October 06, 2013

இயேசுகிறிஸ்து-சிவவாக்கியர்-கருவிருந்த-பதிவு64


       


           இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்- கருவிருந்த- பதிவு- 64

           “பதிவு அறுபத்துநான்கை விரித்துச் சொல்ல
                       ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்”

இயேசு கிறிஸ்து:
“இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து,  ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.”
                   -------மாற்கு – 12 :  41

“ஏழையான ஒரு விதவையும் வந்து,  ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.”
 -------மாற்கு – 12 :  42

“அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து,  காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்; ”
 -------மாற்கு – 12 :  43

“அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ  தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்  என்றார்.”
-------மாற்கு – 12 :  44


ஒரு விஷயம் தனக்கு ஏற்புடையதாக இருந்தால்
அது சரி என்றும்,
ஒரு விஷயம் தனக்கு ஏற்புடையதாக இல்லை
என்றால் அது தவறு என்றும்,
தன் வார்த்தைகளாலும்,
தன் செயல்களாலும்,
தன் நடவடிக்கையாலும்,
தன்னை வெளிப்படுத்திக் கொண்டு
உண்மை எது பொய் எது என்று தெரியாமல்
உலவிக் கொண்டு வருகிறது சமுதாயம்.

ஒரு விஷயம் தனக்கு பலனளிப்பதாக இருந்தால்,
நன்மை செய்வதாக இருந்தால்,
வாழ்க்கையை வளமாக்குவதாக இருந்தால்,
வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதாக இருந்தால்,
வாழ்க்கையை மாற்றுவதாக இருந்தால்,
மகிழ்ச்சியை உருவாக்குவதாக இருந்தால்,
இன்பங்களை அளிப்பதாக இருந்தால்,
செல்வச் செழிப்பை உருவாக்குவதாக இருந்தால்,
நல்லவைகளை கொடுப்பதாக இருந்தால்,
உயர்வுகளை தருவதாக இருந்தால்,
அந்த விஷயம் சரி என்கின்றனர் சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

ஒரு விஷயம் தனக்கு பலனளிக்காது என்று தெரிந்தால்,
அதை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது என்று தெரிந்தால்,
வாழ்க்கை தரத்தை உயர்த்துவது கடினம் என்று தெரிந்தால்,
வாழ்க்கையை மாற்றாது என்று உணர்ந்தால்,
மகிழ்ச்சியை தராது என்று அறிந்தால்,
தன் நிலையை உயர்த்த முடியாது
என்று மனம் தெளிந்தால்,
குடும்ப நிலையை மாற்ற முடியாது
என்று சிந்தித்தால்,
அதை தவறு என்கின்றனர்
சமுதாயத்தில் மற்றொரு பிரிவினர்.

தனக்கு ஒத்து வருவதாக இருந்தால் அது சரி என்றும் ;
தனக்கு ஒத்து வரவில்லை என்றால் அது தவறு என்றும் ;
தனக்கு ஏற்ற நிலையில் ஒரு விஷயத்தை ,
அமைத்துக் கொள்கிறது சமுதாயம்

ஒருவருக்கு சரியாக இருப்பது
மற்றொருவருக்கு தவறாக இருக்கிறது.
ஒருவருக்கு தவறாக இருப்பது
மற்றொருவருக்கு சரியாக இருக்கிறது.

அரசாங்க பள்ளியில் படித்தால்
நல்ல கல்வியைப் பெற முடியாது ;
அறிவை வளர்க்க முடியாது ;
பலவித திறனை பெற முடியாது ;
மாற்று மொழியில் புலமை பெற முடியாது ;
போட்டி தேர்வுகளில் கலந்து வெற்றி வாகை சூட முடியாது ;
அண்டை மாநிலங்களுக்கு சென்று
உயர்ந்த பதவிகளை அடைய முடியாது ;
உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது ;
உயர்வானவைகளைப் பெற முடியாது ;
வேற்று மொழி வேலைகளை பெற முடியாது ;
அயல் நாடுகளுக்கு சென்று உயர்வுகளை அடைய முடியாது ;
சுய சிந்தனை, சுய அறிவு ஆகியவற்றை வளர்க்க முடியாது.

அரசாங்க பள்ளிகள் தரமான கல்வியை
வாழ்வை உயர்த்தும் கல்வியை அளிப்பதில்லை ;
பள்ளிகளின் கட்டமைப்பு சரியில்லை
சுகாதார வசதிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை ;
கழிப்பிட வசதிகள் திருப்திகரமாக  இல்லை ;
கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டிய
ஆசிரியர்கள் சரியானகல்வியை அளிப்பதில்லை ;
ஏனென்றால் ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்களாக இல்லை ;
திறமை வாய்ந்தவர்கள் ஆசிரியர்களாக இருப்பதில்லை ;

ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை ;
ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு போவதில்லை ;
ஆசிரியர்கள் காலம் தவறுவதை கடமையாக கொண்டிருக்கின்றனர்
வேலை செய்தாலும் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம்
கிடைக்கிறது என்ற நினைப்பில் ஆசிரியர்கள்
தன் வேலையை ஒழுங்கா செய்வதில்லை- என்று
அரசாங்க பள்ளிகளைப் பற்றியும் ,
அதன் தகுதிகளைப் பற்றியும் ,
தன் கருத்துக்கு ஏற்ற வகையில் ,
தன் சிந்தனைக்கு உகந்த வகையில் ,
தன் அறிவுக்கு எட்டிய வகையில் ,
தான் உணர்ந்த வகையில் ,
அரசாங்க பள்ளிகளை வசைபாடுகின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர் .

