December 25, 2015

இயேசுகிறிஸ்து-அழுகுணிசித்தர்-உச்சிக்குக்-பதிவு-74

இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-உச்சிக்குக்-பதிவு-74

""""பதிவு எழுபத்து நான்கை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""
                          
இயேசு கிறிஸ்து:

"பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்."
-------மத்தேயு - 10 : 7

"வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
-------மத்தேயு - 10 : 8

""உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,""
-------மத்தேயு - 10 : 9

""வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்.""
-------மத்தேயு - 10 : 10

""எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.""
-------மத்தேயு - 10 : 11


""ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும் போது அதை வாழ்த்துங்கள்" "
-------மத்தேயு - 10 : 12

""அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள் மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக் கடவது""
-------மத்தேயு - 10 : 13

""எவனாகிலும் உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள். ""
------மத்தேயு - 10 : 14

""நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்""
-------மத்தேயு - 10 : 15

""ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்""
-------மத்தேயு - 10 : 16

""மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைகளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள் ""
-------மத்தேயு - 10 : 17

""அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள் ""
-------மத்தேயு - 10 : 18

""அவர்கள் உங்களை ஒப்புக் கொடுக்கும்போது: எப்படி பேசுவோம் என்றும், என்னதைப் பேசுவோம் என்றும் கவலைப் படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்""
-------மத்தேயு - 10 : 19

""பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறார்""
-------மத்தேயு - 10 : 20

""சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும்; மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள் ""
-------மத்தேயு - 10 : 21

""என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்""
-------மத்தேயு - 10 : 22

""ஒரு பட்டணத்தில் உங்களை துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்""
-------மத்தேயு - 10 : 23

""சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும்
மேற்பட்டவனல்ல ""
-------மத்தேயு - 10 : 24

""சீஷன் தன் போதகனைப் போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப் போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால் அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயம் அல்லவா?""
-------மத்தேயு - 10 : 25

எந்த செயலை எடுத்துக் கொண்டாலும்
அதில் இரண்டு நிலைகள் உண்டு,

ஒன்று                   :  உண்மைத் தன்மையுள்ள செயல்
மற்றொன்று    :   உண்மைத் தன்மையற்ற செயல்

உண்மைத் தன்மையுள்ள செயல்
உண்மைத் தன்மையற்ற செயல்
ஆகிய இரண்டைப் பற்றியும் அறிந்தவர்கள்
செயலில் உள்ள தன்மையை
தங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு
தங்கள் நிலைக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு
தங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு
செயல்பட்டு வருகின்றனர்.

எது தனக்கு பலனளிக்கிறதோ
அதை உண்மைத் தன்மையுள்ள செயல் என்றும்,
எது தனக்கு பலனளிக்கவில்லையோ
அதை உண்மைத் தன்மையற்ற செயல் என்றும்
தன் சுயநலத்திற்கு ஏற்ப
செயலின் தன்மையை
மனித மனம் மாற்றி அமைத்துக் கொள்கிறது.

உண்மைத் தன்மையுள்ள செயல்
உண்மைத் தன்மையற்ற செயல்
ஆகிய இரண்டையும்
சரியானவை, தவறானவை
உண்மையானவை, பொய்யானவை
பழமையானவை, புதுமையானவை
என்று பல்வேறு பெயர்களில்
வழங்கப்பட்டு வருகிறது.

பழமை - புதுமை
என்ற இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு
இச்சமுதாயம்
உண்மைத் தன்மையையும்
உண்மையற்ற தன்மையையும் ஒப்பிட்டு பார்த்து
சரி அல்லாததை - சரியாக இருப்பதாகவும்
சரியாக இருப்பதை - சரியாக இல்லாததாகவும்
முயற்சி செய்கிறது.

புதுமை என்ற
வார்த்தையே தேவையில்லாதது.
புதுமை என்று
நாம் எதைச் சொல்கிறோமோ
அது எப்படி பட்டது என்று தெரியாமலேயே
அது எப்படி பட்டது என்று புரியாமலேயே
அது எப்படி பட்டது என்று உணராமலேயே
அது எப்படி பட்டது என்று அறியாமலேயே
அது எப்படி பட்டது என்று விளங்காமலேயே
புதுமை என்ற வார்த்தையைப்
பயன் படுத்தி வருகிறோம்.

புதுமை என்பது பழமையின் மாற்றம்;

பழமையின் முன்னேற்றம்
புதுமை என்று கூட சொல்லலாம் ;

புதுமை என்று ஒன்று இல்லவே இல்லை
பழமையின் மாறுபாடே புதுமை
இன்றைய புதுமை நாளைய பழமை.

புதுமை மாறிக் கொண்டே இருக்கும்
பழமையிலிருந்து தான் புதுமை பிறக்கிறது
பழமை இல்லையேல் புதுமை இல்லை
பழமையே புதுமைக்கு அடித்தளம்
அடித்தளம் இல்லாமல்
புதுமை துளிர் விடக் கூட முடியாது
இத்தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாத சிலர்
புதுமை புதுமை என்று
புதுமையின் உண்மை உரு தெரியாமல்
புதுமையைப் பற்றி பேசினால்
புதுமையை பின்பற்றினால்
தாங்கள் உயர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டு
சிந்தனையில் சிறந்தவர்
பகுத்தறிவில் உயர்ந்தவர்
என்று இச்சமுதாயம் மதிக்கும்
என்ற நோக்கத்தில்
உலா வருகின்றனர்.

உண்மைத் தன்மையுள்ள செயல்
உண்மைத் தன்மையற்ற செயல்
ஆகிய இரண்டும்
பழமை - புதுமை என்ற பெயர்களில்
பழமை - புதுமை என்ற சொற்களில்
ஒப்பிட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது

அந்த காலங்களில்
ஒரே இடத்தில் ஒரே இன மக்கள் வசித்து வந்தனர்
அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்
ஒரு வீட்டில் என்ன நடந்தாலும்
அது அந்த ஊருக்கே தெரியும்
ஒரு வீட்டில்
ஒரு இறப்பு ஏற்பட்டால்
ஊரே துக்கம் கொள்ளும்.

இறப்பு நிகழ்ந்த வீட்டில் உள்ளவர்கள்
இறந்தவர் உடலை புதைக்கும் வரை 
அல்லது
இறந்தவர் உடலை எரிக்கும் வரை
இறந்தவர் உடலுக்கு
செய்ய வேண்டிய
செயல்களை செய்யும் வரை
அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும்
ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருந்து
இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கு
உதவியாக இருப்பார்கள்.

இறப்பு நிகழ்ந்த வீட்டில் உள்ளவர்கள்
கவலையின் உந்துதலால்
அன்றாடம் செய்ய வேண்டிய
அத்தியாவசிய கடமைகள் கூட
செய்ய முடியாத சூழ்நிலையில்
இருக்கும் போது
அவர்கள் அந்த வேலைகளைச்
செய்வதற்குரிய நிலைகளை ஏற்படுத்தி
அந்த ஊரில் உள்ளவர்கள்
திட்டங்களை வகுத்து செயல்களைச் செய்வார்கள்.

இறந்த வீட்டில் உள்ளவர்களுக்கு
அந்த ஊரில் உள்ளவர்கள்
சமையல் செய்து உணவு அளிப்பார்கள்
அவர்கள் உடல் நலம் கெடக் கூடாது
என்று உதவிகள் செய்வார்கள்.

ஊரில் உள்ள அனைவரும்
துக்கத்தில் இருக்கின்ற காரணத்தினாலும்,
அவர்கள் இறப்பு நிகழ்ந்த வீட்டில்
உள்ளவர்களுக்கு தேவையான
உதவிகளை செய்து கொண்டு
இருக்கின்ற காரணத்தினாலும்,
இறப்பு நிகழ்ந்த வீட்டில் உள்ளவர்களுக்கும்
ஊரில் உள்ளவர்களுக்கும்
ஊருக்கு பொதுவான சமுதாயக் கூடத்திலோ 
அல்லது
வேறு ஒரு பொதுவான இடத்திலோ
ஊரில் உள்ள அனைவருக்கும்
சமையல் செய்யப்படும்

இறந்தவர் உடலை
ஊர் ஒன்றாக கூடி எடுத்தபின்
ஊரில் உள்ள அனைவரும் குளித்து

வீட்டை கழுவி சுத்தம் செய்து
பழைய உடையை கழற்றி வைத்து விட்டு
வேறு உடையை போட்டுக் கொள்வர்.
அதன் பிறகே அனைவருக்கும்
உணவு பரிமாறப்படும்.

இறப்பு நிகழ்ந்த வீட்டின் செய்தியையும்
இறந்தவர் பற்றிய விவரங்களையும்
இறந்த வீட்டிற்கு உரியவர்கள்
இறப்பின் செய்தியை
அனைவருக்கும் கொண்டு சென்று
சொல்ல வேண்டியதில்லை.

ஊர்மக்களே ஒவ்வொருவராக
தங்களுக்கு என்று குறிப்பிட்ட
ஊர்களைப் பிரித்துக் கொண்டு சென்று
இறந்தவர் செய்தியை
சொல்ல வேண்டிய உறவுகளுக்கும்
ஊர்களுக்கும்
ஊரில் உள்ள மக்களுக்கும் சொல்லி விடுவர்.

ஊரில் பிறந்தவர்களுக்காக
ஊரில் வாங்கப்படும் வரியானது
இதைப்போன்ற பொதுநல விஷயங்களுக்கு
பயன்படுத்திக் கொள்வர்.

ஊருக்கென்று கட்டிய பணத்தில்
ஊருக்கென்று சேமித்து வைத்த பணத்தில்
இறப்புக்கான செயல்களைச் செய்வதற்காக
ஊர் மக்கள்
ஊர்த் தலைவரின் உத்தரவிற்கிணங்க,
ஊர்ப் பெரியவர்கள் வழிகாட்டுதலுக்கிணங்க,
அனுபவசாலிகள் அறிவுரைக்கிணங்க,
ஊர்மக்கள் தங்கள் பணிகளைச் செய்வர்.

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கும்
இறந்தவர் உடலுக்கு செய்ய வேண்டிய
செயல்களைச் செய்வதற்கும்;
இறந்தவர் உடலுக்கு செலுத்த வேண்டிய
மரியாதையை செய்வதற்கும்;
வெளியில் இருந்து யாரும்
வரவழைக்கப்படுவதில்லை.
அந்த ஊரில் உள்ள மக்களே
அனைத்து செயல்களையும்
செய்து முடிப்பர்.

உயர்வு தாழ்வு பாராட்டாமல்;
வேற்றுமையை மனதில் கொள்ளாமல்;
காழ்ப்புணர்ச்சியை கருத்தில் கொள்ளாமல்;
விரோதத்தை வெளியில் காட்டாமல்;
பகைமையை பல்லில் காட்டாமல்;
உறவு முறையாக ஒன்றுக்குள் ஒன்றாகவும்
அனைத்து விரோதங்களையும் மறந்து
துக்க காலத்தில் பணியாற்றுவர்.

ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால்
அந்த ஊரே ஒன்று கூடி செயல்படும்
ஒன்றாக, ஒன்றுபட்டு, ஒற்றுமையாக
செயல்படும் செயலை
செய்த செயலை
இத்தகைய உண்மைத் தன்மையுள்ள ஒரு செயலை
பழமை என்கிறோம்.

ஆனால், இக்காலத்திலோ
ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால்
இறப்பு நடக்கக் காரணம் என்ன என்றும்
இறப்பு எப்படி நடந்தது என்றும்;
என்ன உதவிகள் செய்ய வேண்டும் என்றும்;
என்ன உதவிகள் தேவை என்றும்;
செய்யக்கூடிய செயல்கள் எவை என்றும்
துக்கம் விசாரிக்கக் கூட
அக்கம் பக்கத்திலோ
சுற்றுப்புறத்திலோ யாரும் வருவதில்லை.

சம்பிரதாயத்துக்கு
ஒரு முறை பார்த்து விட்டு சென்று விடுகின்றனர்.

இறந்தவர் வீட்டில் உள்ளவர்களுக்கும்
இறந்தவரை பார்க்க
வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கும்
பசியாற உணவு கிடைத்ததா
அவர்களுக்கு தேவைப்படும் அன்றாட
அத்தியாவசியத் தேவைகள்
நிறைவேற்றப்பட்டதா
அந்த வீட்டில் உள்ளவர்கள்
என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி
யாரும் சிந்திப்பதும் இல்லை;
யாரும் யோசிப்பதும் இல்லை;
மனிதத் தன்மை சிதைந்து விட்டது;
மனிதத் தன்மை இறந்து விட்டது;


பிணத்தை எப்போது எடுப்பார்கள்
நான் வீட்டிற்கு போக வேண்டும்
எனக்கு வேலையிருக்கிறது என்பார்கள்;
மற்றவர்களுக்கு ஏற்பட்ட
துக்கத்தைப் பற்றி,
கஷ்டத்தைப் பற்றி,
சிந்திக்கவே மாட்டார்கள்;
தனக்கும் இதே நிலைமை தான்
ஏற்படப் போகிறது என்று கூட
சிந்திக்க மாட்டார்கள்;
தனிப்பட்டு இருப்பார்கள்;
விலகி இருப்பார்கள்;
தள்ளி இருப்பார்கள்;
ஒதுங்கி இருப்பார்கள்;
கண்டும் காணாதது போல் இருப்பார்கள்;
தெரிந்தும் தெரியாதது போல் இருப்பார்கள்;
உணர்ந்திருப்பார்கள் ஆனால்
உணராதது போல் நடிப்பார்கள்;
நயவஞ்சக வேடம் போட்டுக் கொண்டு
அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்வார்கள்;

பிறர் கஷ்டத்தை கண்டும்
கலங்காமல்
மனம் இரங்காமல்
கல்மனம் கொண்டவர் போல் இருப்பார்கள்;
இது தான் இப்போதைய நிலை
இதைத் தான்
உண்மைத் தன்மையற்ற செயல் என்கிறோம்.
இதைத் தான் இப்போது உள்ளவர்களில்
ஒரு சிலர்
புதுமை என்கின்றனர்.

பிறர் துன்பத்தை
தன் துன்பம் போல் பார்ப்பது பழமை;
பிறர் துன்பத்தை
கண்டும் காணாதது போல் நடிப்பது புதுமை;

ஒன்றுபட்டு இருப்பது பழமை;
ஒற்றுமையின்றி இருப்பது புதுமை;

ஆனால்
உண்மைத் தன்மையுள்ள செயலை பழமை என்றும்
உண்மைத் தன்மையற்ற செயலை புதுமை என்றும்
சொல்லுகிறோம்

இன்றும் நமது நாட்டில்
இத்தகைய கோட்பாடுகள்,
இத்தகைய வழிமுறைகள்,
இத்தகைய சட்டதிட்டங்கள்
ஆகியவற்றை வகுத்துக்கொண்டு
இருக்கும் கிராமங்கள்
இன்றும் இருக்கத் தான் செய்கின்றன.

அதே முறையைப் பின்பற்றி,
அதே சட்டதிட்டங்களைப் பின்பற்றி,
அதே நடைமுறை வாழ்க்கையைப் பின்பற்றி,
அதே வாழ்வியல் இலக்கணங்களைப் பின்பற்றி,
அதன்வழி செல்லும் கிராமங்கள்
இன்றும் இருக்கத் தான் செய்கின்றன.


கிராமத்திற்கும், நகரத்திற்கும்
இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டால்
வேற்றுமையின் தன்மை விளங்கும்.

நகரம் தான் உயர்ந்தது;
நகரத்தில் உள்ளவர்கள் உயர்ந்தவர்கள்;
கிராமத்தில் உள்ளவர்கள் தாழ்ந்தவர்கள்;
நகரத்தில் உள்ளவர்கள் சிறந்தவர்கள்;
கிராமத்தில் உள்ளவர்கள் நாகரிகத்தில் தாழ்ந்தவர்கள்;

நகரம் உயர்ந்தது
நகரத்தில் உள்ள மக்கள் உயர்ந்தவர்கள்
கிராமத்தில் உள்ள மக்கள் தாழ்ந்தவர்கள்
என்ற நிலையை உருவாக்கி வைத்து விட்டனர்.

தவறான ஒரு உண்மையற்ற தன்மையை
அவர்கள் விதைத்து விட்டனர்.

கிராமத்தில் நடக்கும்
இந்த செயலை எடுத்துக் கொண்டால்
அந்த செயலை பார்ப்பவர்களில்
ஒருசிலர் இந்த செயலில் அர்த்தம் இல்லை
தேவையற்ற செயல்
தேவையற்ற செயலை செய்து வருகின்றனர்.
அந்தக் காலத்தில் செய்த தேவையற்ற செயலை
இந்தக் காலத்திலும் பின்பற்றி
செய்து வருவது மடமை என்று
உண்மைத் தன்மையுள்ள ஒரு செயலை
உண்மைத் தன்மையற்ற செயலாக மாற்ற
பழமை என்ற பெயரை சொல்லி பயன்படுத்தி
பழமையை விட்டு வெளியே வந்து சிந்தித்து
செயல்களைச் செய்ய வேண்டும் என்று
உண்மைத் தன்மையுள்ள  ஒரு செயலை
பழமை என்ற சொல்லின் மூலம்
உண்மைத் தன்மையற்ற செயலாக்கி
விடுகின்றனர்.

கிராமம் என்பது ஓர் இன மக்கள்
ஒற்றுமையாக வாழம் இடம்;
நகரம் என்பது
பிழைக்க வந்தவர்கள்
இருக்கும் இடம்;
வெவ்வேறு கிராமத்தில் இருந்து வந்து
ஒரு இடத்தில் தங்குவதற்கு
பெயர் நகரம்.

பிழைப்புக்காக வந்தவர்கள்;
பிழைப்பைத் தேடி வந்தவர்கள்;
வாழ வழியில்லாமல் வந்தவர்கள்;
வாழ்வைத் தொலைத்து விட்டு வந்தவர்கள்;
வாழ வழி தெரியாமல் ஓடி வந்தவர்கள்;
வாழவைப் பார்த்து பயந்து வந்தவர்கள்;
வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாதவர்கள்;
வாழ்வின் அர்த்தம் புரியாதவர்கள்;
வந்து ஒன்றாகக் கூடி வசிக்கும் இடம் நகரம்
பல்வேறு பட்ட இனம், மதம், சாதி
கொண்ட மக்கள் இருப்பார்கள்.
அதற்குப் பெயர் தான் நகரம்.

பிழைப்பை நடத்துபவர்கள் இருந்த இடம் கிராமம்;
பிழைப்பைத் தேடி வந்தவர்கள் பிழைக்கும் இடம் நகரம்;
ஆனால் நாம்,
நகரத்தை உயர்வாகக் கருதுகிறோம்;
கிராம மக்களின் செயல்பாடுகளை இழிவாகக் கருதுகிறோம்;
அர்த்தமற்றது என்று நினைக்கிறோம்;
கூடிவாழும் நிலையை உயர்வாகக் கருதாமல்
கூடிவாழ்வது போல் நடிப்பதை பெருமையாகக் கருதுகிறோம்;

ஒரு உண்மைத் தன்மையற்ற செயலை
நகரத்தில் நடைபெறும் செயலை
புதுமை என்ற பெயரை வைத்து
ஒரு உண்மைத் தன்மையற்ற செயலை
உண்மைத் தன்மையுள்ள செயல் என்கிறோம்.
அதை புதுமை என்று பெயர் கொண்டு
அழைத்துக் கொள்கிறோம்.

உண்மையுள்ள செயலையும்
உண்மைத் தன்மையற்ற செயலையும்
தங்கள் சுயநலத்திற்கு ஏற்றபடி
மாற்றி அமைத்துக் கொள்வதற்கு
பழமை புதுமை என்ற சொல்லை
பயன்படுத்தி வருகிறோம்.

ஒரு உண்மைத் தன்மையுள்ள செயலை
பழமை என்ற சொல்லைப் பயன்படுத்தி
உண்மைத் தன்மையற்ற செயலாகவும்;
உண்மைத் தன்மையற்ற செயலை
புதுமை என்ற சொல்லைப் பயன்படுத்தி
உண்மைத் தன்மையுள்ள செயலாகவும்;
மாற்றி விடமுடியும்.

இதே வழிமுறையைக் கையாண்டு
இச்சமுதாயம்
உண்மைத் தன்மையுள்ள செயலையும்
உண்மைத் தன்மையற்ற செயலையும்
தங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி
மாற்றி வைத்து
செயல்படுத்தி வருகின்றனர்.

இச் சமுதாயத்தில் நடைபெறும் செயல்களை
உற்று நோக்கினால்
இத் தவறுகள்
உண்மை என்ற போர்வையில் நடைபெற்று வருவதை
உணர்ந்து கொள்ளலாம்.

