November 14, 2020

அறிய வேண்டியவை-164

 

ஜபம்-பதிவு-656

(அறிய வேண்டியவை-164)

 

சகுனி :

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக

நடைபெறப் போகும்

நிகழ்விலும்

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

ஆகிய நால்வரும் 

ஒன்றும் செய்ய

முடியாமல் அந்த

அவையில்

அமர்ந்திருந்தார்கள்

என்றால் அவையில்

நடக்கக்கூடிய

எந்த ஒரு

நிகழ்வையும்

தடுக்க முடியாமல்

அமர்ந்திருந்தார்கள்

என்றால் அவையை

விட்டு வெளியே

செல்ல முடியாமல்

அவைக்குள்ளேயே

அமர்ந்திருந்தார்கள்

என்றால் நாம் முடிவு

செய்து கொள்ளலாம்

இந்த நால்வரும்

நமக்கு ஆதரவாகத்

தான் இருப்பார்கள்

நமக்காக

போரிடுவார்கள்

என்று முடிவு

செய்து கொள்ளலாம்”

 

கர்ணன் :

“நீங்கள் சொல்வது

அனைத்தும்

நடக்குமா?”

 

சகுனி :

“நடக்கும்

நடந்து தான்

ஆக வேண்டும்

நடத்தி காட்டித்

தான் ஆக வேண்டும்

நடத்த வேண்டிய

கட்டாயத்தில் தான்

நாம் இருக்கிறோம்

நாளை

நடைபெறப் போகும்

பகடை விளையாட்டில்

இருந்தே தெரிந்து

விடும் இந்த

நால்வரும் யார்

பக்கம் இருக்கப்

போகிறார்கள் என்று”

 

துரியோதனன் :

“அதற்கு நான்

என்ன செய்ய

வேண்டும்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“ஒரு முக்கியமான

செயலைச் செய்ய

வேண்டும் என்

அன்பு மருமகனே!”

 

துரியோதனன் :

“நான் என்ன

செய்ய வேண்டும்

சொல்லுங்கள்

செய்வதற்கு

நான் காத்துக்

கொண்டிருக்கிறேன்”

 

சகுனி :

“என்னுடைய

குழந்தைகளை நீ

வைத்துக் கொள்

என்னுடைய

குழந்தைகளான

என்னுடைய

பகடைகளை நீ

வைத்துக் கொள்

இந்தா பிடி

என்னுடைய

பகடைகளை

கைகளில்

வாங்கிக் கொள்

என் அன்பு

மருமகனே!”

 

துரியோதனன் :

“எதற்காக 

உங்களுடைய

பகடைகளை என்னிடம்

கொடுக்கிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“நான் என்னுடைய

பகடைகளை

உன்னிடம்

கொடுப்பதற்கு

ஒரு முக்கிமான

காரணம் இருக்கிறது

அது மட்டுமில்லை

ஒரு ரகசியமும்

மறைந்திருக்கிறது “

 

துரியோதனன் :

“என்ன ரகசியம்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“------------------------”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-163

 

ஜபம்-பதிவு-655

(அறிய வேண்டியவை-163)

 

சகுனி :

“நாம் கவனம்

செலுத்த வேண்டியது

பீஷ்மரின் மேல் தான்”

 

துரியோதனன் :

“கிருபர்”

 

சகுனி :

“விதுரர் எப்படி

பீஷ்மருடன்

சம்பந்தப்பட்டு

இருக்கிறாரோ

அவ்வாறே கிருபரும்

துரோணருடன்

சம்பந்தப்பட்டு

இருக்கிறார்”

 

“ஆமாம்

கிருபரின்

சகோதரியான

கிருபியைத் தான்

துரோணர்

திருமணம் செய்து

கொண்டிருக்கிறார்

தனது சகோதரியின்

கணவரான

துரோணருக்கு எதிராக

கிருபர் எப்படி

எதிராக நின்று

போர் செய்ய

முடியும்

துரோணர் எங்கு

இருக்கிறாரோ

அங்கு தான்

கிருபரும்

இருந்து தான்

ஆக வேண்டும்

துரோணர் யார்

பக்கம் இருக்கிறாரோ

அவர் பக்கம் தான்

கிருபரும் இருந்து

தான் ஆக

வேண்டும்

துரோணர்

யார் சார்பாக

போரிடுகிறாரோ

அவர் பக்கம் தான்

இருந்து கிருபரும்

போர் புரிந்து தான்

ஆக வேண்டும்”

 

“கிருபர் தனிப்பட்ட

முறையில் யாருடன்

சேர்வது என்று

முடிவு எடுக்க

முடியாது

அவருடைய

விருப்பப்படி

யாருடனும்

சேர முடியாது

துரோணர் எங்கு

இருக்கிறாரோ

அங்கு தான்

கிருபரும் இருந்து

தான் ஆக வேண்டும்

என்ற கட்டாயத்தில்

இருக்கிறார் கிருபர்”

