August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-10

 

கண்ணதாசன்-பதிவு-10

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

இருப்பு நிலையில்

இருக்கும்

கடவுள்

இயக்க நிலையில்

ஒரு பொருளாக

மாற்றமடைந்து

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

அந்த இயக்கத்திற்குத்

தேவையான

சக்தியானது

முழுவதும் தீர்ந்தவுடன்

இயக்க நிலையில்

இருந்த அந்தப்

பொருளானது

இருப்பு நிலையுடன்

இணைந்து விடுகிறது

என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான

வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

இயக்க நிலையுடன்

ஒப்பிடப்படும்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

எட்டு என்ற எண்ணில்

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படும்

மேலே உள்ள

பூஜ்ஜியத்துடன்

ஒன்றுடன் ஒன்று

இணைவதால்

எட்டு என்ற எண்

மறைந்து பூஜ்ஜியம்

என்ற ஒரே எண்ணாக

மாற்றம் அடைகிறது

என்ற  வார்த்தையானது

ஆன்மீக உலகத்தில்

பயன்படுத்தப்பட்டு

வருகிறது

 

இருப்பு நிலையானது

இயக்க நிலையாக

மாறி மீண்டும்

இருப்பு நிலையாக

மாறுகிறது

என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான

வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காக

பூஜ்ஜியம் என்ற

எண்ணானது

எட்டு என்ற எண்ணாக

மாறி மீண்டும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணாக மாறுகிறது

என்ற வார்த்தையானது

ஆன்மீக உலகத்தில்

பயன்படுத்தப்பட்டு

வருகிறது

 

இதிலிருந்து எட்டு

என்ற எண்ணும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணும்

கடவுளைக்

குறிப்பதற்காகப்

பயன்படுத்தப்பட்டாலும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணிலிருந்து தான்

எட்டு என்ற எண்ணே

தோன்றுகிறது என்ற

காரணத்தினாலும்

எட்டு என்ற

எண்ணாணனது

மீண்டும் பூஜ்ஜியம்

என்ற எண்ணாக

மாறுகிறது என்ற

காரணத்தினாலும்

எட்டு என்ற

எண்ணை விட

பூஜ்ஜியம் என்ற

எண்ணே

உயர்ந்தது என்பதும்

சிறந்தது என்பதும்

கடவுளாக மதிக்கப்பட

வேண்டியது

என்பதும்

தெளிவாகிறது

 

பூஜ்ஜியம் என்ற

எண்ணுடன்

ஒப்பிடப்படும்

இருப்பு நிலையில்

இருக்கும்

கடவுள்

இயக்க நிலையாக

மாறி

இயக்க நிலையில்

கடவுள்

படைத்தல் காத்தல்

அழித்தல் மறைத்தல்

அருளல் எனற

ஐந்தொழில்களை

பேராற்றல் பேரறிவு

என்ற இரண்டு

தன்மைகளைக் கொண்டு

இயக்க நிலையில்

ஒரு பொருள்

மூலமாக

கடவுள் இயங்கிக்

கொண்டிருக்கும் போது

இயக்கத்திற்குத்

தேவையான

சக்தியானது தீர்ந்தவுடன்

இயக்க நிலையில்

இருக்கும்

கடவுள் மீண்டும்

இருப்பு நிலையில்

உள்ள கடவுளாக

மாறுகிறார் என்பதை

யாராலும் எளிதில்

புரிந்து கொள்ள

முடியாத நிலையில்

இருக்கும்

 

இத்தகைய

தன்மைகளைக்

கொண்டு தான்

கடவுள் இருப்பார்

என்பதை யார்

ஒருவர் புரிந்து

கொள்கிறாரோ

அவரே கடவுளை

உணர்ந்தவர்

என்பதைத் தான்

 

பூஜ்ஜியத்துக்குள்ளே

ஒரு ராஜ்ஜியத்தை

ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான்

ஒருவன் – அவனைப்

புரிந்து கொண்டால்

அவன் தான்

இறைவன்

 

என்ற பாடலின் மூலம்

கண்ணதாசன்

தெளிவாக்குகிறார்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-9

 

கண்ணதாசன்-பதிவு-9

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

இருப்பு நிலையில்

இருக்கும் கடவுள்

படைத்தல் காத்தல்

அழித்தல் மறைத்தல்

அருளல் என்ற

ஐந்து தொழில்களை

செய்வதற்காக

பேராற்றல் பேரறிவு

என்ற இரண்டு

தன்மைகளைத்

தன்னுள் கொண்டு

அமைதியாக

இருந்து கொண்டு

இருக்கிறார் என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக

தெரிந்து கொள்ள

வேண்டும் என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

கடவுள்

இருப்பு நிலையில்

இருக்கிறார் என்பதைக்

குறிப்பதற்காகப்

பயன்படுத்தப் படுகிறது

 

இருப்பு நிலையில்

இருக்கும் கடவுள்

இருப்பு நிலையில்

எத்தகைய தன்மைகள்

அனைத்தையும்

தன்னுள் கொண்டு

இருந்தாரோ அந்த

தன்மைகளில்

எந்த தன்மையை

எந்த பொருள்

மூலமாக வெளிப்படுத்த

வேண்டுமோ

அந்த பொருளாக

மாற்றமடைந்து

இயங்கிக்

கொண்டிருப்பதற்காக

படைத்தல் காத்தல்

அழித்தல் மறைத்தல்

அருளல் எனற

ஐந்தொழில்களை

பேராற்றல் பேரறிவு

என்ற இரண்டு

தன்மைகளைக் கொண்டு

இயக்க நிலையில்

ஒரு பொருள்

மூலமாக

கடவுள் செய்து

கொண்டு இருக்கிறார்

என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள  வேண்டும்

என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

கடவுள்

இயக்க நிலையில்

இருக்கிறார்

என்பதைக்

குறிப்பதற்காகப்

பயன்படுத்தப் படுகிறது

 

இருப்பு நிலையிலிருந்து

தோன்றிய

இயக்க நிலையானது

இருப்பு நிலையிலிருந்து

தனியாகப் பிரிந்தாலும் 

இருப்பு நிலையானது

எப்படி

இயக்க நிலையை

தனித்து விடாமல்

தன்னுடன்

இணைத்து பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கிறதோ

அதைப்போல

இயக்க நிலையும்

இருப்பு நிலையை

தன்னுடன் இணைத்து

பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கிறது என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள  வேண்டும்

என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படும்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

எட்டு என்ற எண்ணில்

இயக்க நிலையுடன்

ஒப்பிடப்படும்

கீழே உள்ள

பூஜ்ஜியத்தை

தன்னுடன் இணைத்து

பிடித்து

வைத்துக் கொண்டு

இருப்பதைப் போல

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

மேலே உள்ள

பூஜ்ஜியத்தை

பிடித்து வைத்துக்

கொண்டு இருக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-8

 கண்ணதாசன்-பதிவு-8

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் இரண்டு

பூஜ்ஜியங்கள் ஒன்றாக

இணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றுடன் ஒன்றாக

பிணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

எட்டு என்ற எண்

தனிப்பட்ட முறையில்

உருவானது அல்ல

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றாகச் சேர்ந்ததால்

உருவானது

 

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கியதே

பூஜ்ஜியம் என்ற

எண் தான்

 

பூஜ்ஜியம் இல்லை

என்றால்

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கவே

முடியாது

எட்டு என்ற

எண்ணை

உருவாக்க

வேண்டும் என்றால்

பூஜ்ஜியம் என்ற எண்

அவசியம்

 

எனவே எட்டு

என்ற எண்ணிற்கு

அடிப்படை

ஆதாரம்

மூலம்

அனைத்துமே

பூஜ்ஜியம் தான்

அதனால்

எட்டு என்ற

எண்ணை விட

பூஜ்ஜியமே

சிறப்பிடம் பெறுகிறது

 

எட்டு என்ற

எண்ணும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணும்

ஆன்மீக உலகத்தில்

கடவுளுடன்

ஒப்பிடப்பட்டாலும்

எட்டு என்ற எண்

உருவாகக்

காரணமாக

இருப்பது

பூஜ்ஜியம்

என்ற எண் என்ற

காரணத்தினால்

எட்டு என்ற

எண்ணை

விட பூஜ்ஜியமே

உயர்வானதாகக்

கருதப்படுகிறது

 

அதனால் தான்

பூஜ்ஜியம்

என்ற எண்

கடவுளாக

மதிக்கப்பட்டு

வருகிறது.