தனியார் பள்ளிகள்
கல்வியை அளிக்கிறது என்று கூறிக் கொண்டு
கல்வியை வியாபாரம் செய்யும் கூடாரமாக மாற்றி
அமைத்துக் கொண்டு இருக்கிறது ;
பணம் பிடுங்கும் பாசறையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது ;
நல்ல கல்வியை அளிக்கிறோம் என்று கூறிக்கொண்டு
ஏமாற்று வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறது ;
எங்களால் மட்டுமே நல்ல கல்வியை அளிக்க முடியும்
என்ற மாய தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறது ;
100 சதவீதம் தேர்ச்சி என்று கூறிக்கொண்டு
விளம்பரங்கள் பல செய்து கொண்டு
கல்வியை ஒரு வியாபாரப் பொருள் என்ற நிலைக்கு
கொண்டு போய் இருக்கிறது ;

தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே
குழந்தைகள் நல்ல கல்வியை பெற முடியும் ;
நல்ல குணத்தை பெற முடியும் ;
நல்ல வாழ்க்கைத் தரத்தை பெற முடியும் ;
சிறந்த அறிவை பெற முடியும் ;
என்று கண் கட்டுவித்தை காட்டுகிறது தனியார் பள்ளிகள் .

அண்டை மாநிலங்களுக்கு சென்று
வேலை செய்ய வேண்டும் என்றாலும் ,
வெளிநாடுகளுக்கு சென்று உயர்வான வேலைகளை அடைந்து
உயர்வுகளை பெற வேண்டும் என்றாலும் ,
போட்டித் தேர்வுகளில் கலந்து
உயர்வான பதவிகளை அடைய வேண்டும் என்றாலும் ,
தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தான் முடியும் என்று
நாடகமாடுகிறது தனியார் பள்ளிகள்
என்கின்றனர் சமுதாயத்தில் மற்றொரு பிரிவினர் .

ஒருவருக்கு சரியாக தெரியும் அரசாங்க பள்ளிகளின் நிலைமை
மற்றவருக்கு தவறாக தெரிகிறது ;
ஒருவருக்கு தவறாக தெரியும் தனியார் பள்ளிகளின் நிலைமை
மற்றவருக்கு சரியாக தெரிகிறது ;

தனக்கு ஒத்து வருவது சரி என்றும் ,
தனக்கு ஒத்து வராதது தவறு என்றும் ,
சொல்கிறது சமுதாயம்.
தான் பின்பற்றுவது 

சரியா?  தவறா?  என்று யோசிப்பது இல்லை.

நாம் ஏற்றுக்கொண்ட கருத்து சரி என்று நினைப்பதன் மூலம்
நாம் ஏற்றுக் கொண்ட கருத்து சரி என்று ஆகிவிடாது ;
நாம் ஏற்றுக் கொண்ட கருத்து தவறு என்று நினைப்பதன் மூலம்
நாம் ஏற்றுக் கொண்ட கருத்து தவறு என்று ஆகிவிடாது ;
சரியானவைக்குள்ளும் தவறானவைகள் இருக்கலாம்
தவறானவைக்குள்ளும் சரியானவைகள் இருக்கலாம்.

நாம் வாழ்க்கையில் காணும் காட்சிகளையும்
எதிர்ப்படும் செயல்களையும் வைத்து இது சரி என்றும்
இது தவறு என்றும் நாமே முடிவு செய்து கொள்கிறோம்.
இது சரியானது தானா  இது தவறானது தானா - என்று
நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை .
நமக்கு சரி என்று படுவதை சரி என்றும்
நமக்கு தவறு என்று படுவதை தவறு என்றும்
 நினைத்துக் கொள்கிறோம்.
சரியானவைகளும் , தவறானவைகளும்
அவரவர் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது; வேறுபடுகிறது.

இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து
ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில்
பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுவதில்
இரண்டு நிலைகள் உண்டு:
இரண்டுமே வேறுபட்ட தன்மைகளை தன்னுள் கொண்டது.

