April 27, 2012

இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர்-பூசை-பதிவு-36




  இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர் -பூசைசெய்த-பதிவு-36

           “”பதிவு முப்பத்திஆறை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் , என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
                                                                           -----மத்தேயு - 7:21

அந்நாளில் அநேகர்  என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
                                                                        -------மத்தேயு - 7:22

அப்பொழுது , நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை ; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
                                                                 ------------மத்தேயு - 7:23

பிதா என்பவர்  யார்  என்றும்
பிதாவின் இயல்புகள் எவை என்றும்
பிதாவிடம் அருள் பெறுவது எவ்வாறு என்றும்
பிதாவிடம் ஆசி பெறுவது எந்த முறையில் என்றும்
பிதாவிடம் இணைவது எப்படி என்றும்
தெரியாத நிலையில்
பிதாவின் சித்தத்தின் படி எவ்வாறு நடக்க முடியும்
பிதாவின் சித்தம் எது என்றும்
அவர்  நம்மிடையே எதை எதிர்பார்க்கிறார் என்றும்
நாம் எந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும்  என்று
அவர்  எதிர்பார்க்கிறார்  என்றும்

நம்முடைய நடவடிக்கை முறைகள் ;
செயல்படுத்தும் நடவடிக்கை செயல்கள் ;
எண்ணப்படும் மனதின் ஆழங்கள் ;
உதிரப்படும் வார்த்தையின் அர்த்தங்கள் ;
சிந்தப்படும் சொற்களின் தெளிவுகள் ;
பகிரப்படும் உண்மையின் உருவங்கள் ;
காட்டப்படும் கருத்துக்களின் விளக்கங்கள் ;
செய்யப்படும் செயல்களின் முழுமைகள் ;

எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும்
எதை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும்
எந்த குறிக்கோளை உடையதாக இருக்க வேண்டும் என்றும்
எந்த இலக்கை அடைவதாக இருக்க வேண்டும் என்றும்
நமக்குத் தெரியாது .

ஆனால் பிதாவை அறிந்து
பிதாவை உணர்ந்து
பிதாவின் ஆசி பெற்று
பிதாவுடன் இரண்டறக் கலந்து
பிதாவின் குமாரனாக இந்த அவனியில் அவதரித்த
பிதாவின் குமாரனான இயேசுவுக்கு
பிதாவையும் தெரியும்
பிதாவின் சித்தம் எது என்றும் தெரியும் .

பிதாவின் குமாரரான இயேசுவை அடைந்து
அவரை உணர்ந்தால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும்
நம்மால் உணர முடியும் - ஏனென்றால்
பிதா வேறு அல்ல ; இயேசு வேறு அல்ல ;

பிதாவுக்குள் இயேசு இருக்கிறார் ;
இயேசுவுக்குள் பிதா இருக்கிறார் ;

பிதாவை உணர்ந்தால் இயேசுவை உணர முடியும் ;
இயேசுவை உணர்ந்தால் பிதாவை உணர முடியும் ;

        உலகத்தை ரட்சிக்க வந்தவர் ;
        பாவத்தை தீர்க்க வந்தவர் ;
        மடமைகளை கொளுத்த வந்தவர் ;
        மனதை மாற்ற வந்தவர் ;
       இரக்கத்தை அளிக்க வந்தவர் ;
       கருணையை கொடுக்க வந்தவர் ;
       உண்மையை உணர்த்த வந்தவர் ;
        சமுதாயத்தை சீர்படுத்த வந்தவர் ;
        சமதர்மத்தை விதைக்க வந்தவர் ;
       ஏழ்மையை நீக்க வந்தவர் ;
       ஏற்றத்தை உருவாக்க வந்தவர் ;
       துன்பங்களை கொளுத்த வந்தவர் ;
       துயரங்களை அழிக்க வந்தவர் ;
       கவலைகளை தீர்க்க வந்தவர் ;
       மாற்றத்தை உருவாக்க வந்தவர் ;
      பொய்மையை புதைக்க வந்தவர் ;
     முன்னேற்றத்தை எழுப்ப வந்தவர் ;
     மூடதனத்தை சாய்க்க வந்தவர் ;

எல்லாம் வல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
உண்மையாக உணராமல்
நம்பிக்கை வைக்காமல்
நம்மை காக்க வந்தவர்  என்ற நம்பிக்கை இல்லாமல்
இயேசுவின் பின்னால் செல்வதாலும்

கர்த்தாவே! கர்த்தாவே! என்று இயேசுவை
அழைப்பதாலும் ஒரு பயனும் இல்லை .

அதனால் தான் இயேசு என்னை உள் மனதில் நம்பாமல்
ஆழ்மனதில் நம்பிக்கை கொள்ளாமல்
உண்மையாக விசுவாசம் இல்லாமல்
வெளியே போலித்தனமாக பக்தி
இருப்பது போல் காட்டிக் கொண்டு
நயவஞ்சக நடிப்பு நடிக்கும் போலித்தனம் கொண்ட
குற்றங்களை தன்னுள் கொண்ட
ஆணவ உள்ளங்கள் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்வதும்
என்னை பின்பற்றுவது போல் நடிப்பதும்
என்னை வழிபடுவது போல் நாடகம் ஆடுவதும்
சமுதாயம் பார்க்கும் படி போலி வேடம் போடுவதும்
போன்ற செயல்களைச் செய்வதன் மூலம்
ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .
               
