December 23, 2019

பரம்பொருள்-பதிவு-104


          பரம்பொருள்-பதிவு-104

(தனி அறைக்குள்
துரியோதனனும்
சகாதேவனும்
இருக்கிறார்கள்.

துரியோதனன்
பேசத் தொடங்கினான்)

துரியோதனன் :
"சகாதேவா நீ
பல சாஸ்திரங்களையும்
கற்றுத் தேர்ந்தவன் ;
உனக்கு தெரியாதது
சாஸ்திரங்களில்
எதுவும் இல்லை ;
என் மனதில்
எழுந்துள்ள சில
கேள்விகளுக்கு
சோதிட
சாஸ்திரத்தின்படி
பதில்
பெறுவதற்காக
இங்கு வந்திருக்கிறேன்
தம்பி ! "

"என்னுடைய மனம்
திருப்தி அடையும்
வகையில்
என்னுடைய
கேள்விகளுக்கு பதில்
சொல்வாயா ? "

சகாதேவன் :
"சோதிட சாஸ்திரம்
என்ன சொல்கிறதோ
அதை அப்படியே
சொல்கிறேன் ;
தெரிந்ததை
மறைக்காமல்
சொல்கிறேன்
அண்ணா ;"

துரியோதனன் :
"நடக்கவிருக்கும்
போரில் நான்
வெற்றி பெற
வேண்டும்
என்பதற்காக
களப்பலி கொடுக்க
தீர்மானம்
செய்திருக்கிறேன் ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
எந்த நாள்
என்று எனக்கு
சொல்ல வேண்டும் ;"

சகாதேவன் :
(சோதிட
நூல்களை
ஆராய்ந்து
பார்க்கிறான்
சகாதேவன்

பிறகு பேச
ஆரம்பிக்கிறான்)

"வருகின்ற
அமாவாசை
தினமே
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
அண்ணா ! "

துரியோதனன் :
"அன்றைய தினத்தில்
களப்பலி கொடுத்தால்
வெற்றி நிச்சயம்
தானே தம்பி ! "

சகாதேவன் :
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பவர்
தான் வெற்றி
பெறுவார் அண்ணா !"

"அன்றைய
தினத்தில் களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும்
வெற்றி கொள்ள
முடியாது அண்ணா ! "

"களப்பலி
கொடுத்தவர்களை
எதிர்த்து நின்று
யார் போரிட்டாலும்
அவர்கள்
தோல்வியைத் தான்
தழுவுவார்கள்
என்பது உறுதி
அண்ணா !"

துரியோதனன் :
"மிக்க மகிழ்ச்சி
தம்பி !
களப்பலியாகக்
கூடியவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்க
வேண்டும்
என்பதையும் ;

"களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவர்கள்
இந்த உலகத்தில்
எத்தனை பேர்
இருக்கிறார்கள்
என்பதையும்  :

"அவர்களுடைய
பெயர்கள் என்ன
என்பதையும்
எனக்கு சொல்ல
வேண்டும் தம்பி !"

சகாதேவன் :
"ஒருவரை களப்பலி
கொடுக்க வேண்டும்
என்றால்
களப்பலியாகக்
கூடியவர்  
32 லட்சணங்கள்
உள்ளவராக
இருக்க வேண்டும் ;
எதிர்ரோமம்
படைத்தவராக
இருக்க வேண்டும். ;"

"இத்தகைய
இரண்டு  
தன்மைகளையும்
கொண்டவர் யார்
இருக்கிறாரோ
அவரைத் தான்
காளி தேவிக்கு
முன்பு களப்பலி
கொடுக்க வேண்டும் "

"களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
வாய்ந்தவர்கள்
மொத்தமே மூன்று
பேர்கள் தான்
ஈரேழுலோகத்திலும்
உள்ளனர் அண்ணா !"

துரியோதனன் :
" ஈரேழுலோகத்திலும்
மொத்தமே
மூன்று பேர்கள்
மட்டும் தான்
உள்ளனரா ?"

சகாதேவன் :
"ஆமாம் அண்ணா ! "

துரியோதனன் :
"யார் அவர்கள்
அவர்களுடைய
பெயர்கள்
என்ன தம்பி ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------  23-12-2019
//////////////////////////////////////////