உண்மைத் தன்மையுள்ள விஷயங்களை
ஒரு செயலில் உள்ள உண்மைத் தன்மையை
புரிந்து கொள்ளாத காரணத்தினால்
உண்மைத் தன்மையுள்ள
ஒரு விஷயத்தை பழமை என்ற பெயரில்
ஒதுக்குகிறோம்.
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓய்வூதியம்
மிகவும் முக்கியமான ஒரு வார்த்தை
பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த வார்த்தை
ஓய்வூதியம் என்ற வார்த்தை;
வார்த்தையில் உள்ள அர்த்தம் மட்டும் அல்ல
வாழ்க்கையையும் அர்த்தம் நிறைந்ததாக
மாற்றக் கூடியதாய் இருந்தது
ஓய்வூதியம் என்ற வார்த்தை;

ஓய்வூதியம்
என்ற வார்த்தையை கண்டுபிடித்தவரையும்,
ஓய்வூதியத்தை செயல்படுத்தியவரையும்,
சற்று உற்று நோக்கினோமேயாகில்,
சற்று உற்று பார்த்தோமேயாகில்,
எதிர்கால சிந்தனை;
தொலை நோக்கு பார்வை;
இரக்க சிந்தனை;
உயர்ந்த நோக்கு;
ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள்
என்பதை உறுதியாக நம்பலாம்.
ஏனென்றால்,
மிக உயர்ந்த ஒன்றை,
மிக உன்னதமான ஒன்றை,
சிந்தித்து செயல்படுத்த வேண்டுமென்றால்
உயர்ந்த எண்ணம் கொண்ட
உயர்வான மனதைக் கொண்டவர்களால்
மட்டுமே முடியும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை
தன்னுள் கொண்டது தான் ஓய்வூதியம்

ஓய்வு+ஊதியம்= ஓய்வூதியம்
ஓய்வு பெறும் வயதில்
உழைக்க முடியாமல்
தள்ளாடும் முதுமை நிலையில் தரப்படும்
ஊதியம் தான்
ஓய்வூதியம்.

முதுமை நிலையில்,
தள்ளாடும் வயதில்,
உழைப்பதற்கு உடலில்
தெம்பு இல்லாத காலத்தில்,
வளர்ந்த சென்ற பிள்ளைகள்
பெற்றோர்களை காப்பாற்றாமல்
விட்டு விட்ட நிலையில்,
வயதானவர்களுக்கு உதவும் வகையில்
பரந்த மனம் கொண்டவர்கள்
இல்லாத நிலையில்,
பாசம் இல்லாத பிள்ளைகள்;
பரிவு காட்டாத நெஞ்சங்கள்;
புரிந்து கொள்ளாத உறவுகள்;
பிரிந்து சென்ற சுற்றங்கள்;
பறந்து சென்ற இரக்கங்கள்;
இறந்து போன கருணைகள்,
இருக்கும் நிலையில்,
அன்பில்லாத பிள்ளைகளை நாடி
அவர்களை அண்டி வாழாமல்,
உதவக்கூடிய உள்ளங்கள்
இல்லாத நிலையில்,
தன்னைத் தானே காப்பாற்றி
வாழக் கூடிய ஒரு நிலையை
அளிப்பது தான் ஓய்வூதியம்.

அந்தக் காலத்தில்
உயர்ந்த எண்ணம் கொண்டவர்களால்
உருவாக்கப்பட்டு ,
உயர்வான எண்ணம் கொண்டவர்களால்
வழிநடத்தப்பட்டு,
நடைமுறைப்படுத்தப்பட்டு,       
செயல்படுத்தப்பட்டு வந்தது ஓய்வூதியம்.

ஓய்வூதியத்தால் அரசுக்கு
அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது
என்பதை காரணம் காட்டி
ஒரு சிலர் ஓய்வூதியத்தை நிறுத்தி விட்டனர்.

பலபேருக்கு பயன்பட்டு வந்த ஒரு திட்டம்
பலபேரை வாழ வைத்த திட்டம்
முடக்கப்பட்டு விட்டது;
நிறுத்தப்பட்டு விட்டது;
ஒரு சிலர் மட்டும் பயன்பெறும் திட்டம்
என்று சிலரால் சொல்லப்பட்டது.

பத்துப்பேரில் நாலு பேராவது
நலமாக இருக்க வேண்டும்
என்று இச் சமுதாயம் நினைப்பதில்லை.
பத்துப்பேரும் நாசமாகப் போக
வேண்டும் என்று நினைக்கிறது.

பத்துப்பேரில்
ஒரு நாலு பேராவது ஓய்வூதியம் பெற்றால்
நன்றாக இருக்குமே என்று நினைத்திருந்தால்
ஓய்வூதியம் கைவிடப்பட்டிருக்காது.
தனக்கு கிடைக்காதது
மற்றவருக்கு கிடைக்கக்கூடாது என்ற
நினைப்பு கொண்ட இச் சமுதாயத்தில்
ஓய்வூதியம் கைவிடப்பட்டது
ஆச்சரியப்படத் தக்க விஷயம் இல்லை.

ஓய்வூதியத்தை நிறுத்தியதை
எதிர்த்தவர்கள் ஓய்வூதியம்
பெற்றவர்கள் மட்டுமே
இதிலிருந்தே மக்களின் மனநிலை
எவ்வாறு மாறி விட்டது
என்பதைத்  தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வூதியத் திட்டத்தை
உண்மைத் தன்மையுள்ள ஒரு திட்டத்தை
பழமை என்ற பெயர் கொடுத்து
உண்மைத் தன்மையற்றதாக
மாற்றி விட்டனர்.

ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி
நிறுத்திய அந்த செயலை நியாயப்படுத்துவதற்காக
அதாவது உண்மைத் தன்மையற்ற ஒரு செயலை
உண்மைத் தன்மையுள்ள ஒரு செயலாக
புதுமை என்ற பெயரில்
உண்மைத் தன்மையுள்ள செயலாக
மாற்றி விட்டனர்.

பழமை என்ற வார்த்தையையும்
புதுமை என்ற வார்த்தையையும்
உண்மைத் தன்மையுள்ள செயலையும்
உண்மைத் தன்மையற்ற செயலையும்
தனது விருப்பத்திற்கு ஏற்றபடி
மாற்றி பயன்படுத்துகிறது
இச்சமுதாயம்.

ஒரு செயலை நாம் ஆராயும்போது
செயலில் உள்ள உண்மைத் தன்மையை மறைத்து
பழமை என்ற பெயரில்
உண்மைத் தன்மையை மறைக்க
முயற்சி செய்யும்
ஒரு பிரிவினரையும்,
செயலில் உள்ள உண்மைத் தன்மையற்ற தன்மையை
புதுமை என்ற பெயரில்
உண்மைத் தன்மையாக மாற்ற
முயற்சி செய்யும்
மற்றொரு பிரிவினரையும்,
நாம் நம் அறிவுக் கண்கள் மூலமாக
பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இயேசு பன்னிரு சீஷர்களையும்
அழைத்து சொன்னார்.
பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது
என்று பிரசங்கியுங்கள்

பரலோக ராஜ்யம் என்றால்
பரம்+லோகம்+ராஜ்யம்=பரலோக ராஜ்யம்
பரம் என்றால்
நேர் இல்லாதது
உவமை இல்லதாதது
அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது
என்று பொருள்.

அதுவே உயர்ந்தது
அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது
அதனால் தான்
அதற்கு பெயர் பரலோகராஜ்யம்.

பரலோகராஜ்யம் நமக்கு
அருகில் இருக்கிறது
என்று அறியாதவர்களுக்கு சொல்லுங்கள்.
யாருக்கு எந்த ஒன்றைப் பற்றி தெரியாதோ
அந்த ஒன்றைப் பற்றி அவர்களுக்கு சொல்லுங்கள்.

ஒன்றைப் பற்றி நாம் அறிந்து
கொள்ள வேண்டுமென்றால் அதற்கு
இரண்டு நிலைகள் தேவைப்படுகிறது

                          ஒன்று       பொருள் நிலை
                 மற்றொன்று      அருள் நிலை

பொருள் நிலையில் உள்ளவைகள்
அனைவருக்கும் தெரியும்
அது பார்க்க முடிந்தது;
அருள் நிலையில் உள்ளவைகள்
அனைவருக்கும் தெரியாது
அது உணரக்கூடியது;

உணரக் கூடியவைகளை
அனைவராலும் உணர முடியாது.
உணர்ந்தவர்களால் மட்டுமே
உணரக் கூடியவைகளை
உணர முடியாதவர்களுக்கு உணர்த்த முடியும்.

உணராதவர்கள் உணராதவர்களுக்கு
சொல்ல முடியாது
உணர்ந்தவர்கள் மட்டுமே
உணராதவர்களுக்கு சொல்ல முடியும்.
அருள் நிலையை உணர்ந்தால்
மட்டுமே சொல்ல முடியும்

அருள் நிலை உணர்ந்தவர்கள்
அருள் நிலையை உணராதவர்களுக்கு
அருள் நிலையை உணர்த்த வேண்டும்;
அருள் நிலையை  உணர வைக்க வேண்டும்;
அருள் நிலையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி
அதை எதிர்பார்ப்பவர்களுக்கும்,
எதிர்பார்க்காதவர்களுக்கும் அளிக்க வேண்டும்;
அருள் நிலையை மற்றவர்களும் பெறுவதற்கான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
அருள் நிலையை உணர வைப்பதற்கான
வழிமுறைகளை  போதிக்க வேண்டும்.

அருள் நிலையை உணர்ந்து
அருள் நிலையைப் பெற்றவர்கள்
அருள் நிலையை உணராதவர்களுக்கு,
அருள் நிலையைப் பெறாதவர்களுக்கு,
அருள் நிலையை இலவசமாக அளிக்க வேண்டும்.
அருள் நிலை இறைவன் அளித்தது
அந்த அருள் நிலையை
இலவசமாகத் தான் கொடுக்க வேண்டும்.

வியாதியுள்ளவர்களை குணப்படுத்துங்கள்;
குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுங்கள்;
மரித்தோரை எழுப்புங்கள்;
பிசாசுகளைத் துரத்துங்கள்;
இலவசமாய்ப் பெற்றீர்கள்;
இலவசமாய்க் கொடுங்கள்;
இதற்காக எந்த பொருளையும்
எதிர்பார்க்க வேண்டாம்
அருளுக்கு பொருள் இணையானதல்ல
ஆகவே, அருளை அளிக்கும் போது
பொருளை எதிர்பார்க்காதீர்கள்
இலவசமாய்ப் பெற்றீர்கள்;
இலவசமாய்க் கொடுங்கள்;
என்கிறார் இயேசு.

அருள் நிலையை உணர்ந்தவர்கள்
இறைவனுக்கு பாத்திரமானவர்கள்
இறைவனுடன் பிணைக்கப்பட்டவர்களுக்கு
எது தேவை, எது தேவை இல்லை என்பதை
இறைவனே தீர்மானிப்பார்.
அதனால் இறைவன் அருளைப் பெற்றவர்கள்
பொருளைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை
பொருளைத் தேடி வைக்க வேண்டிய அவசியமில்லை
பொருளைத் தேடி சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்
ஆகியவற்றை இறைவனே
இறைவனின் அருள் பெற்றவர்களுக்கு அளிக்கும் போது
இறைவனின் அருள் பெற்றவர்கள்
தங்களுக்கு உடமையாக,
தங்களுக்கு சொந்தமாக,
தங்களுக்கு உரிமையாக,
எதையும் சேர்த்து வைக்க வேண்டாம்.
பொன், பொருள், மண்
ஆகியவற்றை தேடி சேர்த்து வைக்க வேண்டாம்.