என்னை உண்மையாக உணராமல் ;
நான் வகுத்த நெறிப்படி நடக்காமல்     ;
என்னுடைய வசனங்களைக் கைக்கொள்ளாமல் ;
என்னுடைய பாதை வழியே போகாமல் ;
என்னுடைய எண்ணப்படி செயல்படாமல் ;
என்னுடைய வசனங்களை வெளிப்படுத்தாமல் ;
நான் சொன்ன கடமைகளை நிறைவேற்றாமல் ;
உண்மையை உலகுக்கு உணர்த்தாமல் ;

கால மாற்றத்தால் கருத்திழந்து
கடமையைத் தவறவிட்டு
தன்னை வளர்த்துக் கொள்ள ;
தன் உயர்வை நிலை நிறுத்திக் கொள்ள ;
தன் புகழை பெருக்கிக் கொள்ள ;
தன் தேவைகளை அடைந்து கொள்ள ;
தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ள ;
தன் தலைமுறையை பாதுகாத்துக் கொள்ள ;
தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள ;
தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள ;
தன் கற்கனைகளை செயல்படுத்திக் கொள்ள ;
தன் பெருமையை வலுபடுத்திக் கொள்ள ;
தன் பெயரை வளர்த்துக் கொள்ள ;

பொய்மையை இதயத்தில் வைத்து
போலித்தனத்தை முகத்தில் வைத்து
கபடநாடகத்தை வார்த்தையில் வைத்து
உண்மை இல்லாதவர்கள்
நெறி தவறியவர்கள்
தவறான வழி செல்பவர்கள்
பாவத்திற்கு அஞ்சாதவர்கள்
தவறுக்கு கலங்காதவர்கள்

என்னை நோக்கி
உம்முடைய பெயரைச் சொல்லித் தான்
தீர்க்க தரிசனம் உரைத்தோம்
பிசாசுகளைத் துரத்தினோம்
அநேக அற்புதங்களைச் செய்தோம் என்பார்கள்
அவர்கள் தவறானவர்கள்
தவறான வழி நோக்கி செல்பவர்கள்
என்கிறார்  இயேசு .

இத்தகைய தவறான வழி நின்று
பொய் வேடம் போட்டு
தன்னை உயர்வாக காட்டிக் கொள்பவர்கள் ;
தன்னை உயர்த்திக் கொள்பவர்கள் ;
தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் ;
இவர்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் அங்கீகரிக்க மாட்டேன் ;
இவர்களை நான் ஆசிர்வதிக்க மாட்டேன் ;
அன்பு செலுத்த மாட்டேன் ;
அவரவணைத்து காக்க மாட்டேன் ;

அக்கிரமங்களை  செய்துவாழும்
பாழ் நெஞ்சம் கொண்ட கொடுமைக்காரரே தள்ளிப் போங்கள்
என் அருகே வராதீர்கள் விலகிச் செல்லுங்கள்
அப்பால் போ சாத்தானே தள்ளி நில்
என்னை விட்டு போங்கள் என்று
அவர்களுக்குச் சொல்லுவேன் என்கிறார்  இயேசு .

அன்பை இதயத்தில் விதைத்து ,
கருணையை செயலில் விதைத்து ,
பண்பை வார்த்தையில் விதைத்து ,
மரியாதையை உள்ளத்தில் விதைத்து ,
உண்மையை உலகத்தில் விதைத்து ,

தான் என்ற ஆணவம் நீக்கி
தன்னால் தான் நடக்கிறது 
நான் தான் செய்கிறேன்
என்ற எண்ணத்தை விடுத்து செயல் செய்பவர் .

நல்லவைகள் இறைவனால் செய்யப்படுகிறது
என் மூலமாக செய்யப்படுகிறது
நான் கருவியாக இருக்கிறேன் .

கடவுள் என்னை நல்லது செய்ய பயன்படுத்துகிறார்
நல்லது செய்ய வழி நடத்துகிறார்
நல்லவைகளை பரப்ப வழி நடத்துகிறார்
நல்லவைகளை செயல்படுத்த வழி நடத்துகிறார்
என்ற எண்ணம் கொண்டு

ஆண்டவரே உண்மை
ஆண்டவரைத் தவிர மற்றதெல்லாம் பொய்

ஆண்டவர்  இயக்குகிறார் ;  நான் இயங்குகிறேன் ;
ஆண்டவர்  பேசச் சொல்கிறார் ; நான் பேசுகிறேன் ;
ஆண்டவர்  செய்ய சொல்கிறார் ; நான் செய்கிறேன் ;
ஆண்டவர்  எழுதச் சொல்கிறார்  ;நான் எழுதுகிறேன் ;
ஆண்டவர்  விளக்கச் சொல்கிறார் ; நான் விளக்குகிறேன் ;
என்று எல்லாம் வல்ல ஆண்டவரை விசுவாசித்து

அவர்  வழி நடப்பவன்
தன்னால் ஒன்றும் நடக்கவில்லை
நடப்பவைகளுக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை ,
காரணத்தை அறியும் தெளிவு எனக்கு இல்லை ,
தெளிவை உணரும் சக்தி எனக்கு இல்லை ,
சக்தியின் இருப்பிடம் நான் அறியவில்லை ,
நானே யார்  என்று தெரியவில்லை ,
என்னை எனக்கே புரியவில்லை ,
என்னை புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை ,
புரியும் வழி நான் அறியவில்லை ,

என்று தன்னுள் உள்ள ஆணவத்தை விலக்கி
தன் முனைப்பை எரித்து
அகம்பாவத்தை ஒழித்து
எல்லாமே ஆண்டவர்
என்பதை மனதில் நிறுத்தி ,

அவரை விசுவாசித்து அவர்  வழி நடந்தால்
ஆண்டவர்  அவரை ஏற்றுக் கொள்வார்.

தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட்பற்று
ஆகியவற்றை நீக்கி
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவன் மட்டுமே
உண்மையானவன் மட்டுமே
பிதாவின் சித்தத்தின் படி நடக்கிறவன் மட்டுமே
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியுடையவன் .

என்னை உண்மையாக உணர்ந்து
பின்பற்றுபவனால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும் அறிந்து
பரலோக ராஜ்யத்தில்  பிரவேசிக்க முடியும்
என்னை உண்மையாக உணர்ந்து பின்பற்றாமல்
போலியாக இருப்பவர்களால்
பொய்யர்களாக சுற்றுபவர்களால்
தவறான எண்ணம் கொண்டவர்களால்
பிதாவையும் அறிய முடியாது ,
பிதாவின் சித்தத்தையும் உணர முடியாது ,
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கவும் முடியாது ,
என்கிறார்  இயேசு .



பாம்பாட்டி சித்தர் :

“”பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
         பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
        ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
        அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே””
                              ----பாம்பாட்டிச் சித்தர்---பெரியஞானக் கோவை---

ஆசைக்கும் , பேராசைக்கும் வித்தியாசம் உண்டு
பசியால் வாடிக்கொண்டிருப்பவன் உணவு வேண்டும் என்று
நினைத்தால் அதற்கு பெயர்  ஆசை .
அறுசுவை உணவு வேண்டும்
என்று நினைத்தால் பேராசை

மானத்தை மறைக்க ஆடை வேண்டும் என்று
நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
நவரத்தினங்களால் நெய்யப்பட்ட ஆடை வேண்டும்
என்று நினைத்தால் அதற்கு பெயர்  பேராசை .

வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
வாழ்க்கைத் தேவைக்கு மேல்
சேர்த்து வைக்க வேண்டும்
பதுக்கி வைக்க வேண்டும்
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வைக்க வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  பேராசை .

ஆசைக்கும் , பேராசைக்கும் வேறுபாடு தெரியாமல்
நம்மில் பலர்  வாழ்க்கையை , வாழ்க்கையாக நினைக்காமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும்
உயர்வானதையே எண்ண வேண்டும்
உயர்வானதையே சிந்திக்க வேண்டும்
அப்பொழுது தான் உயர்வுகள் கிடைக்கும் என்பர்  சிலர்.

எண்ணம் வலிவு பெற ,
எண்ணம் திணிவு பெற ,
எண்ணம் சக்தி பெற ,
எண்ணம் உயர்வு பெற ,
ஆழ்ந்து சிந்திக்கும் போது ,
மனம் வலிமை பெறுகிறது
அதன் விளைவு நாம் நினைத்தது
நடக்கும் என்கின்றனர்  சிலர் .

அப்படி நடந்தால் மனதை வலிமைப் படுத்தி
நமக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாமே !
உலகில் உள்ள அனைவரும்
தங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்று
இன்பமுடன் வாழலாமே ஏன் முடியவில்லை?

இதற்குப் பெயர்  தான் ஆணவம்
தான் என்ற தன்முனைப்பு
தன் வாழ்க்கையை தானே
மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறியாமை .

ஊழ்வினையின் உண்மை தெரியாமல்
பிதற்றுபவர்கள் இவர்கள் ;
கர்மவினையின் கனல் இதுதான் என்று அடையாளம்
காண முடியாதவர்கள் இவர்கள் ;
விதைக்கும் விதை தான் முளைக்கும்
என்று தெரியாதவர்கள் இவர்கள் ;
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
சொல்ல வேண்டும் என்றால்,
சாப்பிட்ட உணவைத் தான் வாந்தி எடுக்க முடியும்
புதிதாக எந்த ஒரு உணவையும் வாந்தி எடுக்க முடியாது .

அப்படி இருக்கையில்
கர்மவினையின் தாக்குதலுக்கேற்ப
பாவ-புண்ணிய நிகழ்வுகளுக்கேற்ப தான்
ஒருவருடைய வாழ்க்கை நடக்குமே தவிர
உயர்வான எண்ணத்தை நினைப்பதாலோ
மனனை வலிமைப் படுத்த
முயற்சிகள் மேற்கொள்வதாலோ

ஒருவன் தன் வாழ்க்கையில் புதியதாக ஒரு
ஊசியைக் கூட பெற முடியாது .

கர்மவினையிலிருந்து எப்படி தப்பிப்பது ;
பாவ-புண்ணியங்களை எப்படி கழிப்பது ;
காலத்தை எப்படி மாற்றி அமைப்பது ;
இயற்கை நியதியை எவ்வாறு உணர்வது ;
பிரபஞ்ச ரகசியங்களை எவ்வாறு அறிவது ;
மறைபொருள் விளக்கங்களை எவ்வாறு பெறுவது ;
வாழ்க்கையில் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது ;
முன்னேற்றத்தின் வாயிலுக்குள் எவ்வாறு புகுவது ;
இன்பத்தின் சாளரங்களை எவ்வாறு திறப்பது ;
வெற்றியின் விலாசத்தை எவ்வாறு கண்டறிவது ;
மடமை நெஞ்சை எவ்வாறு மாற்றுவது ;
ஞானத் திறவுகோலை எவ்வாறு பெறுவது ;
முக்திக்கு தேவையான வித்தை எங்கே விதைப்பது ;
முழுமுதற் பொருளை எங்கே காண்பது ;

போன்றவற்றில் தெளிவு பெற வேண்டும்
புத்தி உயர்வு பெற வேண்டும்

காலத்திற்குள் தான் நாம் இருக்கிறோம்
காலத்தை நாம் மாற்றி அமைக்க முடியாது
என்று உணர வேண்டும்
அதற்கு நாம் ஆசைக்கும் , பேராசைக்கும்
உள்ள வேறுபாடடை உணர வேண்டும் .