ஒன்று         : தன் எண்ணம் நிறைவேற வேண்டும்
                 என்ற  நினைப்பில் காணிக்கை போடுவது
மற்றொன்று  :தன் எண்ணம் நிறைவேறி விட்டது
                 என்ற நினைப்பில் காணிக்கை  போடுவது

தன் கவலை தீர வேண்டும் ;
எண்ணிய செயல் நிறைவேற வேண்டும் ;
கல்வியில் உயர் நிலை அடைய வேண்டும் ;
வேலை வாய்ப்பில் தன்னிறைவு பெற வேண்டும் ;
வாழ்வில் பற்றாக்குறை நீங்க வேண்டும் ;
குடும்ப உறவு மேம்பட வேண்டும் ;
நோய் நீங்கி சுதந்திரமாக வாழ வேண்டும் - என்ற எண்ணத்தில்
தன் ஆசைகள், தன் கனவுகள்,
தன் குறிக்கோள்கள், தன் இலட்சியங்கள்,
நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில்
ஒரு செயல் நடைபெற வேண்டும் என்று
காணிக்கை செலுத்துவது ஒரு முறை .

தான் நினைத்தது நடந்து விட்டால் ,
தன் எண்ணம் நிறைவேறி விட்டால் ,
தன் குறிக்கோள் இலக்கை அடைந்து விட்டால் ,
தன் கனவுகள் உயிர்ப்பெற்று உலா வந்து விட்டால் ,
ஆசைகள் சிம்மாசனம் ஏறி நாட்டியமாடி விட்டால் ,
கல்வியில் உயர்நிலையின் எல்லையை தொட்டு விட்டால் ,
வேலை வாய்ப்பில் பலரும் அதிசயிக்கும்
பாராட்டு நிலையை பெற்று விட்டால் ,
நோய் நீங்கி சுகத்தின் சுகத்தை அனுபவித்து விட்டால் ,
ஏழ்மை நீங்கி இன்பம் துய்த்து விட்டால் ,
பற்றாக்குறை நீங்கி பொருளாதார வசதியில் மேம்பட்டு விட்டால் ,
தன் எண்ணம் நிறைவேறி விட்டது
என்ற காரணத்திற்காக
காணிக்கை செலுத்துவது மற்றொரு முறை .

தன் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற நினைப்பில்
ஒரு செயல் நடைபெறுவதற்கு காணிக்கை செலுத்துவது ஒரு முறை .

தான் நினைத்த எண்ணம் நினைத்தபடி முடிந்து விட்டால்
முடிந்து விட்ட அந்த செயலுக்காக
காணிக்கை செலுத்துவது மற்றொரு முறை .

காணிக்கை என்பது
ஒரு செயல் நடைபெறுவதற்கு முன்பும் ;
ஒரு செயல் நடைபெற்ற பின்பும்  ;
இரண்டு வேறுபடட நிலைகளில் அளிக்கப்படுகிறது.

அத்தகைய வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட
காணிக்கைகளை ஜனங்கள்
காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதை
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு
எதிராக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அநேக ஐசுவரியவான்கள் அதிகமாகப் போட்டார்கள்
ஏழையான ஒரு விதவை வந்து  ,
ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள் .

பணம் போடுவதிலும் வேறுபட்ட நிலைகள் இருக்கிறது :
அவரவர் வசதிக்கேற்றபடி பணம் போடுவது ;
அவரவர் குணத்திற்கேற்றபடி பணம் போடுவது ;

வசதி படைத்தவன் தன் வசதியின் அளவுக்கேற்ப
தன்னிடம் இருக்கும் செல்வச் செழிப்புக்கு ஏற்ப பணம் போடுவான் .
வசதியில் குறைந்தவன் தாழ்வாக உள்ள தன் நிலைக்கேற்ப
தன்னால் எவ்வளவு அளிக்க முடியும்
என்பதை அறிந்து அதற்கேற்ப போடுவான்.
வசதி படைத்தவன் உயர்வான நிலையில் இருந்தாலும்
தான் போட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தால் மட்டுமே
தன் நிலைக்கேற்ப தன் அந்தஸ்துக்கேற்ப
தன் வசதிக்கேற்ப பணம் போடுவான்.

வசதி குறைந்தவன், வசதி குறைந்தாலும்
தன் நிலைக்கேற்ப காணிக்கை செலுத்த வேண்டும்
என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே
காணிக்கை செலுத்த முடியும்.

வாழ்க்கையில் வசதியான நிலையில் இருந்தாலும்
வசதியற்ற நிலையில் இருந்தாலும்,
தன் நிலைக்கேற்ப தன் தகுதிக்கேற்ப
காணிக்கை செலுத்த வேண்டும் என்ற
எண்ணம் இருந்தால் மட்டுமே காணிக்கை செலுத்த முடியும்.

இயேசு தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில்
நிறைய பேர் பணம் போட்டார்கள்  - ஆனால்
பணம் போட்ட மற்ற எல்லாரையும் விட
இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்
என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப் போட்டார்கள்
இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு
உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

பணம் படைத்தவன் பணம் போடுவது என்பது பெரிய விஷயம் அல்ல
பணம் இல்லாதவன் பணம் போடுவது தான் பெரிய விஷயம்.
பணம் படைத்தவன் தன்னிடம் உள்ள பணத்தில்
ஒரு குறிப்பிட்ட அளவு பணம் போடுவதால்
அவன் வசதி குறையப் போவதில்லை.
பணம் இல்லாதவன்
பணம் இல்லாத நிலையிலும்
இருக்கும் சிறிதளவிலும் ஒரு அளவு போடுவது
என்பது மிக இயலாத காரியம் ;
அந்த நிலையிலும் பணம் போடுவது மிக உயர்ந்த விஷயம்.

