February 22, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-இன்னாசெய்தாரை-பதிவு-14




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-இன்னா செய்தாரை-பதிவு-14
      
                    “”பதிவு பதிநான்கை விரித்துச் சொல்ல
                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
சாதி வெறியை மறந்து ,
மத உணர்வைத் துறந்து ,
இன வேறுபாட்டைக் களைந்து ,
மொழி வேற்றுமையைச் சிதைத்து ,
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனாலும்
வாழ்க்கையில் பின் பற்றப்பட வேண்டிய ,
வாழ்க்கையில் கடை பிடிக்கப்பட வேண்டிய  ,
ஒரு செயல் உண்டு - அது என்ன என்பதைப் பற்றி
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :



வசனம்-1:
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்  ; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள் ;உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”
                                                               -----மத்தேயு - 5 : 44
                                                              
குறுகிய மனப்பான்மை விடுத்து ,
பரந்த மனப்பான்மை கொண்டவர்களால் தான் ,
குறுகிய சிந்தனை அகற்றி
விரிந்த சிந்தனை பெற்றவர்களால் தான் ,
சுய நலம் புதைத்து
பொது நலம் விதைத்தவர்களால் தான் ,
தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதை விடுத்து
அனைவரும் வாழ வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்களால் தான் ,

                                            உயரிய சிந்தனை ;
                                           தன்னலமற்ற நலம் ;
                                           அன்பின் அர்த்தம் ;
                                           கருணையின் மொழி ;
                                           துன்பத்தின் வீரியம் ;
                                            ஏழ்மையின் கலக்கம் ;
                                            வறுமையின் சோகம் ;
                                            கண்ணீரின் கவலை ;
ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும் .

இத்தகைய சிறப்பை கொண்டவர்களால் தான் ;
இத்தகைய உணர்வை அடைந்தவர்களால் தான் ;
இத்தகைய பண்பைப் பெற்றவர்களால் தான் ;
இத்தகைய மனத்தெளிவைப் பெற்றவர்களால் தான் ;
இவர்களால் மட்டும் தான் ;

நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் - எதிரியையும் நேசிக்க முடியும் ;
நம்மை கவலையில் ஆழ்த்தும் - பகைவனையும் நேசிக்க முடியும் ; 
நம்மை சோகத்தில் தள்ளும் - விரோதியையும் நேசிக்க முடியும் ;
நம்மை கண்ணீரில் வாட்டும் - துரோகியையும் நேசிக்க முடியும் ;

இத்தகைய தன்மை இல்லாதவர்கள்
நண்பனை கூட நேசிக்க முடியாது
அதனால் தான் இயேசு
உங்களுக்கு துன்பங்களைக் கொடுக்கும் சத்ருக்களை சிநேகியுங்கள் .

உங்கள் முன்னேற்றத்தைப் பிடிக்காமல்
நீங்கள் வாழ்வதை பொறுக்காமல்
உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள் .

உங்களை பகையாக நினைத்து
இன்னல்கள் கொடுக்கும் பகையாளிகளுக்கும்
நன்மையே செய்யுங்கள் .

உங்களை நித்திக்கிறவர்கள்
உங்களைத் துன்பப் படுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுடைய தவறுகளை மன்னித்து
அவர்கள் நலம் பல பெற்று வாழ
இறைவனிடம் ஜெபம் பண்ணுங்கள் .


ஒருவன் செய்த தவறை மன்னித்து மறந்து
அவன் வாழ்க்கை சிறக்க
அவன் வாழ்க்கை உயர்வடைய
அவன் துன்பம் நீக்கி சிறப்புற்று வாழ
அவன் இன்பத்துடன் சுகித்து வாழ
ஜெபம் பண்ண வேண்டும் என்பது மிக உயர்ந்த மனப்பான்மை
அத்தகைய ஒரு மனப்பான்மையை கொள்ள வேண்டும்
என்கிறார்  இயேசு .

மனிதன் - ஒருவன் செய்த தவறை மன்னிக்கும் போது மனிதனாகிறான்
மனிதன் - ஒருவன் செய்த தவறை மறக்கும் போது தெய்வமாகிறான்
என்ற அடிப்படையில் தான்
என்பதை நினைவில் கொண்டு தான்
பகைவனையும் நேசிக்க வேண்டும் என்கிறார்  இயேசு .

