April 13, 2020

பரம்பொருள்-பதிவு-196


              ஜபம்-பதிவு-444
            (பரம்பொருள்-196)

“நான்
அரவான் என்று
உன்னுடைய
பெயரைச் சொல்லி
ஓங்கி குரலை
எழுப்பியதும்
நீ சற்றும்
தாமதிக்காமல்
இடது கையால்
உன்னுடைய
தலையில் உள்ள
தலை முடியைப்
பிடித்துக் கொண்டு ;
உன்னுடைய
வலது கையில்
உள்ள  வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்ட வேண்டும் ; “

“வலது கையில்
உள்ள வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்டிய பிறகு
வலது கையில்
உள்ள வாளை
வானத்தைப்
பார்த்து
தூக்க வேண்டும்
வெட்டிய வாளின்
கூர்மையான
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
இருக்கவேண்டும் “

“தலையை வெட்டி
முடித்த அதே
நேரத்தில்
இடது கையால்
தலையில் உள்ள
தலையின்
முடியைப் பிடித்து
தலையை
உடலிலிருந்து
பிரித்து எடுத்து
கையினால்
இடது பக்கம்
தலையை தூக்கி
பிடித்துக்
கொள்ள வேண்டும் “

“இடது கையால்
தலை முடியைப்
பிடித்து
தூக்கியவாறு
வைத்துக்
கொள்ள வேண்டும்  

“நீ உன்னுடைய
தலையை
வெட்டிய பிறகு
எப்படி இருக்க
வேண்டும் என்றால்
தலை இல்லாமல்
உடல் மட்டுமே
பூமியில் நிற்க
வேண்டும்  

“வலது கையில்
வெட்டப்பட்ட
வாளின்
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
வலது பக்கம்
இருக்க வேண்டும் “

“வெட்டப்பட்ட
தலையில் உள்ள
முடியை இடது
கையால் தூக்கி
பிடித்த நிலையில்
வெட்டப்பட்ட
தலையானது
இடது பக்கம்
இருக்க வேண்டும் “

“வெட்டப்பட்ட
தலையிலிருந்து
சொட்டும்
இரத்தமானது
பூமியை நனைத்தபடி 
இருக்க வேண்டும் “

“இந்த செயலைத்
தான் நீ
செய்ய வேண்டும் “

“இதில் எந்த ஒரு
விஷயத்தையும்
மறந்து விடக்கூடாது “

“நான்
சொன்னவைகளை
நன்றாக மனதில்
வைத்துக் கொள்
அரவான் “

அரவான் ;
“அடுத்து என்ன
நடக்கும் “

கிருஷ்ணன் :
“அடுத்து என்ன
நடக்கும்
என்பதைப்பற்றி
கவலைப்படாதே
அரவான் !
நீ தலையை
வெட்டிய பிறகு
என்ன நடக்கப்
போகிறது என்பதை
நீ உணர்ந்து
கொள்ளத்தான்
போகிறாய் “

“அதனால் எதைப்
பற்றியும்
கவலைப்படாதே “

“அனைத்தையும்
நான் பார்த்துக்
கொள்கிறேன் “

“நீ உன்னுடைய
தலையை வெட்டி
காளிதேவிக்கு
படைப்பதற்காக
தயாராகக் காத்துக்
கொண்டு
மட்டும் இரு “

அரவான் :
“நான் தயாராக
இருக்கிறேன்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“சரி”

“நான் அரவான்
என்று ஓங்கி
உன்னுடைய பெயரை
கூப்பிட்டதும்
சற்றும் தாமதிக்காமல்
நான் சொன்னபடி
நீ உன்னுடைய
தலையை
வெட்ட வேண்டும் “

“தயாராக இரு
அரவான்
தயாராக இரு “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-195


             ஜபம்-பதிவு-443
           (பரம்பொருள்-195)

கிருஷ்ணன் :
“அப்படி என்றால்
நான் சொல்லப்
போகிறவைகளை
நன்றாகக்
கேட்டு
மனதில்
நிறுத்திக் கொள்
அரவான் “

“முதலில்
முட்டி போட்டுக்
கொண்டு
இருப்பதிலிருந்து
எழுந்திரு ! “

“நீ முட்டி
போட்டு
தலையை
காட்டும் போது
உன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
தகுதி
படைத்தவர்கள்
இந்த
உலகத்தில்
யாரும் இல்லை
முதலில்
எழுந்திரு !
எழுந்து
நேராக நில் ! ! “

“காளிதேவியைப்
பார்த்தபடி நில் ! “

“வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
அதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும்
அரவான் “

“ஆனால்
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதாது “

“இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
தைரியம்
இருக்க
வேண்டும் ;
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
மன உறுதி
இருக்க
வேண்டும் ;  
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
வீரம் இருக்க
வேண்டும் ; “

“ஆமாம் !
வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
நமக்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும் ;
ஆனால்
நம்முடைய
தலையை
நாமே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம் ;
மன உறுதி ;
வீரம் ;
ஆகிய
மூன்றுமே
ஒன்றாக
இருக்க
வேண்டும் “

“இந்த மூன்றும்
ஒன்றாக
இருந்தால்
மட்டுமே
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்ள முடியும் “

“இத்தகைய
மூன்று
தன்மைகளையும்
ஒன்றாகக்
கொண்டவன்
தான் நீ “

“அதனால் தான்
உன்னை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
காலம் உன்னை
தேர்ந்தெடுத்து
இருக்கிறது “

“வாளை எடு
அரவான்  !
வாளை எடு ! !