பணம் படைத்தவன் தன் வசதியின் அளவுக்கேற்பவும்,
சமுதாயத்தில் தன் அந்தஸ்தை நிலை நிறுத்தி கொள்வதற்காகவும்,
தன் நிலையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் 

என்ற எண்ணத்திற்காகவும்,
அளவுக்கு அதிகமாக பணம் போடுவதால்
தன் வேண்டுதல் நிறைவேறும் என்ற தவறான எண்ணத்தினாலும்
நிறைவேறிவிட்ட எண்ணத்திற்கு தன்னிடம் இருக்கிறது என்ற தவறான
நோக்கத்துடனும் அதிக அளவு காணிக்கை செலுத்த வாய்ப்பு உண்டு.

இருக்கிறது என்ற எண்ணத்தினால் கொடுத்தாலும் ,
தன்னிடம் உள்ள வசதி குறையாது என்ற காரத்தினால் ,
கொடுப்பதின் மூலம் தன் வருவாயை பெருக்கிக் கொள்ளலாம்
என்ற நோக்கத்தினாலும் ,
கொடுத்தாலும் தன் நிலை தாழாது என்ற சிந்தனையாலும் தான்
ஐசுவரியவான் காணிக்கை செலுத்துகிறான் .
தன்னிடம் பணம் என்ற பாதுகாப்பு கவசம் இருக்கிறது என்ற
அடிப்படையில் தான் பணம் படைத்தவன் காணிக்கை செலுத்துகிறான் .

ஆனால் வசதி இல்லாதவன் பணம் போட்டால்
அதில் ஒரு காரணம் இருக்கும் ;
அதுவும் வேண்டுதலை தழுவியோ வேண்டுதலை தழுவாமலோ இருக்கும் ;
வேண்டுதல் நிறைவேறி விட்டால் தன் ஏழ்மை நிலையிலும் ,
கடினமாக சென்று கொண்டிருக்கும் தன் வாழ்க்கை நிலையிலும் ,
தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுவான்.
இருப்பவன் இருப்பதிலிருந்து எடுத்து போடுவான்;
இல்லாதவன் இல்லாததிலிருந்து
இருப்பு வைத்ததிலிருந்து எடுத்து போடுவான்.

இருப்பவர்கள் அனைவரும்  எடுத்துபோடலாம் ;
இருக்கும் நிலையில் அள்ளி போடலாம் ;
இல்லாத நிலையில் கிள்ளி போடுவது தான் கடினம் .

இருப்பவன் போட்டாலும்,  இல்லாதவன் போட்டாலும்
ஏற்றுக் கொள்ளத்தக்கது எது என்பது தான் முக்கியம் .

இருப்பவன் பணம் போடும் போது ,
காணிக்கை செலுத்தும் போது,
அவரைச் சுற்றி இருக்கும் சிலர்
அவரின் செல்வச் செழிப்பை உணர்ந்த சிலர்
அவருக்கு மரியாதை கொடுப்பதைப் பார்த்து
அவரை மதித்து போற்றுவதை பார்த்து
அவர் அதிக அளவில் காணிக்கை செலுத்துவதால் தான்
கட்வுள் அவரை உயர்வான நிலையிலும்
பலரும் போற்றும் வகையிலும் நல்ல நிலையிலும் வைத்திருக்கிறார்
என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

               
குறைவான அளவில் காணிக்கை செலுத்துபவர்களை
இந்த சமுதாயம் உதாசீனப் படுத்துவதையும்
அவமரியாதைக்கு உள்ளாக்குவதையும்,
மனம் வருத்தப்படும் படி செயல்களைச் செய்வதையும்,
கண்ணுறும் சிலர்
குறைவான நிலையில் காணிக்கை செலுத்துவதால்
இவர்கள் தாழ்வான நிலையில் இருக்கிறார்களா என்ற
கேள்விக் கணையுடன் பார்க்கின்றனர்
சமுதாயத்தில் மற்றொரு பிரிவினர்.

இதனால் எது சரி? எது தவறு? என்று உணர முடியாமல்
குழம்பி தவிக்கிறது சமுதாயம்.

இருப்பவன் கொடுப்பது சரியா ?அல்லது தவறா?
இருப்பவன் கொடுக்காமல் இருப்பது சரியா? அல்லது தவறா?
இல்லாதவன் கொடுப்பது சரியா ?அல்லது தவறா?
இல்லாதவன் கொடுக்காமல் இருப்பது சரியா? அல்லது தவறா?

இருப்பவன் கொடுப்பது சரி என்றால்
இல்லாதவன் கொடுப்பது தவறா?
அப்படி என்றால் இருப்பவன் கொடுக்க வேண்டும்
இல்லாதவன் கொடுக்கக் கூடாதா?
இரண்டில் எது சரி ? எது தவறு?
சந்தேகத்திற்கிடமான இத்தகைய வினாக்களுக்கு
விடையளிக்கும் வகையில்
இயேசு கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறார்.

