May 03, 2020

பரம்பொருள்-பதிவு-228


               ஜபம்-பதிவு-476
             (பரம்பொருள்-228)

“கம்பத்தில்
பொருத்தி
வைக்கப்பட்ட
அரவானுடைய
தலையானது
கம்பத்தில்
இருந்து
மேல் எழும்பி
விஸ்வரூப தரிசனம்
எடுத்து நின்று
கொண்டிருந்த
மஹாவிஷ்ணுவின்
இதயத்தில்
கலந்து
ஒன்றாகி
விட்டது”

“அரவான்
இறைவனுடன்
ஒன்றாகக்
கலந்து
இறைவனாகவே
மாறி விட்டான்”

“ஆமாம் அரவான்
மோட்சம்
அடைந்து
விட்டான்”

“தன்னலம்
கருதாது
மக்களின்
நலத்தை
மட்டுமே
கருத்தில் கொண்டு
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்த
அரவானின்
மாபெரும்
சகாப்தம்
அரவான்
மோட்சம்
அடைந்தவுடன்
முடிந்து விட்டது
என்று சொல்ல
முடியாது”

“ஏனென்றால்
இந்த உலகத்தில்
உள்ள
கோடிக்கணக்கான
திருநங்கைகளின்
மனதில்
இன்றும்
தெய்வமாக
வாழ்ந்து
கொண்டு தான்
இருக்கிறார்
அரவான்”

ஒவ்வொரு
வருடமும்
அரவானை
கணவனாக
நினைத்து
தாலி
கட்டிக் கொண்டு
அரவான்
களப்பலியான
பிறகு
தங்களுடைய
பொட்டை
அழித்து
பூவை
எறிந்து
வளையல்களை
உடைத்து
தாலியை
அறுத்து
அழுது
கொண்டிருப்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“தன்னுடைய
கணவானான
அரவான்
களப்பலியானதற்காக
வெள்ளைப் புடவை
அணிந்து
கொண்டு
துக்கம்
கொள்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“அரவானுக்காக
அழுது
கொண்டிருப்பவர்களும்
அரவானை
தெய்வமாக
நினைத்து
வணங்கிக்
கொண்டிருப்பவர்களும்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“இந்த உலகம்
இருக்கும் வரை
இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள்”

“””பஞ்ச பாண்டவர்கள்
குருஷேத்திரப் போரில்
வெற்றி
பெற்றதற்கு
முழுக்காரணமே
அரவான்
என்பதை
உணர்ந்து
கொள்வோம்”

“உலூபி என்ற
தெய்வத்தாய்
பெற்றெடுத்த
தெய்வமகனான
அரவானின்
பாதம் தொட்டு
வணங்குவோம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////


பரம்பொருள்-பதிவு-227


              ஜபம்-பதிவு-475
             (பரம்பொருள்-227)

“ஞானம் சமாதி
என்ற வரிசையில்
மோட்சம் என்ற
நிலையை அடைவதற்கு
மனிதன் மூன்று
விஷயங்களை அறிந்து
வைத்திருக்க வேண்டும் “

“கடவுள்
நம்முடைய உடலில்
எந்த இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
அந்த கடவுளை
அடையக் கூடிய
வழி எது
என்பதையும் ;
அந்த கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்
கூடியது எது
என்பதையும் ;
அறிந்து கொள்ளும்
போது மனிதன்
ஞானம்
பெற்றவனாகிறான் ; “

“இந்த மூன்று
விஷயத்தையும்
பயன்படுத்தி
கடவுளுடன்
தேவைப்படும் சமயத்தில்
இணைந்து விட்டு
திரும்பி வரும் போது
சமாதி நிலை
அடைந்தவனாகிறான்  

“இந்த மூன்று
விஷயத்தையும்
பயன்படுத்தி
கடவுளுடன் இணைந்து
கடவுளாகவே
மாறி விடும் போது 
முக்தி என்ற
மோட்சத்தை
அடைந்தவனாகிறான் “

( என்று சொல்லிக்
கொண்டே கிருஷ்ணன்
மஹாவிஷ்ணுவாக
மாறி தன்னுடைய
விஸ்வரூப தரிசனத்தை
அரவானுக்குக் காட்டினார் )

அரவான் என்னைப் பார் !
நன்றாக என்னைப் பார் !

