March 12, 2019

திருக்குறள்-பதிவு-124


                     திருக்குறள்-பதிவு-124

“ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் ;
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் தான் ;
அமைக்கப்படும் என்று
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள்
திட்டவட்டமாக சொல்லி
விட்ட காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்களும் ;
ஜியார்டானோ புருனோவின்
எதிர்ப்பாளர்களும் ;
தங்கள் பேச்சுவார்த்தைகளை
முடித்துக் கொண்டனர் “

“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலை
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ புருனோ
எரிந்த சரியான
இடத்தில் ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
அமைக்கப்பட்டு
திறக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடியும் ;
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்த
வண்ணமும் தான்
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம் 9-ம் தேதி
திட்டமிட்டபடி
திறக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கப்படக் கூடாது ;
அப்படியே திறக்கப்பட்டாலும்
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடி
இருக்கக் கூடாது ;
என்று போராடிய
வாத்திகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ; கிறிஸ்தவர்கள் ;
ஆகியோருக்கு இந்த
செய்தி பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையைச்
சேர்ந்தவர்கள்
ஒவ்வொரு வீட்டின்
கதவைத் தட்டி
அந்த வீட்டில்
உள்ளவர்களிடம்
பேசினர் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்க வேண்டும் ;
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்காமல் ஆதரவு
அளித்து சிலை
திறப்பு விழாவில்
கலந்து கொண்டால் ;

கிறிஸ்தவ மதத்தின்
மூலம் பெற்று வரும்
அனைத்து சலுகைகளும்
ரத்து செய்யப்படும் ;

சர்ச்சின்
உறுப்பினரிலிருந்து
நீக்கப்படுவார் ;
உலகின் எந்த மூலையில்
உள்ள சர்ச்சிலும்
அவர்கள் உறுப்பினராக
இருக்க முடியாது ;

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
கிறிஸ்தவ மதத்திலிருந்து
நீக்கப்படுவார் என்று
அறிவுறுத்தப்பட்டது ; “

“ இந்த செயல் அந்த
நகரம் முழுவதும்
நடைபெற்றது “

“ இதற்கு ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள்
எதிர்வினை எதுவும்
ஆற்றாமல் இருந்தது
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
மத்தியிலும் ;
கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ;
மக்கள் மத்தியிலும் ;
பெருத்த ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது ; “

“ அவர்களுடைய அமைதி
எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்தும் என்று
தெரியாமல் அனைவரும்
ஆச்சரியம் கலந்த
பயத்துடன் இருந்தனர் ‘

“ சிலை திறப்பு விழாவிற்கு
முந்திய நாள்
என்ன நடக்கும்
எது நடக்கும் - என்று
கலக்கத்துடன் - அந்த
நகரமே அமைதியாக
இருந்தது - மக்கள்
நடமாட்டம் இல்லாமல்
தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தன “

“நேரம் ஆக ஆக
மக்கள் யாருமே
தெருவில் நடமாடவில்லை ;
ஏதேனும் அசம்பாவிதம்
நிகழ்ந்து அதில் மாட்டிக்
கொள்ளக்கூடாது ;
என்பதற்காக
மக்கள் அனைவரும்
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக வீட்டை
பூட்டிக் கொண்டு
வீட்டிற்குள் இருந்தனர் ;
யாரும் வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ; ‘

“ சிலை திறப்புக்கு
முந்திய நாளே
இப்படி இருந்தால்
சிலை திறப்பு அன்று
எத்தகைய விளைவுகள்
ஏற்படுமோ என்று
அஞ்சி மக்கள்
அனைவரும் ஒருவித
பயத்துடனே இருந்தனர் “

“ ஜியார்டானோ புருனோவின்
சிலை திட்டமிட்டபடி
திறக்கப்படுமா
திறக்கப்படாதா என்ற
கேள்விக்குறியுடன்
உலகமே உறங்காமல்
விழித்துக் கொண்டிருந்தது “

“கொஞ்சம் கொஞ்சமாக
இரவு விடிந்து
கொண்டிருந்தது  

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  12-03-2019
//////////////////////////////////////////////