April 20, 2020

பரம்பொருள்-பதிவு-207


               ஜபம்-பதிவு-455
              (பரம்பொருள்-207)

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நன்றாக வாழ
வேண்டும்
என்பதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்தவன்
அரவான்”

“அதனால் தான்
நான் சொல்கிறேன்
களப்பலியான
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்து
உயிர்த்தெழ செய்யும்
உயிர்த்தெழுதல்
இது வரை
யாரும் செய்யாத
உயிர்த்தெழுதல் ;
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதல்”

“இதுவரை
யாரும் செய்யாத
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதலை
இப்போது செய்யப்
போகிறேன்”

“இப்போது
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுக்கப் போகிறேன் “

(என்று சொல்லிக்
கொண்டே கிருஷ்ணன்
அரவானுடைய
தலையைப்
பிடித்துக் கொண்டு
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்தார் )

கிருஷ்ணன் :
“அரவான் மெதுவாக
உன்னுடைய கண்களைத்
திறந்து பார்”

(அரவானுடைய
தலை
உயிர் பெற்றது
அரவான் மெதுவாக
கண்களைத் திறந்தான் ;
இந்த உலகத்தைப்
பார்த்தான் ;
தன் முன்னால்
நின்று கொண்டிருந்த
கிருஷ்ணனையும்
பஞ்ச
பாண்டவர்களையும்
தன்னுடைய
கண்களால் பார்த்தான் ; )

அரவான் :
“உங்கள்
அனைவரையும்
என்னுடைய
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்  ;
என்னுடைய
வணக்கத்தை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளுங்கள் ; “

(அனைவரும்
அரவானுக்கு வணக்கம்
செலுத்துகின்றனர் )

கிருஷ்ணன் :
“என்ன தெரிகிறது
அரவான் “

அரவான் :
“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள ஒவ்வொரு
பொருளிலும்
நீங்கள் இருப்பது
தெரிகிறது பரந்தாமா “

கிருஷ்ணன் :
“வேறு என்ன
தெரிகிறது அரவான் ? “

அரவான் :
“உங்களுக்குள் இந்த
பிரபஞ்சமே இருப்பது
தெரிகிறது பரந்தாமா “

கிருஷ்ணன் :
“ஞானம் என்பது
உனக்குள்
பிறந்திருக்கிறது  ;
ஆன்மீகத்தின் மிக
முக்கியமான
வாயிலை நீ
இப்போது
கடந்திருக்கிறாய் ;
அதனால் தான்
பிரபஞ்ச ரகசியங்கள்
அனைத்தும் உனக்கு
தெரிய ஆரம்பித்து
இருக்கிறது “

“இன்னும் பல
விஷயங்களை
உனக்கு
வழங்குவதற்காக
இந்த உலகமே காத்துக்
கொண்டிருக்கிறது “

“அதற்கு அடித்தளம்
அமைக்கும் விதத்தில்
நீ கேட்டபடி
நடக்கப்போகும்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பதற்கு
வசதியாக
உன்னுடைய
தலையை இங்கே
கொண்டு வந்து
இந்த கம்பத்தில்
உன்னுடைய
தலையைப் பொருத்தி
வைத்திருக்கிறேன் “

“குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும் இடம்
முழுவதையும்
இப்போது உன்னுடைய
கண்ணால் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்”

“குருஷேத்திரப் போர்
நடக்கும் போது நீ
அனைத்தையும்
பார்க்கப்
போகிறாய்”

“குருஷேத்திரப்போர்
முழுவதையும்
பார்க்கக்கூடிய
பாக்கியம் உனக்குக்
கிடைத்திருக்கிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-206


             ஜபம்-பதிவு-454
           (பரம்பொருள்-206)

தர்மர் :
“என்ன அரவான்
உயிர்த்தெழப்
போகிறானா ? “

கிருஷ்ணன் :
“ ஆமாம் !
அரவான்
உயிர்த்தெழப்
போகிறான் ;
நான் தான்
அவனை
இப்போது
உயிர்த்தெழ
வைக்கப்
போகிறேன் ; “

தர்மர் :
“உயிர்த்தெழ
வைப்பதின்
அர்த்தம்
எனக்குப்
புரியவில்லை “

கிருஷ்ணன் :
உயிர்த்தெழுவது
என்றால்
என்ன என்று
முதலில் தெரிந்து
கொள் தர்மா “

“இந்த உலகத்தில்
உயிர்த்தெழுதல்
இரண்டு
வகைகளில்
நடைபெற்று
வருகிறது “

“புற உயிர்களால்
தாக்கப்பட்டு
அதன் மூலமாக
மரணமடைந்தவர்களை
கடவுள் அருள்
பெற்றவர்கள்
உயிர்ப்பித்தால்
அது முதல் வகை
உயிர்த்தெழுதல் “

“புற உயிர்களால்
தாக்கப்பட்டு
அதன் மூலமாக
மரணமடைந்த
கடவுள் அருள்
பெற்றவர் - தானே
உயிர்த்தெழுந்து
வந்தால் அது
இரண்டாவது வகை
உயிர்த்தெழுதுல் “

