February 04, 2020

பரம்பொருள்-பதிவு-124


           பரம்பொருள்-பதிவு-124

கிருஷ்ணன்  :
"உன்னுடைய
ஒப்புதலை மட்டுமே
வைத்துக் கொண்டு
களப்பலி கொடுக்க
முடியாது என்பதையும் ;
அனைவருடைய
ஒப்புதலையும்
பெற்று தான்
களப்பலி கொடுக்க
வேண்டும் என்பதையும் ;
இப்போது நீ தெளிவாக
புரிந்து கொண்டிருப்பாய் "

அரவான் :
"நன்றாகப் புரிகிறது ;
ஆனால் நீங்கள் செய்யும்
செயல் தான் எனக்குப்
புரியவில்லை “

கிருஷ்ணன்  :
“எதைச் சொல்கிறாய்
அரவான்…………………………? ”

அரவான் :
“நான் பாண்டவர்களுக்காக
களப்பலியானால் - நீங்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெறலாம் ;"
ஆனால் ,
வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
நான் பாண்டவர்களுக்காக
களப்பலி ஆக முடியும் ?"

"அப்படி இருக்கும் போது
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டியது
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்கள் தானே…………….?
அவரே யாரிடமும் சென்று
ஒப்புதல் பெறாத போது
நீங்கள் மட்டும் ஏன்
அனைவரின்
ஒப்புதலையும் பெற
வேண்டும் என்று
இப்போதே முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள் "

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்கு
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி தெரியுமா அல்லது
தெரியாதா என்பது
பற்றி எல்லாம்
எனக்குத் தெரியாது
ஆனால்,
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி எனக்குத் தெரியும்
என்ற காரணத்தினால் தான்
நான் அனைவரிடமும்
இப்போதே சென்று
ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகும் போது
அந்த சமயத்தில் சென்று
நான் அனைவரிடமும்
ஒப்புதல் பெற
முடியாது அல்லவா ?
அதனால் தான் - நான்
இப்போதே அனைவரிடமும்
சென்று ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன்"

அரவான்  :
"பரந்தாமா நீங்கள்
எதைப் பற்றி
சிந்திக்கிறீர்கள் ?
எதைப் பற்றி
பேசுகிறீர்கள் ?
எதை செயல்படுத்தப்
போகிறீர்கள் ? - என்பது
புரியாத புதிராகவே
இருக்கிறது "

"புரிந்து கொள்ள
முயற்சி செய்கிறேன்
என்னால் புரிந்து
கொள்ளவே முடியவில்லை "

"வருங்காலத்தில் என்ன
நடக்கும் என்பதை
என்னால் கணிக்கவே
முடியவில்லை "

கிருஷ்ணன் :
"அரவான் வருங்காலத்தில்
என்ன நடக்கும் என்பதை
கணிக்க முயற்சி செய்தால்
நிகழ்காலத்தை
இழந்து விடுவாய் "

"நிகழ்காலத்தில் நிம்மதி
இழக்காமல் இருக்க
வேண்டுமானால்
வருங்காலத்தைப் பற்றி  
யோசிக்காதே ! ""

"எது எப்போது
எப்படி நடக்க வேண்டுமோ ?
அது அப்போது
அப்படி நடக்கும்
என்பதை மட்டும்
நினைவில் கொள் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
உன்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்காக
உன்னுடைய
தாய் தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களுடைய
ஒப்புதலை பெறுவதற்காக
அவர்களை
சந்திக்கச் செல்கிறேன்

அரவான் :
"முதலில் யாரை
சந்திக்கப் போகிறீர்கள் "

கிருஷ்ணன் :
"வேறு யார் உன்
தாய் உலூபியே தான் ! "

"அனைவருடைய
ஒப்புதலையும் பெற்ற
பிறகு மீண்டும் வந்து
உன்னை நான் சந்திக்கிறேன்
அப்படி சந்திக்கும் போது
நீ ஏதேனும் என்னிடம்
கேட்க விரும்பினால்
அதை கேட்கலாம் "

"இப்போது நான்
உன்னிடமிருந்து
விடை பெறுகிறேன் ! "

"வருகிறேன்
அரவான் வருகிறேன் "

(கிருஷ்ணன்
அரவானிடம் இருந்து
விடை பெற்றுச்
சென்றார் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 04-02-2020
//////////////////////////////////////////