தலை முடியை விரித்த படி வைக்கக்கூடாது ;

தலையை விரித்து வைத்தபடி

வெளியில் செல்லக்கூடாது ;

என்ற விதிகளை

பெண்கள் பின்பற்றாததே

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு காரணம்.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்

பெண்கள் தங்கள் அழகை வெட்டவெளிச்சமாக காட்டுவதும் ,

மற்றவர்களை தவறு செய்ய துாண்டும் விதத்தில்

தவறுகளை துாண்டும் விதத்தில்

உடைகளை அணிந்து கவர்ச்சியை வெளிப்படுத்துவதும் ,

தான் தவறுகள் நடப்பதற்குக் காரணம்

பெண்கள் தான் தவறுகள் செய்யதுாண்டுகின்றனர்

என்கின்றனர்  சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.


சமுதாய கோட்பாடு என்று கூறி

பெண்களை அடிமைப் படுத்துவது ;

பெண்களை முன்னேற விடாமல் அடிமையாக வைத்திருப்பது ;

பேசவிடாமல் அடிமையாக வைத்திருப்பது ;

சிந்திக்க விடாமல் தலையாட்டி பொம்மையாக வைத்திருப்பது ;

சுயமாக செயல்பட விடாமல்

விலங்கிட்ட அடிமையாக வைத்திருப்பது ;

சடங்குகள் , சம்பிரதாய கோட்பாடுகள் ,

ஒழுக்க நெறிகள் என்று கூறி

பெண்களை அடிமையாக வைத்திருப்பது ;

ஆண்டாண்டு காலமாய் பெண்களை

அடிமையாக வைத்து ,

இன்பம் கண்ட சமுதாயம்

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும்

குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்று

தன் மேல் உள்ள  குற்றத்தை மறைத்து

மற்றவர்  மேல் குற்றம் சுமத்தி தப்பிக்க பார்க்கிறது.


பார்ப்பவர்  பார்வை சரியில்லை ,

வக்கிர எண்ணம் கொண்டு பெண்களை பார்க்கின்றனர்;

பெண்களை கவர்ச்சி பொருளாக எண்ணி பார்க்கின்றனர் ;

உள்ளம் துாய்மையாக இல்லாத காரணத்தினால்

பார்வையும் துாய்மையற்றதாக இருக்கிறது ;

உள்ளம் துாய்மையாக இருந்தால்

பார்வை துாய்மையாக இருக்கும் ;

உள்ளம் துாய்மையாக இல்லாத காரணத்தினால்

பார்வையும் துாய்மையற்று இருக்கிறது ;

களங்கத்துடன் இருக்கிறது ;

காமவெறியுடன் இருக்கிறது ;

இச்சை நிரம்பியதாக இருக்கிறது ;

ஆசை உடையதாக இருக்கிறது ;


தவறுகள் நடப்பதற்குக் காரணம்

பெண்கள் போடும் உடையில் இல்லை ,

பார்ப்பவர் கண்களில் இருக்கிறது.

பெண்கள் மேல் இழைக்கப்படும் குற்றங்கள்

பெண்களை தவறான கண்ணோட்டத்துடன்

பார்ப்பவர்  கண்களில் இருக்கிறது.

பெண்கள் நடந்து கொள்ளும்

முறையில் இல்லை என்கின்றனர்

சமுதாயத்தில் மற்றொரு பிரிவினர் .


சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கு தவறாகத் தெரிவது

மற்றொரு பிரிவினருக்கு சரியாகத் தெரிகிறது .

சரியானவைகளும் தவறானவைகளும்

அவரவர்  மனநிலையைப் பொறுத்து வேறுபடுகிறது .


நமது உடலில் பத்துக் காற்றுகள் தொழிலாற்றுகின்றன .

அவை தச வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன ;

1.பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5.சமானன்

6.நாகன் 7.கூர்மன் 8.கிருகரன் 9.தேவதத்தன் 10.தனஞ்செயன்


பிராணன் என்பது உயிர்க்காற்று ; 

அபானன் என்பது மலக்காற்று ;

அபானன் என்னும் மலக்காற்றோடு ,

பிராணன் என்னும் உயிர்க்காற்றைக் கலந்து

உள்ளுக்குள்ளேயே ஒரே கதியாய் நடத்துவதற்கு

பிராணாயாமம் என்று பெயர் .