அருள் நிலை பெற்றவர்கள்
எங்கே சென்றாலும்,
எங்கே வசித்தாலும்,
அவர்களுக்கு எந்த இடத்தில் எது தேவையோ
அந்த இடத்தில் அவர்களுக்கு
அது அளிக்கப்படும்.

அருள் நிலை பெற்றவர்களுக்கு
எந்த இடத்தில்,
எந்த நேரத்தில்,
என்ன அளிக்க வேண்டுமோ
அதை இறைவன் அளிக்கும்போது
இறைவனின் அருள் பெற்ற - நீங்கள்
கச்சைகளில்
பொன்னையாவது, செம்பையாவது,
வழிக்காகப் பையையாவது,
இரண்டு அங்கிகளையாவது,
பாதரட்சைகளையாவது, தடியையாவது,
தேடி வைக்க வேண்டாம்
என்கிறார் இயேசு

எந்தப் பட்டணத்திலாவது
எந்த கிராமத்திலாவது பிரவேசிக்கும்போது
இறைவனின் அருளைப் பெற்றவர்கள்
யார் என்று விசாரித்து
அவர் வீட்டில் தங்கியிருங்கள்
அத்தகையவர் வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது
அதை வாழ்த்துங்கள்.

உண்மையாகவே அவர்கள்
இறைவனின் அருளைப் பெற்றவர்களாக இருந்தால்
உங்கள் சமாதானம் அவர்களுக்கு கிடைக்கக் கடவது
இறைவனின் அருளைப் பெறாதவர்களாக இருந்தால்
உங்கள் சமாதானம் மீண்டும்
உங்களுக்கே திரும்பக் கிடைக்கக் கடவது
என்கிறார் இயேசு.

அருள் நிலையை நீங்கள் அளித்து
அருள் நிலையை உணராதவர்கள்
அருள் நிலையை ஏற்றுக் கொள்ளவில்லையெனில்
அந்த அருள் நிலை - மீண்டும்
உங்களிடமே திரும்பி வந்து விடும்.

அருள் நிலையை உணர்ந்தவர்
தன் கையில் உள்ள
அருள் என்ற பந்தை
அருள் நிலையை உணராதவர்
அருள் நிலையை உணர வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கில்
சுவர் என்ற அருள் நிலை உணராதவர் மீது
அருள் என்ற பந்தை அவர் மீது எறியும் போது - அவர்
அதை புரிந்து கொள்ளவில்லையெனில்
அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையெனில்
அருள் என்ற பந்து - மீண்டும்
அருள் பெற்றவர் கைக்கே வந்து விடுகிறது.

அருள் நிலை உணர்ந்த நீங்கள்
பந்து போன்ற அருளை அளிக்கும்போது
வீட்டின் சுவரான அருளை உணராதவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளவில்லையெனில்
அருள் என்ற பந்து எப்படி திரும்பி வருகிறதோ
அதைப்போல்,
அருள் நிலையை உணர்ந்த நீங்கள்
அருள் நிலையை அளிக்கும் போது
அருள் நிலையை உணராமல்
அருள் நிலையை ஏற்றுக் கொள்ளவில்லையெனில்
அளித்த அருள் - மீண்டும்
உங்களிடமே வரும்.

அருளை அளிக்கும் போது
அருளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
அருளை ஏற்றுக் கொள்ளக்கூடிய
நிலையில் இல்லையெனில்
அருளை ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதி
அவர்களுக்கு இல்லை என்றும்
அருள் இல்லாததால் அவர்கள்
பொருள் நிலையில் இருந்து கஷ்டப்பட வேண்டும் என்றும்
அருள் இல்லாததால்
பல்வேறு இன்னல்களுக்கு
ஆளாக வேண்டும் என்றும் என்பதை உணர்ந்து
அவர்கள் கஷ்டப்படட்டும் என்பதை உணர்ந்து
அவர்கள் வீட்டை விட்டு புறப்படுங்கள்
நியாயத் தீர்ப்பு நாளிலே
அவர்களுக்கு என்ன எது வழங்கப்பட வேண்டுமோ
அது வழங்கப்பட்டு விடும்.

இறைவனின் அருளைப் பெற்ற,
இறைவனுடன் இணைந்து இருக்கும்
உயர்ந்த அருளைப் பெற்ற,
இறைவனின் வார்த்தைகளைக் கைக்கொள்ளும்
சிறந்த தன்மைகளைப் பெற்ற,
உங்களுடைய அருள் மொழிகளை
ஏற்றுக் கொள்ளவில்லையெனில்
இறைவனின் அருளைப் பெற்றவர்கள் - நீங்கள்
என்பதை உணர்ந்து கொள்ளவில்லையெனில்
அந்த பட்டணத்தையாவது,
அந்த வீட்டையாவது,
விட்டு விட்டு புறப்படுகையில்
வருத்தப்படுங்கள்.
ஏனென்றால், நியாயத் தீர்ப்பு நாளிலே
யாருக்கு - எதற்கு
என்ன நிலையில் - எத்தகையது
வழங்கப்பட வேண்டுமோ - அத்தகையது
அவர்களுக்கும் - அவைகளுக்கும் வழங்கப்படும்.

இறைவனின் அருளைப் பெற்றவர்களையும்;
அவர்கள் உரைக்கும்,
அருள் மொழிகளை உணராதவர்கள்;
அருள் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்;
அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை
அவர்களை இழிவுபடுத்துவதோ, உதாசீனப் படுத்துவதோ கூடாது
அப்படி இழிவு படுத்தினால்
இழிவு படுத்துபவர்கள்
அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்
நியாயத் தீர்ப்பு நாளிலே
அவர்களுக்கு என்ன வழங்கப்பட வேண்டுமோ
அது அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்
என்கிறார் இயேசு.

அருள் நிலையில் உள்ளவர்களுக்கு
பொருள் நிலை தேவையில்லை;
பொருள் நிலையில் உள்ளவர்களுக்கு
அருள் நிலை தேவையில்லை;

பொருள் நிலையில் வாழ்க்கையை நடத்துபவர்கள்
அருள் நிலையைப் பற்றி
யோசிப்பதுமில்லை; கவலைப்படுவதுமில்லை;
அருள் நிலையைப் பற்றி அறியாதவர்களுக்கே
அருள் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டும்
அருள் நிலையை அறிந்தவர்கள்
அருள் நிலையை உணர்ந்தவர்கள்
இறைவனின் அருளைப் பெற்றவர்கள்
ஆகியவர்களுக்கு
அருள் நிலையைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அருள் நிலை
பொருள் நிலை என்ற இரண்டு நிலைகளில்
அருள் நிலையில் உள்ளவர்களுக்கு
பொருள் நிலை தெரியாது;
பொருள் நிலையில் உள்ளவர்களுக்கு
அருள் நிலை தெரியாது;
அருள் நிலையைப் பெற்றவர்கள்
அருள் நிலையைப் பற்றி
உணராதவர்களுக்கு
அருள் நிலையைப்பற்றி
உரைக்கும் போது
அருள் நிலையை உணராதவர்களில் சிலர் ஏற்றுக்
கொள்வார்கள்.
அருள் நிலையை உணராதவர்களில் சிலர்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு
அருள் நிலையைப் பற்றி உரைப்பது கடினம்.

அருள் நிலையை உணராதவர்களுக்கு
அதை அவர்கள் உணரும்படி
அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி
அருளை அவர்களும் உணர வேண்டும் - என்ற
உயர்ந்த நோக்கில்
அருள் நிலையைப் பற்றியும்,
அதைப் பெறும் வழிமுறைகளைப் பற்றியும்,
அருளைப் பெற்றால் கிடைக்கக் கூடிய நன்மைகளையும்,
அருளைப் பெறுவதன் மூலம்
பெறக்கூடிய உன்னதமான வாழ்க்கையைப் பற்றியும்,
அருளைப் பெற்றவர்களுக்கு
பொருள் தேவையில்லை என்பதை பற்றியும்,
அருள்
அருளாகி
அருளை அளித்து
அருள் நம்மை வழிநடத்தி
அருளுடன் இணைய வைத்து
அருளாகவே மாற்றும் என்ற
உன்னத வாக்கியங்களை
அருளை உணராதவர்களுக்கு
அருள் நிலையைப் பற்றி
சொல்லும்போது,
பொருள் நிலையில் உள்ளவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளும்
மன நிலையில்
இருக்க மாட்டார்கள்.

பொருள் நிலையில் பழக்கப்பட்டு விட்டதால்
அவர்கள் பொருளாகவே மாறி இருப்பார்கள்.
மனம் பொருளாகவே மாறி இருக்கும் - அதனால்
அருள் நிலையை ஏற்றுக் கொள்ளும்
மன பக்குவம் அவர்களுக்கு இருக்காது.

அத்தகையவர்கள் ஆபத்தானவர்கள்;
அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;
அவர்களிடம் நீங்கள் அருள் நிலையை விளக்கினால்
அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பொருள் நிலையில் உள்ளவர்கள்
மனம் பொருள் நிலையில் உழன்று கல்லாகி
மிருக நிலை அடைந்து விட்டதால்,
அத்தகையவர்கள்
மிருக நிலையை விட மிகவும் ஆபத்தானவர்கள்
அதனால் தான் இயேசு
சொல்கிறார்

ஆடுகளைப் போல அமைதியாக இருக்கும் உங்களை
அருள் நிலையை உணராத ஓநாய்களுக்கு நடுவே அனுப்புகிறேன்
ஓநாய்களுக்கு நடுவே மாட்டிக் கொண்ட ஆடுகள்
என்ன பாடுபடுமோ
அத்தகைய ஒரு நிலையை
அருள் நிலையை உணர்ந்த நீங்கள்
அருள் நிலையை உணராதவர்களிடம்
கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஆகையால் அருள் நிலையைப் பெற்ற நீங்கள்
அருள் நிலையைப் பெறாதவர்களிடம் செல்லும்போது
சர்ப்பங்களைப் போலவும்; புறாக்களைப் போலவும்;
இருக்க வேண்டும் என்கிறார்.

பாம்பு தன்னை அழிக்க வருபவர்களை - சீறி
தன்னை காத்துக் கொள்ள  முயற்சி செய்யும்
அதைப் போல, நீங்கள்
அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

புறாக்களைப் போல கள்ளம், கபடம் அற்ற
மனதை உடையவர்களான நீங்கள்
அருள் நிலையை உணராதவர்களிடம்
எச்சரிக்கையாக இருங்கள்;
அவர்கள் உங்களுக்கு பல்வேறு விதமான
இன்னல்களைச் கொடுப்பார்கள்;
துன்பங்களைக் கொடுப்பார்கள்;
ஏச்சுக்களை வீசுவார்கள்;
தகாத வார்த்தைகளைப் பேசுவார்கள்;
அடிப்பார்கள்; உதைப்பார்கள்;
அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்றும்,
என்னதைப் பற்றி பேச வேண்டும் என்றும்,
நீங்கள் கவலைப்பட வேண்டாம்

நீங்கள் என்ன பேச வேண்டும் என்றும்
எப்படி பேச வேண்டும் என்றும்
அந்த நேரத்தில் ,
உங்களுக்கு  அருளப்பட வேண்டும்.

