May 27, 2019

பரம்பொருள்-பதிவு-16


அன்பிற்கியவர்களே,

அந்தம்+ஆதி=
அந்தாதி எனப்படும்

அந்தம் என்றால்
முடிவு என்று பொருள்
ஆதி என்றால்
தொடக்கம்
என்று பொருள்

முதற்பாவின்
ஈற்றடியில்
முடியும் எழுத்து
அசை, சீர் , சொல்
அடுத்து வரும்
பாவின் முதலடியில்
தொடங்கி ஒன்றாக
அமைதலையே
அந்தாதி என்கிறார்கள்

அந்தாதி என்றால்
முடிகின்ற ஒன்றாலேயே
அடுத்து தொடங்குவது
எனலாம்

அந்தாதியில் பாடல்
கட்டுரை எழுதுவது
என்பது அவ்வளவு
எளிதானதல்ல
கடினமானது

நான் இந்தக் கட்டுரை
முழுவதையும்
அந்தாதியைப்
பயன்படுத்தியே
எழுதியிருக்கிறேன்

அந்தாதியைப்
பயன்படுத்தி
எழுத வேண்டும்
என்பதற்காக- நான்
பரம்பொருள்
கட்டுரையையும்
கருத்தையும்
சிதைத்துவிடவில்லை
என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
///////////////////////////////////

                      பரம்பொருள்-பதிவு-16

இரண்டு

“கடவுள் சிலையை”
கர்ப்ப கிரகத்தில்
நிறுவ வேண்டும்
என்பதற்காக
கடவுள்
சிலையை
நிறுவுவதற்கு
தேவையான
நடவடிக்கைகள்
எடுத்து
முதலில்
உயிருள்ள
கல்லானது
“தேர்ந்தெடுக்கப்படுகிறது“

“தேர்ந்தெடுக்கப்பட்ட“
உயிருள்ள
கல்லிடம்
உயிருள்ள
கல்லை
கடவுள் சிலையாக
செதுக்குவதற்கு
தேவையான
அனுமதி
“பெறப்படுகிறது“

“பெறப்பட்ட“
அனுமதியின்
அடிப்படையில்
கல்லானது
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
கடவுள் சிலையாக
“செதுக்கப்படுகிறது“

“செதுக்கப்பட்ட“
கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டை
மூலம் உயிர்
“கொடுக்கப்படுகிறது“

“கொடுக்கப்பட்ட“
உயிரினால்
கடவுள்
சிலையானது
கடவுளாகவே
“மாற்றப்படுகிறது“

“மாற்றப்பட்ட“
கடவுள் சிலை
மந்திரம்
யந்திரம்
தந்திரம்
ஆகிய மூன்றின்
மூலம்
அஷ்டபந்தனம்
செய்யப்பட்டு
கடவுள் சிலை
பீடத்துடன்
இணைக்கப்பட்டு
“நிறுவப்படுகிறது“

“நிறுவப்பட்ட“
கடவுள் சிலை
கடவுளாகவே
“மாற்றமடைகிறது“

“மாற்றமடைந்த“
கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம்
“செய்யப்படுகிறது“

“செய்யப்பட்ட“
கும்பாபிஷேகத்தின்
மூலம்
கடவுள்
சிலையானது
“இயங்குகிறது“

“இயங்குவதற்கான“
தன்மையைப் பெற்ற
கடவுள் சிலைக்கு
அன்றாடம்
மந்திரங்கள்
மூலம் பூஜைகள்
“செய்யப்படுகிறது“

“செய்யப்படும்“
பூஜைகள் மூலம்
மந்திரம்,
யந்திரம்,
தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றாகச்
செயல்பட்டு
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தியாகும்“
சக்தியானது
யந்திரத்தின்
மூலம்
கடவுள்
சிலைக்கு
“செலுத்தப்படுகிறது“

“செலுத்தப்பட்ட“
சக்தியை
கடவுள் சிலை
பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள்
செலுத்துவதன்
மூலம்
கோயிலுக்குள்
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தி“
செய்யப்பட்ட
சக்தியானது
கோயிலுக்குள்
பரவி
கோயில்
முழுவதும்
சக்தியானது
“நிரப்பப்படுகிறது“

“நிரப்பப்பட்ட“
சக்தியின் மூலம்
கோயிலானது
ஒரு சக்தி மிக்க
ஆற்றல் களமாக
மாறுவதுடன்
கோயிலானது
மாபெரும்
“சக்தியாகிறது“

“சக்தி“
அனைத்தையும்
பெற்று
சக்தியின்
மையமாக
கோயிலானது
திகழ்வதற்கு
காரணம்
கர்ப்பகிரகத்தில்
செதுக்கி
வைக்கப்பட்டுள்ள
“கடவுள் சிலை“

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-05-2019
/////////////////////////////////////////////////////