பிராணாயாமம் என்றால் ,

பிராணனை ஆயாமம் செய்கிறது என்று பொருள் .

ஆயாமம் செய்கிறதென்றால் தடுத்து நிறுத்துகின்றது

(அல்லது)  நேரே கொண்டு போகிறது

(அல்லது ) நீட்டுகின்றது என்று பொருள் .


பிராணாயாமத்தை முறையாக தொடர்ச்சியாக

தொடர்ந்து செய்து வருவதன் மூலம்

ஆற்றல் மிகு வளி உண்டாகி

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்கிறது .


விழித்தெழுந்த குண்டலினி சக்தி

ஆறு ஆதாரங்களான ,

1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம் 3.மணிப்பூரகம்

4.அநாகதம் 5.விசுக்தி 6.ஆக்கினை 

ஆகியவற்றை கடந்து செல்லுகிறது .

ஆறு ஆதாரங்களை துளைத்து செல்கிறது .

அவ்வாறு துளைத்துசெல்லும் போது ,

ஒவ்வொரு ஆதாரமாக துளைத்து

கடந்து செல்லும் போது

ஆதாரங்களுக்குரிய சக்தியைப் பெறுகிறது .

ஆறு ஆதாரங்களைக் கடந்து சக்தியைப் பெற்று

ஏழாவது ஆதாரமான

சகஸ்ராரத்தை அடைகிறது .


பத்தாவது வாசலான சூட்சும வாசல்

என்று அழைக்கப்படும்

பத்தாவது வாசலைத் திறந்து உள்ளே நுழைகிறது .

ஒன்பது வாசல் அடைக்கப்பட்டால் தான்

பத்தாவது வாசல் திறக்கும் .

பத்தாவது வாசல் திறக்கப்பட வேண்டுமானால்

ஒன்பது வாசல் மூடப்பட வேண்டும் .

பத்தாவது வாசல் திறக்கப்பட்டு

குண்டலினி சக்தி சிவனுடன் சேர்கிறது அமிர்தம் சுரக்கிறது .

நானே அவனாகவும்  ; அவனே நானாகவும்;

மாறும் நிலை உண்டாகிறது .

கர்ம வினை கழிகிறது

பிறப்பு  - இறப்பு அறுகிறது

எதற்காக இந்த உயிர் பிறவி எடுத்ததோ

அது தன் கடமையை முடித்து அமைதி கொள்கிறது .


சக்தி சிவனுடன் சேர்ந்து

அமிர்தம் சுரக்க வேண்டுமானால்

நானே அவனாகவும் ; அவனே நானாகவும்;  இருக்கிறோம்

என்பதை உணர வேண்டுமானால் ,

கர்ம வினைகள் கழிய வேண்டும்.

கர்மவினை கழிந்தால் தான் அமிர்தம் சுரக்கும் .


கர்மவினை கழிய வேண்டும்

அதில் இன்னொரு முறையும் இருக்கிறது

அதை சூட்சுமம் என்று கூட சொல்லலாம் .


கர்மவினை கழிந்தால் பத்தாவது வாசல் திறக்கும் ;

பத்தாவது வாசல் திறந்தால் கர்மவினை கழிந்துவிடும் ;


பத்தாவதுவாசலை திறந்து உயர்நிலை அடைந்தோர்

நமது பத்தாவது வாசலைத் திறக்கலாம் ;

கர்மவினையை எரிக்கலாம் ;

பத்தாவது வாசலை திறந்து உயர்நிலை அடைந்தோர்

நம் கர்மவினையை எரித்து

பத்தாவது வாசலை திறக்கலாம் .

( அல்லது )

பத்தாவது வாசலை திறப்பதன் மூலம்

நம் கர்ம வினையை எரிக்கலாம் .


ஜென்மம் ஜென்மமாக பிறவி பல எடுத்து

கர்மவினைகளைச் சுமந்து

வாழ்க்கைச் சுழற்சியில் வேதனைப்பட்டு

அல்லலுறும் நம்மால்

கர்மவினைகளை கழிப்பது என்பது

பலவகையிலும் கடினமான காரியம் தான் .

