March 25, 2022

ஜபம்-பதிவு-717 (சாவேயில்லாத சிகண்டி-51)

 ஜபம்-பதிவு-717

(சாவேயில்லாத

சிகண்டி-51)

 

அம்பை

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருக்கிறார்களே

அவ்வாறு இருந்தால்

கடவுள்

அருள் கிடைக்குமா

 

சைகாவத்யர் :

கடவுளின் அருளைப்

பெறுவதற்கு

உடல் தூய்மை

முக்கியமில்லை

உள்ளத் தூய்மை

தான் முக்கியம்

 

உள்ளத்தை

தூய்மையாக

வைக்காமல் உடலை

தூய்மையாக

வைத்தால்

கடவுள் அருள்

புரிவாரா

 

பிறர்

வாழ்க்கையை

அழிக்க நினைப்பது

பிறர் மனம்

வருத்தப்படும்படி

நடந்து கொள்வது

ஏமாற்றுவது

திருட்டுத்தனம்

செய்வது

பொய் பேசுவது

யாரும்

பார்க்கவில்லை

என்று செய்யக்கூடாத

தவறுகள்

அனைத்தையும்

செய்வது

போன்ற தகாத

செயல்களைச்

செய்து விட்டு

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருந்தால் கடவுள்

அருள் கொடுத்து

விடுவாரா

 

வீட்டிற்கு வெளியே

வெள்ளை அடித்து

சுத்தமாக வைத்து

விட்டு

வீட்டிற்குள்

குப்பையை போட்டு

வைத்தால் யாராவது

வீட்டிற்குள் வந்து

தங்குவார்களா

 

அதைப்போல் தான்

உடலைத் தூய்மையாக

வைத்து விட்டு

உள்ளத்தை

களங்கத்துடன்

வைத்தால்

இறைவன் எப்படி

உள்ளத்தில் வந்து

தங்குவான்

நமக்கு அருள்

புரிவான்

 

உடல் அழுக்காக

இருந்தாலும்

பரவாயில்லை

அசைவம்

சாப்பிட்டாலும்

பரவாயில்லை

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருக்க வேண்டிய

அவசியமும் இல்லை

உள்ளம் தூய்மையாக

இருந்தால்

போதும்

இறைவன் வந்து

அருள் புரிவான்

 

அம்பை :

தவம் செய்பவர்கள்

என்ன செய்ய

வேண்டும்

என்ன செய்யக்கூடாது

என்பதை

என்ற உண்மையை

எனக்குச் சொன்னீர்கள்

 

தவம் செய்வது

எப்படி என்பதை

எனக்கு கற்றுத்

தாருங்கள்

 

சைகாவத்யர் :

நாளை

ஹோத்திரவாஹனர்

இந்த ஆசிரமத்திற்கு

வருகிறார்

தவத்தில்

சிறந்தவர் அவர்

அவரிடம்

கற்றுக் கொண்டால்

நன்றாக இருக்கும்

 

அவர் வரட்டும்

அவரிடம் கேட்போம்

அவர் என்ன

சொல்கிறார்

என்று பார்ப்போம்

 

இப்பொழுது சென்று

மகிழ்ச்சியாக

உணவருந்துங்கள்

அமைதியாக

ஓய்வெடுங்கள்

நிம்மதியாக

உறக்கம் கொள்ளுங்கள்

 

நாளை பார்ப்போம்

 

(சைகாவத்யர்

சென்று விடுகிறார்.

அந்த ஆசிரமத்தில்

உள்ள பெண்கள்

உணவு உண்பதற்காக

அம்பையை

அழைத்து செல்கின்றனர்.

ஆனால் அம்பை

உணவு எதுவும்

உண்ணவில்லை

இரவு முழுவதும்

உறங்கவில்லை.

 

ஒரு

பாறையின் மேல்

அமர்ந்து கொண்டு

இரவு முழுவதும்

வானத்தையே

பார்த்துக் கொண்டு

எதையோ ‘

எண்ணிக் கொண்டு

இருந்தாள் அம்பை.)

