August 04, 2019

HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019


               HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019

அன்பிற்கினியவர்களே,


“”””உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு””””

நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நாம் நண்பனுக்கு
செய்யும் உதவியை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : பிறர் துன்பம்
        போல் கருதி
        உதவி செய்வது

இரண்டு :நம்முடைய
         துன்பம் போல்
         கருதி உதவி
         செய்வது



நாம் அலுவலகத்தில்
வேலை செய்து
கொண்டு இருக்கிறோம்
நம் உறவினர்
ஒருவருக்கு மிகவும்
உடல் நிலை
சரியில்லை
அவரை மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறோம்
என்று நமக்கு
போன் வருகிறது
நாம் சரி
நான் வந்து பார்க்கிறேன்
என்று சொல்லி விட்டு
மிகவும் பொறுமையாக
வேகமாக இல்லாமல்
நிதானமாக வேலை
எல்லாம் முடித்து
விட்டு பொறுமையாக
இரவு சென்று
மருத்துவமனையில்
சேர்த்திருக்கும்
நமது உறவினரை
பார்த்து விட்டு
துன்பத்தை நீக்குவதற்கு
தேவையான நடவடிக்கைகளை
எடுத்து துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப் போல
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
நிதானமாகவும்
பொறுமையாகவும்
அலட்சியமாகவும் இருந்து
ஈடுபாடு இல்லாமல்
இருந்து நண்பனுக்கு
வரும் துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு நண்பனுடைய
துன்பத்தை நீக்குவது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்.

நமக்கு உடல்நிலை
சரியில்லை
என்று மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்கள்
நமக்கு நோய்
வந்து விட்டதே
இதை எப்படி போக்குவது
பணம் எப்படி திரட்டுவது
உதவிக்கு ஆட்களை
எப்படி அழைப்பது
அலுவலகத்திற்கு
விடுப்பு எப்படி எடுப்பது
என்று நமக்கு துன்பம்
வரும் போது நாம்
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாக இருந்து
முழு ஈடுபாட்டுடன்
இருந்து பல்வேறு
செயல்களைச்செய்து
நமக்கு வந்த துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப்போல்
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
அந்த துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழுஈடுபாட்டுடன்
இருந்து
செயல்களைச் செய்து
நண்பனுக்கு வரும்
துன்பத்தை நீக்குவது
நம்முடைய துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்

நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வதற்கு மனம்
இருந்தால் போதும்
ஆனால்
நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
நம்முடைய துன்பம்
போல் கருதி
உதவி செய்வதற்கு
அன்பும், கருணையும்
வேண்டும்

அன்பும், கருணையும்
யாருடைய உள்ளத்தில்
இருக்கிறதோ
அவரால் மட்டுமே
நண்பன் துன்பப்படும்போது
தன் துன்பம் போல் கருதி
உதவி செய்ய முடியும்

நாம் நான்கு நண்பர்களுடன்
பேசிக் கொண்டு
இருக்கிறோம்
அப்பொழுது
நம் உடலிலிருந்து உடை
நழுவினால் எப்படி கை
உடனே சென்று
அதை பிடித்து
நம்முடைய மானத்தை
காப்பாற்ற முயற்சி
செய்கிறதோ
அதைப்போல நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நமக்கு ஒரு துன்பம்
வரும் போது எப்படி
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும்
முழுஈடுபாட்டுன்
செயல்களைச் செய்து
அதை நீக்குவதற்கு
தேவையானநடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்கினோமோ
அதைப்போல
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
துன்பப்படுகிறான்
என்பதை கேள்விப்
படும்போது
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழு ஈடுபாட்டுடன்
செயல்களைச் செய்து
துன்பத்தை நீக்குவதற்கான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்க வேண்டும்
என்பதைத் தான்

“”””உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு”””””

என்ற திருக்குறள்
மூலம் திருவள்ளுவர்
விளக்குகிறார்.
  
----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்
-----------04-08-2019
///////////////////////////////////////////////////////////