March 14, 2015

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-காலைமாலை-பதிவு-71




இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-காலைமாலை-பதிவு-71


                 ”பதிவு எழுபத்தொன்றை விரித்துச் சொல்ல
                                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இயேசு கிறிஸ்து:


“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம்
தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.”

                                           ---------மத்தேயு - 13 : 24

“மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.”
                                        ---------மத்தேயு - 13 : 25

“பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது.”
                                          ---------மத்தேயு - 13 : 26

“வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே,
நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை
அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.”

                                           ---------மத்தேயு - 13 : 27

“அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது
வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிக்போடஉமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.”
                                             ---------மத்தேயு - 13 : 28

“அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள்
கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும்அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.”
                                             ---------மத்தேயு - 13 : 29

“அறுப்புக் காலத்தில் நான்அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி,அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”
                                                                                                                                                                                                                ---------மத்தேயு - 13 : 30

“அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பி விட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.”
                                            ---------மத்தேயு - 13 : 36


“அவர் பிரதியுத்தரமாக:  நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்:
                                              ---------மத்தேயு - 13 : 37

“நிலம் உலகம்;  நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள்
பொல்லாங்கனுடைய புத்திரர்;
                                               ---------மத்தேயு - 13 : 38

“அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.”
                                                ---------மத்தேயு - 13 : 39

“ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல,
இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.”
                                                 ---------மத்தேயு - 13 : 40

“மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்: அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
                                                  ---------மத்தேயு - 13 : 41

“அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே
அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”
                                                    ---------மத்தேயு - 13 : 42

“அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”
                                                    ---------மத்தேயு - 13 : 43



சமுதாயம் எந்த செயலைச்செய்தாலும்
இரண்டு விதமாக வழிகளைப் பின்பற்றுகிறது
ஒன்று : நேர்வழி
மற்றொன்று : குறுக்கு வழி

நேர்வழியில் செல்பவர்களை விட
குறுக்கு வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை தான் அதிகம்.

நேர்வழியில் சென்று காரியம்
சாதிப்பவர்களை விட,
குறுக்கு வழியில் சென்று காரியம்
சாதிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

திறமை இல்லாதவர்கள்
சொந்த உழைப்பில்
முன்னேற முடியாதவர்கள் ,
மற்றவர் திறமையோடு
போட்டி போட முடியாதவர்கள் ,
எப்படியாவது தன் திட்டத்தை
எதை பயன்படுத்தியாவது,
எதன் மூலமாகவாவது,
எதைக் கொடுத்தாவது,
யாரைக் கொடுத்தாவது,
யாரைக் கெடுத்தாவது,
யாரை  அழித்தாவது,
தன் திட்டத்தை
நிறைவேற்றிக் கொள்ள நினைப்பவர்கள்,
மற்றவர்கள் வாழ்வை அழித்தாவது
தன் வாழ்வை வாழ நினைப்பவர்கள்
தவறான வழியில் செல்பவர்களை
தன் ஆசையை நிறைவேற்ற பயன்படுத்துபவர்கள்,

தவறுகளை அச்சமில்லாமல்
செய்து கொண்டிருப்பவர்களை
தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்பவர்கள்,
செய்யும் தவறுகளை சமுதாயம்
சரி என்று ஒப்புக் கொள்ளும்
தவறுகளைக் கொண்டவர்களின்
உதவியோடு தொடர்ந்து
தவறுகளை துணிந்து செய்வது
என்று குறுக்கு வழியில் செல்பவர்கள்,
தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில்
செயல் புரிந்து வருகின்றனர்.

இதனால் நேர்வழியில் செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து
குறுக்கு வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேர் வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இதற்குக் காரணம்,
குறுக்கு வழியில் செல்பவர்களை
சுகபோகத்திலும், மகிழ்ச்சியிலும், கவலையற்றும்

இருப்பதைக் காணும் நேர்வழியில்
செல்லும் சிலர்
குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பதால் தான்
அவர்களைப் பின்பற்றுபவர்கள் இருப்பதால் தான்
குறுக்கு வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது ;
நேர் வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது ;
என்று நினைப்பது தவறு.

இரு மாறுபட்ட நிலைகள்
இரு மாறுபட்ட தன்மைகள்
என்றும் இருக்கும் எப்போதும் இருக்கும்.

உலகம் முழுவதும்
குறுக்கு வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை இருந்தாலும்
ஒரே ஒரு நபராவது கண்டிப்பாக நேர்வழியில்
செல்பவர் இருப்பார் என்பதை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுக்கு வழியில் செல்வதை
இச் சமுதாயம் பல்வேறு நிலைகளில்,
முக்கியமான நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை
நாம் அறிந்தோ
அல்லது
அறியாமலோ குறுக்கு வழியை பயன்படுத்தி வருகிறோம்.

சிலர் தெரிந்தே குறுக்கு வழியைப் பின்பற்றி
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

கல்வி என்று எடுத்துக் கொண்டால்
சமுதாயம் அதை
ஒன்று : நேர்வழியிலும் அணுகுகிறது ;
மற்றொன்று   : குறுக்கு வழியிலும் அணுகுகிறது ;
என்பதை சமுதாயத்தில்
உள்ள இரண்டு மாறுபட்ட பிரிவினரே
உணர்ந்து வைத்திருக்கின்றனர்
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு சில பள்ளிகளில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பாடங்கள்
பத்தாம் வகுப்பிலும்,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடங்கள்
பன்னிரண்டாம் வகுப்பிலும் எடுக்கப்படுகிறது.

அதன் மூலம் கிடைக்கும் மதிப்பெண்கள்
பெறும் மதிப்பெண்கள்
நேர்வழியில் எடுக்கப்படுபவை என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

அந்த அந்த வகுப்பிற்கான பாடங்களை
அந்த அந்த வகுப்பிலேயே படிப்பது என்பதும்
அதில் தேர்ச்சி பெறுவதும் - தான்
உண்மையான திறமை
இது தான் கல்வியை
நேர்வழியில் அணுகுவது - என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
பத்தாம் வகுப்பில் ஒரு வருடம் மட்டுமே படிக்காமல்,
பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு
ஆகிய இரண்டு வகுப்புகளில்
இரண்டு வருடங்கள் படிப்பதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை
ஒன்பதாம் வகுப்பில் படிக்காமல்
தவற விடுவதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
தவற விடுவதற்கு காரணமாக இருப்பதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
குற்றத்திற்கு துணை போவதும்
பெருங் குற்றம்.

ஒரு வருடம் பாடத்தை இரண்டு வருடங்கள்
படிப்பது என்பதே மிகப் பெரிய குற்றம் என்றால்,
அதில் ஒரு வருட பாடத்தை இழப்பது என்பது
எவ்வளவு பெரிய குற்றம்.

அதைப்போல,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு வருடம் மட்டும் படிக்காமல்,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை

பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு
ஆகிய இரண்டு வகுப்புகளில்
இரண்டு வருடங்கள் படிப்பதும்,

பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்காமல்
தவற விடுவதும்,
பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
தவற விடுவதற்கு காரணமாக இருப்பதும்,
பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
குற்றத்திற்கு துணை போவதும்
பெருங் குற்றம்

ஒரு வருடம் பாடத்தை இரண்டு வருடங்கள்
படிப்பது என்பதே மிகப் பெரிய குற்றம் என்றால்
அதில் ஒரு வருட பாடத்தை இழப்பது என்பது
எவ்வளவு பெரிய குற்றம்.

ஒரு வருட படிப்பை இரண்டு வருடங்கள் படிப்பது என்பது
ஒரு வருட படிப்பை தவற விடுவதும்,
ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குரிய
பாடங்களில் உள்ள
தகவல்கள் அறியாமல் போவதற்கும் ,
அறிவைப் பெற முடியாமல் போவதற்கும் ,
அறிவைப் பெறாமல் தவற விடுவதற்கும் ,
காரணமாகிறது.

வரிசையாக படித்து பெற வேண்டிய
அறிவைப் பெறாமல்
வரிசையைத் தாண்டி செல்வதால்
வரிசையாகப் பெற வேண்டிய
அறிவைத் தவற விடுகிறோம்.

வரிசையாக படிக்காமல்
தாவித் தாவிப் படித்து,
முழுமையான அறிவைப் பெறாமல் இருக்கும்
இத்தகைய குறை மதி கொண்டோர்
வேலை பெற்று வேலை செய்தால்
வேலை எப்படி சிறப்பாக இருக்கும்,
அரை குறையாத் தான் இருக்கும்.

ஒரு வருட படிப்பை
இரண்டு வருடங்கள் படிப்பது,
முறையற்ற செயல்

இதைத் தான்
குறுக்கு வழியின் மூலம் செல்வது என்பார்கள்.

