August 17, 2018

திருக்குறள்-பதிவு-3


                திருக்குறள்-பதிவு-3

“””ஏதிலார் குற்றம்போல்
தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு””””

உலகில் வாழும்
மனிதர்களை மூன்று
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : போட்டியில் கலந்து
         கொண்டு வெற்றி
         பெறுபவர்கள்

இரண்டு: போட்டியில் கலந்து
         கொண்டு தோல்வி
         அடைபவர்கள்

மூன்று : போட்டியில் கலந்து
         கொள்ளாமல்
         விமர்சிப்பவர்கள்

கிரிக்கெட் போட்டி
ஒன்றை எடுத்துக்
கொண்டால்
அந்த போட்டியில்
கலந்து கொண்டவர்களில்
ஒரு பிரிவினர்
போட்டியிட்டு போராடி
வெற்றி பெறுகிறார்கள்;
மற்றொரு பிரிவினர்
போட்டியில் கலந்து
கொண்டு போட்டியிட்டு
போராடி தோல்வி
அடைகிறார்கள்;
ஆனால் இதில்
கலந்து கொள்ளாமல்
வெளியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
அனைவரும் விமர்சனம்
செய்கிறார்கள்.

போட்டியில்
வெற்றி பெற்றவர்கள்
சரியாக ஆடவில்லை
இருந்தாலும் வெற்றி
பெற்றார்கள் என்று
வெற்றியை விமர்சிப்பார்கள்
தோல்வியடைந்தவர்கள்
பணத்தை
வாங்கிக் கொண்டு
விட்டுக் கொடுத்தார்கள்
அதனால்
தோல்வி அடைந்தார்கள்
என்று தோல்வி
அடைந்தவர்களைப் பற்றி
விமர்சிப்பார்கள்
விமர்சனம் செய்பவர்கள்

விமர்சனம் செய்பவர்கள்
விமர்சனம் செய்து
கொண்டு தான் இருப்பார்கள்
ஆனால் எதிலும் கலந்து
கொள்ள மாட்டார்கள்

அரசியல் என்று
எடுத்துக் கொண்டால்
தேர்தலில் போட்டியிட்டு
ஒரு கட்சி
ஆளுங்கட்சியாகவும்
மற்றொரு கட்சி
எதிர்க்கட்சியாகவும்
இருக்கும்
ஆனால் போட்டியிடாதவர்கள்
விமர்சகர்களாக இருந்து
கொண்டு விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்

வெற்றி பெற்றவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருக்கிறது இருந்தாலும்
வெற்றி பெற்றார்கள்
தோல்வி அடைந்தவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருந்தது அதை
சரி செய்து கொள்ளாத
காரணத்தினால் தான்
தோல்வி அடைந்தார்கள்
என்று பேசுவார்கள்
அவர்களைப் பற்றி
விமர்சனம் செய்வார்கள்

விமர்சனம் செய்பவர்கள்
அனைவரும் களத்தில்
இறங்கி வேலை
செய்ய மாட்டார்கள்.

களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள்
ஒன்று வெற்றி
பெறுவார்கள்
அல்லது தோல்வி
அடைவார்கள்
வெற்றி பெற்றவர்கள்
மேலும் உயர் நிலை
அடைவதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டு இருப்பார்கள்
தோல்வி அடைந்தவர்கள்
ஏன் தோல்வி  அடைந்தோம்
என்று யோசித்து
தோல்விக்கான
காரணங்களை அலசி
ஆராய்ந்து அதை
சரி செய்து
வெற்றியை நோக்கி
பயணித்துக் கொண்டிருப்பார்கள்

ஆனால் விமர்சனம்
செய்பவர்கள்
தொடர்ந்து விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
எந்த முன்னேற்றமும்
இருக்காது
எந்த நிலையில்
இருக்கிறார்களோ அதே
நிலையில் தான்
இருப்பார்கள்

பிறருடைய குற்றங்களை
கண்டுபிடித்து
விமர்சனம் செய்து
கொண்டிருப்பதால்
இச்சமுதாயத்திற்கு
ஒரு பயனும் இல்லை

எனக்கு ஏன்
படிப்பு வரவில்லை;
எனக்கு ஏன்
நல்ல வேலை
கிடைக்கவில்லை;
எனக்கு ஏன்
அதிக சம்பளத்தில்
வேலை கிடைக்கவில்லை;
என்னுடைய குடும்பம்
ஏன் கஷ்டப்படுகிறது;
என்பதை
யோசித்துப் பார்த்து
தன்னிடம் உள்ள
குற்றங்களை
ஆராய்ந்து பார்த்து
அதை தீர்க்க என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்ய வேண்டும்

அப்படி செய்தால்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக அமையும்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக
அமைந்து விட்டால்
சமுதாயம் நல்ல
சமுதாயமாக அமையும்

எனவே,
இச்சமுதாயத்தில்
வாழும் ஒவ்வொரு
தனி மனிதனும்
பிறரிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
விமர்சிப்பதை விட்டு விட்டு
தன்னிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
சரி செய்து கொண்டால்
சமுதாயம் மனிதர்கள்
வாழக்கூடிய
சமுதாயமாக இருக்கும்
இல்லையென்றால்
இச்சமுதாயம்
மனிதர்கள் வாழ இயலாத
சமுதாயமாகத் தான்
இருக்கும்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  17-08-2018
///////////////////////////////////////////////////////////