கர்மவினைகளை கழிக்கும் போது

அதற்குரிய பலன்களை நாம்

அனுபவித்துத் தான் ஆக வேண்டும் ;

செயல்களுக்கு உரிய வினைகளை

ஏற்றுத் தான் ஆக வேண்டும்;


கஷ்டங்களை சுமந்து தான் ஆக வேண்டும் ;

வருத்தங்களை தாங்கித் தான் ஆக வேண்டும் ;

இழப்புகளை ஏற்றுத் தான் ஆக வேண்டும் ;

துன்பங்களை துய்த்துத் தான் ஆக வேண்டும்;

வருத்தங்களை சுமந்து தான் ஆக வேண்டும் ;

தோல்விகளை ஏற்றுத் தான் ஆக வேண்டும் ;

துயரங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் ;

கண்ணீரை விட்டுத் தான் ஆக வேண்டும் ;

சோகத்தைத் தாங்கித் தான் ஆக வேண்டும் ;


இவ்வளவையும் கடந்து ஒருவர்  உயர்நிலை அடைவது

என்பது கடினமான காரியம் தான் .

ஆனால் உயர்நிலை அடைந்தவர்கள்

நமக்கு உயர்நிலை காட்டலாம் ;

உயர்நிலையை அடையச் செய்யலாம் ;


அருள் இல்லாவிட்டால் அது நடக்காது ?

அடைய வேண்டும் என்ற இலக்கு நமக்கு இருந்தால்

காலம் நம்மை பக்குவப்படுத்தும் .

அடைந்தவர்கள் அடையக்கூடிய வழியைக் காட்டுவார்கள் .

அடைந்தவர்கள்

இலக்கை அடையாதவர்களை அடையச் செய்வார்கள் .

இத்தகைய உயர்நிலை அடைந்தவர்களுக்கு

பிறப்பு இறப்பு கிடையாது ;

ஜென்மங்கள் கிடையாது ;


நானே அவனாகவும் ; அவனே நானாகவும் ;

இருப்பதை உணர்ந்த போது

உயர்ந்தவன் நெஞ்சில்


அ ன்பு தழைத்தோடும் ;

ஆ ன்மீகம் உயர்ந்தோடும் ;

இ னிமைகள் தவழ்ந்தோடும் ;

ஈ கைகள் செழித்தோடும் ;

உ வமைகள் கூத்தாடும் ;

ஊ ழ்வினைகள் கழன்றோடும் ;

எ ளிமை நாட்டியமாடும் ;

ஐ திகம் பறந்தோடும் ;

ஒ ற்றுமைகள் இணைந்தாடும் ;

ஓ ர்மை நிலைத்தாடும் ;

ஔ ஷதம்  வழிந்தோடும் ;

இத்தகையவர்கள்

உயர்நிலை அடைந்த உயர்ந்தவர்கள்

காலனை வென்றவர்கள்

காலத்தை வென்றவர்கள்

சமுதாயத்தில் அமைதியாக இருப்பார்கள் .


தங்களை வெளிப்படுத்திக் காட்டிக்

கொள்ள வேண்டும்  என்று நினைக்க மாட்டார்கள் ;

மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும்

என்று நினைக்க மாட்டார்கள் ;

புகழுக்காக ஆசைப்பட மாட்டார்கள் ;

பதவியின் பின்னால் ஓட மாட்டார்கள் ;

பணத்தை சேர்க்க மாட்டார்கள் ;

சொத்துக்கள் வாங்க மாட்டார்கள் ;

சிற்றின்பத்தின் மீது

மயக்கம் கொள்ள மாட்டார்கள் ;

நான் உயர்நிலை அடைந்துவிட்டேன் என்றும்

தன் பெருமையை தானே கூற மாட்டார்கள் ;

நானே உயர்ந்தவன் மற்றவர்கள் எனக்குஅடிமை

என்று எண்ண மாட்டார்கள் ;

போலி வேஷம் போட்டுக்கொண்டு திரிய மாட்டார்கள் ;

கபட வார்த்தை பேசிக்கொண்டு அலைய மாட்டார்கள் ;

ஆடைகளை பலவற்றை அணிந்து கொண்டும் ,

வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டும் ,

போலி வேஷம் தரித்துக் கொண்டும் ,

சமுதாயத்தில் நடமாட மாட்டார்கள் ;


உயர்நிலை அடைந்தவர்களுக்கு

விளம்பரங்கள் தேவையில்லை .