 

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-716 (சாவேயில்லாத சிகண்டி-50)

 ஜபம்-பதிவு-716

(சாவேயில்லாத

சிகண்டி-50)

 

சைகாவத்யர் :

சைவ உணவைச்

சாப்பிட்டால் ஆன்மீகத்தில்

உயர் நிலை

அடையலாம் என்றால்

ஏன் சைவ உணவு

சாப்பிடுபவர்கள்

அனைவரும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடையவில்லை

 

அசைவ உணவைச்

சாப்பிட்டால்

ஆன்மீகத்தில்

உயர்நிலை அடைய

முடியாது என்றால்

அசைவ உணவைச்

சாப்பிட்டவர்கள்

எத்தனையோ பேர்

ஆன்மீகத்தில்

உயர் நிலை அடைந்து

இருக்கிறார்களே

 

அம்பை :

உயிர்களைக்

கொல்லக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

உயிர்கள் என்றால்

மனிதர்களின்

கண்களுக்கு தெரிபவை

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகள்

மட்டும் தான்

 

மனிதனும் ஒரு

உயிர் தானே

 

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகளை

கொல்லக்கூடாது

என்று சொல்பவர்கள்

மனித உயிர்களை

கொல்கிறார்களே

அது பாவம்

இல்லையா

 

உணவிற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

புலி மானைக்

கொல்வது

பாவம் இல்லை

ஏனென்றால் புலி

மானை உணவிற்காகக்

கொல்கிறது

உணவிற்காகக்

கொல்வது

பாவம் இல்லை

 

உணவிற்காகவும்

அத்தியாவசிய

தேவைக்காகவும்

மனிதன்

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

அம்பை :

அத்தியாவசியத் தேவை

என்று நீங்கள்

எதைச் சொல்கிறீர்கள்

 

சைகாவத்யர் :

குளிரிலிருந்து தன்னை

பாதுகாத்துக் கொள்ள

விலங்குகளின் தோலுக்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

ஓரிடத்திலிருந்து

மற்றொரு இடத்திற்கு

பிரயாணம்

செல்லும் போது

உணவையும்,

நீரையும்

கொண்டு செல்ல

விலங்குகளின்

தோலைப்

பயன்படுத்துவதற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை.

 

அம்பை :

அசைவ உணவு

சாப்பிடுவது உயிரை

அசுத்தப்படுத்தாதா

 

சைகாவத்யர் :

நம்முடைய தவறான

எண்ணங்கள் தான்

நம்முடைய உயிரை

அசுத்தப்படுத்தும்

 

உண்ணும் உணவு

உயிரை

அசுத்தப்படுத்தாது

 

தினமும் குளித்து

உடலை எப்படி

தூய்மையாக

வைத்திருக்கிறோமோ

அவ்வாறு தவங்கள்

செய்து உயிரை

தூய்மையாக வைத்துக்

கொள்ள வேண்டும்

 

நாம் தினமும்

தவம் செய்வதால்

உயிரில் உள்ள

கர்மா என்னும்

அழுக்குகள் நீங்கும்

 

அம்பை :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

அசைவ உணவு

சாப்பிடக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

எந்த உணவையும்

சாப்பிடக்கூடாது

 

பால்

தண்ணீர் மட்டுமே

சாப்பிட்டு தவம்

செய்ய வேண்டும்

 

காலை மாலை

குளிக்க வேண்டும்

 

வெறும் தரையில்

படுக்க வேண்டும்

 

48 நாட்கள் விரதம்

இருந்து தவம்

செய்யும் போது

உடல்

தளர்ச்சி அடையும்

உடல்

தளர்ச்சி

அடையும் போது

பிரபஞ்ச சக்தி

உடலுக்குள் இறங்கும்

 

48 நாட்கள் விரதம்

இருப்பது என்பது

பிரபஞ்ச சக்தி

நம்முடைய

உடலுக்குள்

இறங்குவதற்காகத்

தான்

 