இறைவனின் அருளைப் பெற்றவர்களுக்கு
எப்படி பேச வேண்டும்
என்னதைப் பற்றி பேச வேண்டும்
என்பது இறைவனால் அருளப்படும்.

நீங்கள் பேச ஆரம்பித்தால் போதும்
உங்களுக்கு பேச வேண்டியவைகள் எவை என்றும்
உங்களுக்கு பேசத் தகுந்தவைகள் எவை என்றும்
உங்களுக்கு அருளப்படும்.

ஏனென்றால்,
பேசுவது நீங்கள் அல்ல
உங்கள் ஆண்டவரே
உங்கள் மூலமாக பேசிக் கொண்டிருப்பவர்
நீங்கள் பேச ஆரம்பித்தால் இறைவனே பேசுவார்
ஆகவே,
என்ன பேச வேண்டும் என்றும்,
எதைப் பற்றி பேச வேண்டும் என்றும்,
கவலைப்பட வேண்டாம்.

இறைவனின்
அருள் நிலையை உணர்ந்தவர்கள்
அருள் நிலையை உணராதவர்களுக்கு
இறைவனின் அருள் நிலையைப் பற்றி சொல்லும்போது
அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
உங்களை தவறாக நினைப்பார்கள்;
பகைவர்களாக நினைப்பார்கள்;
அதனால்,
அருளை உணராதவர்களால்
பகைக்கப்படுவீர்கள்;
அருளை உணர்ந்தவர்களால்
பகைக்கப்பட மாட்டீர்கள்;
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் நிலையை உணர்ந்தவர்கள் மட்டுமே
அருள் நிலையை பெற்றவர்கள் மட்டுமே
நிலைத்திருப்பார்கள்;
அருள் நிலையை உணராதவர்கள்
நிலைத்திருக்க மாட்டார்கள்;

ஒரு ஊரில் உங்களைத் துரத்தினால்
நீங்கள் வேறு ஊருக்கு செல்லுங்கள்.

அருளை ஏற்பவர்களுக்கு அருளை அளியுங்கள்;
அருளை ஏற்காதவர்களிடமிருந்து பிரிந்து செல்லுங்கள்;

குருவை விட சீஷன் உயர்ந்தவனல்ல
எஜமானனனை விட வேலைக்காரன்
உயர்ந்தவன் அல்ல
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

குருவையும் - சீஷனையும்
எஜமானனையும் - வேலைக்காரனையும்
வேறுபடுத்தி பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

குரு ஆனவர் கடல் மாதிரி,
சீடன் ஆறு மாதிரி,
பல ஆறுகள் ஒன்றாக சேரும் இடம் கடல்
குரு ஒருவர் தான்
சீடர்கள் பலர் இருக்க முடியும்
எனவே,
குருவும் சீடனும் வேறு வேறு
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அருள் நிலை உணர்ந்தவர்கள்
அருள் நிலையை உணராதவர்களுக்கு
அருள் நிலையை அளிக்கும் போது
ஏற்படக்கூடிய இன்னல்களையும்
அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற முறைகளையும்
இயேசு,
தன் சீடர்களுக்கு அருளி
அருள் நிலையை உணராதவர்களுக்கு
அருள் நிலையை அடையும்படி செய்ய
மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி
அறிவுரை வழங்கினார்.

பொருள் நிலையில் உள்ளவர்களை
அருள் நிலைக்கு கொண்டு வருவது
எவ்வளவு கடினம் என்பது தெரியும்
எனினும்,
அருள் நிலை அடைந்தவர்கள்
அருள் நிலையை அடையாதவர்களுக்கு
அருள் நிலையை வழங்க வேண்டும்
என்கிறார் இயேசு.

உண்மைத் தன்மையுடையவை எவை என்றும்
உண்மைத் தன்மையற்றவை எவை என்றும்
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
புரிந்து பின்பற்ற முடியவில்லை என்றால்
புரிந்து தன்னை சீர்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால்
இறைவனின் அருள் பெற்று
அருள் நிலை அடைய முடியாமல்
பொருள் நிலையில் சிக்கி
துன்பப்பட வேண்டியது தான்
என்கிறார் இயேசு.




அழுகுணிச் சித்தர்

"""""உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
                       மச்சுக்கு மேலேறி வானுதிரத் தானெடுத்துக்
           கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
           வச்சு மறந்தல்லோ என்கண்ணம்மா
                                         வகைமோச மானேன்டி""""""

                                                            ----------அழுகணி சித்தர்
                                                            ----------பெரிய ஞானக் கோவை

சமுதாயத்தில் திருட்டு
இரண்டு நிலைகளில் நடைபெற்று வருகிறது
தெரிந்தும் தெரியாமலும்
திருட்டு நடை பெற்று வருகிறது;
அறிந்து கொள்ள முடியும் வகையிலும்
அறிந்து கொள்ள முடியாத வகையிலும்
திருட்டு நடை பெற்று வருகிறது;
பெரும்பாலானவர்களால் உணர்ந்து கொள்ளும் வகையிலும்
பெரும்பாலானவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும்
திருட்டு நடைபெற்று வருகிறது;

சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
இத்தகைய திருட்டை இரண்டு நிலைகளில்
வகைப்படுத்தி விடலாம்

                         ஒன்று       நேரடியாக நடைபெறும் திருட்டு
           மற்றொன்று         மறைமுகமாக நடைபெறும் திருட்டு

திருட்டு என்றாலே
மறைமுகமாக நடை பெறுவது தான் - எப்படி
நேரடியாக நடைபெறும் திருட்டு - என்று
ஒன்று இருக்க முடியும்.
நேரடியாக நடைபெறும் திருட்டிற்கும்
மறைமுகமாக நடைபெறும் திருட்டிற்கும்
வேறுபாடு இருக்கிறது.

நேரடியாக நடைபெறும் திருட்டானது
கண்டு பிடிக்கப்பட்டால் தண்டனை உண்டு;
மறைமுகமாக நடைபெறும் திருட்டானது
கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை அளிக்க முடியுமா
என்பதே கேள்விக்குறி;

மறைமுகமாக நடைபெறும்
திருட்டை கண்டுபிடிப்பதே கடினம்;
அப்படியே கண்டுபிடிக்கப்பட்டாலும்
தண்டனை அளிப்பது கடினம்;

ஒருவர் பிறருடைய அனுமதியின்றி
பிறருடைய பொருளை அபகரிப்பது
நேரடியான திருட்டு.

மறைமுகமான திருட்டை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.

                     ஒன்று        :         பிறருடைய உழைப்பை திருடுவது
             மற்றொன்று   :          பிறருடைய அறிவை திருடுவது

நேரடியான திருட்டு ஆபத்தானது தான்
ஆனால், அதை விட ஆபத்தானது
மறைமுக திருட்டு.

ஒருவர் பிறருடைய அனுமதியின்றி
பிறருக்கு சொந்தமான பொருளையோ,
பிறருக்கு சொந்தமான நகைகளையோ,
பிறருக்கு சொந்தமான பணத்தையோ,
அபகரித்து
தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது
நேரடியான திருட்டு.

இத்தகைய திருட்டு கண்டு பிடிக்கப்பட்டு
திருடியவர் கண்டுபிடிக்கப்பட்டு
குற்றம் நிரூபிக்கப்படும் போது
குற்றத்திற்குரிய தண்டனை
திருட்டிற்குரிய தண்டனை அளிக்கப்படுகிறது
இது நேரடியானதிருட்டு.

விவசாயி நிலத்தில்
விதை விதைத்து; நீர் பாய்ச்சி;
உரம் இட்டு; களை பறித்து;
அறுவடை செய்து மூடையாக
கட்டி வைக்கிறான்.

அதை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி
கார், பங்களா, என்று சுகபோகத்தில் இருக்கிறான்;
உழைப்பாளி குடிசையில் இருக்கிறான்;
வியாபாரி பங்களாவில் இருக்கிறான்;

கடினப்பட்டு உழைக்கும் உழைப்பாளி
கண்ணீர் சிந்தி வாழ்க்கையை நடத்துகிறான்.
கிடைக்க வேண்டியவை கிடைப்பது இல்லை
பஞ்சம், பசி, பட்டினி என்று காலத்தை
நகர்த்துகிறான்.

விவசாயி என்றாலே
சமுதாயம் இழிவான நிலையில்
பார்க்கும் நிலையில் தான் இருக்கிறது
பாடுபட்டு உழைக்கும் விவசாயி,
கடனில் தத்தளிக்கிறான்;
கண்ணீரில் மூழ்குகிறான்;
கவலையில் அமிழ்கிறான்;
துன்பத்தில் உழல்கிறான்;
துயரத்தில் தள்ளாடுகிறான்;
ஏழ்மையில் வாடுகிறான்;
சோகத்தில் மாள்கிறான்;
வாழ்க்கையை இழக்கிறான்;
சொல்லொணாத்துயரில் ஆழ்கிறான்;
ஆனால் அவனிடமிருந்து பெற்ற நெல்லை 
விற்று வியாபாரி உயருகிறான்.

உழைத்த விவசாயி ஏழ்மையில் தள்ளாடுகிறான்;
விற்ற வியாபாரி சுகபோகத்தில் திளைக்கிறான்;

உழைப்பை கொடுத்தவன் விவசாயி;
விவசாயியின் உழைப்பை திருடி விற்றவன் வியாபாரி;

விவசாயம் செய்து நெல்லை அறுவடை செய்து
மூட்டையில் அடைக்கிறான் விவசாயி;
அந்த நெல்லை விற்று உயர்கிறான் வியாபாரி;
அதாவது விவசாயியின் உழைப்பை வியாபாரி திருடுகிறான்.
இது தான் இன்னொருவருடைய
உழைப்பை திருடுவது
இது தான் சமுதாயத்தில்
பிறர் உழைப்பை திருடும்
மறைமுக திருட்டு.

