June 10, 2020

திருக்குறள்-பதிவு – 3


           திருக்குறள்-பதிவு – 3

நீதி – 5
“நம்முடன் நட்பாக
இருந்து கொண்டு
நமக்குப் பின்னால்
இருந்து நம்மை
இகழ்பவர்கள் சொல்லும்
வார்த்தைகளை
நாம் கணக்கில் எடுத்துக்
கொள்ளக்கூடாது;
ஏனென்றால் அவர்கள்
நம்முடைய முகத்திற்கு
நேராக நின்று பேச
பயப்படும் கோழைகள்”

“ஒருவர் தன்னுடைய
உழைப்பால்
வாழ்வில் உயர்ந்த
நிலைக்குச் சென்று
விட்டால்
அவரைப் போல
நாமும் உழைக்க
வேண்டும்;
வாழ்க்கையில்
உயர்ந்து நிலைக்கு
செல்ல வேண்டும்;
என்று இந்த உலகம்
யோசிப்பதே இல்லை;”

“அவர் மேல்
பொறாமை கொண்டு
வெறுப்பின் காரணமாக
அவருக்குத் தெரியாமல்
அவருக்கு பின்னால்
இருந்து பேசி சந்தோஷம்
அடைவார்கள் “

“இதைத் தான்
இந்த உலகம்
காலம் காலமாக
செய்து கொண்டிருக்கிறது”

“இத்தகையவர்கள்
பேசும் பேச்சுக்களை
கணக்கில் எடுத்துக்
கொண்டால்
நம்மால் நிம்மதியாக
இருக்க முடியாது ;
நம்முடைய
வாழ்க்கையில்
மகிழ்ச்சி போய் விடும் ;
அத்தகையவர்கள்
சொல்லும் வார்த்தைகளை
காதில் வாங்கிக்
கொள்ளக்கூடாது ;”

“நம்முடன் நட்பாக
இருந்து கொண்டு
நமக்குப் பின்னால்
இருந்து நம்மை
இகழ்பவர்கள் சொல்லும்
வார்த்தைகளை
நாம் கணக்கில் எடுத்துக்
கொள்ளக்கூடாது;
ஏனென்றால் அவர்கள்
நம்முடைய முகத்திற்கு
நேராக நின்று பேச
பயப்படும் கோழைகள்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்”

“மேற்கண்ட
ஐந்து நீதிகளையும்
மனதில் நிறுத்தி
ஆராய்ந்து பார்த்தால்
இதில் ஒன்று அல்லது
இரண்டு நீதிகளில் நாம்
பாதிக்கப்பட்டிருப்போம்
அல்லது
நாம் பிறருக்கு
இத்தகைய
நீதிகளைச் செய்து
இருப்போம் “

“இந்த ஐந்து நீதிகளில்
ஏதேனும் ஒன்று
அல்லது இரண்டு
நீதிகளில் நாங்கள்
பாதிக்கப்படவில்லை
அல்லது
நாங்கள் யாருக்கும்
இத்தகைய நீதிகளில்
ஒன்றைக் கூட
செய்யவில்லை என்று
யாரேனும் சொன்னால்
அவர் கண்டிப்பாக
கடவுளாகத்தான்
இருப்பார் “

“இலக்கியங்களிலும்
நீதி நூல்களிலும்
இதிகாசங்களிலும்
பகவத் கீதையிலும்
சொல்லப்பட்டிருக்கும்
இத்தகைய உயர்வான
நீதிகளை படிப்பதால்
எந்த உண்மையும்
வாழ்வில் விளங்காது ;
இந்த நீதிகளை
வாழ்வில் அனுபவிக்கும்
போது தான் அந்த
நீதிகளில் உள்ள
உண்மை விளங்கும் ;”

“கற்க கசடற
என்றால்
வாழ்க்கையில்
அனுபவங்களின்
மூலம்
கிடைக்கக்கூடிய
உண்மைகளை
நன்றாகக் கற்றுக்
கொள்ள வேண்டும்
என்று பொருள் “

“கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக
என்றால்
கற்றுக் கொண்ட
உண்மைகளின்படி
சொல்லப்பட்ட
நீதிகளின்படி வாழ்ந்தால்
வாழ்க்கையில் என்றும்
துன்பம் இல்லை
என்று பொருள்”

“அதாவது
வாழ்க்கையில்
அனுபவங்களின் மூலம்
கிடைக்கக்கூடிய
உண்மைகளை
நன்றாகக் கற்றுக்
கொண்டபின்
உண்மைகளை
உணர்ந்து
சொல்லப்பட்ட
நீதிகளின்படி வாழ்ந்தால்
வாழ்க்கையில் என்றும்
துன்பம் இல்லை
என்பதைத் தான்
திருவள்ளுவர்
கற்க கசடற
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்கிறார்