பகைவனையும் நேசிக்க வேண்டும் என்றால்
உயர்ந்த குணநலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும்
உயர்ந்த குணநலன்கள் கொண்டவர்களால் தான்
பகைவனையும் நேசிக்க முடியும் என்ற அடிப்படையில் தான்
இயேசு பகைவனை நேசிக்க வேண்டும் என்கிறார் .

அதாவது
தீய எண்ணம் நீக்கி
உயர்ந்த எண்ணம் கொண்டு
வாழ வேண்டும் என்பதற்காக

மனிதன் நல்லவனாக வாழ்ந்து
நல்லதே செய்தே சமுதாயத்தில் வாழ வேண்டும்
சமுதாயம் துhய்மை பெற வேண்டும்
அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் - என்ற
தொலைநோக்கு பார்வையில் தான்
இயேசு பகைவனையும் நேசி என்கிறார்.



வசனம்-2 :
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்
                                                             -----மத்தேயு - 5 : 45 
பகைவனை நேசிக்கும் தன்மை பெற்றவர்கள் ,
பகைவன் செயலை மன்னிக்கும் மனதைப் பெற்றவர்கள் ,
உயர்ந்த குணத்தைப் பெற்றவர்கள் ,

அனைத்தையும் தன்னுள் கொண்ட
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

அனைத்தையும் ஆண்டு கொண்டிருக்கிற
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

அனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிற
எல்லாம் வல்ல ஆண்டவனின்,

அனைத்தையும் வழி நடத்துகிற
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

பிதாவின் குழந்தையாக இருப்பதற்கு உரிய
தகுதியைப் பெறுகிறீர்கள்

பிதாவின் குழந்தையாகிறீர்கள்
என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர்:

              “””“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
                     நன்னயம் செய்து விடல்””””
                                               ------திருக்குறள்----திருவள்ளுவர்-------

                நம்முடைய ,
                                       மனம் வருத்தப் படும்படி ;
                                       கண்கள் கண்ணீர் விடும்படி ;
                                       இதயம் இரத்தம் சிந்தும்படி ;
                                       வாழ்க்கை வெறுத்துப் போகும்படி ;
                                       அமைதி குலைந்து போகும்படி ;
                                        நிம்மதி சிதைந்து போகும்படி ;
                                        இன்பம் மறைந்து போகும்படி ;
                                        வறுமை நம்மை வாட்டும்படி ;
                                        ஏழ்மை நம்மை தாக்கும்படி ;
                                        சிந்தனை சிதைந்து போகும்படி ;

துன்பம் பல கொடுத்து
நம்மை கலங்க வைப்பவர் ;
எதிராளியாக நினைத்து ஏளனம் செய்பவர் ;
விரோதியாக நினைத்து துன்பம் கொடுப்பவர் ;
பகையாளியாக நினைத்து தொல்லை கொடுப்பவர் ;
நம்முடைய முன்னேற்றத்தை விரும்பாதவர் ;
நம்முடைய முன்னேற்றத்தைத் தடை செய்ய காரியங்கள் வகுப்பவர் ;
கீழே தள்ளி விட திட்டம் தீட்டுபவர் ;
கூட இருந்தே குழி பறித்து துரோகம் செய்பவர் ;

போன்ற தன்மைகள் கொண்டவர் ;
நம் வாழ்வில் எதிர்பட்டு
துன்பங்கள் பல செய்தாலும்
ஆதனால் நாம் பாதிப்பு நிலை அடைந்தாலும்
துன்பம் செய்தவருக்கு எதிராக துன்பம் செய்யாமல்
தனக்கு துன்பம் செய்தவருடைய

                                                  மனம் திருந்தும்படி ;
                                                  உள்ளம் வருந்தும்படி ;
                                                  தவறை உணரும்படி ;
                                                  சிந்தனை தெளியும்படி ;
                                                  இதயம் சிந்திக்கும்படி ;
                                                  நாணத்தால் துவளும்படி ;

துன்பம் செய்தவருக்கும் நன்மையே செய்து     
தவறுக்கு தண்டனை கொடுக்காமல்


தவறு செய்தவன் தன் தவறை 
தானே உணர்ந்து மனது திருந்தும் படி
துன்பம் செய்தவருக்கும்
அவர்  மனந் திருந்தும் படி
நன்மையே செய்ய வேண்டும்
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு , நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் பகைவனுடைய செயலை மன்னித்து , அவனை நேசித்து அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிறார்.

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் பகைவனுக்கு அவன் நாணுமாறு நன்மை செய்ய வேண்டும் என்கிறார்.


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுபதிநான் குந்தான்முற்றே “”