ஒரு அரசியல்வாதி தன் தொண்டர்களை
போராட்டத்திற்கு அழைப்பார்;
போஸ்டர் ஒட்ட அழைப்பார்;
மாநாட்டுக்கு அழைப்பார்;
கொடி ஏந்தி செல்ல அழைப்பார்;
கட்சிக்காக பாடுபட வேண்டும்
ஓடிவா என்று அழைப்பார்;

நாட்டைக் காக்க
ஓடிவா என்று அழைப்பார்;
போராட்டம் என்று வந்து விட்டால்
முன்னால் ஓடி வா என்று அழைப்பார்;
இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்
போராட ஓடிவா என்று அழைப்பார்;
மொழியை காக்க விரைந்து
ஓடி வா என்று அழைப்பார்;
எந்த போராட்டம் என்றாலும்
அநீதியை அழித்து நீதியை நிலைநாட்ட
ஓடிவா என்று அழைப்பார்;

அரசியல் தலைவர்
அவருடைய கட்சியின் தொண்டர்களை
போராட்டத்திற்காகவும்;
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும்;
தன் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும்;
தன் புகழை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும்;
தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்;
தன் உயர்வை உயர்த்திக் கொள்வதற்காகவும்;
தன் அதிகாரத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும்;
தன் செல்வாக்கை
இச் சமுதாயம் அறிய வேண்டும் என்பதற்காகவும்;
தன் திறமையை அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்;
தன் பின்னே உள்ள தொண்டர்களின் எண்ணிக்கையை
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்;
தான் சொன்னால் எதிரி படையே நடுங்கும்
பார் நடுங்காதா என்பதை உணர வைப்பதற்காகவும்;
தன்னுடைய பெயரை அனைவருடைய மனதிலும்
பதிய வைக்க வேண்டும் என்பதற்காகவும்;
ஒரு கட்சியின் தலைவர் அல்லது
எந்த அரசியல் கட்சியின் தலைவரை
எடுத்துக் கொண்டாலும்
அதன் தலைவர் தொண்டர்களை பயன்படுத்துவார்.

தொண்டர்களை பயன்படுத்தி
எம்.எல். ஆவார்
மந்திரி ஆவார்.

உழைத்த தொண்டன்
குடிசையில் கஷ்டப்படுவான்;
ஏழ்மையில் திண்டாடுவான்;
உண்மை அறியாமல் கீழ் நிலையில் இருப்பான்.

தொண்டனின் உழைப்பை பயன்படுத்தியவர்
பதவியில். அதிகாரத்தில்
உயர்ந்த நிலையில் இருப்பார்;
உழைப்பை போட்ட தொண்டன்
கீழ்நிலையில் இருப்பான்;

தொண்டனின் உழைப்பை வாங்கிய அரசியல்வாதி,
உழைப்பை பயன்படுத்திய அரசியல்வாதி,
உழைப்பை திருடிய அரசியல்வாதி,
உயர் நிலையில் இருப்பான்.

உழைப்பை கொடுத்தவன் தாழ்நிலையில் இருக்கிறான்;
உழைப்பை திருடியவன் உயர்நிலையில் இருக்கிறான்;
இது தான் பிறருடைய உழைப்பை
மறைமுகமாக திருடுவது.
இதற்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்
இது சமுதாயத்தில் நடைபெறும்
மறை முகமான திருட்டு-இது
என்று கண்டு பிடிப்பதே கடினம்.

அப்படி இருக்கும் போது
எப்படி மறைமுக திருட்டிற்கு
மறைமுகமான உழைப்பை திருடும்
மறைமுகமான திருட்டிற்கு தண்டனை கொடுக்க முடியும்.

இது தான் மறைமுகமான நடைபெறும்
பிறருடைய உழைப்பை திருடும் திருட்டு;
இதைப்போல எவ்வளவோ திருட்டுக்கள்
மறைமுகமாக நடைபெறும் திருட்டுக்கள்
இச் சமுதாயத்தில் நடந்தேறி
வந்து கொண்டிருக்கிறது.
பிறர் உழைப்பை
திருடும் திருட்டுக்கள் நிறைய
எண்ணிக்கையில்  இச்சமுதாயத்தில் உள்ளன.

இவை இச்சமுதாயத்தில் இன்னமும்
நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது

மறைமுகமாக நடைபெறும்
பிறர் உழைப்பை திருடும் திருட்டு
திருட்டு பிரிவில் வருகிறது
என்று  கூட தெரியாமல்
இச் சமுதாயத்தில் உள்ள மக்கள் இருக்கிறார்கள்.

பிறர் உழைப்பை திருடும் திருட்டை விட
பிறருடைய அறிவைத்  திருடும் திருட்டு
ஆபத்தானது.

எதை வேண்டுமானாலும் திருடலாம்
என் அறிவை திருட முடியாது என்று
கூறுவதே தவறு.

ஒருவருடைய அறிவை திருடலாம்
பிறருடைய அறிவைத் திருடுவது தான்
இந்த உலகத்தில் சர்வ சாதாரணமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலாம் நபர்
இரண்டாம் நபருடைய
அறிவைத் திருடும் போது
இதைப் பார்க்கும் மூன்றாம் நபர்
முதலாம் நபருடைய அறிவை
இரண்டாவது நபர் திருடுகிறார் என்று
மூன்றாவது நபர் கூறுவது இல்லை.
இதைப் பார்க்கும் பெரும்பாலானவர்கள்
கூறுவது இல்லை.
அப்படி கூறாதவர்கள் பிறருடைய அறிவைத்
திருடுபவர்களாக இருப்பார்கள்.

சிலர் அவருடைய அறிவை
இவர் திருடுகிறார் என்று கூறுவர்
அந்த சிலர் பிறருடைய அறிவைத்
திருடாதவர்களாக இருப்பார்கள்.

அறிவைத் திருடுபவர்கள் மறைமுகமாக
பிறருடைய அறிவை எப்படி திருடுகிறார்கள்
என்பதை சிந்தித்து பார்த்தால்,
மிகப்பெரிய திருட்டாக அறிவுத் திருட்டு
இச்சமுதாயத்தில் மட்டுமல்லாமல்,
இந்த உலகம் முழுவதும் பரவலாக
பெரும்பாலானவர்களால்,
நடத்திக் கொண்டு வரப்பெற்றிருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர்
பல்வேறு விதமாக மூளையைக் கசக்கி பிழிந்து,
பல்வேறு துன்பங்களை அனுபவித்து,
பலவித புத்தகங்களை ஆராய்ந்து,
பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரிந்து,
பல்வேறு அனுபவங்களை தாங்கி நடந்து,
பல்வேறு கசப்பான நிகழ்வுகளை கடந்து,
பல்வேறு இழிசொற்களை ஏற்று தவழ்ந்து,
பல்வேறு அவமானங்களை ஏற்று வாழ்ககை கசந்து,
இரவு பகல் பாராமல்,
குடும்பத்தை கவனிக்காமல்,
இன்பங்களில் பங்கு கொள்ளாமல்,
விசேஷங்களில் கலந்து கொள்ளாமல்,
கண்ணீர் சிந்தி,
கவலையில் மூழ்கி,
துன்பத்தில் தத்தளித்து,
ஏழ்மையில் வாடி,
ஏச்சுக்களில் வருந்தி,
சோகத்தில் துவண்டு,
பலபேரை நேரில் சந்தித்து,
தான் கற்ற வித்தையை
தான் உணர்ந்த வலியின் தாக்கங்களை
தான் சுமந்த வறுமையின் வலிகளை
எண்ணமாக்கி;
எழுத்தாக்கி;
கவிதையாக்கி;
கட்டுரையாக்கி;
கதையாக்கி;
இச் சமுதாயத்தில் தவழ விட்டால்
அந்த எழுத்துக்களைத் திருடி தன் பெயரில்
போட்டுக் கொள்வது தான்
பிறருடைய அறிவைத் திருடுவது.

இது இந்த உலகத்தில் மிகவும்
பரவலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதுவும் இணைய தளத்தில் எளியதாகவும்
மிகவும் அதிகமாகவும் பரவி வருகிறது.

ஒருவர்
தன் சொந்த உழைப்பை பயன்படுத்தி
தன் சொந்த அறிவைப் பயன்படுத்தி
ஒரு கட்டுரையை போடுகிறார்.
அதை படிக்கும் இரண்டாம் நபர்
முதல் நபரின் கட்டுரை நன்றாக இருக்கிறது என்று திருடி
அவருடைய பெயரை போடாமல்
இரண்டாவது நபரின் பெயரிலேயே போடுவார்.

எழுதிய முதல் நபரின் பெயரைப் போடாமல்
இரண்டாவது நபர் தன் பெயரைப் போடுவார்
அதைப் படிக்கும் மூன்றாம் நபர்
இரண்டாம் நபரின் கட்டுரை
அவருடைய சொந்த கட்டுரை என்று
நினைத்துக் கொண்டு
மூன்றான் நபர்
இரண்டாவது நபரின் கட்டுரையை பாராட்டுவார்.

அறிவைப் பயன் படுத்திய
முதல் நபர் மறைக்கப் படுகிறார்
அதாவது
வேண்டும் என்றே
இருட்டடிப்பு செய்யப் படுகிறார்.
மூன்றாம் நபரைப் போலவே
பல்வேறு நபர்கள்
இரண்டாம் நபரையும்
இரண்டாம் நபர் எழுதிய கட்டுரையையும்
புகழ்வதைப் பார்த்து,
இரண்டாம் நபர்
சந்தோஷம் அடைகிறார்;
களிப்பில் திளைக்கிறார்;
ஆனந்தத்தில் துடிக்கிறார்;
மகிழ்ச்சியில் குதிக்கிறார்;
தான் இவ்வளவு நாட்கள் கட்டுரை எழுதியும்
இவ்வளவு ஆண்டுகள் கட்டுரைகள் எழுதியும்
பாராட்டு கிடைக்கவில்லை
ஆனால்,
திருடிப் போட்டால் பாராட்டு கிடைக்கிறது
என்று எண்ணி
தன் சுய அறிவைப் பயன்படுத்தாமல்,
தன் சொந்த மூளையைப் பயன்படுத்தாமல்,
தன் சொந்த திறமையைப் பயன்படுத்தாமல்,
தன் சொந்த சிந்தனையைப் பயன்படுத்தாமல்,
தன் சொந்த திறமையை
பயன்படுத்த முயற்சி செய்யாமல்,
இன்னொருவருடைய கட்டுரையை திருடி
பெயர் வாங்க முயற்சி செய்வது
புகழ் பெற முயற்சி செய்வது என்பது
மறைமுகமாக
பிறருடைய அறிவைத் திருடுவது ஆகும்.

பிறருடைய அறிவுக்கு கிடைத்த மரியாதை
தன் அறிவுக்கு கிடைக்கவில்லை என்று நினைத்து
பிறருடைய அற்புதமான எழுத்தை
பிறருடைய அறிவுபூர்வமான கட்டுரையை திருடி
முதலாம் நபருடைய பெயரை போடாமல்
இரண்டாம் நபராகிய
தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டு
பெயர் எடுப்பது என்பது
மறைமுகமாக
பிறருடைய அறிவைத் திருடுவது ஆகும்.

இரண்டாம் நபர்
முதலாம் நபரைப்  போல
தன்னால் எழுத முடியும்
என்று நினைப்பதில்லை அதற்காக
முயற்சி எடுப்பதில்லை.

