May 03, 2020

பரம்பொருள்-பதிவு-223


                ஜபம்-பதிவு-471
              (பரம்பொருள்-223)

(கிருஷ்ணன் பேசத்
தொடங்கினார்.
தனக்கு மோட்சம்
அளிப்பதற்கு முன்னர்
பரமாத்மா கிருஷ்ணன்
மோட்சம்
என்றால் என்ன
என்பதைப் பற்றியும் ;
மோட்சத்தை எப்படி
அடைய வேண்டும்
என்பதைப் பற்றியும் ;
பேசப் போகிறார்
என்பதைத் தெரிந்து
கொண்ட அரவான்
பரமாத்மா கிருஷ்ணன்
பேசுவதை மிகவும்
உன்னிப்பாகக் கேட்கத்
தொடங்கினான் )

கிருஷ்ணன் :
“பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடைப்பட்ட
வாழ்க்கையானது
எளிதில்
அவிழ்க்க முடியாத
மர்ம முடிச்சுகளால்
நிறைந்தது “

“இந்த
மர்ம முடிச்சுகளை
அவிழ்த்தால் மட்டுமே
பிறப்பும் இறப்பும்
எதனால் ஏற்படுகிறது
என்பதை உணர்ந்து
கொள்ள முடியும் “

“பிறப்பும் இறப்பும்
எதனால் ஏற்படுகிறது
என்பதை
உணர்ந்து கொள்ள
முடியாதவர்களால்
வாழ்க்கையின்
மர்ம முடிச்சுகளை
அவிழ்க்கவே முடியாது “

“பிறப்பும் இறப்பும்
எதனால் ஏற்படுகிறது
என்பதை உணர்ந்து
கொள்வதற்கு
முயற்சி செய்யாமல்
இறந்து விடாமல்
இருப்பதற்கு
எத்தகைய
வழிமுறைகளைக்
கையாள வேண்டும்
என்பதைத் தேடி
அலைந்து
கொண்டிருக்கிறது
மனித இனம் “

“இந்த உலகத்தில்
பிறந்த
ஒவ்வொரு மனிதனும்
இறந்து தான்
ஆக வேண்டும் என்ற
உண்மையைக் கூட
அறியாமல்
இறந்து விடாமல்
இருப்பதற்கு
என்ன வழி
என்பதைத்
தேடி ஓடிக்
கொண்டிருக்கிறது
மனித இனம் “

“இந்த உலகத்தில்
பிறந்து வளர்ந்து
வாழ்ந்து
கொண்டிருக்கும்
எந்த ஒரு
மனிதனும்
இறந்து தான்
ஆக வேண்டும் “

“இறப்பு என்பது
நிர்ணயிக்கப்பட்ட
ஒன்று “

“இறப்பிலிருந்து
யாரும் தப்பிக்க
முடியாது இருந்தாலும்
இறப்பு ஏற்படாமல்
செய்ய முடியும்  

“இறப்பு ஏற்படாமல்
செய்ய
வேண்டுமென்றால்
பிறப்பு என்பது
எதனால் ஏற்படுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும் “

“பிறப்பு எதனால்
ஏற்படுகிறது
என்பதை
யார் ஒருவர்
தெரிந்து கொள்கிறாரோ
அவரால் மட்டுமே
இறக்காமல்
இருக்க முடியும் “

“இந்த உலகத்தில்
ஒரு மனிதன்
பிறந்திருக்கிறான்
என்றால் அவன்
தன்னுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்ம வினையினால்
தான் பிறந்திருக்கிறான்
என்று பொருள் “

“தன்னுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்ம வினையினைத்
தீர்ப்பதற்காகவே
இந்த உலகத்தில்
பிறந்திருக்கிறான்
என்று பொருள் “

“நம்முடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்ம வினையினால்
தான் இந்த உலகத்தில்
பிறந்திருக்கிறோம்
என்பதை
உணர்ந்து கொண்டு
யார் ஒருவர்
தன்னுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்ம வினையை
முற்றிலுமாக
கழித்து விடுகிறாரோ
அவருடைய ஆன்மா
மட்டுமே இறைவனுடன்
ஒன்றாகக் கலந்து
இறைவனாகவே
மாறி விடுகிறது “

“இதனால் அந்த
மனிதனின் ஆன்மா
மீண்டும் பிறப்பதில்லை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment