March 31, 2019

5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

“போராளிகள்
தோற்பதில்லை
போராட்டங்கள் தான்
தோற்று இருக்கின்றன”
என்ற வரலாற்று உண்மை
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கைக்கு மிகத்
தெளிவாக பொருந்தும்

உலகில் எந்த ஒரு
இடத்திலும்
மக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து
விடப்பட்டாலோ
மக்களை இழிவாக
நினைத்து நடைமுறைக்கு
ஒவ்வாத செயல்கள்
அரங்கேற்றப் பட்டாலோ
மக்களை
அடிமைப்படுத்துவதற்குத்
தேவையான சதித்திட்டங்கள்
தீட்டப்பட்டாலோ
அங்கெல்லாம்
அநியாயங்களை தட்டிக்
கேட்பதற்கு உண்மையான
ஒரு போராளி அந்த
இடத்தில் உருவாகுகிறான்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களுக்கு
எதிராக - அந்த போராளி
பல்வேறு விதமான
போராட்டங்களை
முன்னிறுத்தி
நடத்துகிறான் - ஆனால்
பல போராட்ங்கள்
வெற்றி பெறாமல்
தோற்று விடுகின்றன

அந்த போராளி
சொல்லும் கருத்துக்கள்
உண்மையானவைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கின்றன - என்று
மக்கள் அவர்
பின்னால் அணிவகுத்து
நிற்கின்றனர்
அவரை முழுவதுமாக
நம்பி அவர் பின்னால்
மக்கள் செல்லத்
தயாராகி விட்டனர்

என்பதை உணர்ந்த
மக்களை அடிமைப்படுத்த
நினைக்கும் ஆதிக்க
வர்க்கம்- இந்த போராளி
உயிரோடு இருந்தால்
நமக்கு ஆபத்து என்று
பயந்து பல்வேறு
குற்றச்சாட்டுக்களை
அவர் மேல் சுமத்தி
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறது

மக்களுக்காக உண்மையாக
உழைக்கும் போராளிகளை
யாரும் விலை குடுத்து
வாங்க முடியாது
அதனால் அத்தகைய
போராளிகளை
கொன்று விடுகிறார்கள்

அந்தப் போராளியைக்
கொன்றாலும் - அவர்
சொல்லிச் சென்ற
கருத்துக்கள்  - அவர்
விட்டுச் சென்ற
செயல்கள் - அவர்
நடத்திய போராட்டங்கள்
ஆகியவற்றை மக்கள்
கொண்டு செல்வர்
மீண்டும் போராட்டங்களை
நடத்தத் துணிவர்

பல நூற்றாண்டுகள்
கடந்து அவரை நினைத்து
அவருடைய கருத்தைப்
பின்பற்றும் மக்கள்
அவரை நினைத்து
போற்றுவர்
அவர் முன்னெடுத்துச்
சென்ற போராட்டங்களை
நடத்த முற்படுவர்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களை எதிர்த்து
போராட்டம் நடத்திய
போராளியின் போரட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும் அவர்
கொல்லப்பட்ட பிறகும்
மக்கள் அவருடைய
கருத்தை பின்பற்றி
நடந்து அவர் பின்னால்
நடக்கிறார்கள் என்றால்
அந்த போராளி
தோற்காமல்
மக்கள் மனதில்
என்றும் இருந்து
கொண்டு இருக்கிறார்
என்று பொருள்

அதைப் போல் தான்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி மக்களை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
தன் முயற்சிகளை
நிறுத்த வேண்டும்

கிறிஸ்தவ மதம்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
சர்ச்சுகள்
பைபிள்
ஆகியவற்றில் சீர்திருத்தம்
கொண்டு வர வேண்டும
என்று போராடியதால்
கிறிஸ்தவ மதத்தினரால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

அவர் நடத்திய
போராட்டங்கள்
தோல்வியுற்றாலும்
அவர் பல நூற்றாண்டுகள்
கடந்தும் இன்னும் மக்கள்
மனதில் இருக்கிறார்

ஆம் ஜியார்டானோ
புருனோ என்ற போராளி
தோற்கவில்லை
அவர் நடத்திய போரட்டம்
மட்டுமே தோற்றது
என்பதை உணரும்போது
ஜியார்டானோ புருனோ
என்ற போராளியின்
போராட்ட வாழ்க்கை
நமக்கு புரிய
ஆரம்பிக்கும்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
நடத்திய போராட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
தோற்கவில்லை
என்பதற்கு அவரை
சிறையில் வைத்து
சித்திரவதை செய்து
மன்னிப்பு கேட்கச்
சொல்லியும் அவர்
மன்னிப்பு கேட்காமல்
இருந்ததே சாட்சி
என்பதை இந்த
வீடியோவின் மூலம்
தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////