ஒரு வருட பாடத்தை
ஒரு வருடம் படிப்பது நேர்வழி ;
ஒரு வருட பாடத்தை
இரண்டு ஆண்டுகள் படிப்பது குறுக்கு வழி ;

ஒரு வருட பாடத்தை
ஒரு வருடம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள்
உண்மையான உழைப்பாளிகள்,
திறமைசாலிகள்
அவர்கள் பயன்படுத்துவது நேர்வழி.

ஒரு வருட பாடத்தை
இரண்டு வருடங்கள்
படித்து தேர்ச்சி பெறுவது
என்பது
திறமையற்றவர்கள் ;
உழைத்து முன்னேற வேண்டும்
என்ற சிந்தனை இல்லாதவர்கள் ;
பயன்படுத்துவது குறுக்கு வழி .
பத்தாம் வகுப்பு பாடத்தை
ஒன்பதாம் வகுப்பிலேயே
சில பள்ளிகளில் எடுப்பது  எதற்கு?

ஒன்பதாம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும்
பத்தாம் வகுப்பு பாடத்தை பத்தாம் வகுப்பிலும்
ஆகிய இரண்டு வருடங்கள் எடுக்கலாமே ?
இரண்டு வருட பாடத்தை,
இரண்டு வருடங்கள் எடுக்கவில்லை எனில்,
எதற்கு ஒன்பதாம் வகுப்பு,
ஒன்பதாம் வகுப்பை எடுத்து விடலாமே
அதைப்போல,
பன்னிரண்டாம் வகுப்பை
பதினொன்றாம் வகுப்பிலேயே
சில பள்ளிகளில் பாடம் எடுப்பதற்கு
எதற்கு பதினொன்றாம் வகுப்பு
எடுத்து விடலாமே
பதினொன்றாம் வகுப்பை
என்கின்றனர் சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

சமுதாயத்தில் உள்ள
மற்றொரு பிரிவினர்
சமுதாயத்தில் நிலவும்
இத்தகைய
இரு வேறுபட்ட நிலைகளை ,
இரு மாறுபட்ட நிலைகளை ,
உணர்ந்து சிலர்
இத்தகைய தவறான நிலையை,
கல்வியில் காணப்படும் இத்தகைய
தவறான போக்கை கண்டு வேதனையுறும் சிலர்
நேர்வழி, குறுக்கு வழி என்று
இரு வேறுபட்ட நிலைகள் கல்வியில் இருக்கின்றது
என்று மனம் வேதனையுறுகின்றனர்.

ஒரு வருடம் படித்து மதிப்பெண்
பெறுபவர்களுடன்
இரண்டு வருடம் படித்து
மதிப்பெண் பெறுபவர்களை
ஒப்பீடு செய்வது என்பது தவறான செயல்.

ஒரு வகுப்பு பாடத்தை
ஒரு வருடம் படிப்பவர்கள் ;
ஒரு வகுப்பு பாடத்தை
இரண்டு வருடம் படிப்பவர்கள் ;
என்று இரு நிலைகளை
சமுதாயத்தில் உருவாக்கி வைத்து விட்டனர்.

ஒரு வகுப்பு பாடத்தை
இரண்டு வருடங்கள் படித்து ,
மதிப்பெண் பெற்று ,
உயர்நிலை அடைபவர்களை பார்க்கும்
ஒரு வகுப்பு பாடத்தை
ஒரு வருடம் படிப்பவர்கள்,
குறுக்கு வழியில் சென்றால் தான்
வாழ்வில் உயர்நிலை அடைய முடியும் என்ற
தவறான எண்ணம் கொண்டு
நேர் வழியில் செல்லாமல்
குறுக்கு வழியில் சென்று
ஒரு வருட பாடத்தை
இரண்டு வருடங்கள் படிக்கின்றனர்.

ஒரு வருட வகுப்பு பாடத்தை
இரண்டு வருடங்கள் படித்து
தேர்ச்சி பெறுவது என்பது
திறமையற்றவர்கள் செய்யும் செயலல்லவா
குறுக்கு வழியில் செல்பவர்களின்
செயல் அல்லவா
என்கின்றனர்
மனம் வேதனையுறும் சில உண்மையான
சமூக ஆர்வலர்கள்.

சமுதாயத்தில் இப்படி
இரு மாறுபட்ட நிலைகள்
இருக்கும் போது
கல்வி எப்படி உயர்நிலை அடைந்திருக்கிறது
என்று சொல்ல முடியும் ;
தாழ்ந்து போய் தானே இருக்கிறது என்று
தான் சொல்ல முடியும் ;
தாழந்து போய் தானே இருக்கிறது
என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு
குறுக்கு வழியில் செல்ல
வழிகாட்டுபவர்கள் இருக்கும் போது,
குறுக்கு வழியில்
செல்பவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கத்தானே செய்யும்
என்கின்றனர் உண்மையை உணர்ந்திருப்பவர்கள்.

எனவே,
கல்வியில் இரு மாறுபட்ட நிலைகளாக
நேர்வழி, குறுக்கு வழி
என்ற இரண்டு நிலைகள்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சமுதாயத்தில் எந்தத் துறையை எடுத்தாலும்
இந்த இரண்டு நிலைகளும்
எல்லா நிலைகளிலும்
எல்லாத் துறைகளிலும்
பயன் படுத்தப்பட்டு வருகிறது
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இரண்டு மாறுபட்ட நிலைகள்
எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும்
தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு
வந்து கொண்டு தான் இருக்கும்.

இரண்டு மாறுபட்ட நிலைகளை
மாற்ற முடியாது
இரண்டுவழிகளில் ஒரு வழி
மட்டும் இருக்கும்
மற்ற வழி இருக்காது
என்று சொல்ல முடியாது.

இரண்டு மாறுபட்ட நிலைகள் என்பது,
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி
என்றும் இரு மாறுபட்ட நிலைகள்
இருந்து கொண்டு தான் இருக்கும்.
நேர்வழி, குறுக்கு வழி என்ற இருவழிகள்
எல்லா நிலைகளிலும்,
எல்லா தொழில்களிலும்,
எல்லா செயல்களிலும்,
தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு
வந்து கொண்டு தான் இருக்கும்.

சில வெட்ட வெளிச்சமாக தெரியும்;
சில வெட்டவெளிச்சமாக தெரியாது;

தெளிவாக தெரிந்து கொள்ள
வேண்டுமானால்.

சினிமாத் துறையை எடுத்துக் கொள்ளலாம்
சினிமாத் துறையில்
நேர்வழி, குறுக்கு வழி - ஆகிய
இரண்டு வழிகள் பயன் படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்

சினிமாத் துறையில்
இரண்டு வழிகளில் நுழையலாம்
அதனை இரண்டு வேறுபட்ட
பெயர்களில் அழைக்கலாம்
நேர்வழி, குறுக்கு வழி
என்று சொல்லலாம்.

யாருடைய உதவியும் இல்லாமல்,
யாருடைய ஆதரவும் இல்லாமல்,
யாருடைய சிபாரிசும் இல்லாமல்,
யாருடைய தயவும் இல்லாமல்,
யாருடைய அரவணைப்பும் இல்லாமல்,
யாருடைய பின்புலமும் இல்லாமல்,
யாருடைய வாரிசாகவும் இல்லாமல்,
யாருடைய தொடர்பும் இல்லாமல்,
சொந்தத் திறமையால் ,
சொந்த உழைப்பால்,
பல கம்பெனி ஏறி இறங்கி
பல ஆட்களைத் தேடிச் சென்று
ஆதரவு கேட்டு
வாய்ப்பு கேட்டு,
அசிங்கப்பட்டு,
அவமானப்பட்டு,
இருக்க இடம் இல்லாமல்
பசித்த வயிற்றுக்கு உணவில்லாமல்,
தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல்,
நாயாய் அலைந்து,
பேயாய்த் திரிந்து,
சொந்தத் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பு பெற்று,
அதனைப் பயன்படுத்தி
தன் உழைப்பால் முன்னேறி
உயர் நிலைகளை அடைந்து
வெற்றி பல பெற்று,
தடைகளைக் கடந்து
தருக்கர்களைக் களைந்து,
துரோகிகளை வேரறுத்து,
எதிரிகளைப் பந்தாடி,
வாலாட்டிகளை உதறித் தள்ளி,
கை பிடிப்போரையும்,
கால் பிடிப்போரையும்,
தள்ளி வைத்து
புகழ் பாடிகளை பக்கத்தில் வைக்காமல்
உதறித் தள்ளி,
நல்லவரையும், கெட்டவரையும்
பேதம் பிரித்து
அறிந்துகொள்ளும் திறமையை வளர்த்து,
உயர் நிலை அடைந்தவர்களை
நேர்வழியை தேர்ந்தேடுத்தவர்கள் என்று சொல்லலாம்.

