March 25, 2020

பரம்பொருள்-பதிவு-161


              ஜபம்-பதிவு-409
            (பரம்பொருள்-161)

(கிருஷ்ணன் மனதிற்குள்
சிந்தனை செய்து
கொண்டிருந்தார்)

“இனியும் நான் கால
தாமதம் செய்து
கொண்டிருக்கக் கூடாது ; “

“நான் செயல்பட வேண்டிய
நேரம் நெருங்கி விட்டது;”

“நான் ஆணிலிருந்து
பெண்ணாக மாற
வேண்டிய தருணம்
ஆரம்பமாகி விட்டது ;
என்று கிருஷ்ணன்
நினைத்துக் கொண்டிருக்கும்
நேரத்திலேயே
கிருஷ்ணனின் உடலிலும் ;
உணர்விலும் ;
மாற்றங்கள் ஏற்படத்
தொடங்கி விட்டது “

“கிருஷ்ணன் கொஞ்சம்
கொஞ்சமாக பெண்ணாக
மாறிக் கொண்டு இருந்தார்”

“ஆணிலிருந்து பெண்ணாக
படிப்படியாக மாறிக்
கொண்டு இருந்தார்”

“இந்த உலகத்தில்
தோன்றுபவை எல்லாம்
இரண்டு நிலைகளில்
தோன்றுகிறது ;
ஒன்று பிறப்பினால்
தோன்றுகிறது ;
மற்றொன்று
மாற்றத்தினால்
தோன்றுகிறது ; “

“பிறப்பிற்கும் மாற்றத்திற்கும்
வேறுபாடு இருக்கிறது”

“பிறப்பது என்பது
புதிதாகத் தோன்றுவது ;
மாறுவது என்பது பிறந்தது
வளரும் போது இடையில்
ஏற்படக்கூடிய
மாற்றத்தினால் தோன்றுவது ;

“ஆண் இனம் மற்றும்
பெண் இனம் ஆகிய
இரண்டு இனங்களும்
பிறப்பதின் மூலம்
தோன்றுகிறது ;
திருநங்கைகள் இனம்
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது 

“ஒரு விதையிலிருந்து
செடி முளைக்கிறது
இது பிறப்பின்
மூலம் தோன்றுகிறது ;
பிறந்த செடியில்
பூவானது காயாகிறது,
காயானது கனியாகிறது
காய், கனி ஆகியவை
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது ; “

“ஒரு ஆண் குழந்தை
அல்லது
பெண் குழந்தை - தாயின்
கருவறையிலிருந்து
வெளியே வந்து பிறந்தால்
அது பிறப்பினால்
தோன்றியது என்கிறோம்  

“பிறந்த அதே ஆண்
குழந்தை வளர்ந்து
ஒரு குறிப்பிட்ட பருவம்
அடைந்தவுடன் அந்த
ஆணின் உடலில்
பெண்ணுக்குரிய
மாற்றங்கள் ஏற்படத்
தொடங்கி அதன்
விளைவாக அந்த
ஆண் பெண்ணாக
அதாவது திருநங்கையாக
மாற்றம் அடைந்தால்
அதை மாற்றத்தினால்
தோன்றியது என்கிறோம் “

“பிறந்த ஆண் குழந்தைக்கு
நான் ஆண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது ;
அதைப்போல பிறந்த
பெண் குழந்தைக்கு
நான் பெண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது-ஆனால்
திருநங்கையாக மாற்றம்
அடைந்த திருநங்கைகளுக்கு
தாங்கள் எப்படி
திருநங்கைகளாக மாறினோம்
என்பது தெரியும் “

“ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும்
தாங்கள் எப்படி
தோன்றினோம் என்று
சொல்ல முடிவதில்லை ;
ஆனால் திருநங்கை
இனத்திற்கு தாங்கள்
எப்படி தோன்றினோம்
என்று சொல்ல முடியும் ;”

“ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும்
தாங்கள் பிறக்கும்போது
தங்களுடைய உடலில்
ஏற்படக்கூடிய மாற்றங்களை
உணர்ந்து கொள்ள முடியாது”

“ஆனால் திருநங்கைகள்
தாங்கள் ஆணிலிருந்து
பெண்ணாக மாற்றம்
அடையும் போது
தங்களுடைய உடலுக்குள்
ஏற்படக்கூடிய மாற்றங்களை
உணர்ந்து கொள்ள முடியும்  

“தாங்கள் பிறக்கும் போது
தங்களுடைய உடலுக்குள்
ஏற்படக்கூடிய
உணர்வுகள் தெரியாமல்
பிறந்து இந்த
உலகத்திற்கு வரும்
ஆண் இனம் மற்றும்
பெண் இனத்தை விட
தாங்கள் பெண்ணாக
மாறும்போது தங்களுடைய
உடலுக்குள் ஏற்படக்கூடிய
மாற்றத்தை உணர்ந்து
திருநங்கைகளாக மாறக்கூடிய
திருநங்கைகள் உயர்ந்த
நிலையில் இருக்கிறார்கள் “

“திருநங்கைகள் பிறப்பினால்
உண்டானவர்கள் அல்ல ;
அவர்கள் உடலில்
ஏற்படக்கூடிய மாற்றத்தினால்
உண்டானவர்கள் ;”

“திருநங்கைகள் பிறந்து
வந்தவர்கள் அல்ல  ;
வாழ்க்கையின்
இடைப்பட்ட காலத்தில்
உடலிலும் உணர்விலும்
ஏற்பட்ட மாற்றத்தினால்
உண்டானவர்கள் ;”

“கிருஷ்ணனும் கொஞ்சம்
கொஞ்சமாக இவ்வாறு
தான் மாறிக் கொண்டிருந்தார்”

“ஆமாம் ! ஆணாக பிறந்த
கிருஷ்ணன் பெண்ணாக
மாறிக் கொண்டிருந்தார்”

“ஆமாம் ! கிருஷ்ணன்
ஆணிலிருந்து பெண்ணாக
மாறிக் கொண்டிருந்தார் “

“ஆமாம் ! கிருஷ்ணன்
திருநங்கையாக மாறிக்
கொண்டிருந்தார் “

“ஆமாம் ! கிருஷ்ணன்
திருநங்கையாகவே
மாறி விட்டார் “

“திருநங்கையாக
மாறிய கிருஷ்ணன்
அரவானைக் காண்பதற்காக
அரவான் இருக்கும்
மாளிகையை நோக்கி
சென்று கொண்டிருந்தார்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-03-2020
//////////////////////////////////////////