 

“ஆகவே துரோணர்

நம் பக்கம்

இருந்தால் போதும்

கிருபர் நம் பக்கம்

வந்து விடுவார்”

 

“துரோணர் நமக்கு

ஆதரவு அளித்து

விட்டால் போதும்

கிருபரும் நமக்கு

ஆதரவு அளித்துத்

தான் ஆக வேண்டும்”

 

“துரோணர் நம்

பக்கம் நின்று

போரிட்டால் போதும்

கிருபரும்

நம்முடன் இருந்து

போரிட்டு தான்

ஆக வேண்டும்”

 

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக நடைபெறப்

போகும் நிகழ்விலும்

துரோணர் ஒன்றும்

செய்ய முடியாமல்

அந்த அவையில்

அமர்ந்திருந்தார்

என்றால் கிருபரும்

அந்த அவையில்

ஒன்றும் செய்ய

முடியாமல்

அமைதியாக

அமர்ந்து இருந்து

தான் ஆக

வேண்டும் “.

 

“துரோணரைச்

சார்ந்து தான்

கிருபர் இருப்பார்

என்ற காரணத்தினால்

துரோணர் மேல்

கவனம் செலுத்தி

அவர் நம் பக்கம்

இருக்கும் படி

பார்த்துக் கொள்ள

வேண்டும். அப்படி

பார்த்துக் கொண்டாலே

போதும் கிருபர்

நம் பக்கம்

தான் இருப்பார்”

 

“பீஷ்மரையும்

துரோணரையும்

நம் பக்கம் இருக்கும்

படிச் செய்து

விட்டால் போதும்

விதுரரும் கிருபரும்

நம் பக்கம் தான்

இருப்பார்கள்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

 

அறிய வேண்டியவை-162

 

ஜபம்-பதிவு-654

(அறிய வேண்டியவை-162)

 

துரியோதனன் :

“விதுரரை நாம்

எப்படி கணிப்பது

விதுரர் அறிவுப்

பெட்டகம் ஆயிற்றே

பாண்டவர்களுக்கு

ஒன்று என்றால்

பொங்குபவர் ஆயிற்றே

விதுரர் அறிவாளி

ஆயிற்றே”

 

சகுனி :

“அறிவை

வைத்துக் கொண்டு

ஒன்றும்

செய்ய முடியாது

அறிவு தனியாக

இயங்க முடியாது

அறிவு இயங்குவதற்கு

ஏதேனும்

ஒன்று தேவை

எந்த ஒன்றும்

இல்லாமல்

அறிவால் தனியாக

இயங்க முடியாது”

 

துரியோதனன் :

“அப்படி என்றால்

விதுரரைப் பற்றி

கவலைப்பட

வேண்டாம்

என்று சொல்ல

வருகிறீர்களா?”

 

சகுனி :

“இல்லை”

 

துரியோதனன் :

“பிறகு?”

 

சகுனி :

“அறிவு தனியாக

இயங்க முடியாது

என்றேன்

அறிவு

இயங்குவதற்கு

ஏதேனும் ஒன்று

தேவை என்று

சொன்னேன்

நான் சொன்ன

அந்த ஒன்று

தான் பீஷ்மர்”

 

“விதுரர்

தன்னுடைய

அறிவை பீஷ்மரின்

துணை கொண்டு

தான் செயல்படுத்த

முடியும்

விதுரர் தன்னுடைய

அறிவை

வெளிப்படுத்த

வேண்டும் என்றால்

அதை

செயல்படுத்துவதற்கு

பீஷ்மர் தேவை

பீஷ்மர் இல்லை

என்றால்

விதுரர் தன்னுடைய

அறிவை

செயல்படுத்த முடியாது”

 

“விதுரரின் அறிவு

இயங்குவதற்கான

ஒரு பொருள்

தான் பீஷ்மர்

எனவே, பீஷ்மர்

எங்கு இருக்கிறாரோ

அங்கு விதுரரும்

இருந்து தான்

ஆக வேண்டும்.

 

தன்னுடைய

அறிவை

வைத்துக் கொண்டு

தன்னால் செயல்பட

முடியாது என்பதை

விதுரர் உணர்ந்து

இருக்கின்ற

காரணத்தினால்

அவர் பீஷ்மர்

இருக்கும் இடத்தில்

இருந்து தான்

ஆக வேண்டும்”

 

“பீஷ்மர்

கௌரவர்கள் பக்கம்

இருந்தால் விதுரரும்

கௌரவர்கள் பக்கம்

இருந்து தான்

ஆக வேண்டும்”

 

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக

நடைபெறப் போகும்

நிகழ்விலும்

பீஷ்மர் ஒன்றும்

செய்ய முடியாமல்

அந்த அவையில்

அமர்ந்திருந்தார்

என்றால்

விதுரரும்

அந்த அவையில்

ஒன்றும் செய்ய

முடியாம்ல்

அமைதியாக

அமர்ந்து இருந்து

தான் ஆக வேண்டும்.