பேராசை விடுத்து ஆசைப்பட வேண்டும்
பேராசையுடன் இருக்கும் சிலர்  தன் நிலை
தாழாமல் இருக்க செயல் பல செய்வர் .

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
பயன்படுத்தும் ஓர்  ஆயுதம் தான் மந்திரம் .
மந்திரங்கள் பஞ்ச பூதங்களுடன் இணைக்கப்பட்டு
இயங்கும் போது தான் நாம் நினைத்தது நடக்கும் .
அதற்கான வழிமுறைகளே பூசைகள் .

பூசைகள் பல செய்வதால்
நாம் வேண்டியவைகள் ,
நமக்கு தேவைப்படுபவைகள் ,
நாம் விருப்பப்படுபவைகள் ,
கிடைத்து விடுமா? கிடைக்காது?

பாவத்தை தீர்க்க ,
பாவத்தை போக்க ,
பாவத்தை கழிக்க ,
புண்ணியத்தை சேர்க்க ,
கடவுளை வணங்கி கோயில் பல சென்றாலும்
யாத்திரை பல மேற் கொண்டாலும்

இந்த புவி முழுவதும் அலைந்து
கோயில் பல சென்றாலும்
செய்த பாவம் போய் விடுமா
புண்ணியம் சேர்ந்து விடுமா
சேராது? எதுவும் மாறாது?
நாம் கொண்டு வந்ததை
நாம் தான் அனுபவிக்க வேண்டும் .

அப்படி இருக்கும் போது
உயர்வான எண்ணம் கொண்டால்
மட்டும் எவ்வாறு வாழ்க்கை மாறும் .

துன்பங்கள் நீக்கி
இன்பமாக வாழவும் வழி உண்டு
முதலில் பேராசையை நீக்கி
ஆசைக்கு வர வேண்டும்
பிறகு ஆசையையும் விட வேண்டும்
அதாவது அன்றாட தேவையையும் மறக்க வேண்டும் .

அதாவது அன்றாடத் தேவைகளைப் பற்றி
கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் .
இங்கே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்                
யார்  ஒருவர்  நிகழ்காலத்தில் வாழ்கிறாரோ
இறந்த காலத்தையும் , எதிர்  காலத்தையும் பற்றி நினைக்காமல் ,
நிகழ்காலத்தில் கணத்திற்கு கணம் வாழ்பவரை
கர்ம வினைகள் அண்டாது .

நிகழ்காலத்தில் வாழ்பவரால் மட்டுமே
ஆதி அந்தத்தை உணர முடியும் ;
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்
கடவுளை  அறிய முடியும் ;
கடவுளை உணர முடியும் ;
கடவுளுடன் இணைய முடியும் ;
கடவுளாய் மாற முடியும் ;
தான் அவனாக மாறும் பேற்றினை அடைய முடியும் .

உலகில் நிலவி வரும்
தவறான கருத்துக்கள் ;
தவறான நடைமுறைகள் ;
தவறான வழி காட்டுதல்கள் ;
ஆகியவை பின் செல்லாமல்
உண்மை எது என்று உணர்ந்து
அறிவு தெளிவு பெற்று அதன் வழி செல்லும் போது தான்
எல்லாவற்றுக்கும் மூலமான
ஆதியாக விளங்கும் கடவுளை அடையலாம் என்கிறார்
பாம்பாட்டி சித்தர் .



இயேசு கிறிஸ்து - பாம்பாட்டி சித்தர்:
இயேசு , உண்மையாக இருப்பவரால் மட்டுமே
பிதாவை உணர முடியும் .
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார் .

அவ்வாறே,
பாம்பாட்டி சித்தரும் ,
உண்மையை அறிந்து கொண்டு
உண்மையாக இருப்பவரால் மட்டுமே
ஆதி நிலையான கடவுளை அடைய முடியும்
என்கிறார்.
                                             
     
              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுமுப்பத்துஆறு  ந்தான்முற்றே “”




April 23, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-வேணும்-பதிவு -35




           இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-வேணும்-பதிவு -35

            “”பதிவு முப்பத்திஐந்தை விரித்துச் சொல்ல
                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

உள்ளவனெவவோ அவனுக்குக் கொடுக்கப்படும் ; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.”
                                                                   --------லுhக்கா - 8:18

உலகத்தை இரண்டே வார்த்தைகளில் பிரித்து விடலாம்:
உள்ளவன் – இல்லாதவன்.
உலகில் உள்ள மற்ற அனைத்தும் இந்த
இரண்டு வார்த்தைகளுக்குள் தான் அடக்கம் பெற்று இருக்கிறது .