இந்த பிரபஞ்சமே
நானாக இருப்பதைப் பார்!
நானே இந்த பிரபஞ்சமாக
இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்துப்
பொருட்களிலும்
உயிர்களிலும்
நானே இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்துப்
பொருட்களும்
உயிர்களும் என்னுள்ளே
இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
தோன்றும் அனைத்தும்
என்னுள்ளே தோன்றி
என்னுள்ளே
முடிவதைப் பார் !

இந்த பிரபஞ்சம்
முழுவதையும்
எனக்குள் அடக்கி வைத்து
படைத்தல் காத்தல்
அழித்தல் என்ற
முத்தொழில்களோடு
மறைத்தல் அருளல்
என்ற இரண்டையும்
சேர்த்து மொத்தம்
ஐந்து தொழில்களை
செய்து கொண்டு
இந்த பிரபஞ்சத்தையே
இயக்கிக் கொண்டு
வழி நடத்திக்
கொண்டிருப்பது
நான் தான்
என்பதைப் பார் !

நான் ஆதியும்
அந்தமும் இல்லாதவன் ;
ஆரம்பமும் முடிவும்
இல்லாதவன் ;
பிறப்பும் இறப்பும்
இல்லாதவன் ;
என்பதைப் பார் !

நான் என்றும்
இருப்பவன் !
எனக்கு அழிவென்பதே
கிடையாது
என்பதைப் பார் !

நான் இல்லையென்றால்
இந்த உலகம் இல்லை
ஆனால் இந்த உலகம்
இல்லையென்றாலும்
நான் உண்டு
என்பதைப் பார் !

மனிதனுடைய
பிறப்புக்கும்
இறப்புக்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

மனிதனுடைய
செயலுக்கும்
விளைவுக்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

மனிதனுடைய
வாழ்வில் விளையும்
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
நிகழ்ந்தவை
நிகழ்ந்து
கொண்டிருப்பவை
நிகழப்போகிறவை
அனைத்திற்கும்
காரணமாக இருப்பது
நான் தான்
என்பதைப் பார் !

நன்றாகப் பார் !
அரவான்
நன்றாக
என்னைப் பார்  !

(என்று சொல்லிய
கிருஷ்ணனை
அரவான் பார்த்தான் )


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-226


            ஜபம்-பதிவு-474
           (பரம்பொருள்-226)

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
பாவப்பதிவுகளை மட்டும்
கழித்தால் போதாது
புண்ணியத்தையும்
கழித்துத் தான்
ஆக வேண்டும் “

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
பாவப்பதிவுகளையும்
புண்ணிய பதிவுகளையும்
கழித்தால் மட்டுமே
மனிதனுடைய
ஆன்மாவிற்கு பிறவி
என்பது கிடையாது “

“மனிதன் செய்யும்
எந்தவொரு செயலும்
பாவப்பதிவுகளாகவும்
புண்ணியப் பதிவுகளாகவும்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்தாலும்
இவைகள்
சஞ்சித கர்மம்
பிராரப்த கர்மம்
ஆகாம்ய கர்மம்
என்ற மூன்று
கர்மாக்களாக
மனிதனுடைய ஆன்மாவில்
பதிந்து மனிதனுடைய
பிறவி முழுவதும்
தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கிறது “

“வெள்ளைத் துணியில்
அழுக்கு எப்படி
படிந்திருக்கிறதோ
அவ்வாறே
நம்முடைய ஆன்மாவில்
கர்மாக்கள் பதிந்துள்ளன “

“மனிதனுடைய
ஆன்மாவில்
கர்மாவானது பதிந்து
இருக்கும் வரை
மனிதனுடைய
பிறவியானது தொடர்ந்து
கொண்டே இருக்கும் “