இருப்பவன் கொடுப்பது பெரிய விஷயமல்ல
இல்லாதவன் இல்லாததிலிருந்து எப்படி கொடுப்பான்.
இருப்பவன் இருப்பதிலிருந்து கொடுக்க
பெரியதாக கஷ்டப் பட வேண்டியதில்லை.
இல்லாதவன் இல்லாததில் தன் கஷ்டமான நிலையிலும்
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய
வைத்திருந்ததை  எடுத்து கொடுப்பது என்பது பெரிய விஷயம்.

இருப்பவன் எடுத்துகொடுக்க பெரிய மனசு தேவையில்லை
ஆனால் இல்லாதவன் கொடுக்க பெரிய மனசு வேண்டும்;
எதையும் தாங்கும் வலிமை வேண்டும்;
அப்படி இருந்தால் தான் இல்லாதவன் கொடுக்க முடியும்.
இருப்பவனுக்கு அது தேவையில்லை.

இருப்பவர்கள் தங்கள் இருப்பிலிருந்து எடுத்து போட்டார்கள்
இந்த ஏழை விதவை
தன்னிடம் இல்லாத நிலையிலும்,
தன் கஷ்டமான நிலையிலும்,
தன் வறுமையிலும் தன் ஏழ்மையிலும்  ,
தன் ஜீவனத்துக்கு என்று
இருந்ததை எடுத்துப் போட்டாள்.

ஆதலால் மற்ற அனைவரையும் விட
அவள் செயல் சிறந்தது ; உயர்ந்தது;  மதிப்பு மிக்கது.

ஒரு செயல் உயர்ந்ததா? தாழ்ந்ததா?
சரியானதா? தவறானதா? என்று
உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்,
அந்த செயலில் உள்ள உயிர்த்தன்மையை
அறிந்தால் மட்டுமே அச்செயல்
சரியானதா ?தவறானதா? என்று உணர முடியும்.

செயலை மேலோட்டமாகப் பார்த்தால் அச்செயல்
அவரவர் நினைப்புக்கு ஏற்றபடி சரி என்றும்,
தவறு என்றும் தெரியும்.

சரியானவையும்,  தவறானவையும்
அவரவர் எண்ணத்திற்கு
ஏற்றபடி தான் மாறுபடுகிறதே
தவிர செயலில் இல்லை
என்கிறார் இயேசு.

சிவவாக்கியர்:
“””கருவிருந்த வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்
  குருவிருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லீரேல்
  உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றுநீர்
  திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே”””
         ----சிவவாக்கியர்--- பெரிய ஞானக்கோவை-----          

வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்வதில் தான்
வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது.

வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் தான் சில பேர் தங்கள்
வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் தவிக்கிறார்கள்.

வார்த்தைகளின் அர்த்தத்தை ஓரளவு
புரிந்து கொள்பவர்களால் மட்டுமே
வாழ்க்கையின் அர்த்தத்தை ஓரளவு புரிந்து கொண்டு
வாழ்க்கை பயணத்தை வெற்றி இலக்கை நோக்கி
நகர்த்தி செல்ல முடியும்.

வாழ்க்கையை வெற்றிகரமாக
நடத்தி செல்ல வேண்டுமானால் ,
இன்னல்களை களைந்து
மகிழ்வை விதைக்க வேண்டுமானால் ,
சோகத்தை கரைத்து
சுகத்தை சுகிக்க வேண்டுமானால் ,
ஏமாற்றுகாரர்களின் ஏமாற்று வித்தைகளை
புரிந்து கொள்ள வேண்டுமானால் ,
துரோகிகளின் சுயலாபத்தை
அறிந்து கொள்ள வேண்டுமானால் ,
பிறரை கெடுத்து தான்  மட்டும் வாழத் துடிக்கும்
தீயவர்களின் எண்ண ஓட்டத்தை
உணர்ந்து கொள்ள வேண்டுமானால் ,
பிறருடைய அறியாமையை ஏழ்மையை பயன்படுத்தி
உயர்நிலை அடையத் துடிக்கும்
தன்னலமுள்ளவர்களின் தகாத செயல்களை
உணர்ந்து கொள்ள வேண்டுமானால் ,
சமுதாயத்தில் வெளிப்படுத்தப்படும்
வார்த்தைகளின் உள் அர்த்தத்தை
புரிந்து இருக்க வேண்டும் ;
உணர்ந்து இருக்க வேண்டும் ;

வார்த்தைகளின் அர்த்தம் என்பது
இடத்தையும், காலத்தையும் மட்டும் பொறுத்தது அல்ல
மனிதர்களின் மனதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

வார்த்தைகளின் அர்த்தம் என்பது அவரவர் கொண்டுள்ள
மனநிலைக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒருவர் எந்த நிலையில்
எந்த வகையான புரிதலில்
எந்த வகையான மனநிலையில்
எந்த வகையான கொள்கையை
தன்னுள் கொண்டுள்ளாரோ,
அந்த நிலையில் அதற்கு ஏற்ற வகையில்
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது.