சினிமாத் துறையில்
ஏற்கனவே
இருப்பவர்களுடைய ஆதரவைப் பெற்றோ
அவர்களுடைய தயவால் வாய்ப்பைப் பெற்றோ,
தந்தை - மகன்
என்ற உறவு முறையிலோ;
அண்ணன் - தம்பி
என்ற பாச முறையிலோ ;
மாமன் - மச்சான் என்ற
சொந்த முறையிலோ ;
உறவுக்காரர் என்ற முறையிலோ ;

வாய்ப்பு பெற்று
எந்தவித தொந்தரவும் இல்லாமல்,
எந்தவித இழப்பும் இல்லாமல்,
எந்தவித துயரமும் இல்லாமல்,
எந்தவித அவமானமும் இல்லாமல்,
எந்தவித தொந்தரவும் இல்லாமல்,
எந்தவித வருத்தமும் இல்லாமல்,
வாய்ப்பைப் பெற்று
அதன் மூலம் ஏற்கனவே உள்ள
அறிமுகமான நபர்களிடம் தானும் அறிமுகமாகி,
ஒன்றுக்குள் ஒன்றாகி,
உயர்ந்த நிலையில் இருக்கிறாரே அவருக்கு
வேண்டப்பட்டவர் இவர் என்ற
அடைமொழியுடன்
அவருக்கு தெரிந்தவர்  என்ற சிபாரிசுடன் இருப்பதால்,

பலருடைய தொல்லையும் இல்லாமல்,
பலருடைய இடையூறும் இல்லாமல்,
யாருடைய தொந்தரவும் இல்லாமல்,
மரியாதையுடன் நடத்தப்பட்டு,
சந்தோஷக் களிப்பில்;
மகிழ்வின் உச்சத்தில்;
மரியாதையின் சிம்மாசனத்தில்;
இன்பத்தின் எழிலில் நனைந்து
தொடர்ந்து பல தோல்விகளை
படம் கண்டாலும்,
அவருடைய வாரிசு
அவருக்கு இவர் தெரிந்தவர்
அவருடைய உறவினர் இவர் என்று,
அவருடைய சிபாரிசில் வந்தவர்
அவருடைய அதரவைப் பெற்றவர்
என்ற அடைமொழியுடன்
படங்கள்
பல தோல்விகள் கண்டாலும்,
ஊடகங்கள் பலவும்
வாரிசு என்று புகழ் பாடி,
துதி பாடி,
ஒன்றும் இல்லாததை இருப்பது போல் காட்டி,
அவரை உயர்நிலைக்கு
கொண்டு வர அரும்பாடுபட்டு
அவரை தள்ளி நகர்த்திக் கொண்டு வந்து,
திறமை இருப்பவர் ;
அறிவில் சிறந்தவர்;
உழைப்பால் உயர்ந்தவர்;
என்ற அடைமொழிகளை அளித்து
உயர்நிலைக்கு
கொண்டு வர முயற்சி செய்வதை
குறுக்கு வழியில் வருவது
என்று சொல்லலாம்.

நேர்வழியில் வந்தாலும்
குறுக்கு வழியில் வந்தாலும்
திறமை இல்லாமல் மேலே வர முடியாது.

திறமை இருந்தால் மட்டுமே
இரண்டு வழிகளில்
எந்தவழியில் வந்தாலும்
வெற்றி பெற முடியும்.

நேர்மையான வழி என்றுமே
உயர் நிலைக்குத் தான்கொண்டு செல்லும் ;
தாழ்நிலைக்கு கொண்டு செல்லாது ;

உயர்வானவர்களுடன் நட்பு கொண்டிருந்தால் மட்டுமே
உயர்வானவவைகளை சிந்திக்க முடியும் ;
தாழ்வான எண்ணம் கொண்ட
சிந்தனை வயப்பட்டவர்களிடம்
நட்பு கொண்டிருந்தால்
தாழ்வானவைகளையே சிந்திக்க முடியும் ;

இயேசு வேறொரு உவமையை
அவர்களுக்கு சொன்னார்
பரலோக ராஜ்யம் தனது நிலத்தில்
நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு
ஒப்பாயிருக்கிறது என்றார்.

வீட்டெஜமான் தன்னுடைய நிலத்தில்
கோதுமைகளை விதைத்திருந்தான்
கோதுமை வளர்ந்து நன்றாக
செடியான நிலையில்-அதில்
களைகளும் வளர்ந்து விட்டன.

இதனால் அவனுடைய வேலையாட்கள்
அவனிடத்தில் வந்து
கோதுமைகளுடன் களைகளும்
வளர்ந்து இருக்கின்றன
களைகளை நாங்கள்
பிடுங்கிப் போடவா என்றார்கள்.
வீட்டெஜமான் அதற்கு வேண்டாம் என்றார்
களைகளை பிடுங்கும் போது
கோதுமையையும் வேரோடு
பிடுங்க வேண்டி வரும்
கோதுமைக்கும் பாதிப்பு வரும்
கோதுமையை நன்றாக வளர விட்டு
பிறகு களைகளை பிடுங்க வேண்டும்.

கோதுமை வளராமல் களைகளை
பிடுங்கினால் கோதுமைக்கு பாதிப்பு ஏற்படும்.

கோதுமை வளரும் மட்டும்
காத்திருப்போம் என்றான் வீட்டெஜமான்.

கோதுமை நன்றாக வளர்ந்து
அறுப்புக்கு தயாரான நிலையில்
முதலாவது களைகளை பிடுங்கி
அவைகளைச் சுட்டெரித்து விட்டால்
கோதுமையை எந்தவித சேதாரமின்றி அறுக்க முடியும்.

அறுத்து என் களஞ்சியத்தில்
சேர்ப்பேன் என்று சொன்னான்.
கடவுள் எப்போதும்
மனிதனை நல்ல எண்ணங்களுடன் தான் படைக்கிறான்
ஆனால் அவன் இவ்வுலக வாழ்க்கையில் தான்
நலமாக வாழ வேண்டும் என்று
பல்வேறுபட்ட தகாத செயல்களைச் செய்து
பிறரை அழித்து,
பிறர் சந்தோஷங்களை அழித்து
பிறர் நலன்களை அழித்து,
பிறர் உறவுகளை அழித்து,
பிறர் முன்னேற்றங்களை அழித்து,
பிறர் வாழ்வை அழித்து,
தான் வாழ
தன் குடும்பம் வாழ
பல்வேறுபட்ட தகாத செயல்களைச் செய்து
பாவத்தில் மாட்டிக் கொள்கிறான்.

அதனால் அவனுடைய மனம்
இரண்டாக பிளவு பட்டு விட்டது.

நேர் வழி, குறுக்கு வழி
என்ற இரண்டு வழிகளை
தேர்ந்தெடுக்கிறான்.

உண்மையாக இருப்பவன்
நேர்வழியையும்
தவறான சிந்தனை உடையவன்
குறுக்கு வழியையும்
தேர்ந்தெடுக்கிறான்.

ஒருவனுடைய மனதில்
நல்ல எண்ணமும்
தவறான எண்ணமும் இருக்கும்.

அதனால்
அவன் நேர்வழியையும்
குறுக்கு வழியையும்
சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி
தேர்ந்தெடுக்க தள்ளப்படுகிறான்.

மனிதனில்
நல்ல எண்ணம் அதிகமாக இருந்து
கெட்ட எண்ணம் குறைவாக இருக்கும் போது
நேர்வழியையும்,

நல்ல எண்ணம் குறைவாக இருந்து
கெட்டஎண்ணம் அதிகமாக இருந்தால்
குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்கிறான்.

பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால் கவர்ச்சி,
உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்
ஆகிய அறுகுணங்களை
அதிகமாக கொண்டவன்
கண்டிப்பாக குறுக்கு வழியைத் தான் தேர்ந்தெடுப்பான்.

இந்த அறுவகை குணங்களும்
இல்லாதவன் தான்
நேர்வழியைத் தேர்ந்தெடுப்பான்.

ஒவ்வொரு மனிதனுள்ளும்
நல்ல எண்ணமும்
கெட்ட எண்ணமும்
ஆகிய
இரண்டு எண்ணங்களும் கொண்டு இருப்பதால்
அவனுள் நேர் வழியும் இருக்கிறது ;
குறுக்கு வழியும் இருக்கிறது ;

எண்ணங்களின் மாற்றத்திற்கு ஏற்ப
எண்ணங்களின் தாழ்வுக் கேற்ப
எந்த எண்ணம் உயர்வாக இருக்கிறதோ
அந்த எண்ணத்திற்கேற்ப
நேர் வழியும்,
குறுக்கு வழியும்
மாறுபடுகிறது.

நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை
அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது.

ஒன்றை எடுக்க வேண்டுமானால்
அதை முற்றிலுமாக அழிக்க வேண்டும்
அல்லது
அதை எரித்து விட வேண்டும்
எரித்துவிட்டால்
எந்த ஒன்றும் மீண்டும் வளராது
வேரோடும் வேரடி
மண்ணோடும் அழிக்க வேண்டும்.


நல்ல எண்ணங்களை
பெருக்கிக் கொண்டே வந்தோமேயானால்
தீய எண்ணங்கள்
குறைந்துகொண்டே வரும்.

நல்லது வளர வளர
கெட்டது குறைந்து கொண்டே வரும்.
நல்லவற்றை வளரவிட, வளரவிட
கெட்டது குறைந்துகொண்டே வரும்.
குறைந்த கெட்ட எண்ணங்களை அழிப்பது எளிது.

நல்ல எண்ணங்களுடன் கலந்திருக்கும்
கெட்ட எண்ணங்களை அழிக்க
நாம் முற்படுவோமேயாகில்
கெட்ட எண்ணங்கள் மேலும்
மேலும் பலம் பெறும்.
பலம் பெற்ற கெட்ட எண்ணங்களை
அழிப்பது கடினம்

கெட்ட எண்ணங்கள் மேலும் வளர வளர-அது
நல்ல எண்ணங்களை அழித்து விடும்.

கெட்ட எண்ணங்கள்
நல்ல எண்ணங்களை
அழித்து விடும்.
எனவே,
நல்ல எண்ணங்களை வளர விட்டோமேயானால்,
நல்ல எண்ணங்களை அதிகப்படுத்தினோமேயாகில்,
நல்ல எண்ணங்களை பெருக விட்டோமேயாகில்,
கெட்ட எண்ணங்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.

நல்ல எண்ணங்கள் அதிகரித்தால் மட்டுமே
கெட்ட எண்ணங்கள் குறையும்.

கெட்ட எண்ணங்கள் அழிய வேண்டுமானால்
நல்ல எண்ணங்கள் வளர வேண்டும்.

அதனால் தான் இயேசு,
கெட்டவைகளை அழிக்க வேண்டுமானால்
நல்லவைகளை வளர்க்க வேண்டும் என்றார்.

நல்லவைகள் வளர்ந்து விட்டால்
கெட்டவைகளை

வேரோடும் வேரடி மண்ணோடும்
பிடுங்கி எரித்துவிடலாம் என்கிறார்
இயேசு

அதனால் தான்,
கோதுமையை வளர விடுங்கள்
கோதுமை வளரட்டும்
கோதுமை வளரட்டும்
கோதுமையை அறுக்கும் காலம் வரும் போது
முதலில் களைகளைப் பிடுங்கி
சுட்டெரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்.

பிறகு கோதுமையை எந்தவித
இடையூறும் இன்றி
எந்த வித சேதாரமுமின்றி பிடுங்கி
களஞ்சியத்தில் சேர்க்கலாம் என்கிறார்.

கெட்டதை அழிக்க வேண்டுமானால்
நல்லதை வளர விட வேண்டும்
நல்லது வளர்ந்தால் மட்டுமே
கெட்டதை அழிக்க முடியும்

நல்லது வளராமல்
கெட்டதை அழிக்க முடியாது என்கிறார்.

அப்பொழுது இயேசு
ஜனங்களை அனுப்பி விட்டு வீட்டுக்குப்போனார்.

அவருடைய சீஷர்கள்
அவரிடத்தில் வந்து
நிலத்தின் களைகளைப்
பற்றிய உவமையை
எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
என்று கேட்டார்கள்.

ஆண்டவர்
இந்த உலகத்தில்
அனைவரையும் நல்லவர்களாகத்தான் படைக்கிறான்
ஆனால் சத்துரு அவர்கள் உள்ளத்தில்
தீயவைகளை விதைத்து
கெட்டவர்களாக்குகிறான்.
ஆண்டவரை உணர்ந்தவர்கள்
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்கள்
சத்துருவின் செயல்களுக்கும்
அவனது ஆசைகளுக்கும்
இணங்காமல் இருப்பதால்
உண்மையாக இருக்கிறார்கள்
அதனால்,
நல்லவனாக இருக்கிறார்கள்.

நல்லவர்கள் கோதுமைகள் ;
கெட்டவர்கள் களைகள் ;
இந்த உலகம் நிலம்.

கெட்டவர்கள் அழிய வேண்டுமானால்
நல்லவர்கள் அதிக அளவில்
வளர வேண்டும்
நல்லவர்கள் அதிக அளவில்
உருவாக வேண்டும்
அப்படி உருவாகவில்லை என்றால்
கெட்டவர்கள் அட்டூழியம் தான் அதிகரிக்கும்
கெட்டவர்களின் செயல்கள் தான் அதிகரிக்கும்

கெட்டவர்களை அழிப்பதன் மூலம்
கெட்டவர்களின் பலம்தான் கூடும்
எனவே,
ஆண்டவரை உணர்ந்து
ஆண்டவரை ஏற்றுக் கொள்வதன் மூலம்
சாத்தானின் பிடியிலிருந்து தப்பிக்கலாம்.
சாத்தானின் ஆசைக்கு
இணங்காமல் இருக்கலாம்
சாத்தான் காட்டிய பாதையில்
போகாமல் இருக்கலாம்.

இந்த உலகத்தில்
நல்லவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்க, அதிகரிக்க
கெட்டவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரை
ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்க, அதிகரிக்க
சத்துருவின் பிடியில்
இருப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரின் ராஜ்யம் வரும்போது
நல்லவர்கள் வளம்பெறுவர்
கெட்டவர்கள் அழிந்து போவர்.

களைகளை எரித்து விட்டால் எப்படி
கோதுமைகளை களஞ்சியத்தில்
சேர்க்க முடியுமோ?

அதைப்போல,
மனுஷகுமாரன் தமது
தூதர்களை அனுப்பி
இடறல் செய்பவர்களையும்
அக்கிரமஞ் செய்கிறவர்களையும்
அநியாயம் பண்ணுகிறவர்களையும்,
சகலவிதமான இடறல்களை செய்கிறவர்களையும்,
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்
அங்கே அழுகையும் கண்ணீரும் தான் இருக்கும்
அப்பொழுது நீதி மான்கள்
நல்லவர்கள்,
நல்ல எண்ணம் கொண்டவர்கள்,
நல்ல வழியைத் தேர்ந்தெடுப்பவர்கள்,
நேர்வழியைப் பின்பற்றுபவர்கள்,

பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போல
பிரகாசிப்பார்கள்.
இதனை அறிந்து கொள்ள
விரும்புபவன் அறிந்து
கொள்ளட்டும் என்றார்
இயேசு.

கெட்டவர்கள் அழிய வேண்டும் என்றால்
நல்லவர்கள் எண்ணிக்கை வளர வேண்டும்
நல்லவர்கள் உருவாக வேண்டுமென்றால்
ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்டவரை
ஏற்றுக் கொள்ளப்படுபவர்களால் மட்டுமே
நல்லவர்களாக முடியும்
என்றும்
ஆண்டவரால்
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே
நல்லவர்களாக
இருக்க முடியும் என்றும் விளக்குகிறார்
இயேசு.



சிவவாக்கியர்
“”””””காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
    காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
    காலமே யெழுந்நீருந்து கண்கள் மூன்றி லொன்றினால்
    மூலமே நினைந்திராகில் முத்தசித்தி யாகுமே””””””””

---------சிவவாக்கியர்-பெரிய ஞானக் கோவை

புதுமை என்ற சொல்லை
நாம் பல்வேறு காரணங்களுக்காக
பயன் படுத்தி வருகிறோம்
புதுமை என்ற சொல்லை
நாம் புரட்சியின் பிரதிபலிப்பாகப் பார்க்கிறோம்.

ஏதோ ஒன்று சாதிக்கப்பட்டு
விட்டதாக நினைத்து கொண்டாடுகிறோம்
மாறுபட்ட ஒரு நிகழ்வு ;
காணாத ஒரு நிகழ்வு ;
அறியாத ஒரு நிகழ்வு ;
பாராத ஒரு நிகழ்வு ;
நடந்ததாக நினைத்து புதுமையைக் கொண்டாடுகிறோம்
புரட்சியைப் படைத்து படைத்து விட்டதாக
பெருமை கொள்கிறோம்

புதுமை என்றால்
என்ன என்று தெரியாதவர்கள் ;
சரியாக அறியாதவர்கள் ;
உண்மையின் உண்மை நிலை உணராதவர்கள் ;
சிந்தனைவாதிகள் என்று தங்களை தாங்களே
சொல்லிக் கொள்பவர்கள் ;
பகுத்தறிவாதிகள் என்று
தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் ;
விஞ்ஞானத்தின் தலை சிறந்த அறிவாளிகள் - என்று
தங்களை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் ;
சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும்
சமூக சீர்திருத்தவாதிகள் என்று தங்களை
பெருமைப் படுத்திக்கொள்பவர்கள்;
என்று
பல்வேறு நிலையில் உள்ளவர்கள்
பல்வேறு தன்மைகளைக் கொண்டவர்கள்
புதுமையை தாங்கள் தான்
கண்டு பிடித்ததாகவும்

புதுமை என்ற சொல்லே தாங்கள் தான்
அடித்தளம் இட்டது போலவும்
புதுமையை படைப்பதின் மூலம்
நாகரிகம் வளர்ச்சி அடையும் என்றும்
புதிய உலகை படைக்க முடியும் என்றும்
இன்றைய உலகிற்கு அனைத்து துறைகளிலும்
புதுமை தேவை என்றும்
புதுமையைப் பற்றி புகழும் அதே நேரத்தில்
பழமையை இகழ்கின்றனர்.

புதுமையின் மகத்துவம் பற்றி
புரியாமல் பிதற்றுகின்றனர் ;

பழமையை எள்ளி நகையாடுகின்றனர் ;
பழமையினுள் உள்ளே மறைந்திருக்கும் உண்மையை
உணராமல் பிதற்றுகின்றனர் ;

பழமையின் மகத்துவம் புரியாமல் ,
பழமையின் மறைபொருள் தெரியாமல் ,
பழமையின் உண்மைத் தன்மை விளங்காமல்
பழமையை மூட நம்பிக்கையில்
குறியீடாகப் பார்க்கின்றனர்.

பழமையைப் புரிந்துகொள்ளாதவர்களின்
தேவையற்ற வார்த்தைகளால்
பழமையின் மகத்துவம் சமுதாயத்திற்கு புரியாமல் போகிறது.

பழமையை எதிர்ப்பதன் மூலம் தங்களை
புதுமையின் நாயகர்களாகவும்
சமூக சீர்திருத்தத்தின் தந்தையாகவும்
பழமையை எதிர்க்கும் தன்மானச் சிங்கமாகவும்
மூட நம்பிக்கையை எதிர்க்க வந்த
முழு முதற் அறிவாளியாகவும்
தங்களை இந்த சமுதாயத்தில் காட்டிக் கொள்ளவும்
தங்களை முன்னிலைப் படுத்தி
ஆதாயம் தேடிக் கொள்ளவும்
முயற்சி செய்துவருகின்றனர்.

பழமையின் உண்மை உரு தெரியாமல்
பழமையை இகழ்கின்றனர்.

புதுமை என்ற சொல் எதைக் குறிக்கிறது
எந்த விளக்கத்தைக் குறிக்கிறது

எந்த பொருளை விளக்க வருகிறது என்று
யாருக்கும் தெரிவதில்லை.

புதுமை என்ற சொல்லை நாம்
பழமையின் மாறுபாடு என்று சொல்லலாம்;
பழமையின் முன்னேற்றம் என்று சொல்லலாம்;

பழமையிலிருந்து புதுமை பிறக்க முடியும்
பழமை தனித்து இயங்க முடியும்
புதுமை தனித்து இயங்க முடியாது
பழமையின் வளர்ச்சியியே புதுமை.

புதுமை என்ற ஒன்று தனியாக இல்லை
பழமையின் வெளிப்பாடே புதுமை
பழமை என்பது கடல் என்றால்
புதுமை என்பது அலை
கடல் இல்லை என்றால் அலை இல்லை.

கடல் என்பது பழமை ;
அலை என்பது புதுமை ;


பழமையிலிருந்து புதுமை பிறக்கிறது
நேற்றைய புதுமை ; இன்றைய பழமை
இன்றைய புதுமை ; நாளைய பழமை
பழமைக்கும் புதுமைக்கும் உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
பழமைக்கும், புதுமைக்கும் உள்ள வேறுபாட்டையும்
பழமையில் உள்ள உண்மைகளையும்
புதுமையில் உள்ள வேறுபாடுகளையும்
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
பழமையின் பெருமையினை
உணர முடியும்

பழமை புதுமை இரண்டும்
இரண்டு வேறுபட்ட காலநிலைகளைத் தன்னுள் கொண்டது.

மாறுபட்ட இரண்டு காலங்களில் நடக்கும்
இரண்டு வேறுவிதமாக மாறுபட்ட நிகழ்வுகள்
பழமை, புதுமை என்ற
இரு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது.

காலங்கள் பற்றி தெரிந்தவர்கள்
காலத்தைப் பற்றி உணர்ந்தவர்களால் மட்டுமே
பழமைக்கும், புதுமைக்கும்
உள்ள வேறுபாட்டை  உணர முடியும்.

காலத்தை புரிந்து கொள்வதற்காக
காலத்தை மூன்று பிரிவுகளாக
பிரித்து வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள் ;
காலத்தை
இறந்த காலம் என்றும்,
நிகழ் காலம் என்றும்,
எதிர்காலம் என்றும்
மூன்று நிலைகளில் பிரித்து வைத்துள்ளனர்.

நடந்து முடிந்தவைகளை
இறந்த காலம் என்றும்
நடந்து கொண்டிருப்பவைகளை
நிகழ்காலம் என்றும்
நடக்க இருப்பவைகளை
எதிர்காலம் என்றும்
ஒன்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக
மூன்று நிலைகளில்
மூன்று காலங்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர்
பழமையை இறந்த காலத்துடனும்
புதுமையை நிகழ்காலத்துடனும்
எதிர்காலத்துடனும் தொடர்பு படுத்தி வைத்திருந்தனர்

பழமையை இறந்த காலத்துடனும்
புதுமையை நிகழ் காலத்துடனும்
தொடர்பு படுத்தி வைத்திருக்கின்றனர்

மூன்றாக இருந்த காலம்
பழமை புதுமை என்ற நிலைகளில்
பழமை மற்றும் புதுமையை
இறந்த காலம்  என்றும்
நிகழ்காலம் என்றும்
என்ற இரண்டு காலங்களாக
பிரித்துவைத்திருக்கின்றனர்

மூன்று காலமாக இருந்தது
இரண்டு காலமாக மாறி விட்டது.

மூன்று காலமாக இருந்தது
இரண்டு காலமாக பழமைக்கும், புதுமைக்கும்
உதாரணமாக மாற்றி வைத்துவிட்டனர்
காலங்களை தாங்கள் புரிந்து கொள்வதற்காகவும்;
ஒரு நிகழ்வை வேறு
ஒரு நிகழ்வுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதற்கும்;
ஒரு நிகழ்வுக்கும், மற்றொரு நிகழ்வுக்கும்
உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்வதற்கும்
காலம் என்பது
பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றை புரிந்துகொள்வதற்காக காலத்தை
மூன்றாக பிரித்த நாம்
பழமை, புதுமை என்று வரும்போது
இரண்டாக பிரித்திருக்கும் நாம்
நாம் காலம் என்பது மாறாதது
என்பதை உணர்ந்து கொள்ளும் போது
அறிவு விளக்கம் பெறுகிறது.

காலத்தைப் பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டுமானால்
ஒரு உதாரணத்தை நாம்
புரிந்துகொள்ள வேண்டியது
அவசியமாகும்.
நாம் ஓடும் ஒரு ஆற்றின் முன் நிற்கிறோம்
நம் வலது புறத்தில் இருந்து தண்ணீரானது
நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது
அதை எதிர்காலம் என்றும்,
நம் முன் அந்த ஆற்றின் தண்ணீர் வரும் போது
நிகழ் காலம் என்றும்,
ஆற்றின் தண்ணீரானது நம்மைக் கடந்து
நமக்கு இடது புறமாக செல்லும் போது
இறந்த காலம் என்றும்
மூன்று நிலைகளாக ஆற்றைப் பிரித்து
மூன்று காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

ஆறு ஒன்று தான்
தண்ணீர் அது இயங்கும் விதத்தைப் பொறுத்து
ஆற்றின் தண்ணீரை மூன்று காலங்களுடன்
இணைத்து ஒப்பிடுகிறோம்.

இதே நாம் சற்று வலது புறம் நின்றால் காலம் மாறும்
ஆறும் ஒன்று தான்
தண்ணீரும் ஒன்று தான்
ஆறில் ஓடும் தண்ணீரும் ஒன்று தான்
அது இயக்கத்தைப் பொறுத்தும்
நகரும் இடங்களை
வேறுபாட்டை பொறுத்தும்
காலமானது மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இன்னும் நன்றாக ஆற்றை உற்று நோக்கினால்
காலம் இரண்டு மட்டுமே இருப்பதை உணராலாம்
இறந்த காலம்
எதிர் காலம்
இருப்பதை உணரலாம்

நம் வலது புறத்தில் உள்ள
ஆற்றின் தண்ணீர் எதிர் காலம்
என்றும்
இடது பக்க ஆற்றின் ஓட்டத்தை
இறந்த காலம் என்றும் கூறலாம்.

நம் முன் நிற்கும் ஆற்றின் ஓட்டம்
நிகழ்காலம் இல்லை.
நிகழ்காலம் அங்கு இல்லை
எதிர்காலம் இறந்தகாலமாக
மாறுபாடு அடைகிறது.

எதிர்காலம் நிகழ்காலமாக மாறாமல்
எதிர்காலம் நேரடியாக இறந்த காலமாக மாற்றமடைகிறது

நிகழ்காலம் ஒன்று இருக்கும் போது
எதிர்காலம் , இறந்த காலம்
என்ற காலங்கள் இருப்பதில்லை ;
இறந்த காலம், எதிர் காலம் இருக்கும் போது
நிகழ் காலம் இருப்பதில்லை ;
நிகழ்காலத்தில் இருப்பவனால் மட்டுமே
காலத்தை உணர முடியும்.

காலத்தை உணர வேண்டுமானால்
நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் ;
நிகழ் காலத்தில் இருப்பவனால் மட்டுமே
காலத்தை உணர முடியும் ;

காலத்தை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால்,
பழமைக்கும், புதுமைக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
கொள்ள வேண்டுமென்றால் ,
சில உதாரணங்களை
நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
பழமையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால்
சினிமாவில் உள்ள இருந்த மூன்று தமிழ் பிரம்மாக்களை
நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழர்கள் தமிழை இயல், இசை, நாடகம்
என்று மூன்று பிரிவுகளாக பிரித்துவைத்திருக்கின்றனர்
இயல், இசை, நாடகம் இந்தமூன்றின் மூலம்
இறைவனை அடையலாம் என்பதை உணர்ந்தே
நம் முன்னோர்கள்
தமிழை மூன்றாகப் பிரித்து வைத்துள்ளனர்.

இதனை இப்படியும் சொல்லலாம்
இயல், இசை, நாடகம்என்ற முத்தமிழை
தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற மூன்றுடன் தொடர்பு ஏற்படுத்தலாம்.

இயல் மூலம் தூல உடலை தொடலாம் ;
இசை மூலம் சூக்கும உடலை உயிரை தொடலாம் ;
நாடகம் மூலம் காரண உடலை இறைவனை தொடலாம் ;

முத்தமிழ் மூன்று உடலுடன் தொடர்புடையது
முத்தமிழ் மூலம் இறைவனை அடையலாம்
என்பதை
உணர்ந்தே தமிழர்கள்
தமிழை மூன்று தமிழாக பிரித்து வைத்துள்ளனர்.

இயலுக்கு கவியரசர் கண்ணதாசனை சொல்லாம்
இந்த உலகத்திலேயே கண்ணதாசனைப் போல
ஒரு கவிஞன் பிறந்ததும் இல்லை ;
இனி பிறக்கப் போவதும் இல்லை;
கண்ணதாசனுக்கு ஒப்பாரும் இல்லை ;
கண்ணதாசனுக்கு மிக்காரும் இல்லை ;
கண்ணதாசனுக்கு இணையான கவிஞர்
இந்த  உலகத்திலேயே இல்லை ;
வாழ்வின் நெறிமுறைகளை கோட்பாடுகளை
கொள்கைகளை
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
எளிமையான பாடல்களில் தந்தவர்.

இலக்கியங்களிலும்,
சித்தர் பாடல்களிலும்,
இதிகாசங்களிலும்,
புராணங்களிலும்,
வேதங்களிலும்,
சாஸ்திரங்களிலும்,
இருந்த உண்மைப் பொருள்களை தத்துவங்களை
பாமரனும், உழைத்து பாடுபடும்
ஏழைத் தோழனும்
புரிந்துகொள்ளும் வகையில்
மனம் தெளிவு பெறும் வகையில்
அறிவு விளக்கம் பெறும் வகையில்
கடினமான வார்த்தைகளை
எளிமையான வார்த்தைகளாக்கி
இந்த சமுதாயத்திற்கு தந்தவர்.

இன்றும் அவருடைய பாடல் பாதிப்பு இல்லாமல்
யாரும் பாடல் எழுதுவதில்லை.

தத்துவப் பாடல்கள் என்றால்
கண்ணதாசன் பாடல் என்று தான் இருக்கிறது
வேறு எந்த கவிஞர் பெயரும் இல்லை.
இன்று உள்ளவர்கள் அனைவரும்
தங்கள் பெயரின் முன்னால்
பட்டங்களை  சூட்டிக் கொள்கிறார்களே தவிர
பட்டங்களை சூட்டிக் கொள்ள விருப்பப்
படுகிறார்களே ஒழிய
பாடல்களை தரமாக தரவேண்டும் என்று யாரும்
விரும்புவதில்லை.

தாங்கள் இயற்றிய பாடல்களில் உள்ள கருத்துக்களை
தாங்களே எழுதியது போலவும்,
தத்துவம் நிறைந்த
பாடல்களை எழுதியதாகவும்,
தங்களை தாங்களே
பெருமையாக கூறிக்கொள்ளும் நிலையிலும்,
தாங்களே தங்கள் பாடலுக்கு
விளக்கம் சொல்லும் நிலையில் இருக்கின்றனர்.

கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு
இந்த உலகம் புரிந்து கொண்டு விளக்கம் கொடுத்தது
அன்று
ஆனால் இன்றோ
கவிஞர்கள் எழுதும் பாடல்களுக்கு
கவிஞர்களே விளக்கம் கொடுக்கின்றனர்
மக்களுக்கு கவிதை புரியாத காரணத்தினால்
அந்த அளவிற்கு இன்று கவிதையில்
தரம் தாழ்ந்து போய் இருக்கிறது.

இன்றைய கவிஞர்கள்  புரியாத வார்த்தையை
எழுதுவதன் மூலம்
தங்களை தாங்களே சிறந்த கவிஞர் என்று
நினைத்துக் கொள்கின்றனர்.

புதுமை என்ற பெயரில் பெருமையடித்துக் கொள்கின்றனர்.
பழமையின் மகத்துவம் தெரியாமல்
புதுமை என்ற பெயரில் பெருமையடித்துக்
கொள்கின்றனர்.

இயல் இறைவனை
அடையக்கூடிய வழிகளைக் காட்டுகிறது.
இறைவனை எப்படி அடையலாம் என்ற
வழிமுறைகளைக் கூறுகிறது
அதாவது எந்த இயல் தூல உடலைத் தொடுகிறதோ
அதுவே உண்மையான இயல்.

இறைவா நிலையையுடைய கவிதை மட்டுமே
தூல உடலைத் தொட முடியும் ;
இறக்கக் கூடிய கவிதைகள்
தூல உடலைத் தொட முடியாது ;

கண்ணதாசன் கவிதைகள்
இறவா நிலையை உடையவை ;
இறைத் தன்மையை தன்னுள் கொண்டவை ;
தெய்வீகத் தன்மையை தன்னுள் பெற்று இருப்பவை ;

கண்ணதாசன் பாடல்களை
நாம் கேட்டோமேயானால்
நாம் படித்தோமேயானால்
அந்த கவிதை
நம் உணர்வுகளை ஆட்டுவிப்பதை உணரலாம்.
சிந்தனையை தட்டுவதைத் தெரிந்து கொள்ளலாம்
மற்றவர்களுடைய எந்த கவிதையும்
நம்முடைய ஒவ்வொரு அணுவையும்
துளைத்துச் செல்வதை உணர முடியாது.

கண்ணதாசன் கவிதைகள்
தூல உடல் வரை செல்லும்
தெய்வீகத்தன்மையை திறந்து காட்டும்,
கடவுளைஅடையும் வழியைச் சொல்லும்.

தூல உடலிலிருந்து
சூக்கும உடல் செல்ல இசையை நாட வேண்டும்
அதற்கு
இசைக்கடவுள் இளையராஜா இசையைச் சொல்லலாம்

இசை என்பது உயிரின் ஆழம் வரை
செல்ல வேண்டும்

இசை என்பது
உயிரின் மூலத்தை அறிய உதவும்
திறவு கோலாக இருக்க வேண்டும் ;
இசை என்பது
உடலை ஆட்டுவிக்கும்
உடலை அதிரவைக்கும்
வேட்டுச் சத்தமாக இருக்கக் கூடாது ;

இன்று இசை என்ற பெயரில்
சத்தங்கள் தான் எழுப்பப்படுகிறது
உயிர்த் தன்மை இல்லை

இசை என்றால் என்ன என்று தெரியாதவர்களும்,
இசை என்றால் என்ற என்று புரியாதவர்களும்,
இசையமைப்பதால் தான் இசையின்
உயிர்த்தன்மை கெட்டுவிட்டது
உயிர்த்தன்மையுடன்
இருக்க வேண்டிய இசை
இன்று உயிரற்ற தன்மையுடன் இருக்கின்றது.