“வெள்ளைத் துணியில்
உள்ள அழுக்கை
நீக்கினால்
வெள்ளைத் துணி
எப்படி அழுக்கு
இல்லாமல் இருக்குமோ
அதைப்போல
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்மாக்களை இறை
அருளால் நீக்க வேண்டும் “

“ஆன்மாவில்
பதிந்துள்ள கர்மாக்களை
இறை அருளால்
முழுவதும் நீங்கி
விடும்போது
ஆன்மாவானது
தன்னுடைய
யாத்திரையை
முடித்து விடுகிறது  

“கடவுளுடன்
இணைந்து அதுவாகவே
மாறி விடுகிறது
ஆன்மா
முக்தி என்ற
மோட்சத்தை
அடைந்து விடுகிறது “

“ஆன்மாவானது
முக்தி என்ற
மோட்சத்தை
அடைவதற்கு முதலில்
மனிதன்
ஆன்மீகத்தில்
முதல் அடியை
எடுத்து
வைக்க வேண்டும் “

“ஆன்மீகத்தில்
முதல் அடியை எடுத்து
வைப்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல “

“தான் நன்றாக
இருக்க வேண்டும்  ;
தன்னுடைய குடும்பம்
நன்றாக இருக்க
வேண்டும் ;
தன்னுடைய
சந்ததிகள் நன்றாக
இருக்க வேண்டும்; - என்று
தன்னைப் பற்றியும்
தன்னுடைய
குடும்பத்தைப்
பற்றியும் மட்டுமே
நினைத்துக் கொண்டு
வாழ்க்கையைப் பார்த்து
அச்சப் பட்டுக்
கொண்டிருப்பவர்களாலும்  ;
மரணத்தைப்
பார்த்து பயந்து
கொண்டிருப்பவர்களாலும் ;
ஆன்மீகத்தில்
முதல் அடியைக் கூட
எடுத்து வைக்க முடியாது “

“பிறருடைய துன்பம்
கண்டு வருத்தப்படுதல்  
பிறருடைய துன்பத்தை
தன்னுடைய துன்பமாக
நினைத்து அதை
துடைத்தல் ;
தனக்காக வாழாமல்
பிறருக்காக வாழுதல் ;  
பொது நல எண்ணம்
கொண்டு செயலைச்
செய்தல் ;
வாழ்க்கையின்
பிரச்சினையைக்
கண்டு கலங்கி
விடாதிருத்தல் ;
மரணத்தைக் கண்டு
பயப்படாதிருத்தல் ;
ஆகிய தன்மைகளைக்
கொண்டவர்களால்
மட்டுமே

இந்த உலகம் முழுவதும்
நிரம்பி இருக்கக்
கூடிய கடவுள்
நம்முடைய உடலிலும்
இருக்கிறான் என்பதை
உணர்ந்து கொள்ள
முடியும் அவ்வாறு
உணர்ந்து கொள்பவர்களால்
மட்டுமே ஆன்மீகத்தில்
முதல் அடியை
எடுத்து வைக்க முடியும்”

“அதனைத் தொடர்ந்து
ஞானம் சமாதி என்ற
வரிசையில்
மோட்சம்
என்ற நிலையை
அடைய முடியும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-225


              ஜபம்-பதிவு-473
            (பரம்பொருள்-225)

“அழிவற்ற இருப்பு நிலை
எழுச்சி பெற்று
காலம் ; தூரம் ;
பருமன் ; வேகம் ;
ஆகிய நான்கு
பரிமாணங்களைக் கொண்டு
இயங்கும் போது
இயக்க நிலை
உண்டாகிறது “

“இருப்பு மற்றும்
இயக்கம் ஆகிய
இரண்டு நிலைகளும்
ஒன்றாக இணைந்து
பஞ்ச பூதங்கள் என்று
சொல்லப்படக்கூடிய
நிலம் நீர் நெருப்பு
காற்று விண்
ஆகியவை உண்டாகிறது”