அவரவர் நிலைக்கேற்ப ,
அவரவர் திறமைக்கேற்ப,
அவரவர் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப,
அவரவர் அடைந்த உடல், மன வளர்ச்சிக்கேற்ப,
அவரவர் பெற்றுள்ள அறிவுத்திறனுக்கேற்ப,
அவரவர் அடைந்துள்ள ஆன்மீக உயர்வுக்கேற்ப,
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது.

தான் ஒரு விஷயத்தை , ஒரு உண்மையை
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்
ஆன்மீக ரகசியங்கள் ,
பிரம்ம ஞானத்தின் திறவுகோல்கள்,
கடவுளை அடையும் வழிகள்,
முக்தி பெற மேற்கொள்ள வேண்டிய நிலைகள்,
போன்ற அழியாத நிலையை
அடையக் கூடிய நிலையை
அடையக் கூடிய ரகசியங்கள்
உண்மை வழிகள் போன்றவை
பாடல்களாகவும்
ரகசிய வார்த்தைகளில் அர்த்தங்களாகவும்
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

சித்த வைத்தியம்,
பஞ்ச பட்சி சாஸ்திரம்,
சோதிட சாஸ்திரம் போன்ற முக்கியமானவைகள்
உணர்ந்து கொள்ள வேண்டியவைகள்
வாழ்க்கையில் பயன்படக் கூடியவைகள்
வாழ்க்கை நிலைகளை
உணர்ந்து கொள்ளக்கூடியவைகள்
பாடல்களாகத் தான் இருக்கிறது.

வார்த்தைகளில் உள்ள இதன் அர்த்தம்
அவரவர் இருக்கும் நிலைக்கேற்ப மாறுபடுகிறது ;
ஏற்றுக் கொள்ளப்படுகிறது ;
உணர்ந்து கொள்ளப்படுகிறது ;

ஏற்றுக் கொள்ளப்படும் வார்த்தைகளின் அர்த்தம்
சரியா ? அல்லது தவறா?
என்பதை உணர்ந்து கொள்ளாமல் ,
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுவதினால்
தாங்கள் பின்பற்றுவது சரியா? அல்லது தவறா?
 என்பதை உணரமுடியாமல்
இலக்கை அடைய முடியாமல்
தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது
மனிதனின் மனநிலை.

வார்த்தைகளின் அர்த்தம்
தவறாக புரிந்து கொண்டு
தான் புரிந்து கொண்டது தான் சரி
தான் பின்பற்றும் முறை தான் சரி
என்று நினைத்துக் கொண்டு ,
தவறான வழியைப் பின்பற்றி  
உண்மையை விலக்கி செல்பவர்களால்
வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை
உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது.

உண்மை நிலையை அடைய முடியாமல்
தான் செல்லும் வழி தான் சரி
தான் மேற்கொள்ளும் பயணம் தான் சரி
என்று தவறை நோக்கி பயணிக்கின்றனர்.

அவர்களுக்கு நீ பயணிக்கும் வழி தவறு
அந்த வழியில் நீ பயணித்தால்
இலக்கை அடைய முடியாது
உண்மை நிலையை உணர முடியாது என்று
உண்மையை உணர்ந்தவர்கள் எடுத்துரைக்கும் போது
அதை ஏற்றுக் கொள்ளும் மனது இல்லாதவர்கள்
தான் புரிந்து கொண்ட அர்த்தமே சரி
தான் பின்பற்றும் வழிமுறையே சரி
என்று இருப்பவர்களால் ,
உண்மை நிலையை அடைவது
என்பது இயலாத காரியம்.

உண்மை நிலைக்கும்,  பொய்யான நிலைக்கும்
உண்மைத் தோற்றத்திற்கும், பொய்த் தோற்றத்திற்கும்
வேறுபாடு தெரியாதவர்களால்
உண்மையை உணர்ந்து இலக்கை அடைய முடியாது.

வார்த்தைகளின் அர்த்தம்
ஒருவர் புரிந்து கொள்ளும் நிலையில்
மாறுபடுகிறது என்பதை ,
கீழ்க்கண்ட கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் :

ஒருவருக்கு பசி எடுத்த காரணத்தினால்
ஓட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று
ஓட்டலுக்கு சென்றால் ,
அங்கு ஓட்டலின் முன்புறம் பலகையில்
“இன்று முதல் தோசைக்கு சட்னி கிடையாது”
என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அதை படித்து விட்டு உள்ளே சென்றார் ;
சர்வரிடம் ஒரு தோசை கொண்டு வா என்றார் ;
தோசையுடன் சாம்பார் இருந்தது சாப்பிட்டார் ;

இரண்டாவது தோசை கொண்டுவரும் படி சொன்னார்
இரண்டாவது தோசையுடன் சாம்பார் வந்தது.
கோபத்துடன் சர்வரைக் கூப்பிட்டு சட்னி எங்கே என்றார்.
“இன்று முதல் தோசைக்கு சட்னி கிடையாது”
என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே
தாங்கள் அதை பார்க்கவில்லையா என்று?
சர்வர் கேட்டார்.

