October 13, 2018

திருக்குறள்-பதிவு-33


                    திருக்குறள்-பதிவு-33

(8) பலராமர் அவதாரம்

நாட்டில் தனக்கென்று
ஒரு இராச்சியத்தை
அமைத்துக் கொண்டு,
சட்ட திட்டங்களை
அமைத்துக் கொண்டு,
வாழ்ந்த மனிதன்
தன் பசியின்
தேவையைத் தீர்த்துக்
கொள்வதற்காக
உழுது பயிரிட்டு
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
விவசாயம் செய்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தினான்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டின்படி
நாட்டில் வாழ்ந்த
மனிதன் விவசாயம்
செய்து வாழ்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தி
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
என்பதைக் குறிப்பதே
பலராமர் தன் தோளில்
சுமந்திருக்கும்
கலப்பை ஆகும்.

இது தான்
பலராமர் அவதாரம்
எனப்படும்.

(9)கிருஷ்ண அவதாரம்

பல்வேறு குழுக்களாக
பிரிந்து தனித்தனியாக
தங்களுக்கென்று ஒரு
ராச்சியத்தை அமைத்துக்
கொண்டு தங்களுடைய
உணவுத் தேவையை
தாங்களே பூர்த்தி
செய்து கொள்ளும்
வகையில் விவசாயம்
செய்து வாழ்ந்த
மனிதன் நாளடைவில்
நிலம், நீர், ஆகாயம்
ஆகியவற்றில்
எல்லைகளை
வகுத்துக் கொண்டு
பல்வேறு
சட்டதிட்டங்களை
உருவாக்கிக் கொண்டு
வாழ்ந்தான்

பல்வேறு
சட்டதிட்டங்களை
வகுத்துக் கொண்டு
மனிதன் வாழ்ந்தாலும்
விலங்கின் தலையும்,
மனித உடலும்
கொண்ட யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
தோன்றிய மனிதனிடம்
விலங்கின் முக்கியமான
இரண்டு செயல்கள்
அப்படியே மனிதனிடம்
பதிந்து விட்டது

ஒன்று : உயிர் பறித்தல்
இரண்டு: பிறர்
         சுதந்திரத்தை
         பறித்தல்

சிங்கம் மானைக்
கொல்லும் செயல்
என்பது,
மானின் உயிரை
பறித்தலையும்,
மானின் சுதந்திரத்தை
பறித்தலையும்
குறித்தாலும்
அவைகள் தங்கள்
உணவுத் தேவைக்காகத்
தான் கொல்கிறதே
ஒழிய பிற
உயிர்களை
துன்புறுத்தி கொல்ல
வேண்டும் என்ற
தப்பான எண்ணம்
கொண்டு
கொல்லவில்லை

ஆனால் மனிதன்
தான் வாழ
வேண்டும் என்பதற்காக
மனதால்
நினைத்து கூட
பார்க்க முடியாத
எல்லாவிதமான
தப்பான காரியத்தையும்
செய்யத் துணிவதுடன்,
பிற உயிரை
பறித்தலையும்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தலையும்
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற
பால்கவர்ச்சி,
உயர்வு - தாழ்வு
மனப்பான்மை,
வஞ்சம் ஆகிய
ஆறு வகையான தீய
குணங்களைக் கொண்டு
பாவம் என்று
தெரிந்தும் துணிந்து
பாவத்தைச்
செய்கிறான்.

உலகில் செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
அனைத்து
பாவங்களையும்
நாம் நன்கு
ஆராய்ந்து பார்த்தால்
உலகில் செய்யப்படும்
பெரும்பாலான
பாவங்கள் அனைத்தும்
உயிர் பறித்தல்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தல் என்ற
இரண்டுக்குள்
தான் இருக்கும்
என்பதையும்
இதிலிருந்து
மனிதன்
விலங்குத் தன்மையுடன்
தான் இருக்கிறான்
மனிதத் தன்மையை
அடையவில்லை
என்பதையும்
நாம் தெரிந்து
கொள்ளலாம்

இவ்வாறு
தான் நலமாக
வாழ வேண்டும்
என்பதற்காக
பிற உயிரை
பறிப்பது
பிறர் சுதந்திரத்தை
பறிப்பது
போன்ற செயல்களை
செய்யும் மனிதர்கள்
வாழ்ந்த நிலையை
அதாவது அதர்மத்தின்
உச்சத்தில்
மனிதனுடைய வாழ்க்கை
இருந்ததைக் குறிப்பது
கிருஷ்ண அவதாரம்
ஆகும்

--------- இன்னும் வரும்
---------- 13-10-2018
///////////////////////////////////////////