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-பதிவு - 2


           திருக்குறள்-பதிவு - 2

நீதி – 3
“இந்த உலகத்தில்
உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள் செய்யும்
தவறான செயலை
சரியானது என்று
நிரூபிக்க சொல்லும்
காரணங்கள்
அனைத்தும்
தவறானவையாகத்
தான் இருக்கும்”

“துரியோதனன்
தன்னுடைய
மானத்தை
காப்பாற்றியவன்;
அதனால்
அவனுக்கு
நான் நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன் ;
அவனுக்காக
உயிரையும்
கொடுப்பேன்
என்று சொல்லி
துரியோதனனுக்காக
உயிரையும்
கொடுத்தான்
கர்ணன் ;
கர்ணனை
நட்பிற்கு
இலக்கணமாக
சொல்வார்கள் ;

“அதர்மத்தின்
வழி நடந்து
தவறுகளை
செய்து
கொண்டிருந்த
துரியோதனனுக்கு
துணையாக
இருந்து
அதர்மச் செயலை
செய்து விட்டு ;
அதர்மத்தை
செய்து
கொண்டிருந்த
கெளரவர்களுக்கு
துணையாக
இருந்து விட்டு ;
தன்னுடைய
தவறுகளை
மறைப்பதற்காக
நட்பு என்றும்
செஞ்சோற்றுக்
கடன்
என்றும் சொல்லிக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“கர்ணன் சொன்ன
காரணத்தை
சிந்தித்துப்
பார்த்தால்
அவன் செய்த
தவறான
செயலை
மறைப்பதற்காக
சொன்ன
காரணங்களாகத்
தான் அவைகள்
இருக்கும் “

“இந்த
உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள்
செய்யும்
தவறான
செயலை
சரியானது என்று
நிரூபிக்க
சொல்லும்
காரணங்கள்
அனைத்தும்
தவறானவையாகத்
தான் இருக்கும்
என்பதை
கர்ணனின் கதை
மூலமாகத்
தெரிந்து கொள்ளலாம்”

நீதி – 4 :
“ஒரு ஆணுடைய
வாழ்க்கைக்கு
தேவையானவர்கள்
தாயும் தாரமும்;
இருவரும்
ஆண்மகனைப் புரிந்து
கொள்ளாவிட்டால்
ஆண் மகனுடைய வாழ்க்கை
நரகமாகத் தான் இருக்கும் “

“ஒரு ஆண் மகனைப்
பெற்று பாலூட்டி
உணவு ஊட்டி
அன்பு செலுத்தி
பாராட்டி சீராட்டி
வளர்த்தவள் தாய்”

“தாய்க்குப் பிறகு
தாய் காட்டிய
அன்பை மட்டுமல்ல
தன்னையும்
சேர்த்துத் தருவதினால்
தான் தாய்க்குப்
பின் தாரம்
என்றார்கள் “

“தாய் தன்னுடைய
மகனுடைய
மனதை புரிந்து
கொள்ளாமல்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தாலோ
தாரம் தன்னுடைய
கணவனுடைய
மனதை
புரிந்து கொள்ளாமல்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தாலோ
ஆண்மகனுடைய
வாழ்க்கை
நரகத்தில் தான்
இருக்கும் “

“ஒரு ஆணுடைய
வாழ்க்கைக்கு
தேவையானவர்கள்
தாயும் தாரமும் தான்;
ஆண் மகனைப் பற்றிப்
புரியாதவர்கள்
தாயாக இருந்தாலும்
தாரமாக இருந்தாலும்
இருவரில் யாராக
இருந்தாலும்
ஆணமகனைப் புரிந்து
கொள்ளாவிட்டால்
ஆண்மகனுடைய வாழ்க்கை
நரகமாகத் தான் இருக்கும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-பதிவு - 1


           திருக்குறள்-பதிவு - 1

“கற்க கசடற
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

-------திருக்குறள்
-------திருவள்ளுவர்

“படிப்பதற்குத் தக்க
நூல்களைப்
பழுதில்லாமல்
படிக்க வேண்டும்;
படித்த பின்பு
படித்ததற்குத் தக்கபடி
வாழ வேண்டும்
இது தான் இந்த
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

“இந்த திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறு
விளக்கம் சொல்லலாம்”