நான் இந்த இசையை
இப்படி அமைத்தேன்
இந்த இசையை அப்படி அமைத்தேன்
என்று தங்களைத் தாங்களே
பாராட்டிக் கொள்ளும்
நிலை தான் இருக்கிறது

இளையராஜாவின் இசையில்
உயிர்த்தன்மை இருக்கும்
பாடலுக்கு நடுவே வரும் இசை கூட
பாடலாக உயிர்த்தன்மை கொண்ட
பாடலாக இருக்கும்.

இளையராஜாவின் இசையைக் கேட்கும் போது
மனதில் ஒரு அமைதி நிலை தவழும்.

தூல உடலைக் கடந்து
சூட்சும உடலைப் போய்  தொடர்பு கொள்ளும்.
தூல உடலைத் துளைத்து
சூட்சும உடலுடன்
தொடர்பு கொள்வது என்பது தவத்தினால் சாத்தியம்

ஆனால், இளையராஜாவின் இசை
தூல உடலைக் கடக்கும்
சூட்சும உடலுடன் தொடர்பு கொள்ளும்

உயிருள்ள இசை என்றால்
அது உயிர் வரை செல்ல வேண்டும்
இளையராஜாவின் இசை உயிர் வரை செல்லும்
உயிர்த்தன்மை உள்ள இசை.

இளையராஜாவின் இசையை
அமைதியான நிலையில்
ஆள் அரமற்ற சூழலில் மனது குழப்பமில்லாமல்
தெளிவாக இருக்கும் போது கேட்டால்,
நமக்கும் பிரபஞ்சத்திற்கும்
ஒரு பிணைப்பு ஏற்பட்டு
பிரபஞ்ச சக்தி நம்முள்
இறங்குவதை உணரலாம்.

இயைராஜாவின் இசை
தெய்வீகத் தன்மையுடன்
இருப்பதற்குக் காரணம்
அந்த இசை தெய்வீகத்திலிருந்து
இறக்கப்பட்டதே காரணம் ஆகும்.

உயிர்வரை செல்ல காரணம்
உயிர்த் துடிப்புடன்
இருப்பதால் தான்.

தவத்தின் சில உயர்படி நிலைகளைக்கடக்க நாம்
இளையராஜாவின் இசையைப் பயன்படுத்தலாம்.

இசை கடவுளை அடையக்கூடிய
வழிகளைக் கண்டறிந்து அதன்வழி செல்லும்.

இயல் என்பது
கடவுளை அடையக்கூடிய
வழிகளைச் சொல்லும்
இசை என்பது
கடவுளை அடையக்கூடிய
வழிகளைக் கண்டறிந்து அதன் வழி செல்லும்.
இதற்கு ஒரு மிகப்பெரிய
தூண்டுகோலாகவும்,
வழிகாட்டியாகவும்
இளையராஜாவின் இசை இருப்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.

நாடகத்திற்கு
ஒரே ஒரு உதாரணம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே
நடிப்புக்கென்று தனி இலக்கணம் வகுத்தவர்
ஏற்ற கதாபாத்திரமாகவே மாறக் கூடியவர்
நவரசமும் அவரிடம் ததும்பி விளையாடும்,
அவர் போட்ட நடிப்பு என்ற ரோட்டின் மேல் தான்
அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

நடிப்புலகில் அவருக்கு
நான் தான் வாரிசு - என்று
பல பேர் சொல்லிக் கொண்டாலும்
பல பேர் சொல்வதில் பெருமை கொண்டாலும்
அன்றும், இன்றும், என்றும்
அவருக்கு இணையாக
நடிக்க நடிப்புலகில் யாரும் கிடையாது.
நடிப்புலகில் அவருக்கு வாரிசு என்று
யாரும் கிடையாது.
அவருக்கு நடிப்புலகில்
நான் தான் வாரிசு என்று
பலரும் தங்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர
யாரும் அவருக்கு நடிப்புலகில் வாரிசாக முடியாது.
வாரிசாகவும் முடியாது.

அவர் உடம்பில் உள்ள
ஒவ்வொரு அணுவும் நடிக்கும் ;
அவர் பேசும்  தமிழ் இனிக்கும் ;
தமிழ்ச் சொற்கள் அவர் வாயிலிருந்து வெடிக்கும் ;
அவர் சொல் கேட்டால் நம் மெய் சிலிர்க்கும் ;
பொன்னை நிகர்த்த உடலினன் ;
அரிமா ஒத்த நடையினன்;

அவர் நா அசைத்த போது தான்
தமிழ் நாட்டில் தமிழன்னையே
தூக்கத்திலிருநது விழித்துக் கொண்டார்.

அவருக்கு ஒத்த
அவர் நடிப்புக்கு ஒத்த
கதாபாத்திரங்கள் உருவாக்கப்படவில்லை
என்றே சொல்லலாம்.

கலைக்காக தன்னையே அர்ப்பணித்த தலைமகன்
தமிழ்த்தாயின் முதல்மகன்

இயல்
கடவுளை அடையக்கூடிய வழிகளைச் சொன்னால்
இசை
கடவுளை அடையக்கூடிய வழிகளைக்கடந்து
அதன் வழி சென்றால்
நாடகம்
கடவுகளாகவே மாறக்கூடிய நிலையை உருவாக்கும்.

இயல் தூல உடல் வரையும்,
இசை சூக்கும உடல் வரையும்,
நாடகம் காரண உடல் வரையும்
செல்லும்

இயலும், இசையும்
வெளியிலிருந்து உள்ளே வருபவை.

நாடகம் மட்டுமே உள்ளே இருப்பவை
அது அதுவாக மாறினால் அதுவே சொல்லும்
அது அதுவாக மாற வேண்டுமானால்
நாடகம் முக்கியம்

அதனால் தான் நடராஜர் நாட்டியமாடும்
கோலத்தில் இருப்பார்.
நாட்டியம் மட்டுமே நம்மை இறைவனுடன்
பிணைப்பை ஏற்படுத்தும்.

வெளியிலிருந்து ஒன்றைப் பெற்று
நாம் பெறும் விளைவை விட
நம்மை நாமே ஆட்டுவித்து
பெறப்படும் விளைவிற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

கவலையான நேரத்தில்
இயலும், இசையும் பயன்படுத்துவோமேயால் கவலை குறையாது
கவலை மறக்க முடியாது.

ஆனால்,
நாட்டியம் ஆடும் போது
அனைத்தும் மறந்து விடும்.
வெளியிலிருந்த வருவதற்கும்,
உள்ளே இருப்பதற்கும் இது தான்
வேறுபாடு.

வெளியிலிருந்து வருபவை
நம்மில் பாதிப்பை ஏற்படுத்தும்
மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஓர் அம்பை எடுத்து
பழத்தின்மேல் எய்தும்போது
அம்பானது பழத்தின் மேல் குத்தி நின்றால்
அதற்குப் பெயர் பாதிப்பு.

பழம் இரண்டாக உடைந்தால்
பல தூண்டுகளோகளே உடைந்தால்
அதற்குப் பெயர் மாற்றம்

இயலும், இசையும் பாதிப்பை ஏற்படுத்தும்
நாடகம் மாற்றத்தை ஏற்படுத்தும்

உள்ளிலிருந்து எழுபவை
மாற்றத்தை ஏற்படுத்தும்
வெளியிலிருந்து வருபவை
பாதிப்பை தாக்கத்தை ஏற்படுத்தும்.

மனக் கவலை ஏற்படும்போது
நமக்கு தெரிந்த நடனங்களை நாட்டியங்களை
ஆடிக் கொண்டே இருந்தால்
கால்கள் சோர்ந்து போகும் வரை
ஆடிக்கொண்டே இருந்தால்
மனம் அங்கு இயங்காமல்
இருப்பதால் நன்கு உணரலாம்.

மனம் இயங்காத நிலையில்
உயிர் தன் மூலத்தை உணர்ந்து
அதுவாகவே மாறும் நிலையினை உணரலாம்.

அது அதுவாக மாற வேண்டுமானால்
எதிலிருந்து வந்தோமோ
எதில் போய் சேரப் போகிறோமோ
அதுவாகவே மாற வேண்டுமானால்
உள்ளுக்குள் உள்ள அந்த
விதைகள் திறக்க வேண்டும்.