பணம் உள்ளவன்   - பணம் இல்லாதவன் ,
செல்வம் உள்ளவன் - செல்வம் இல்லாதவன் ,
அறிவு உள்ளவன்   - அறிவு இல்லாதவன் ,
இரக்க மனம் உள்ளவன்     - இரக்க மனம் இல்லாதவன் ,
கொடுக்கும் மனம் உள்ளவன்  - கொடுக்கும் மனம் இல்லாதவன் ,
உதவும் குணம் உள்ளவன்    - உதவும் குணம் இல்லாதவன் ,
சிந்திக்கும் திறன் உள்ளவன்  - சிந்திக்கும் திறன் இல்லாதவன் ,
என்று வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் .

இந்த உலகம் ,
உள்ளவனை உற்று நோக்குகிறது
இல்லாதவனை உதாசீனப் படுத்துகிறது .

உள்ளவனை அண்டுகிறது
இல்லாதவனை சீண்டுகிறது

உள்ளவனைப் பார்த்து மதிக்கிறது
இல்லாதவனைப் பார்த்து சிரிக்கிறது

உள்ளவனை மதிக்கிறது
இல்லாதவனை மிதிக்கிறது

உள்ளவனை புகழ்கிறது
இல்லாதவனை இகழ்கிறது

உள்ளவனை போற்றுகிறது
இல்லாதவனை துhற்றுகிறது

புத்தகத்தில் உள்ளதை படித்து தேர்வு எழுதி
தேர்வில் வெற்றி பெற்றவனை
அறிவு உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
புத்தகத்தில் உள்ளதை படித்து
தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற முடியாதவனை
அறிவு இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவனை
திறமை உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறாதவனை
திறமை இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றவனை
வியாபார சிந்தனை உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறாதவனை
வியாபார சிந்தனை இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

ஒருவன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில்
தன் திறமையை நிருபித்து வெற்றி பெற்றால் மட்டுமே
அவனை இந்த உலகம் திறமைசாலி என்று அங்கீகரிக்கிறது .

ஒருவன் இந்த சமுதாயத்தால்
திறமைசாலி உழைப்பாளி அறிவில் சிறந்தவர்  - என்று
புகழாரம் சூட்டப்பட்டு போற்றப்பட வேண்டுமானால்
ஏதேனும் ஒரு துறையில் ,
வாழ்க்கையில் வெற்றி பெறும் போது மட்டுமே
இந்த சமுதாயம் அவருக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

சமுதாயத்தால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது
குடும்பத்தாரால் சிறப்பும் ,
உறவினர்களால் உயர்வும் ,
சுற்றத்தால் மதிப்பும் ,
கிடைக்கிறது .

வெற்றி பெறாதவனை இந்த சமுதாதயம்
திறமைசாலி என்று அங்கீகரிப்பதில்லை .
   ஏற்றுக் கொள்வதில்லை ;
   மதிப்பு கொடுப்பதில்லை ;
   கௌரவம் அளிப்பதில்லை ;
   நட்புகள் பாராட்டுவதில்லை ;
   புகழ்ச்சிகள் சூட்டப்படுபதில்லை ;
   உயர்வுகள் அளிப்பதில்லை ;
   சிறப்புகள் செய்வதில்லை ;
   மரியாதை தருவதில்லை ;

ஆனால் அவர்கள் மேல்
   ஏளனங்கள் வீசப்படுகிறது ;
   கோபங்கள் காட்டப்படுகிறது ;
   சினங்கள் விதைக்கப்படுகிறது ;
   சோகங்கள் தரப்படுகிறது ;
   உயர்வுகள் மறைக்கப்படுகிறது ;
   கண்டனங்கள் கொடுக்கப்படுகிறது ;
     கவலைகள் காட்டப்படுகிறது ;
    துன்பங்கள் எழுப்பப்படுகிறது ;

இதனால் தோல்வி கண்ட நெஞ்சம் துவண்டு விடுகிறது
சில முறை தோல்வி கண்டு
வெற்றியின் விலாசத்தைத் தொட்டவனை
வெற்றியின் ருசியைச் சுவைத்தவனை
இந்த உலகம் கண்டு கொள்கிறது
அங்கீகாரம் அளிக்கிறது .

பல முறை முயற்சி செய்தும் பல தோல்விகளை கண்டும்
துன்பங்கள் பலவற்றை நுகர்ந்தும்
வெற்றியின் விலாசத்தை காண முடியாமல்
தன் வாழ்நாளின் இறுதி கட்டம் வரை
உயிர்  உடலை விட்டுப் பிரியும் வரை
வெற்றியின் சுவாசத்தை சுவைக்க முடியாதவன்
மண்ணில் புதையுண்டால்
காலத்தால் கவனிக்கப் படாமல்
புறக்கணிக்கப் பட்டு இருக்கிறான் .

வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்
சில தோல்விகளை கண்டு விட்டு வெற்றி பெற்றவனை
அறிவு உள்ளவன் திறமை உள்ளவன் என்று
உலகம் அவன் பின்னால் ஓடுகிறது .
வெற்றி பெற்றவன் அனுபவம் முக்கியம் என்று
அவன் வாழ்க்கையை அலசுகிறது ,
அவன் திறமைகளை ஆராய்கிறது ,
அவன் அனுபவங்களை சிந்திக்கிறது ,
மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுகிறது ,
மற்றவர்களை கடைபிடிக்க சொல்கிறது,
மற்றவர்களை பின்பற்ற சொல்கிறது .