சாப்பிட வந்தவன் சர்வரை நோக்கி,
இன்று முதல் தோசைக்கு தானே
சட்னி கிடையாது என்று எழுதி இருக்கிறது
இரண்டாவது தோசைக்கு சட்னி உண்டு அல்லவா என்றார்

ஓட்டலில் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்ட
“இன்று முதல் தோசைக்கு சட்னி கிடையாது”          
என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால்
இன்று முதல் பரிமாறப்படும் அனைத்து தோசைகளுக்கும்
சட்னி கிடையாது என்று பொருள்.
ஆனால் சாப்பிட வந்தவர் எடுத்துக் கொண்டது
“முதல் தோசைக்கு மட்டும் தான் சட்னி கிடையாது”
இரண்டாவதிலிருந்து பரிமாறப்படும் அனைத்து
தோசைகளுக்கும் சட்னி உண்டு என்று.

ஒரே வார்த்தை தான்
அதை வெவ்வேறு நிலையில் உள்ளோர்
வெவ்வேறு விதமான நிலைகளில்
அர்த்தம் கொண்டுள்ளனர்,

காதலுக்கும், அன்புக்கும் - வேறுபாடு இருக்கிறது
காதலில் காமம் கலந்திருக்கும்;
அன்பில் காமம் கலந்திருக்காது.

சில காதலில் காதல் அதிகமாகவும்
காமம் குறைவாகவும் இருக்கும்;
சில காதலில் காமம் அதிகமாகவும்
காதல் குறைவாகவும் இருக்கும்.

ஆனால் அன்பில் அன்பு மட்டுமே இருக்கும்
அதில் காமம் கலந்திருக்காது.
100 சதவீதம் அன்பு இருந்தால் மட்டுமே அது அன்பு.
அன்பில் ஏதேனும் கலந்திருந்தால்
அது அன்பு அல்ல.
அன்பு என்பது கலப்படமில்லாதது ;
கலப்படம் ஏதும் இல்லாமல் இருந்தால் தான் அது அன்பு;
அன்பில் ஏதும் கலந்திருந்தால் அது அன்பு அல்ல.

காதல் வெளிப்படும்போது காமம் மறைந்திருக்கும்
காமம் வெளிப்படும்போது காதல் மறைந்திருக்கும்;
காதலுக்குள் காமமும் , காமத்திற்குள் காதலும்
வெளிப்படாமல் இருக்கும் ;
அதாவது ஒன்றுக்குள் ஒன்றாக மறைந்து இருக்கும்.

கலந்து இருந்தால் தான் அது காதல்
கலக்காமல் இருந்தால் அது காதல் அல்ல.
கலந்து இருந்தால் அது அன்பு அல்ல
கலக்காமல் இருந்தால் தான் அது அன்பு.

காதலை காதலியிடமும் மனைவியிடமும்
தான் காட்ட முடியும்
ஆனால் அன்பை உலகில் உள்ள அனைத்து
உயிர்களிடமும் காட்ட முடியும்
காதல் என்பது வேறு;  அன்பு என்பது வேறு;

காதல் என்ற வார்த்தைக்கும்
அன்பு என்ற வார்த்தைக்கும்
காதல், அன்பு என்ற இரண்டு வார்த்தைக்கும்
அர்த்தங்கள் வேறுபடுகிறது என்றால்
வார்த்தைகளின் அர்த்தங்கள்
நம் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் விளையாடுகிறது
என்று தெரிந்து கொள்ளலாம்.

வார்த்தைகளின் அர்த்தங்கள் தெரியவரும்போது
வாழ்க்கையின் இலக்கு தெளிவடைகிறது

பிறப்பு என்பது ஒருவர் செய்த பாவ புண்ணிய
பலனுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது.

கர்மவினையை கழிக்கத்தான் பிறப்பு ஏற்படுகிறது
கர்மவினையை கழித்து விட்டால் பிறப்பு என்பது ஏற்படாது.

கர்மவினை இருக்கும் வரை பிறப்பு சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்
கர்மவினை கழிந்து விட்டால் பிறப்பு சுழற்சி நின்று விடும்.

கர்மவினையை கழித்து விட்ட உயிருக்கு
பிறப்பு என்பது கிடையாது.
கர்மவினையை கழிக்காத உயிருக்கே
பிறப்பு என்பது ஏற்படுகிறது.
கர்மவினையின் தாக்கத்தால் பிறக்கும் குழந்தை
கர்ம வினையால் பாதிக்கப்படும் போது
துன்பத்தால் துயரப்படும்போது
ஏன் இந்த ஜென்மம் எடுத்தோம்
எதற்காக இந்த பிறவி எடுத்தோம்
இனி ஒரு பிறவி எனக்கு தேவையில்லை
என்று கலக்கத்தால் மனித மனம் கலங்குகிறது.