“பஞ்சபூதங்கள் அனைத்தும்
ஒன்றாக இணைந்து

உடம்பால் உணரக்கூடிய
ஓரறிவு உயரினமான
புல் மரம்
போன்றவைகளும் ;

உடம்பு ; நாக்கு ;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஈரறிவு உயிரினமான
நத்தை சங்கு சிப்பி
போன்றவைகளும் ;

உடம்பு; நாக்கு; மூக்கு;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
மூவறிவு உயிரினமான
ஈசல் எறும்பு
போன்றவைகளும் ;

உடம்பு ;நாக்கு ;
மூக்கு ; கண் ;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
நான்கறிவு
உயிரினமான
நண்டு தும்பி
வண்டு
போன்றவைகளும் ;

உடம்பு ; நாக்கு ;
மூக்கு; கண்; காது;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஐயறிவு உயிரினமான
பறவைகள்
நான்கு கால் விலங்குகள்
போன்றவைகளும் ;

அதனைத் தொடர்ந்து

உடம்பு; நாக்கு; மூக்கு;
கண் ; காது ; மனது;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஆறறிவு உயிரினமான
மனிதனும் தோன்றுகிறான் “

“மனிதன் தான் என்ற
அதிகாரப் பற்றிலும்
தனது என்ற
பொருள் பற்றிலும்
செயல்களைச் செய்கிறான் “

“மனிதன் எந்தவொரு
செயலைச் செய்தாலும்
செயலுக்கான விளைவு
கண்டிப்பாக உண்டு “

“மனிதன் செய்யும்
எந்த ஒரு செயலிலும்
அந்த செயலுக்குரிய
விளைவானது
செய்யும் செயலிலேயே
இருக்கின்ற காரணத்தினால்
மனிதன் எந்த ஒரு
செயலையும் செய்து விட்டு
அந்த விளைவிலிருந்து
தப்பிக்கவே முடியாது “

“மனிதன் செய்யும்
எந்தவொரு செயலும்
பாவம் ; புண்ணியம் ;
என்ற இரு நிலைகளில்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிகிறது “

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
புண்ணிய பதிவுகளுக்கும்
பாவப்பதிவுகளுக்கும்
ஏற்றபடி மனிதனுக்கு
பிறவி என்பது ஏற்படுகிறது “

“மனிதனுடைய
ஆன்மாவில்
புண்ணிய பதிவுகள்
பாவப்பதிவுகள் ஆகிய
இரண்டு பதிவுகளும்
பதிந்து இருந்தால்
அந்த பதிவுகளுக்கு
ஏற்றபடி மனிதன்
இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
சுவர்க்க வாழ்க்கையையும்
நரக வாழ்க்கையையும்
மாறி மாறி ஒரு சேர
அனுபவிக்கிறான்”

“மனிதனுடைய
ஆன்மாவில்
புண்ணியப் பதிவுகள்
மட்டும் பதிந்து இருந்தால்
அந்த புண்ணியத்திற்குரிய
பலன்களை
அனுபவிப்பதற்காக இந்த
உலகத்தில் பிறவி எடுத்து
சுவர்க்க வாழ்க்கையை
அனுபவிக்கிறான்”

“மனிதனுடைய
ஆன்மாவில்
பாவப்பதிவுகள் மட்டும்
பதிந்து இருந்தால்
அந்த பாவத்திற்குரிய
பலன்களை
அனுபவிப்பதற்காக
இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
நரக வாழ்க்கையை
அனுபவிக்கிறான்”

“சுவர்க்கம் நரகம் என்ற
இரண்டு வார்த்தைகளும்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
புண்ணிய பதிவுகளுக்கும்
பாவப்பதிவுகளுக்கும்
ஏற்ப இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
அனுபவிக்கக்கூடிய
சுவர்க்க வாழ்க்கையையும்
நரக வாழ்க்கையையும்
குறிப்பது ஆகும்”

“பாவத்திற்காக
பிறவி எடுக்கும் ஆன்மா
புண்ணியத்திற்காகவும்
பிறவி எடுத்துத்
தான் ஆக வேண்டும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////