அனைவருக்கும் விதை
விதைக்கப்பட்டே இருக்கிறது.

ஒரு சிலர் மட்டுமே அந்த விதையை
கண் திறக்கச் செய்கின்றனர்.

நம்முள் உள்ள ஆன்மீக விதையை
நாம் திறக்க வேண்டும்
அல்லது
ஆன்மீக விதையை திறந்தவர்கள்
நம் விதையை திறக்கலாம்

உள்ளுக்குள் உள்ள விதை
கண் திறக்காமல் ஆன்மீகமே மலராது
உண்மையை உணர்ந்தவர்கள்
தாங்கள் உணர்ந்த உண்மையை
மறை பொருள்களாக எழுதி வைத்திருக்கின்றனர்.

உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது
போலப் பேசினாலும் ,
அதில் உண்மை என்பது இருப்பதில்லை.
உண்மை எது  பொய் எது என்று தெரியாமல்
உண்மையை உணராத போலிகள்
உண்மையை உணர்ந்தவர்கள்
போல் நடிப்பார்கள்.

நாம் அனைவரும் இந்த சமுதாயத்தில்
நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்
நடிப்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் வாழ முடியும்
நடிக்கத் தெரியாதவர்கள் இந்த சமுதாயத்தில் வாழ முடியாது.

உண்மைக்கு இநத் சமுதாயத்தில் மதிப்பில்லை
போலிக்கு தான் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

உண்மையை உணர்ந்தவர்கள்
உண்மையை தாங்கள் உணர்ந்த
உண்மையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை
அது தானாகவே மக்கள்உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால் உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது போல நடிப்பவர்கள்
தாங்கள் உண்மையை உணர்ந்தது போல்
வெளிக் காட்டிக் கொண்டாலும்
அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

உண்மைதான் நீண்ட நாட்கள் நிற்கும் ;
பொய் நீண்ட நாட்களுக்கு நிற்காது ;

உண்மையை உணர வேண்டுமானால்
உண்மையை உணர்ந்தவர்களை
பின்பற்ற வேண்டும் ;
உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது போல்
நடிப்பவர்களை பின்பற்றினால்
உண்மையை உணராமல்
நாமும் உண்மையை
உணர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டு
உண்மையை உணர்ந்ததாக நினைத்துக்கொண்டு
இந்த உலகத்தில் அலைய வேண்டியது தான்

புதுமைக்கும், பழமைக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்ந்து கொள்ளவில்லை எனில்,
உண்மைக்கும், பொய்யுக்கும் உள்ள வேறுபாட்டை
உணர்ந்துகொள்ள வில்லை எனில்,

காலத்தில் உள்ள வேறுபாட்டை
உணர்ந்துகொள்ள வில்லை எனில்
நம்மைச் சுற்றி நடக்கும்
நிகழ்வுகளின் சூட்சுமத்தை
புரிந்து கொள்ள முடியாது.

நடந்து கொண்டிருப்பது
எதனால் என்றும்
நடக்க வைப்பவன் யார் என்றும்
அறிந்துகொள்ள வில்லை எனில்,
எதை அறிந்து கொள்ள வேண்டுமோ
அதை அறிந்துகொள்ளவில்லை எனில்,
எதை புரிந்து கொள்ள வேண்டுமோ
அதை புரிந்து கொள்ள வில்லை எனில்,
எதை சிந்தித்து தெரிந்து
கொள்ள வேண்டுமோ
அதை தெரிந்து கொள்ளவில்லை எனில்,
நாம் உண்மைகளை
உணரவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதனால் போலியானவர்கள்
பின்னால் செல்லக்கூடிய நிலை உருவாகி விடும்.
நாம் ஜெபம் செய்வதற்கு முன்பும்
நாம் பிரார்த்தனை செய்வதற்கு முன்பும்
காலையும் மாலையும் குளிக்கிறோம்
உடலைத் தூய்மைப் படுத்துகிறோம.

உடலைத் தூய்மைப்படுத்தித் தான்
ஜெபம், மந்திரம் செய்ய வேண்டும்
என்ற முறைகளை வகுத்து வைத்திருக்கிறோம்.

உடல் தூய்மை முக்கியம் என்ற
முக்கியமான  நிலையை  உருவாக்கி வைத்திருக்கிறோம்
அதன் மூலம்
நமக்கு செய்த தவத்தின் பயன் கிடைக்கும்
என்ற முறைகளை வகுத்து வைத்திருக்கிறோம்.

காலை, மாலை மட்டுமில்லாமல்
எப்போதும் நீரிலேயே கிடக்கும்
தேரையானது என்ன சக்தியைப் பெற்றது,
எந்த பலனைப் பெற்றது
ஒரு பயனும் இல்லையே.


உண்மையை உணர முயற்சி செய்தவர்கள்
தவறான நிலையை நோக்கி
சென்று கொண்டிருக்கிறார்கள்.

உண்மையை உணராதவர்கள்
சொல்லி வைத்தவைகள்
பின்னால் சென்றால்
உண்மையை உணரமுடியாமல்
தவிக்க வேண்டியது தான்.

இரண்டு கண்கள்
புற உலகைக் காட்டும் ;
மூன்றாவது கண் மட்டுமே
அக உலகை காட்டும் ;
அக உலகத்தில் பிரவேசிக்க வேண்டுமானால்
மூன்றாவது கண் திறக்கப்பட வேண்டும்.

மூன்றாவது கண் எங்கே இருக்கிறது
அதை எப்படி திறக்க வேண்டும்
அதை திறப்பதற்கான வழி வகை
என்ன என்பதை உணர்ந்து
மூன்றாவது கண்ணை திறக்க வேண்டும்.
மூன்றாவது கண் எங்கே இருக்கிறது
அதை திறக்கும் வழி என்ன
என்பதை அறிந்து,
அதை திறப்பவர்களால்
மட்டுமே முக்தி அடைய முடியும்.
மூன்றவாது கண்ணை திறக்காதவர்களுக்கு
முக்தி இல்லை.

இந்த மூன்றாவது கண்ணை
திறப்பதற்குத் தான்
ஆன்மீக உலகில்
பல்வேறு விதமான முறைகள்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவம், தியானம்,பிரார்த்தனை,
யோகா, பிராணாயாமம் - இன்னும் பல வழிகளில்
செய்யப்படும் முயற்சிகள் யாவும்
இந்த மூன்றாவது கண்ணை திறப்பதற்காகத் தான்.

நெற்றிக் கண்
மூன்றாவது கண் என்ற அழைக்கப்படும்  நெற்றிக்கண்

அதை திறந்து உயர்நிலை பெற்றவர்களால்
நம் மூன்றாவது கண்ணை திறக்க முடியும்
அதுபோல,
கர்ம வினைகள் கழிந்தால்
மூன்றாவது கண் திறக்கும்
அல்லது
மூன்றாவது கண் திறந்தால்
கர்ம வினைகள் கழியும்.

மூன்றாவது கண்ணை
திறந்தவர்கள் யார் என்று அறிந்து,
அவர்களை பின்பற்றினால் மட்டுமே
உண்மையை உணர முடியும்.

உண்மையை உணர்ந்தவர்கள்
யார் என்று அறிந்து
அவர்களை பின்பற்றினால்
மட்டுமே மட்டுமே உண்மையை உணரமுடியும்

உண்மையை உணராதவர்களை பின்பற்றினால்
உண்மையை
உணர முடியாமல்¢போய் விடும்.
எனவே,
உண்மையை உணர்ந்தவர்களைப் பின்பற்றி,
மூன்றாவது கண்ணைத் திறந்து
உண்மையை உணர்வதன் மூலமே
உண்மைக்கும், பொய்யுக்கும்
உள்ள வேறுபாட்டை
உணந்து கொள்ள முடியும்
என்கிறார் சிவவாக்கியர்

இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர்:

நல்ல எண்ணங்கள் வளர வளர
கெட்ட எண்ணங்கள் அழிந்து விடும்
எனவே
நல்லவர்களின் எண்ணிக்கை வளர வளரத் தான்
கெட்டவர்கள் அழிந்து விடுவர் என்கிறார்
இயேசு


அவ்வாறே,
சிவவாக்கியரும்
உண்மைகள் வளர வளர
போலிகள் அழியும்


எனவே
நல்லவைகளை செய்யும் நல்லவர்கள் வளர வளரத் தான்
கெட்டவைகளை செய்யும் கெட்டவர்கள் அழிய முடியும்
என்கிறார்.


“”””””போதித்த குருவின் பாதம் தெண்டனிட்டுப்
                   போற்றினேன் பதிவுஎழுத்தொன் றுந்தான் முற்றே”””””