 

பீஷ்மரைச்

சார்ந்து தான்

விதுரர் இருப்பார்

என்ற காரணத்தினால்

பீஷ்மர் மேல்

கவனம் செலுத்தி

அவர் நம் பக்கம்

இருக்கும் படி

பார்த்துக் கொள்ள

வேண்டும்.

அப்படி பார்த்துக்

கொண்டாலே போதும்

விதுரர் நம்

பக்கம் தான்

இருப்பார்”

 

“அதனால் நாம்

விதுரரைப் பற்றி

கவலைப்பட வேண்டிய

அவசியம் இல்லை”

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-161

 

ஜபம்-பதிவு-653

(அறிய வேண்டியவை-161)

 

துரியோதனன் :

“பீஷ்மர்

நாளை

நடைபெறப்போகும்

நிகழ்வை தடுத்து

நிறுத்துவதற்கு

தேவையான

நடவடிக்கையை

மேற்கொண்டு

தடுத்தி நிறுத்தினால்

பாண்டவர்களுக்கு

எதிராக எந்த

ஒரு தகாத செயலும்

நடைபெறக்கூடாது

என்று முயற்சி

செய்தால்

கோபத்தில்

அவையை விட்டு

வெளியே சென்றால்?”

 

சகுனி :

“பீஷ்மர் நம்

பக்கம் இல்லை

என்று அர்த்தம்.

போர் என்று

வந்து விட்டால்

பீஷ்மர்

பாண்டவர்களின்

சார்பாகவும்,

நமக்கு

எதிராகவும்

சண்டையிடுவார்

என்று அர்த்தம்”

 

துரியோதனன் :

“அப்படி என்றால்

துரோணர்”

 

சகுனி :

“துரோணர் தன்

மகன் அஸ்த்தாமன்

மேல் அதிக அளவு

அன்பு வைத்திருப்பவர்

தன் மகனுக்காகவே

வாழ்பவர்

மகனுக்காக

எந்த ஒரு செயலையும்

செய்யத் துணிபவர்”

 

“அஸ்வத்தாமன்

உன்னுடைய

நண்பனாக இருக்கிறான்”

 

“நாளை

நடைபெறப் போகும்

பகடை விளையாட்டில்

அஸ்த்தாமன்

நம் பக்கம் தான்

இருக்கிறான்

என்பதை

துரோணர் உணர்ந்து

கொள்ளும்படிச்

செய்ய வேண்டும்”

 

“அஸ்வத்தாமன்

துரியோதனனின்

நண்பனாக இருக்கிறான்

கெளரவர்களுக்கு

ஆதரவாக இருக்கிறான்

பாண்டவர்களுக்கு

எதிராக இருக்கிறான்

பாண்டவர்களுக்கு

பகையாளியாக

இருக்கிறான்

பாண்டவர்களுக்கு

விரோதமாக இருக்கிறான்

நாளை போர்

என்று வந்து விட்டால்

அஸ்வத்தாமன்

கௌரவர்கள்

சார்பாகத் தான்

போரிடுவான்

துரியோதனனுக்காக

உயிரையே

கொடுப்பான் என்பதை

துரோணர்

அறியும் படிச்

செய்ய வேண்டும்”

 

“அப்படி செய்து

விட்டால்

துரோணர் தன்

மகன் எந்த பக்கம்

இருக்கிறானோ அந்த

பக்கத்திற்கு தான்

ஆதரவாக

இருக்க வேண்டிய

சூழ்நிலை

ஏற்பட்டு விடும்

அதாவது

கௌவர்கள்

பக்கம் தான்

இருந்தாக வேண்டும்

கௌரவர்கள் பக்கம்

இருந்து தான் போர்

புரிய வேண்டும்

துரியோதனனுக்கு

ஆதரவாக போர்

புரிய வேண்டும்”

 

“தன் மகனுக்கு

எதிராக நின்று

போர் புரிய முடியாது

கௌரவர்கள் பக்கம்

அஸ்வத்தாமன்

இருக்கும் போது

துரோணர் எப்படி

பாண்டவர்கள் பக்கம்

நின்று கொண்டு

தன் மகனுக்கு

எதிராக ஆயுதத்தை

எடுத்து சண்டையிட

முடியும்

துரோணரால்

சண்டையிட

முடியாது “

 

“துரோணருக்கு

மகன் பாசத்தை

காட்டி நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக

நடைபெறப் போகும்

நிகழ்விலும்

துரோணரால் ஒன்றும்

செய்ய முடியாமல்

அந்த அவையில்

அமர்ந்திருந்தார்

என்றால்

துரோணர் நம்

பக்கம் தான்

என்பதை நாம்

முடிவு செய்து

கொள்ளலாம்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////