தோல்வி மட்டுமே கண்டு வெற்றியை பெற முடியாமல்
இறந்தவனின் அனுபவத்தை இந்த உலகம்
கவனிக்க தவறி விடுகிறது - அவனை
திறமையை பிரயோகிக்க தெரியாதவன் ;
அறிவை உபயோகிக்க தெரியாதவன் ;
வெற்றியின் விலாசம் தெரியாதவன் ;
உழைக்கும் திறன் இல்லாதவன் ;
சிந்திக்கும் வலிமை இல்லாதவன் ;
என்ற முத்திரை அவர்கள் மேல் குத்தப்பட்டதே
அவர்கள் அனுபவத்தை இந்த உலகம்
தவற விட்டதற்கு காரணம் .

வெற்றி பெற்றவனிடம் உள்ள அனுபவத்தை விட
வெற்றியே பெறாதவனிடம் உள்ள அனுபவம் மிக முக்கியம் .

அவனிடம் தான் அவனிடம் மட்டும் தான்
எதையும் தாங்கும் இதயம் இருக்கும் ;
எதையும் சமாளிக்கும் திறன் இருக்கும் ;
எதையும் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும் ;
எதையும் எதிர்  கொள்ளும் துணிவு இருக்கும் ;
எதையும் சுமக்கும் தைரியம் இருக்கும் ;
எதனுடனும் போராடும் போர்க்குணம் இருக்கும் ;
எதை இழந்தாலும் முன்னேறும் ஆர்வம் இருக்கும் ;

இத்தகைய பல்வேறுபட்ட தன்மைகள்

  விளங்கிக் கொள்ள முடியாத அனுபவங்கள் ;
  புரிந்து கொள்ள முடியாத காரியங்கள் ;
  சிந்திக்க முடியாத திறன்கள் ;
  உணர முடியாத பக்குவங்கள் ;
  பகுத்துணர முடியாத பண்புகள் ;
  தீட்ட முடியாத விளக்கங்கள் ;
  வார்க்க முடியாத தைரியங்கள் ;
  செதுக்க முடியாத சிந்தனைகள் ;
  காட்ட முடியாத காவியங்கள் ;
  விளக்க முடியாத உண்மைகள் ;

அவனுள் இருக்கும் .
அவன் வாழ்க்கையில் இருக்கும் .
அவன் அனுபவத்தில் ஒளிந்து இருக்கும் .

தோல்வியுற்றவன் ஒன்றும் இல்லாதவன் என்று
பலரை பல்வேறு அனுபவங்கள் கொண்டவரை
நாம் கவனிக்க தவறுவதால் தான்
நல்ல அனுபவங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருக்கின்றன .
சமுதாயத்திற்கு உதவாமல் அழிந்து விட்டிருக்கின்றன .

சமுதாயம் வெற்றி பெற்றவனை - உள்ளவனை
மட்டுமே நோக்குவதால் ,
வெற்றியே பெறாதவனை - இல்லாதவனை
இந்த சமுதாயம் கவனிக்காமல் தவற விட்டு விடுகிறது .

அனுபவம் என்பது வெற்றி பெற்றவனிடம் மட்டும் இல்லை
தோல்வியுற்றவனிடமும் உள்ளது என்பதை
இந்த சமுதாயம் உணர வேண்டும் .

அதனால் தான் இயேசு இல்லாதவனிடம் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார்  - அதாவது
வாழ்க்கையில் வெற்றியைக் காணாமல்
  தோல்வியை மட்டுமே ருசித்தவனுக்கு ,
  கவலையில் மட்டுமே மூழ்கியவனுக்கு ,
  துன்பத்தில் மட்டுமே கரைந்தவனுக்கு ,
  சோகத்தில் மட்டுமே துவண்டவனுக்கு ,
வாழ்க்கையில் கிடைத்த
  அனுபவத்தின் விளக்கத்தை
  அனுபவத்தின் சாராம்சத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும்

இல்லாதவனிடம் என்ன இருக்கும் ,
அவனுக்கு என்று என்ன இருக்கும் ,
அவனுக்கு என்று சேர்த்து வைத்தது எதுவாக இருக்கும் ,
அவன் தனக்கு என்று வைத்துக் கொண்டது எதுவாக இருக்கும் ,
தனக்கு உரிமையாக வைத்துக் கொண்டது எதுவாக இருக்கும் ,
அது தான் அனுபவமாக இருக்கும்
அந்த அனுபவத்தை இல்லாதவனிடம் இருந்து
   எடுத்துக் கொள்ளப்படும் அனுபவத்தை ,
   வாழ்க்கையின் விளக்கத்தை ,
   சூட்சுமத்தின் ரகசியத்தை ,
   மறைபொருளின் அர்த்தத்தை ,
   உணர்வுகளின் வெளிச்சத்தை ,
உள்ளவனிடம் கொடுக்க வேண்டும்
அதாவது வெற்றி பல பெற்றும்
உண்மையான அனுபவம் எது என்று தெரியாதவனுக்கு
அனுபவத்தின் சுயரூபம் தெரியாதவனுக்கு
உண்மையின் விளக்கம் புரியாதவனுக்கு
கொடுக்க வேண்டும் .

எல்லாவற்றையும் இழந்தால் மட்டுமே
உண்மையை உணர முடியும்
எல்லாவற்றையும் இழக்கும் தைரியம்
உடையவனால் மட்டுமே உண்மையை உணர முடியும் .

மரணத்தைப் பார்த்து பயப்படாதவனால் மட்டுமே
உண்மை என்றால் என்ன என்று உணர முடியும் .