பிரபஞ்ச

சக்தியுடன் தொடர்பு

கொள்வதற்காகத் தான்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-715 (சாவேயில்லாத சிகண்டி-49)

 ஜபம்-பதிவு-715

(சாவேயில்லாத

சிகண்டி-49)

 

ஆனால்

முதன் முறையாக

ஒருவரைக்

கொல்ல வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக் கொள்ள

வந்தது நீங்கள் தான்

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்பதற்காகவே

உயிர் வாழ்ந்து

கொண்டிருக்கும்

உங்களைப்

பார்க்கும் போது

எனக்கு

அதிர்ச்சியளிக்கிறது

 

அம்பை :

எனக்கு தவம்

கற்றுக் கொடுக்க

மாட்டீர்களா

 

சைகாவத்யர் :

தவம் என்னுடைய

தனிப்பட்ட

சொத்து கிடையாது

 

பொதுச் சொத்து

 

இறைவனுடைய சொத்து

 

கற்றுக் கொடுக்க

மாட்டேன் என்று

சொல்லும் உரிமை

எனக்குக் கிடையாது

உடலில் உயிர்

உள்ளவர்கள் அனைவரும்

தவம் கற்றுக்

கொள்ள தகுதி

உடையவர்கள்

 

நல்லவர் கெட்டவர்

உயர்ந்தவர் தாழ்ந்தவர்

ஏழை பணக்காரன்

என்ற பேதம்

எல்லாம் தவம்

செய்வதற்கு கிடையாது

 

தவத்தைப் பற்றிய

அடிப்படை

ஞானம் கூட

இல்லாதவர்களாக

இருந்தாலும்

தவம் கற்றுக்

கொள்ள மாட்டேன்

என்று சொன்னாலும்

தவம் செய்ய

மாட்டேன்

என்று சொன்னாலும்

தகுதி யாருக்கு

இருக்கிறதோ

தவம் செய்ய

வேண்டிய காலம்

யாருக்கு வந்துவிட்டதோ

அவருக்கு

தவம் செய்தாலும்

தவம்

செய்யாவிட்டாலும்

காலம்

வந்து விட்டால்

அவர் கேட்டாலும்

கேட்காவிட்டாலும்

தவம் சொல்லித்

தர வேண்டும்

அது தான்

தவம் செய்பவர்களின்

கடமை

 

தவம் செய்வதற்கு

என்று சில

முறைகள் இருக்கின்றன

 

அம்பை :

தவம் செய்பவர்கள்

அசைவ உணவு

சாப்பிடக்கூடாது

சைவ உணவு மட்டும்

தான் சாப்பிட

வேண்டும்

என்கிறீர்களா

 

சைகாவத்யர் :

நான் உணவைப்

பற்றி சொல்ல

வரவில்லை

 

அம்பை :

உணவு

தவம்

சம்பந்தப்பட்டது தானே

 

சைகாவத்யர் :

உண்ணும் உணவிற்கும்

செய்யும் தவத்திற்கும்

சம்பந்தமில்லை

 

உண்ணும் உணவு

உடலுக்குச் செல்கிறது

செய்யும் தவம்

உயிருக்குச் செல்கிறது

 

அம்பை :

அசைவ உணவு

சாப்பிட்டால் உணர்வுகள்

தூண்டப்படும்

அது தவம் செய்வதற்கு

இடையூறாக அமையும்

அதனால்

அசைவ உணவு

சாப்பிடக் கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

அசைவ உணவு

சாப்பிட்டால்

மட்டும் தான்

உணர்வுகள்

தூண்டப்படுமா

 

சைவ உணவு

சாப்பிட்டால்

உணர்வுகள்

தூண்டப்படாதா

 

உணர்வை கட்டுப்படுத்தி

வைக்கக்கூடாது

அறிந்து அதனைக்

கடந்து செல்ல வேண்டும்

 

அம்பை :

சைவ உணவைச்

சாப்பிட்டால் தான்

ஆன்மீகத்தில் உயர்நிலை

அடைய முடியும்

 