(அரவான்
சென்று
வாளை
எடுக்கிறான்)

“முதலில்
காளி தேவியின்
உருவத்தை
நெற்றி
பொட்டிற்கு
கொண்டு வந்து
அங்கு
காளிதேவியை
பிரதிஷ்டை
செய்து
மனதில்
காளிதேவியின்
மந்திரத்தை
தொடர்ந்து
உச்சாடனம்
செய்து
கொண்டே இரு”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-194


             ஜபம்-பதிவு-442
           (பரம்பொருள்-194)

”பஞ்ச
பாண்டவர்களாலேயே
அரவானுடைய
தலையை வெட்ட
முடியவில்லை என்றால்  
இந்த உலகத்தில்
உள்ள வேறு யாராலும்
அரவானுடைய
தலையை வெட்ட
முடியாது என்பதை
இந்த உலகம்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகத் தான்
பஞ்ச பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை
வெட்டச் சொன்னேன் “

“அது மட்டுமல்ல
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
தங்களுக்கே
தகுதியில்லை என்பதை
பஞ்ச பாண்டவர்கள்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும் ;
அரவானுடைய தலையை
வெட்டுவதற்கு
இது வரை
இந்த உலகத்தில்
யாரும் பிறக்க வில்லை
என்பதை இந்த
உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும் ;
இப்போது இந்த
உலகத்தில்
வாழக்கூடியவர்களில்
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு தகுதி
படைத்தவர்கள் யாரும்
இல்லை என்பதை
அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவும் ;
தான் பஞ்ச
பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை
வெட்டச் சொன்னேன் “

“இப்போது பஞ்ச
பாண்டவர்கள்
அனைவரும்
அரவானுடைய மதிப்பை
தெரிந்து கொண்டு
இருப்பார்கள் “

“அரவானை விட
சிறந்தவன் இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்பதை
உணர்ந்து இருப்பார்கள் “

“பஞ்ச பாண்டவர்களும்
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
அரவானுடைய
பெருமையை
உணர வேண்டும்
என்பதற்காகத் தான்
பஞ்ச பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை வெட்டச்
சொன்னேன் “

“இப்போது பஞ்ச
பாண்டவர்கள் மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
அரவானுடைய
பெருமையை
புரிந்து இருப்பார்கள் “

அரவான் :
“இப்போது என்ன
செய்வது பரந்தாமா ? “

“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
என்னுடைய தலையை
வெட்ட முடியாது
என்றால் என்னுடைய
தலையை யார்
தான் வெட்டுவது “

கிருஷ்ணன் :
“அதைத் தான் நான்
ஏற்கனவே சொல்லி
விட்டேனே
அரவானுடைய
தலையை யாராலும்
வெட்ட முடியாது என்று “

“அரவானுடைய
தலையை வெட்டக்
கூடியவர்கள் யாரும்
பிறக்கவில்லை என்று “

“அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
தகுதி படைத்தவர்கள்
யாரும் இந்த
உலகத்தில் இப்போது
இல்லை என்று “

“இதிலிருந்து ஒரு
உண்மை உனக்குத்
தெரியவில்லையா
அரவான் “

“அரவானுடைய தலையை
அரவான் தான் வெட்ட
வேண்டும் என்று “

“ஆமாம் ! உன்னுடைய
தலையை நீ தான்
வெட்ட வேண்டும்
அரவான் “

“உன்னுடைய தலையை
வெட்டுவதற்கு - இந்த
உலகத்தில் யாரும்
இல்லை யாரும்
வரவும் மாட்டார்கள் “

“அதனால் உன்
தலையை நீ தான்
வெட்ட வேண்டும் “

“உன்னுடைய தலையை
நீயே வெட்டிக்
கொள்வதற்கு - நீ
இப்போது தயாராக
இருக்கிறாயா
அரவான் ;
தயாராக
இருக்கிறாயா ? “

அரவான் :
“நான் தயாராக
இருக்கிறேன் பரந்தாமா “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-193


             ஜபம்-பதிவு-441
           (பரம்பொருள்-193)