 

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கு ஆரம்பம்

என்பதும் கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதைப் போல

கடவுளுக்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதனால் தான்

பூஜ்ஜியமானது

கடவுளுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

சுத்தவெளியுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படுகிறது

 

ஒரு பூஜ்ஜியத்திற்கு

கீழே இன்னொரு

பூஜ்ஜியத்தை

ஒன்றாக இணைக்கும்

போது எட்டு என்ற

எண் உருவாகிறது

கடவுள் இயக்கமற்று

அமைதியாக

இருப்பு நிலையில்

இருக்கிறார்

என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

கடவுள்

இயக்க நிலையில்

இயங்கிக் கொண்டு

இருக்கிறார் என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் மேலே

உள்ள பூஜ்ஜியமானது

இருப்பு நிலையையும்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

இயக்க நிலையையும்

குறிக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-7

 

கண்ணதாசன்-பதிவு-7

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

ஒன்று :

எட்டிரண்டு என்ற

வார்த்தையில்

எட்டுக்குள் இரண்டு

இருக்கிறது

என்பதைக் கொண்டு

சொல்லப்படும் அர்த்தம்

 

இரண்டு :

எட்டிரண்டு

என்ற வார்த்தையில்

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கிறது

என்பதைக் கொண்டு

சொல்லப்படும் அர்த்தம்

 

எட்டிற்குள் இரண்டு

இருக்கிறது என்றால்

எட்டிற்குள் இரண்டு

விஷயங்கள் இருக்கிறது

என்று பொருள்

அதாவது எட்டு என்ற

எண்ணிற்குள்

இரண்டு விஷயங்கள்

ஒன்றாக இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கிறது

எனறால் எட்டு

என்ற எண்ணிற்கு

வெளியே இரண்டு

என்ற எண்

இருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணும்

இரண்டு என்ற

எண்ணும்

தனித்தனியாக

இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்குள் இரண்டு

இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

சொல்லப்படும் அர்த்தமும்

எட்டிற்கு வெளியே

இரண்டு

இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

சொல்லப்படும் அர்த்தமும்

எப்போதும்

வேறுபட்டுத் தான்

இருக்கும்

மாறுபட்ட நிலையில்

தான் இருக்கும்

எப்போதும்

ஒன்றாக

இருக்கவே இருக்காது

 

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

பல்வேறு அர்த்தங்கள்

இந்த உலகத்தில்

உள்ளவர்களால்

சொல்லப்பட்டு வருகிறது

 

இருப்பினும்

எட்டிற்கு உள்ளே

இரண்டு இருக்கும்

போது

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு என்ன

அர்த்தம் சொல்ல

வேண்டும் என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

எட்டிற்கு உள்ளே

இரண்டு இருக்கிறது

என்றால்

எட்டிற்கு உள்ளே

இரண்டு விஷயங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்கு உள்ளே

இரண்டு விஷயங்கள்

இருக்கிறது என்றால்

எட்டு என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றாகச்

சேர்ந்தது தான்

எட்டு என்ற எண்

 

மேலே ஒரு

பூஜ்ஜியத்தையும்

கீழே ஒரு

பூஜ்ஜியத்தையும்

ஒன்றாக சேர்த்து

வரைந்தால்

வருவது தான்

எட்டு என்ற எண்

 

அதாவது எட்டு

என்ற எண் இரண்டு

பூஜ்ஜியங்கள்

ஒன்றாக இணைவதால்

உருவானது ஆகும்

 

அதாவது எட்டு

என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணானது

இரண்டு

பூஜ்ஜியங்களால்

உருவாக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு என்ற

எண்ணானது தனக்குள்

இரண்டு பூஜ்ஜியங்களைக்

கொண்டிருக்கிறது

என்று பொருள்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////