அதனால் தான் இயேசு ,
எல்லாவற்றையும் இழந்து மனம் தெளிவு பெற்று
அதன் மூலம் கிடைத்த அனுபத்தை
இல்லாதவனிடம் உள்ள அனுபவத்தை
மனம் தெளிவு பெறாமல்
அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை
உடையவர்க்கு உள்ளவனுக்கு
உண்மையான அனுபவத்தை
அவர்களுக்கு அளிக்க வேண்டும்
என்கிறார்  இயேசு .



சிவவாக்கியர்:

“””வேணும் வேணுமென்றுநீர்  வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணுமென்றவப் பொருள் விரைந்து காணலாகுமே””””
                         -------சிவவாக்கியர்---சிவவாக்கியம் - 1000-----

“””வேணும் வேணுமென்றுநீர்  வீணுழன்று தேடுவீர்”””
வாழ்வில் வசந்தம் குறைவின்றி வீச
மகிழ்ச்சியின் சாளரங்கள் வேண்டும் !

மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்து இருக்க
செல்வத்தின் திறவுகோல்கள் வேண்டும்!

செல்வத்தில் தேவையானதைப் பெற்றுக்கொள்ள
உயர்வின் அரியணைகள் வேண்டும் !

உயர்வுகள் முடிசூட்டிக் கொள்ள
வெற்றியின் விலாசங்கள் வேண்டும்!

வெற்றியில் மயங்கி சுகித்து இருக்க
புகழ்ச்சியின் போதைகள் வேண்டும்!

புகழ்ச்சியில் தன்னை மறந்து இருக்க
இன்பத்தின் பாசறை வேண்டும்!

இன்பத்தில் காலம் ஓட்டிச் செல்ல
அறிவின் தெளிவு வேண்டும்!

அறிவு தெளிவு பெறவில்லையெனில்
    கண்ணில் பட்டவைகள் ;
    நெஞ்சத்தை வருடியவைகள் ;
    இருதயத்தை துளைத்தவைகள் ;
    மனதை பாதித்தவைகள் ;
    எண்ணத்தை வருடியவைகள் ;
    ஆசைகளை எழுப்பியவைகள் ;
    அறிவை மயக்கியவைகள் ;
    புத்தியை நனைத்தவைகள் ;
    புகழ்ச்சியை ஏற்படுத்துபவைகள் ;
    உயர்வை ஊட்டுபவைகள் ;
    மாற்றத்தை உருவாக்குபவைகள் ;
    ஏற்றத்தை அளிப்பவைகள் ;
    சிந்தனையை தட்டுபவைகள் ;
    வாழ்வை மாற்றுபவைகள் ;
    இல்லறத்தை உயர்த்துபவைகள் ;
    உண்மையை மறைப்பவைகள் ;
    பொய்மையை விதைப்பவைகள் ;
    துன்பங்களை உண்டாக்குபவைகள் ;
    துயரங்களை ஏற்படுத்துபவைகள் ;
    காலத்தால் கருத்திழந்தவைகள் ;
    மடமைகளால் முடிசூட்டப்பட்டவைகள் ;
    அறியாமையால் மறைகழன்றவைகள் ;
    போலித்தனத்தால் பாதிக்கப்பட்டவைகள் ;

என்று பல்வேறு பட்டவைகள் பின்னால் மனம் செல்லும்
அனைத்தும் பெற மனம் துடிக்கும்
இது வேண்டும் , அது வேண்டும் என்று மனம் கொண்டு
எது வேண்டும் என்று மனது தெளிவில்லாமல்
அதை பெற செயல்கள் செய்யும் மனித மனம் .

அன்றாட வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்ய மட்டும் ஓடாமல்
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும்
சொத்து சேர்க்க வேண்டும்
உயர்வுகள் பெற வேண்டும் என்று
வீணாக அலைந்து திரிந்து உழைத்து கஷ்டப்பட்டு
காலத்தை வீணாக்கி ,
இளமையை வீணாக்கி ,
இன்பத்தை பாழாக்கி ,
மனிதர்கள் தங்கள் விருப்பப் பட்டவைகளை
தேடி பின்னால் ஓடுகின்றனர்.



“””வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே”””
விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டாகி விட்டது
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடந்தே தீரும் .
விதைக்கப்பட்ட விதையானது
காலம் கனியும் போது
செடியாகி , மரமாகி,  பூவாகி , காயாகி, கனியாகும்
இந்த சுழற்சியின் சக்கரம்
வரிசைக் கிரமமாக கால சூழ்நிலைக்கேற்ப ,
பருவக் காலங்களின் தாக்குதலுக்கேற்ப ,
பஞச பூதங்களின் அரவணைப்புக்கேற்ப ,
இயற்கையின் துhண்டுதலுக்கேற்ப ,
காலநிலைகளின் மாறுதலுக்கேற்ப ,
நடக்க வேண்டிய காலத்தில்
நடக்க வேண்டியது நடந்தே தீரும் .

இது மாறுதலுக்கு உட்பட்டதல்ல
நம்மால் மாற்றம் செய்யக் கூடியதுமல்ல .

தனக்கு விருப்பப்பட்டவைகள்
தான் ஆசைப்பட்டவைகள்
இந்த காலத்தில் இந்த நேரத்தில் வேண்டும் - என்று
ஆசைப்பட்டு தேடினால், ஓடினால் ,
வாடினால் ,அரற்றினால் ,புலம்பினால்
கிடைத்து விடுமா ?

நமக்கென்று விதிக்கப்பட்டவைகள்
நமக்கென்று ஒதுக்கப்பட்வைகள்
நமக்கென்று அளிக்கப்பட்டவைகள்
நமக்கென்று தரப்பட்டவைகள்
கிடைக்க வேண்டிய காலத்தில்
கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில்
தான் கிடைக்கும்
என்ற உண்மை உணர்ந்து மனது தெளிவு பெற வேண்டும் .