துன்பம் நீங்கி இன்பம் பெற்று வாழவும்,
சோகம் நீங்கி மகிழ்ச்சி பெற்று வாழவும்,
வழி தேடி அலைகிறது மனித மனம்.
இதனால் எந்த வழியைப் பின்பற்றினால்
நன்மை அடையலாம் ;
உயர்வை அடையலாம் ;
நிம்மதி பெற்று வாழலாம் என்று
வழி பல தேடுகிறது
உண்மையான வழி எது என்று
தேடி அலைகிறது மனிதமனம்.

உண்மையை உணர்ந்தவர்கள்
உண்மையை உண்மையான வார்த்தைகளால் விளக்கும் போது ,
உண்மை உணர்வை உணர்வுகளால் வெளிப்படுத்தும்போது ,
உண்மை நிலை அடைய உண்மை வழி காட்டும் போது,
இது உண்மை வழி இதுபொய் வழி என்ற
வேறுபாடு தெரிந்தவர்களால் மட்டுமே
இவர் உண்மையானவர்
இவர் பொய்யானவர்
இவர் சொல்லும் வார்த்தை உண்மை
இவர் சொல்லும் வார்த்தை பொய்
இவர் காட்டும் வழி உண்மை வழி
இவர் காட்டும் வழி பொய் வழி
என்று வேறுபாடு
கண்டு கொள்பவர்களால் மட்டும்
உண்மையானவர்களை உணர்ந்து
உண்மையை உணர்ந்தவர்களை உணர்ந்து
நன்மை அடைய முடியும் .

உண்மையை உணர்ந்தவர்கள் உரைக்கும்
உண்மையான வார்த்தைகளை உணர்ந்து
அவர் காட்டிய வழியில் பயணிப்பவர்களால் மட்டுமே
கர்மவினையை கழிக்க முடியும் ;
பிறப்பு அறுக்க முடியும் .

இதனை உணராதவர்கள்
வார்த்தைகளின் அர்த்தத்தை
உணர முடியாதவர்களால்
கர்மவினையை கழித்து
பிறப்பு இறப்பை அறுக்க முடியாது .
வாழ்க்கைச் சுழற்சியில் மாட்டிக் கொண்டு
தள்ளாட வேண்டியது தான்.

கர்ம வினையைக் கழித்தவருக்கு
பிறப்பு எடுத்து இந்த உலகில் மாட்டிக் கொண்டு
வாழ்க்கைச் சகதியில் சிக்கிக் கொண்டு
தடுமாற வேண்டியதில்லை .

கர்மவினையை கழித்தவருக்கே
பிறப்பு இறப்பு அறுத்து
முக்தி என்னும நிலையை அடைந்து
நானே அவனாகவும் அவனே நானாகவும்
மாறக்கூடிய நிலை வரும் .

கர்மவினையை கழித்தவருக்கே இத்தகைய நிலைகள் ஏற்படும்
கர்மவினையை கழிக்காதவருக்கு இத்தகைய நிலைகள் ஏற்படாது .

கர்மவினையை கழித்து முக்தி என்னும்  நிலையை அடைய
ஒருவர் கர்மவினையைப் பற்றியும்
மறு ஜென்மம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்
இதனைப்பற்றி தெளிவாக தெரிந்தவருக்கே
இத்தகைய நிலையை அடைய முடியும் .

உண்மை நிலை அறிந்தவர்கள் உண்மை வழியைப் பின்பற்றி
உண்மையை அடைய முடியும்
உண்மை நிலை அறியாதவர்கள் பொய்யான வழியைப் பின்பற்றி
உண்மையை அடைய முடியாது .

உண்மையை அறிந்தவர்களை
உண்மையாக உணர்ந்து
அவர் சொல்வது பொய் அல்ல
உண்மை என்பதை உணர்ந்தும்
அவரை உணர்ந்தால்
உண்மை வழியைப் பின்பற்றி
உண்மையை உணர முடியும்
என்பதை உணர்பவர்களால் மட்டுமே
உண்மை நிலை அடைய முடியும்
என்கிறார் சிவவாக்கியர் .
                               
இயேசு கிறிஸ்துசிவவாக்கியர்:
இயேசு,
சரியானவை எவை ?
தவறானவை எவை ?
என்பதை உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
உண்மையை அறிந்து
உண்மை நிலையை அடைய முடியும்.
சரியானவை எவை ?
தவறானவை எவை ?
என்பதை கண்டுபிடிக்க முடியாதவர்களால்
உண்மை நிலையை அடைய முடியாது
என்கிறார்.

அவ்வாறே,
சிவவாக்கியரும்,
சரியானவைக்கும்,  தவறானவைக்கும்
உள்ள வேறுபாட்டை அறிந்து
சரியானவை எவை என்பதை உணர்ந்து
அதை கடைபிடிப்பவர்களால் மட்டுமே
உண்மை வழியைப் பின்பற்றி
உண்மை நிலையை அடைய முடியும்
என்கிறார்.

“””“போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
        போற்றினேன் பதிவுஅறுபத்துநான் குந்தான்முற்றே””””