தர்மர் :
“பரமாத்மா ! அனைத்து
விஷயங்களையும்
அறிந்தவர் நீங்கள் ;
உங்களுக்கு தெரியாத
விஷயம் என்று
எதுவுமே இல்லை
இந்த உலகத்தில் ;
உங்களுக்கு தெரியாமல்
எந்த ஒரு விஷயமும்
இந்த உலகத்தில்
நடக்கவும் முடியாது ;
அனைத்து விஷயங்களும்
உங்களுக்கு தெரிந்திருந்தும்
ஏன் எங்கள் அனைவரையும்
அரவானுடைய தலையை
வெட்டச் சொல்லி
வற்புறுத்தினீர்கள் “

“அரவானுடைய தலையை
வெட்டச் சொல்லி
எங்களை வற்புறுத்தி
இருக்க வேண்டாமே “

கிருஷ்ணன் :
“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
அரவானுடைய தலையை
வெட்ட முடியாது என்று
சோதிட சாஸ்திரம்
சொல்கிறது “

“அரவானுடைய தலையை
வெட்டக்கூடியவர்கள்
இந்த உலகத்தில்
யாரும் இல்லை என்றால்
அரவானை விட
உயர்ந்தவர்கள் இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்பதே
அதற்கு பொருள் “

“இந்த உலகத்தில் தலை
சிறந்தவர்களாகக்
கருதப்படுபவர்கள்
பஞ்ச பாண்டவர்கள் “

“அவர்களுக்கு
நிகரானவர்கள் யாரும்
இல்லை என்பதை
தங்களுடைய செயல்களின்
மூலம் நிரூபித்து
இருக்கிறார்கள் “

“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும் இந்த
உலகத்தில் தலை
சிறந்தவர்கள் என்பதை
இந்த உலகமே
ஏற்றுக் கொண்டு
இருக்கிறது “

“அதனால் தான் பஞ்ச
பாண்டவர்களை
அழைத்து அரவானுடைய
தலையை வெட்டச்
சொன்னேன் “

“பஞ்ச பாண்டவர்களில்
யாரேனும் ஒருவராவது
அரவானுடைய தலையை
வெட்டி இருந்தால்
அரவானை விட
பஞ்ச பாண்டவர்கள்
தான் உலகத்திலேயே
உயர்ந்தவர்கள் என்பதை
பஞ்ச பாண்டவர்கள்
நிரூபித்து இருப்பார்கள் “

“ஆனால் அவர்கள்
அவ்வாறு செய்யவில்லை “

“அரவானுடைய தலையை
பஞ்ச பாண்டவர்கள்
வெட்டவில்லை “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானுடைய தலையை
வெட்டி இருந்தால்
அரவானுடைய ஜெனன
கால ஜாதகத்தையே
மாற்றி இருந்திருக்கலாம் “

“அரவானுடைய தலையை
வெட்டக் கூடியவர்கள்
இந்த உலகத்தில்
இருக்கிறார்கள் என்பதை
நிரூபித்து இருக்கலாம்  

“அரவானை விட
உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
இருக்கிறார்கள் என்பதை
நிரூபித்து இருக்கலாம் “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானை விட
உயர்ந்தவர்கள் என்று
நிரூபித்து இருக்கலாம் “

“ஆனால் பஞ்ச
பாண்டவர்களில் ஒருவர்
கூட அரவானுடைய
தலையை வெட்டவில்லை “

“அரவானை விட
பஞ்ச பாண்டவர்கள் தான்
உயர்ந்தவர்கள் என்பதை
நிரூபிப்பதற்கு அவர்களுக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பை
அவர்கள் பயன்படுத்தத்
தவறி விட்டார்கள் “

“காலம் அவர்களுக்கு
ஏற்படுத்திக் கொடுத்த
வாய்ப்பை அவர்கள்
சரியாக பயன்படுத்திக்
கொள்ளவில்லை  

“அரவானை விட தாங்கள்
உயர்ந்தவர்கள் என்பதை
நிரூபிக்க பஞ்ச
பாண்டவர்கள்
தவறி விட்டார்கள் “

“பஞ்ச பாண்டவர்களாலேயே
அரவானுடைய
தலையை வெட்ட
முடியவில்லை என்பதால்
பஞ்ச பாண்டவர்களை விட
அரவான் உயர்ந்தவன்
என்பது நிரூபணம்
ஆகிவிட்டது “

“சோதிட சாஸ்திரம்
சொன்னது
உண்மையாகி விட்டது “

“சோதிட சாஸ்திரப்படி
இந்த உலகத்தில் உள்ள
யாராலும் அரவானுடைய
தலையை வெட்ட
முடியாது என்பது
உண்மையாகி விட்டதால்
அரவான் தான் இந்த
உலகத்தில் உள்ள 
அனைவரையும் விட
பஞ்ச பாண்டவர்களையும்
விட உயர்ந்தவன் என்பது
உண்மையாகி விட்டது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////