மனது தெளிவு பெற வாழ்வின் நிகழ்வுகளை
வரிசைப் படுத்த வேண்டும்
யோசித்துப் பார்க்க வேண்டும்
சிந்தனையில் நிறுத்த வேண்டும்.

அவ்வாறு சிந்தித்து செயலை செய்து
அனுபவ ரீதியாக உணரும் போது
அனுபவ விளக்கம் பெறும் போது
ஓடி ஓடி அலைந்தாலும்
நாடி நாடி களைத்தாலும்
வாடி வாடி முயற்சித்தாலும்
யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ?
யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் - என்று
வகுக்கப்பட்டிருக்கிறதோ
அது தான் கிடைக்கும் அதை தவிர்த்து
ஊசி முனை அளவு கூட கிடைக்காது
என்பதை உணர்ந்து கொள்ளலாம் .



“”வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணுமென்றவப் பொருள் விரைந்து காணலாகுமே””””
மனம் தெளிவு பெற்று அனுபவம் வாய்த்த பின்
தேடுவதை நிறுத்த வேண்டும்
தேடுவது தன்னால் கிடைக்கும் என்ற ஞானம் வரும் .

விதி - மதி:
இயற்கையமைப்பும் இயற்கை நியதிகளும் விதி .
இயற்கையமைப்போடு மனிதன் தொடர்பு கொள்ளும் போது
மனிதனுக்கு ஏற்படும் இன்பம் ,துன்பம் ,அமைதி, பேரின்பம் மதி .

இயற்கை அமைப்புகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி
என்ன நன்மைகளை காணலாம் என்பதை அறிந்து
மாறாத இயற்கை நிகழ்ச்சிகளிலிருந்து
தனக்கு துன்பம் நேராமல் காத்துக் கொள்ளும் நுண்ணறிவே மதி .

விதியை மாற்ற முடியாது - ஆனால்
மதியைப் பயன்படுத்தி அதன்
பாதிப்பிலிருந்து சற்று தப்பிக்கலாம் .
அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம் .
அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம் .

மழை பெய்வது என்பது விதி
மழையை நிறுத்த முடியாது .
மதியைப் பயன்படுத்தி குடையின் மூலம்
தன் மேல் விழும் மழையைத் தடுத்து
தன்னுடைய உடலை மழையால் நனையாமல்
சிறிது காத்துக் கொள்ளலாம் .

விதியை மாற்ற முடியாது என்ற
உணரும் அறிவு சுயமாக வராது
அனுபவ ரீதியாகத் தான் வரும் .

இதை அனுபவ ரீதியாக யார்  ஒருவர்  உணர்கிறாரோ
அவரால் மட்டுமே தேடுவதை நிறுத்த முடியும்
தேடுவதை நிறுத்த ஞான விளக்கம் பெற வேண்டும் .
ஞானவிளக்கம் பெற்று உண்மைப் பொருள் உணர்ந்து
தான் அவனாக மாறினால் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் .

அழியும் சிற்றின்பப் பொருளை வேண்டும் என்று
நாடி ஓடுவதால் ஒரு பயனும் இல்லை
அழியாத பேரின்பப் பொருளை நாடி அதனை பெறும் போது
வேண்டிய எல்லாம் கிடைக்கும் .

கர்மவினையின் பதிவுகளுக்கேற்ப ;
பாவ புண்ணியத்தின் தாக்குதலுக்கேற்ப ;
பிறவிகளின் வரிசைக் கேற்ப ;
ஜென்மங்களின் முறைகளுக்கேற்ப ;
முறைப்படுத்தப்பட்டவைகள் ;
வரிசைப்படுத்தப்பட்டவைகள் ;
எழுதிவைக்கப்பட்டவைகள் ;
கால மாற்றத்தின் கணக்கைத் தீர்க்க ,
ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டியவை
கிடைக்க வேண்டிய காலத்தில் தான்  கிடைக்கும்.

தேடி அலைந்தாலும்
அழுது புரண்டாலும்
கண்ணீர்  சிந்தினாலும்
உள்ளம் வருந்தினாலும்
நமக்கென்று விதிக்கப்பட்டவைகள்
தான் கிடைக்கும் .

இதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் மட்டுமே
சிற்றின்பத்தின் சாளரத்தை நாட மாட்டார்கள் .
பேரின்பத்தின் வாயிலை திறக்க முயற்சி செய்து
தான் அவனாக மாறி பேரின்ப வெள்ளத்தில நீந்தி
பிறவிப் பெருங்கடலை உடைத்து
உண்மைப் பொருள் உணர்ந்து உயர்வடைவர்
என்கிறார்  சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து- சிவவாக்கியர் :
இயேசு , உண்மையான அனுபவமே மாறுபட்டு
செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கான
உயர்வுக்கு கொண்டு செல்வதற்கான வழி என்கிறார்.

அவ்வாறே ,
சிவவாக்கியரும், உண்மையான அனுபவமே
சிற்றின்பத்தை தேடி ஓடும் சமுதாயத்தை
பேரின்பத்தை நோக்கி செலுத்துவதற்கான
உயர்வான இலக்கை அடைவதற்கான வழி என்கிறார்.

                                                       
         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                    போற்றினேன் பதிவுமுப்பத்துஐந்து  ந்தான்முற்றே “”