July 06, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37

குடிகாரன்
ஒருவனுக்கு குடிப்பதற்கு
பணம் வேண்டும்
மனைவியிடம் செல்கிறான்
மனைவியிடம் சண்டை
போட்டு அவளை
மிரட்டி அடிக்கிறான்
மனைவி
வைத்திருந்த பணத்தை
அவளிடமிருந்து பிடுங்கி
எடுத்துக் கொண்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு விட்டு
பணத்தை எடுத்துக்
கொண்டு செல்கிறான்

குடிகாரன் செய்த
இந்த பாவத்தின்
செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
விளைவு தானாகவே
வெளிப்படும்.

குடிகாரன் செய்த
பாவத்திற்குரிய
விளைவை
குடிகாரன்
அனுபவிக்கும்
காலம் வரும்போது
குடிகாரன்
நோக்கம், திறமை,
தொடர்பு கொள்ளும் பொருள்
காலம், இடம்
ஆகியவற்றைப் பொறுத்து
செயலுக்குரிய விளைவை
அனுபவிப்பான்.

குடிகாரன்
எந்த தவறான
காரியத்தை செய்தானோ
அதாவது
குடிகாரன்
மனைவியை மிரட்டி
அவளை அடித்து
பணத்தை பிடுங்கி விட்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு
சென்றானோ
அந்த செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
எத்தகைய தவறான
செயலைச் செய்தானோ
அதே மாதிரியான
துன்பத்தை தரக்கூடிய
விளைவானது
அப்படியே குடிகாரனுக்கு
வெளிப்படும்

அந்த குடிகாரன்
பணத்தை எடுத்துக் கொண்டு
காட்டின் வழியே
வீட்டிற்கு வந்து
கொண்டு இருக்கிறான்
திருடன் ஒருவன்
அவனிடம் கத்தியை
காட்டி மிரட்டி
அவனை அடித்து
பணத்தை
பிடுங்கிக் கொண்டு
குடிகாரனை கீழே
தள்ளி விட்டு
செல்கிறான்

இந்த நிகழ்வில்
நோக்கம் என்பது
திருடனுக்கு பணம்
வேண்டும் என்பது
திறமை என்பது
மிரட்டுவது
தொடர்பு கொள்ளும்
பொருள் என்பது
குடிகாரன்
காலம் என்பது
திருடனுக்கு பணம்
இல்லாத கஷ்டமான
காலம்
இடம் என்பது
வீட்டிற்கு வெளியே
யாரும் இல்லாத
இடம்

குடிகாரன் மனைவியை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
திருடன் குடிகாரனை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
ஒப்பிட்டு
பார்த்தோமேயானால்
செய்த
செயலுக்குரிய தன்மையும்
விளைவின் தன்மையும்
ஒன்றாக இருப்பதை
புரிந்து கொள்ளலாம்

குடிகாரனுக்கு பணம்
வேண்டும்
திருடனுக்கும் பணம்
வேண்டும்

குடிகாரன் மனைவியை
மிரட்டி அடித்தான்
திருடனும் குடிகாரனை
மிரட்டி அடித்தான்

குடிகாரன் மனையிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்

குடிகாரன் மனைவியிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன் அவளை
கீழே தள்ளி
விட்டு சென்றான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன்
அவனை கீழே
தள்ளி விட்டு சென்றான்

இரண்டு நிகழ்வுகளையும்
ஒப்பிட்டு நோக்கினால்
குடிகாரன் மனைவியிடம்
இருந்து
பணத்தை எடுக்க
பாவத்தை எத்தகைய
நிலையில்
செய்தோனோ
அப்படியே அந்த
பாவத்தின் விளைவு
திருடனின் மூலமாக
குடிகாரனுக்கு
வெளிப்பட்டதை 
அறிந்து கொள்ளலாம்

இந்த நிகழ்விலிருந்து
ஒன்றை தெரிந்து
கொள்ளலாம்
எந்த செயலைச் செய்தாலும்
அது பாவமாக இருந்தாலும் சரி
புண்ணியமாக இருந்தாலும் சரி
அதற்குரிய விளைவை
அனுபவித்தே ஆக வேண்டும்

எனவே,
செயலைச் செய்து விட்டு
யாரும் விளைவிலிருந்து
தப்ப முடியாது
என்பதை உணர்ந்து
நன்மையான செயல்களான
புண்ணியச் செயல்களை
மட்டுமே செய்து
நன்மைகளைப் பெற
நாம் முயற்சி
செய்ய வேண்டும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////