அசைவ உணவு

சாப்பிட்டால் ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடைய முடியாது

என்கிறார்களே

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-714 (சாவேயில்லாத சிகண்டி-48)

 ஜபம்-பதிவு-714

(சாவேயில்லாத

சிகண்டி-48)

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

யாரைக் கொல்ல

வேண்டும் என்பதை

சர்வ மாரணம்

அரச மாரணம்

சத்துரு மாரணம்

சர்வபூத மாரணம்

சர்வஜீவஜெந்து மாரணம்

சர்வவிஷ மாரணம்

சர்வதேவ மாரணம்

சர்வரிஷி மாரணம்

என்ற எட்டு

வகையான

மாரணங்களில்

மாரணத்தைப் பற்றிச்

சொல்லி இருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

ஒருவரைக்

கொல்வதற்காக

 

"ஓம்ஆம்

றீங் றீங் சிம்

றீங் கிலி றீங்

பிறீங் பிறீங்

பிறீங் சுவாகா"

 

என்று

மந்திரத்தை எழுதி

வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

ஒருவரைக் கொல்வது

எப்படி என்ற

செய்முறையை

எழுதி வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

ஒருவரைக்

கொல்வதற்காக

எந்த மந்திரத்தைச்

சொல்ல வேண்டும்

எப்படி சக்கரம்

எழுத வேண்டும்

எந்த பொருட்களைப்

பயன்படுத்த வேண்டும்

எந்த திசையில்

அமர வேண்டும்

எந்த முறையில்

செய்ய வேண்டும்

எந்த காலத்தில்

செய்ய வேண்டும்

எந்த சூழ்நிலையில்

செய்ய வேண்டும்

என்பதை சித்தர்கள்

தங்கள் பாடல்களில்

மாரணத்தைப்

பற்றி எழுதி

வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

மந்திரத்தைப் பயன்படுத்தி

மாரணத்தின் மூலம்

ஒருவரைக் கொல்வது

எப்படி தவறில்லையோ

அப்படியே

தவம் செய்து

ஒருவரைக்

கொல்வதும் தவறில்லை

 

சைகாவத்யர் :

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

மாரணத்தைப் பற்றி

அதிக விஷயங்கள்

தெறிந்து

வைத்திருக்கிறீர்கள்

 

நீங்கள் சொன்ன

முறைகளைப் பயன்படுத்தி

ஒருவரைக்

கொன்று விட முடியுமா

 

அம்பை :

முடியாது

 

சைகாவத்யர் :

ஏன் முடியாது

 

அம்பை :

சூட்சும விஷயங்கள்

தெரிந்திருக்க வேண்டும்

சூட்சும விஷங்கள்

தெரியாமல்

செய்ய முடியாது

 

சைகாவத்யர் :

சூட்சும விஷயங்கள்

யார் சொல்லித் தருவார்

 

அம்பை :

குரு தான்

சொல்லித் தருவார்

 

சைகாவத்யர் :

குருவைத் தவிர

யாரும் சொல்லித்

தரமாட்டார்கள் இல்லையா

 

குரு இல்லாமல்

எந்த ஒரு

விஷயத்தையும்

செய்ய முடியாது

உண்மைதானே

 

அம்பை :

ஆமாம்

உண்மை தான்

 

அதனால் தான்

உங்களிடம் வந்தேன்

கற்றுக்

கொள்வதற்காக வந்தேன்

 

சைகாவத்யர் :

கற்றுக்

கொள்வதற்காக

வந்தேன் என்று

சொல்லாதீர்கள்

 

பீஷ்மரைக் கொல்வது

எப்படி என்பதைத்

தெரிந்து கொள்வதற்காக

வந்திருக்கிறீர்கள்

என்று சொல்லுங்கள்

 

இறைவனை அறிந்து

இறைவனுடன்

இரண்டறக் கலந்து

இறைவனாக

மாற வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக்

கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

பிறவி சுழற்சியை

நிறுத்த வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக் கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

உண்மையை

உணர வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக் கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////