எனவே,
மறைமுகமாக
பிறருடைய அறிவைத் திருடுவது
இந்த உலகத்தில் வளர்ந்து விட்டால்
பிறருடைய எழுத்துக்களைத்
திருடிக் கொண்டே இருப்பதால்
இந்த உலகத்திற்கு கிடைக்க வேண்டிய
அருமையான எழுத்துக்கள்;
அழகான கட்டுரைகள்;
கிடைக்காமலே போய் விடும்.
ஒரு கம்பர்
ஒரு இளங்கோ
இன்றைய நிலையில் தோன்றாததற்கு காரணம்
பிறருடைய அறிவைத் திருடுவது
இச்சமுதாயத்தில் இடைவிடாமல் தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டிருப்பது தான்.

உயர்ந்த இலக்கியங்கள்;
உயர்ந்த படைப்புக்கள்;
இச்சமுதாயத்தில் கிடைக்காமல் போகக் காரணம்
தன் சொந்த அறிவைப் பயன்படுத்தாமல்
பிறருடைய அறிவைத் திருடுவது அதிக அளவில்
இச்சமுதாயத்தில்
நடை பெற்றுக் கொண்டிருப்பதால் தான்.

இணைய தளத்தில்
முதலாம் நபருடைய கட்டுரையை
இரண்டாம் நபர் திருடி பிரசுரம் செய்வார்;
அதை பார்க்கும் மூன்றாம் நபர்
நான்காம் நபருக்கு ஷேர் செய்வார்;
நான்காம் நபரிலிருந்து தொடர்ந்தாற்போல்
மாறி மாறி ஷேர் பண்ணிக் கொண்டே போவார்கள்.
நீண்ட சங்கிலித் தொடர் போல
ஷேர் பல்வேறு நபர்களை
கடந்து போய்க் கொண்டே இருக்கும்.
அது பல்வேறு நாடுகளைக் கடக்கும்
கடந்து செல்லும்
நன்றாக இருக்கிறது என்று
ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்வர்.

யாருமே யார் எழுதினார்கள் என்று
பெயரை போட மாட்டார்கள்
ஆனால்,
முதலாம் நபருடைய
அறிவை மட்டும் திருடுவார்கள்;
அவருடைய உழைப்பை திருடுவார்கள்;
ஆனால் அவர் பெயரை போட மாட்டார்கள்
முதலாம் நபருடைய பெயரை
இருட்டடிப்பு செய்வார்கள்.

பாராட்டப்பட வேண்டியவர்கள்
பாராட்டப் படுவதில்லை;
புகழப்பட வேண்டியவர்கள்
புகழப் படுவதில்லை;
திறமைகள் மறைக்கப்படுகின்றன;
புகழ்ச்சிகள் மறுக்கப்படுகின்றன;
உண்மையாக யாருக்க
அங்கீகாரம் கிடைக்க வேண்டுமோ
அவருக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.

மறைமுகமாக பிறருடைய
அறிவைத் திருடியவர்களுக்கு
சமுதாயத்தில் உயர்ந்த அங்கீகாரம் கிடைக்கிறது
இதனால் இரண்டாம் நபர்
தன் அறிவைப் பயன்படுத்த முயற்சி செய்யாமல்
பிறருடைய அறிவைத் திருடுவதிலேயே
இரண்டாம் நபருடைய அறிவும் மயங்குகிறது
மயங்குகிறது மட்டுமல்லாமல் மங்குகிறது.

இதனால்
பல்வேறு தரப்பட்ட சிந்தனைகளுடைய,
பல்வேறு விதமான எண்ணங்களுடைய,
பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களுடைய,
மனிதர்களுடைய அறிவு
இச் சமுதாயத்திற்கு
பயனபடாமல் போகிறது.

உயர்ந்த இலக்கியங்கள்;
உயர்ந்த படைப்புகள்;
உயர்ந்த எழுத்துக்கள்;
இச் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டுமானால்
மறைமுகமாக
பிறருடைய அறிவைத் திருடுவது
நிற்க வேண்டும்.
இல்லையென்றால்.
உயர்ந்த இலக்கியங்கள் மட்டுமல்லாமல்
உயர்ந்தவைகள் கூட
நமக்கு கிடைக்காமலே போய் விடும்.

மறைமுக திருட்டு
சமுதாயத்தில்
நீண்ட காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது
இந்த மறைமுக திருட்டு
சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை
உருவாக்கி வைத்திருக்கிறது
இத்தகைய தொடர்
மறைமுக திருட்டுகள் நிகழ்வதற்குக் காரணம்
மக்கள் ஒரு செயலில் உள்ள
உண்மைத் தன்மையை
உணர்ந்து கொள்ள முடியாததே காரணம்.

ஒரு செயலில் உள்ள
உண்மை எது - பொய் எது
சரி எது - தவறு  எது
என்பதை புரிந்து கொண்டால்,
தவறு நடக்காமல் தடுக்க முடியா விட்டாலும்
நடக்கும் தவறுகளில் சிக்காமல் தப்பிக்கலாம்.

ஒரு செயலில் உள்ள உண்மைத்தன்மையை
உணர்ந்து கொள்ள முடியாததும்;
சரி எது , தவறு எது என்ற
உண்மையை புரிந்து கொள்ள முடியாததும்;
உண்மை எது , பொய் எது
என்று அறிந்து கொள்ள முடியாததும்;
தவறுகள் நடப்பதற்குக் காரணம்.

திருட்டுகள் உருவாகி வளர்ந்து
சமுதாயத்தில்
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக் காரணம்
மக்களின் அறியாமையை சிலர்
தங்களுக்கு சாதகமாக
பயன் படுத்திக் கொள்வது தான்.

ஒரு உண்மையை பொய் என்றும்
ஒரு பொய்யை உண்மை என்றும்
சமுதாயத்தை சிலர் நம்ப வைக்க
முயற்சி செய்கின்றனர்.

உண்மைத் தன்மை உள்ள நிகழ்வை
பொய்மைத் தன்மை கொண்ட நிகழ்வாக
காட்ட முயற்சி செய்கின்றனர்.

குற்றமற்ற கோவலனை கொலை செய்து விட்டோம்
என்று உணர்ந்தவுடன்
சிம்மாசனத்தில் இருந்து விழுந்து
உயிர் விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

கொதித்தெழுந்த கண்ணகி
குற்றமற்ற தன் கணவனை கொலை  செய்தார்கள்
என்பதை அறிந்ததும்,
தவறான தீர்ப்புக்கு தகுந்த பதில் கொடுக்க,
தனக்கு கிடைக்க வேண்டிய
நீதியை பெற்றுக் கொள்ள,
பாண்டியனிடம் நீதியை முறையிட,
சான்றோர்களும்
அறிஞர்களும்
கூடியிருந்த அவையில்
கண்ணகி தன் தரப்பு நியாயம்
சரி என்று நிரூபித்த வேளையில்,
கண்ணகியின் தரப்பு நியாயம் சரி என்று
அனைவர் மனமும் உணர்ந்த வேளையில்,
கண்ணகியின் கணவன் கோவலன் குற்றமற்றவன்
என்று மனம் அறிந்த வேளையில்,
சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்து
உயிர் விட்டான்  பாண்டியன் நெடுஞ்செழியன்.
நீதியை நிலை நாட்டினான்

அதனைத் தொடர்ந்து கண்ணகி
மதுரையை எரித்தாள் என்பது வரலாறு.

ஒரு சரித்திர நிகழ்வை
ஒரு உன்னத காப்பியத்தை
தற்சமயம் இழிவுபடுத்தும் விதத்தில்
சில கேள்விகளை கேட்கின்றனர்
அதாவது,
பாண்டியனுக்கும்  கண்ணகிக்கும் தானே சண்டை
ஏன் மதுரையை எரிக்க வேண்டும்;
மக்களை அழிக்க வேண்டும் ;
இது தான் கேள்வி?
அறிவுள்ளவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்;
புரிந்துகொள்ள முடியாதவர்கள்
புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள்;
அறிவற்றவர்கள் உண்மையை
உணர்ந்து கொள்ள முயற்சி செய்யாமல்
உண்மையை உணர்ந்தவர்களை அணுகி
உண்மையை உணர்ந்து கொள்ளாமல்
என்ன கேட்கிறோம்
என்று உணராமல் கேட்கின்றனர்.

எம்.எல். என்பவர் ஒரு தொகுதியின் பிரதிநிதி
எம்.பி.என்பவர் குறிப்பிட்ட சில தொகுதிகளின் பிரதிநிதி
முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் பிரதிநிதி
பிரதமர் ஒரு நாட்டின் பிரதிநிதி
எம்.எல். ஒரு தொகுதி முழுவதற்கும் பொறுப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.
அதைப்போல,
மன்னர் என்பவர்
அந்த நாட்டின் பிரதிநிதி
அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களின்
வாழ்க்கைக்கும், இன்பங்களுக்கும்,
துன்பங்களுக்கும் பொறுப்பானவர்.
தனது அதிகாரத்தின் கீழ் உள்ள
அனைத்து மக்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்கும்
அவர்களின் உயிருக்கும், உரிமைக்கும்
இன்பத்திற்கும், துன்பத்திற்கும் பொறுப்பானவர்.

அப்பேற்பட்டநிலையில் உள்ளவர்
நீதி வழுவி கோவலனைக் கொன்றது குற்றம்
மக்களின் சார்பாக
மக்களுக்காக
மக்களின் நன்மைக்காக
ஆட்சி செய்யும் தான்
தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தவுடன்
சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்து உயிர் விட்டான்
பாண்டியன் நெடுஞ்செழியன்

மன்னன் தவறு செய்கிறான்
என்றால்
மக்கள் ஒரு தவறானவரை
மன்னராக வைத்திருக்கிறார்கள்
என்று அர்த்தம்.

மக்கள் தவறானவர்களாக இருக்கின்ற
காரணத்தினால் தான்
மன்னர் தவறானவராக இருக்கிறார்
மன்னர் தவறானவராக இருக்கக் காரணம்
மக்கள் தவறானவராக இருக்கின்ற காரணமே ஆகும்.

மன்னர் தவறு செய்கிறார் என்றால்
மக்கள் தவறானவராக இருக்கின்றனர்
மன்னர் தவறு செய்ய முக்கிய காரணமே
மக்கள் தகுதியானவரை
மன்னராக ஏற்றுக் கொள்ளாததே ஆகும்.

மன்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்ததும்
சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்து உயிர் விட்டான்

அதனைத் தொடர்ந்து கண்ணகி
மன்னர் தவறு செய்யக் காரணமான
மக்களை அழித்தாள்;
மதுரையை எரித்தாள்;

உண்மையை இப்படியிருக்க
ஒரு செயலினுள் உள்ள
உண்மைத் தன்மையை உணராமல்
ஒரு உண்மை நிகழ்வை
பொய் நிகழ்வாகவும்
ஒரு சரியான நிகழ்வை
தவறான நிகழ்வு என்று சொல்லி
உண்மையான ஒரு வரலாறை
புனிதமான ஒரு வரலாறை
கறை படிந்த வரலாறாக மாற்ற
முயற்சி செய்கின்றனர்
தவறான எண்ணம் கொண்ட சிலர்.