“இதுவரை நடந்த
உயிர்த்தெழுதல்
இந்த இரண்டு
வகைகளுக்குள் தான்
நடந்தது - இனி
நடக்கப்போகும்
உயிர்த்தெழுதலும்
இந்த இரண்டு
வகைகளுக்குள் தான்
நடக்கப்போகிறது “

“புற உயிர்களால்
தாக்கப்படாமல்
தானே தன்
தலையை
வெட்டிக் கொண்டு
களப்பலியானவன்
அரவான் “

“அரவானுடைய
தலைக்கு நான்
உயிர் கொடுத்து
உயிர்த்தெழ
வைத்தால் - அந்த
உயிர்த்தெழுதலே
இது வரை
நடக்காத
உயிர்த்தெழுதல் ;
இந்த
இரண்டு வகை
உயிர்த்தெழுதலிலும்
சேராத
உயிர்த்தெழுதல் ;
இனி யாராலும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதல் ;
புனிதத்
தன்மை வாய்ந்த
சிறப்பு மிக்க
உயிர்த்தெழுதல் “

“இத்தகைய ஒரு
உயிர்த்தெழுதலைத்
தான் அரவானுக்கு
நான் இப்போது
செய்யப் போகிறேன் “

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களையும்
ஏற்றுக் கொண்டு
பிறருக்காக
தன்னுடைய
இரத்தத்தையே
கொடுத்தவன்
அரவான் “

“இந்த
உலகத்தில் உள்ள
அனைவருடைய
பாவங்களையும்
தீர்ப்பதற்காக
தன்னுடைய
இரத்தத்தையே
கொடுத்தவன்
அரவான் “

“பாவப்பட்ட
மக்களின்
பாவங்களை
நீக்குவதற்காக
தன்னுடைய
இரத்தத்தையே
இந்த உலகத்திற்கு
அளித்து
தன்னுடைய
இரத்தத்தால்
இந்த உலகத்தையே
காப்பாற்றப்
போகிறவன்
அரவான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-205


              ஜபம்-பதிவு-453
            (பரம்பொருள்-205)

“யாரையும்
யாரையும்
சார்ந்து
யாரும்
பிறப்பதுவும்
இல்லை “

“யாரையும்
யாரையும்
சார்ந்து
யாரும்
வாழவும்
இல்லை “

“அனைவரும்
தனியாகத்
தான் வந்தோம் ;
தனியாகத்
தான் போகப்
போகிறோம் ;
என்பதை
உணராதவர்கள்
தான்
மரணத்தைப்
பார்த்து
பயப்படுவார்கள் “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படுபவர்கள்
தங்களைப்
பற்றியும்
தங்கள்
குடும்பத்தைப்
பற்றியும் தான்
நினைப்பார்கள்
அவர்களுக்காக
மட்டுமே
வாழ்வார்கள்  

“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவனாக
இருந்தால்
மட்டுமே
மக்களுக்காக
வாழ முடியும்  ;
மக்களுக்காக
தன்னையே
ஒப்படைக்க
முடியும் “

“அரவான்
மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவன்  

“அதனால்
தான் இந்த
உலகத்திற்காக
தன்னையே
அர்ப்பணித்தான்  

“இந்த உலகத்திற்காக
தன்னையே
ஒப்படைத்தான் “

“தன்னையே
களப்பலியாகக்
கொடுத்தான் “  

“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவனால்
மட்டுமே
களப்பலியாக
முடியும் “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படாமல்
களப்பலியானவன்
மீண்டும் எப்படி
வாழ வேண்டும்
என்று
ஆசைப்படுவான் “

“அதனால் தான்
அரவான்
தான் உயிர்
பெற்று வாழ
வேண்டும் என்று
கேட்கவில்லை  

“நான் களப்பலி
ஆனாலும்
வெட்டுப்பட்ட
என் தலைக்கு
உயிர் இருக்க
வேண்டும் ;
வெட்டுப்பட்ட
என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும்
சக்தியை
எனக்குத்
தர வேண்டும் ;
என்ற வரத்தைத்
தான் கேட்டான் “

“அதைக் கூட
ஏன் கேட்டான்
என்றால்
துன்பச் சகதியில்
சிக்கித் தவித்துக்
கொண்டிருக்கும்
மக்கள் அந்த
துன்பச்
சகதியிலிருந்து
விடுதலை பெற்று
இன்பம் என்னும்
நீரில் நீந்தி
விளையாடுவதை
பார்க்க வேண்டும்
என்பதற்காகத்
தான் கேட்டான் “
  
“அரவான் கேட்ட
முதல் வரத்தை
நிறைவேற்றுவதற்காக
இப்போது நான்
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுக்கப்
போகிறேன் “

“ஆமாம் !
அரவானை
உயிர்த்தெழ
வைக்கப்
போகிறேன் “

“ஆமாம் !
அரவான்
உயிர்த்தெழப்
போகிறான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////