“இலக்கியங்கள்
சாஸ்திரங்கள்
வேதங்கள்
இதிகாசங்கள்
பகவத் கீதை
சித்தர் பாடல்கள்
ஆகியவற்றில்
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டிய
நீதிகள் சொல்லப்பட்டு
இருக்கிறது “

நீதி – 1 :
“நண்பனுக்காக நாம்
உயிரைக் கொடுக்கலாம் ;
ஆனால் உயிரைக்
கொடுக்கக்கூடிய நண்பர்கள்
நமக்கு கிடைப்பது
தான் கடினம் ; “

“நம்முடைய நண்பன்
ஒருவருக்கு
துயரம் என்றாலோ
கஷ்டம் என்றாலோ
வேதனையில்
வாடுகிறார் என்றாலோ
அந்த வேதனையை நண்பர்
சொன்னாலும்
சொல்லாவிட்டாலும்
அதை கேட்டு விட்டு
சும்மா இருக்காமல்
நாம் ஓடி போய்
உதவி செய்வோம் ;
நம்முடைய வேலை
நம்முடைய குடும்பம்
விடுப்பு நாள்
சனிக்கிழமை
ஞாயிற்றுக் கிழமை
என்றும் பார்க்காமல்
உதவிகள் செய்வோம் ;
ஆனால் நமக்கு ஒரு
துன்பம் என்றால்
அதைத் தெரிந்து கொண்டு
ஓடிப்போய் உதவி
செய்வோம் என்று
நமக்காக உதவி
செய்ய ஒடி வரும்
நண்பர்கள் நமக்கு
கிடைப்பது தான் கடினம் ;”

நீதி – 2 :
“உலகத்திலேயே
மிகப்பெரிய முட்டாள்தனம்
நம்முடைய கஷ்டங்களையும்
நம்முடைய வேதனைகளையும்
நம்முடைய வலிகளையும்
நம்முடைய துன்பங்களையும்
பிறரிடம் சொல்லி
அவர்கள் நம்முடைய
துயரங்களைப்
புரிந்து கொண்டு
உதவி செய்வார்கள்
என்று நினைத்து
கஷ்டங்களைப் புரிந்து
கொள்ளாதவர்களிடம்
சொல்வது தான் ;”

“நமக்கு ஏதேனும்
துன்பம் ஏற்பட்டால்
முதலில் தேடுவது
நமக்கு ஆறுதல்
வார்த்தைகளை
யாராவது சொல்ல
மாட்டார்களா என்று தான் ;
அதற்குப் பிறகு தான்
உதவி செய்வதற்கு
யாரேனும் வருவார்களா
என்று உதவிக்கு
ஆட்களை எதிர்பார்ப்போம்;”

“அதாவது
கண்ணீலிருந்து விழும்
கண்ணீரைத் துடைப்பதற்கு
ஒரு கரம்
முதலில் வேண்டும் ;
பிறகு அந்த கண்ணீருக்கு
காரணமான பிரச்சினையைத்
தீர்க்க ஒருவர்
வேண்டும் ;”

“ஆனால் நம்முடைய
கஷ்டங்களைப் புரிந்து
கொள்ளாதவர்களிடம்
நம்முடைய கஷ்டங்களை
சொல்வதால் ஒரு
பயனும் இல்லை ;
நாம் சொல்லாமல்
இருந்தாலும்
நம்முடைய கஷ்டம் என்ன
என்று தெரிந்தாலும்
உதவி கேட்டு
விடுவார்களோ
என்று அஞ்சி
நம்முடைய பிரச்சினையை
காது கொடுத்து கேட்பது
போல் கேட்டு விட்டு
நம்முடைய
பிரச்சினைக்குள் நுழையாமல்
பிரச்சினைக்குள் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ளாமல்
ஒதுங்கி சென்று
விடுவார்கள் “

“ஏனென்றால் நாம் நீச்சல்
தெரியாமல் ஓடும் ஆற்று
நீரில் தத்தளித்துக்
கொண்டிருப்பவர்கள் ;
அவர்கள் கரையின்
மேல் நின்று வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ;”

“உயிருக்குப் போராடிக்
கொண்டிருப்பவர்களுடைய
நிலைமை கரையில்
இருந்து வேடிக்கைப்
பார்ப்பவர்களுக்குத் தெரியாது “

“ஆகவே நம்முடைய
துன்பங்களினால்
ஏற்பட்ட வேதனைகளை
அதைப் புரிந்து கொண்டு
உதவி செய்யாதவர்களிடம்
சொல்லி ஒரு பயனும் இல்லை “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020

/////////////////////////////////////////