இதைத் போலத் தான்
ஒரு செயலில் உள்ள
உண்மைத் தன்மையை
யார் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களோ
அவர்களால் மட்டுமே மறைமுகமாக நடைபெறும்
திருட்டை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு செயலில் உள்ள
உண்மைத் தன்மையை
உணர்ந்து கொள்ள முடியாதவர்களால்
மறைமுக திருட்டை உணர்ந்து
கொள்ள முடியாது.

வெவ்வேறு விதங்களில்
மறைமுக திருட்டு இச் சமுதாயத்தில்
நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
அதில் முக்கியமானது
ஆன்மீக திருட்டு
உண்மையான ஆன்மீகவாதி
யார் என்று தெரியாமல்
போலியான ஆன்மீகவாதிகளிடம்
மாட்டிக் கொண்டதால்
சில போலியான ஆன்மீகவாதிகள்
வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

உண்மையை உணர வருபவர்களிடம்
உண்மையை உணராத சில போலியான ஆன்மீகவாதிகள்
உண்மையை உணர வருபவர்களிடம்
செல்வங்களை சுரண்டுவதால்
போலியான ஆன்மீகவாதிகள்
எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே வருகின்றனர்.

உண்மையான ஆன்மீகம்
உண்மையான ஆன்மீகவாதிகள்
குறைந்து கொண்டே வருவதுடன்
போலியான ஆன்மீகம்
போலியான ஆன்மீகவாதிகள்
வளர்ந்து கொண்டே வருகின்றனர்.

உண்மையை உணர நாடி வருபவர்களிடம்
போலியான ஆன்மீகத் தலைவர்கள்
மறைமுக திருட்டை நடத்தி வருகின்றனர்.

ஆன்மீகத்தில் மறைமுக திருட்டு
அதிக அளவில்
நடைபெறுவதற்குக் காரணம்
போலியான ஆன்மீகவாதிகள்
பெருகி விட்டதே ஆகும்.

நம்முடைய உடலில்
9 வாசல்கள் உள்ளது.
இரண்டு கண்கள்; இரண்டு காதுகள்;
மூக்கின் இரண்டு துவாரங்கள்; ஒரு வாய்;
மூத்திர துவாரமான ஒரு லிங்கம்;
மலதுவாரமான ஒரு குதம்;
ஆக மொத்தம் 9 ஓட்டைகள்.
இந்த 9 ஓட்டைகளைத் தான்
நாம் 9 வாசல்கள் என்கிறோம்.

10 வது வாசல் ஒன்று உண்டு
அது தான் சூட்சும வாசல்
இறை நிலைக்கான நுழைவு வாயில்
எனப்படுகிறது.

9 வாசல் இயங்கும் போது
மனிதன் சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறான்;
9 வாசல் அடைக்கப்பட்டு
10 வது வாசல் திறக்கப்படும் போது
மனிதன் பேரின்ப வாழ்க்கையில் நுழைகிறான்;

9 வாசல் மூடாமல் 10 வது வாசல் திறக்காது
10-வது வாசல் திறக்கப்ட வேண்டுமானால்
9 வாசல்கள் அடைக்கப்படத் தான் வேண்டும்.

சிவம் அசையும் போது சக்தியாகிறது
சிவம் சக்தியுடன் இணையும் போது
பஞ்ச பூதமாகிறது
பஞ்சபூதம் இணையும் போது
மனிதன் உண்டாகிறான்.
மனிதன் உருவாகும் பொழுது
அனைத்து நிகழ்வுகளும்
வரிசையாக நடை பெறுகிறது.

சிவம் அசைந்து சுற்றுகிறது
சக்தியாக மாறி சுற்றுகிறது
அமைதியாக இருந்தால் சிவம்
சிவம் அசைந்து இயக்கத்திற்கு
வந்தால் சக்தி
சிவமே சக்தியாக மாற்றமடைந்து சுற்றுகிறது.

சக்தி உடலைக் கட்டுகிறது
உடலைக் கட்டிய சக்தி
சிவனை புருவ மத்தியிலேயே வைத்து விட்டு
மூலாதாரத்தில் கீழே வந்து 
உறக்கம் கொள்கிறது
உறங்கிக் கொண்டு இருக்கிறது.

சிவம் மேலே இருக்கிறது;
சக்தி கீழே இருக்கிறது;
எது எங்கிருந்து வந்ததோ
அது அங்கேயே போய் சேரும்போது
அதன் பயணம் பூர்ததியாகிறது;
எது எங்கிருந்து வந்ததோ
அது அங்கே போய் சேரவில்லை எனில்
அதன் பயணம் பூர்த்தியாகாது;

மூலாதாரத்தில் உறங்கிக்கிடக்கும் சக்தியை எழுப்பி
நெற்றிக் கண்ணில் உள்ள சிவத்திடம் சேர்க்கும் போது
சிவத்திடமிருந்து பிரிந்த சக்தி அதாவது
மீண்டும் சிவத்திடம் சேரும்போது
அதன் பயணம் பூர்த்தியாகிறது.

மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்பி
நெற்றிக் கண்ணில் சேர்ப்பதற்குத் தான்
தியானம், மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம்,
வாசி, தவம் ஆகியவை செய்யப்படுகின்றன.

பிராணாயாமம் என்றால்
பிராணனை ஆயாமம் செய்வது என்று பொருள்.
ஆயாமம் என்றால்
தடுத்து நிறுத்துகிறது அல்லது
நேரே கொண்டு போவது என்று பொருள்.

பிராணன் நம் உள்ளில் இருப்பது;
அபானன் வெளியில் போவது;
வெளியில் போகின்ற அபானனை,
வெளியில் போக விடாமல்
பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே
ஒரே கதியாய் நடத்துவதற்குத் தான்
பிராணாயாமம் என்று பெயர்.

பிராணாயாமம் என்றால்,
நம் உள்ளிலிருக்கின்ற பிராணனை
வெளியில் விடாமல்
நம்முள்ளிலேயே நடத்துவது ஆகும்.

பிராணாயாமம் செய்யும் போது எழும் சக்தி
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியை எழுப்புகிறது.
எழுப்பப்பட்ட குண்டலினி
மேலே தொடர்ந்து ஏறி செல்ல வேண்டுமென்றால்
தொடர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.

எழுப்பப் பட்ட குண்டலினி சக்தி
விழித்துக் கொண்ட குண்டலினி சக்தி
ஆறு  ஆதாரங்களைத் துளைத்து
அதில் உள்ள சக்தியை பெற்று கொண்டு
மேலே ஏறுகிறது.

குண்டலினி சக்தியானது
பத்தாவது வாசல் வழியாக
இறைநிலைக்கான நுழைவு வாயில் வழியாக
ஊசிமுனை வாசல் வழியாக
உள்ளே செல்ல வேண்டும்
பத்தாவது வாசல் தான் ஊசிமுனை வாசல்
ஊச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல்.

கடவுள் நம் உடம்பில் சிரசில் இருக்கிறான்
என்பதை அறிந்து கொள்ள வேண்டும்;
இறைவன் இருக்கும் இடம்
எது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்;

உச்சியிலிருந்து கீழே நேராக
ஒரு கற்பனைக் கோடு வரைய வேண்டும்;
நெற்றிக்கண்ணிலிருந்து உள் வழியாக பின் மண்டை வரை
ஒரு கற்பனைக் கோடு வரைய வேண்டும்;
காது ஓட்டைக்குள் உள்ளே
அடுத்த காதின் ஓட்டை வரும் வரை
ஒரு கற்பனைக் கோடு வரைய வேண்டும்;
இம்மூன்று கற்பனைக் கோடுகளும் சந்திக்கும் இடம் தான்
"முச்சந்தி"
அங்கு தான் கடவுள் இருக்கிறார்.

உச்சிக்குக் கீழே உள்ள
ஊசிமுனை வாசலுக்குள்
பத்தாவது வாசலுக்குள்
சென்றால் இறைவனை அடையலாம்

பிராணாயாமம் செய்து
உண்டான சக்தியானது
குண்டலினி சக்தியை எழுப்பி
மேல் நோக்கி நகர்த்தி மேலே கொண்டு செல்கிறது.
மேல்நோக்கி நகரும் குண்டலினி சக்தியானது
ஆறு ஆதாரங்களைக் கடந்து
அவற்றைத் துளைத்து
அதில் உள்ள சக்திகளைப் பெற்றுக் கொண்டு
பத்தாவது வாசல் வழியாக உள்ளே நுழைந்து
சிவத்திடம் சேர்கிறது.

சக்தி சிவத்திடம் சேர்கிறது
சக்தி தன் பிரயாணத்தை முடித்துக் கொள்கிறது;
எங்கிருந்து வந்ததோ
அங்கேயே சென்று விட்டது;
அதன் பயணம் நிறைவடைந்து விட்டது;
அதன் பயணம் பூர்த்தி அடைந்து விட்டது;
சக்தியாக மாறிய சிவம்
மீண்டும் சிவமாகவே மாறுகிறது - என்ற
உண்மையை உணராமல்,
உண்மையை உணர்ந்தவர்களை பின்பற்றாமல்,
உண்மையை உணராத
போலி ஆன்மீக தலைவர்களிடம்  மாட்டிக் கொண்டு
உண்மையை உணராமல் போய்விட்டதே;
உண்மையை உணர்ந்த உண்மையான
ஆன்மீகவாதிகளிடம் சென்று இருந்தால்
நான் உண்மையான ஆன்மீகத்தை
அறிந்து கொண்டு இருப்பேன்;
போலியான ஆன்மீகவாதிகளிடம் மாட்டிக் கொண்டதால்
உண்மையை உணர முடியாமல் போய்விட்டது
என்கிறார்.

மறைமுக திருட்டான
போலியான ஆன்மீகவாதிகளிடம் மாட்டிக் கொண்டு
என் காலத்தை வீணாக்கி விட்டேன்
மோசம் போய் விட்டேன்
என்கிறார் அழுகுணிச் சித்தர்.


இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர்

இயேசு,
உண்மைத் தன்மையுடையவை எவை என்றும்
உண்மைத் தன்மையற்றவை எவை என்றும்
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
இறைவனின் அருள் பெற்று வாழ்க்கையில்
இன்புற்று வாழ முடியும்
என்கிறார்

அவ்வாறே,
அழுகுணிச் சித்தரும்
ஒரு செயலில் உள்ள
உண்மையையும் பொய்மையையும்
புரிந்து கொள்பவர்களால் மட்டுமே
இறைவனை உணர்ந்து
இறைவனுடன் இணைய முடியும்
என்கிறார்


""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

              போற்றினேன் பதிவுஎழுபத்துநான்குந் தான்முற்றே""""