காலமே சொல்லும் இவர்  உயர்நிலை

அடைந்த உயர்ந்தவர்  என்று .

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்

பிறருக்காகவே வாழ்பவர்கள்

உயர்நிலை அடைந்தவர்கள் .


உயர்நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு

உயர்நிலை அடையும் வழிகளை ஆராய்ந்து

உயர்நிலை அடைந்து

உயர்வான நிலையில் இருப்பவர்

உண்மையை உணர்ந்து உயர்நிலை அடைந்தவர்.


அனைத்தையும் அறிந்து ஆராய்ந்து        

சரியானவைக்கும் தவறானவைக்கும்

உள்ள வேறுபாடுகளை உணர்ந்து

பொய்மைகளை விலக்கி உண்மைகளை ஏற்று

தவறுகளை நீக்கி சரியானவைகளை துய்த்து

உண்மையினை உணர்ந்து

உயர்நிலை அடைந்தவர்களுக்கு

சமுதாயத்தில் நான் உயர்நிலை அடைந்து இருக்கிறேன்

என்பதை வெளிக்காட்ட

கோலங்கள் எதற்கு ?  விளம்பரங்கள் எதற்கு?

தவறானவைகளை நீக்கி சரியானவைகளை கைக் கொண்டு

பொய்மைகளை நீக்கி உண்மைகளை ஏற்று

உயர்நிலை அடைந்தவர்களுக்கு

கோலங்கள் தேவையில்லை.

ஆனால்  ,

சரியானவை எவை ? தவறானவை எவை ?

என்ற வேறுபாடு தெரியாமல்,

வாழ்வின் அர்த்தம் தெரியாமல் புரியாமல் ,

உண்மை உணர்ந்து உயர்நிலை அடைந்து விட்டேன்

என்று பொய்வேஷம் போடுபவர்களுக்கு

கோலங்கள் தேவை .


உண்மையை உணராதவர்களுக்கு கோலங்கள் தேவை

உண்மையை உணர்ந்தவர்களுக்கு கோலங்கள் தேவையில்லை


தவறானவைகளை விலக்கி ,

சரியானவைகளை ஏற்றுக்கொண்டு ,

உண்மை வழி சென்றவர்க்கே உயர்நிலை கிடைக்கும் ,

சரியானவை எவை என்று தெரியாமல்

தவறான வழி சென்று உண்மையை விலக்கி

பொய்மையில் மூழ்கி இருப்பவர்களுக்கு

போலி வேஷம் போட்டுக் கொண்டு திரிபவர்களுக்கு

உயர்நிலை கிடைக்காது .


உண்மையை உணர்ந்து உண்மையாக இருப்பவர்க்கே

உயர்நிலை கிடைக்கும் ;

உண்மையை உணராது

உண்மையை உணர்ந்தது போல நடிப்பவர்க்கு

உயர்நிலை கிடைக்காது .

அவர்கள் போலி வேஷங்கள் போட்டுக் கொண்டு

சமுதாயத்தில் அலைய வேண்டியது தான்

என்கிறார்  குதம்பைச் சித்தர் .


இயேசு கிறிஸ்து - குதம்பைச் சித்தர்:

இயேசு ,

சரியானவை எவை என்று உணர்ந்து

அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து

தவறானவைகளை நீக்கி

சரியானவைகளை கைக்கொள்பவன்

வாழ்வில் உயர்நிலை அடைகிறான்

என்கிறார் .


அவ்வாறே ,

குதம்பைச் சித்தரும் ,

தவறானவைகளை விலக்கி சரியானவைகளை ஏற்றுக் கொண்டு

பொய்மைகளை விலக்கி உண்மை வழி சென்று

உண்மையை உணர்ந்தால் உயர்நிலை அடைய முடியும்

இத்தகையவர்களுக்கு கோலங்கள் தேவையில்லை .

ஆனால் ,

தவறானவைகளை சரியானவை என்று நினைத்துக் கொண்டு

பொய்மையை உண்மை என்று நம்பி

அதன் வழி சென்று

உண்மையை உணராமல்

உண்மையை உணர்ந்தது போல் நடிப்பவர்களுக்கு

கோலங்கள் தேவை என்கிறார்.


               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

                                      போற்றினேன் பதிவுஅறுபது ந்தான்முற்றே “”