October 15, 2019

பரம்பொருள்-பதிவு-71


            பரம்பொருள்-பதிவு-71

“தங்களை நோக்கி
வந்து கொண்டிருந்த
நாரதரை நேர் எதிர் சென்று
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் வரவேற்றனர் “

தர்மர் :
"தேவ ரிஷியே தங்கள்
வரவு நல்வரவாகுக !

தங்கள் வரவால் எங்கள்
நகரம் பெருமையடைந்தது !

எங்கள் மாளிகை
புனிதமடைந்தது !

எங்களை
ஆசிர்வதியுங்கள் !

(என்று பஞ்ச
பாண்டவர்களும், திரௌபதியும்
நாரதர் காலில் விழுந்து
நாரதரை வணங்கினர்)

"எல்லா நலமும் பெற்று
வளமுடன் வாழ்க !
என்று பஞ்ச
பாண்டவர்களையும்
திரௌபதியையும்
நாரதர் வாழ்த்தினார் "

"பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும்
ஒன்றாக இணைந்து
நாரதரை ரத்தின
சிம்மாசனத்தில்
அமர வைத்து
நாரதருக்கு
ராஜ உபசாரம் அளித்து ;
நாரதருக்கு செய்ய
வேண்டிய அனைத்து
பணிவிடைகளையும்
குறைவில்லாமல் செய்து ;
தங்களுக்கு அருளுரை
வழங்குமாறு கேட்டுக்
கொண்டதற்கிணங்க
நாரதர் பேசத்
தொடங்கினார் ”

நாரதர் ;
" ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக ;
அனைவரையும் அனுசரித்துச்
செல்லக் கூடியவனாக ;
குடும்பத்தின் கஷ்டம்
நஷ்டம் உணர்ந்து
செயல்படுபவனாக ;
எந்தவிதமான பிரச்சினை
வந்தாலும் சமாளித்து
குடும்பத்தை வழிநடத்திச்
செல்லக் கூடியவனாக ;
பெரியோர்களை மதித்து
பெரியோர் சொல் கேட்டு
பெரியோர்கள் காட்டும்
நல்வழி நடந்து செல்பவனாக ;
இருந்தால் மட்டுமே
அக்குடும்பமும்
அக்குடும்பத்தில் உள்ள
அனைவரும் எந்தவிதமான
குறைவும், மனவருத்தமும்
இல்லாமல் மகிழ்ச்சியாக
இருக்க முடியும் "

"குடும்பத்தில் உள்ள
தலைமகன் நல்ல குணம்
இல்லாதவனாக இருந்தாலோ ?
தனக்கு தோன்றியதை
செய்து கொண்டு சுற்றித்
திரிந்து கொண்டு இருந்தாலோ ?
குடும்பக் கஷ்டம் தெரியாமல்
கவலைப்படாமல் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலோ ?
ஊதாரித் தனமாக சுற்றிக்
கொண்டிருந்தாலோ ?
சம்பாதிக்காமல் வீண்
விரயம் செய்து
கொண்டிருந்தாலோ ?
பெரியோர்கள் சொல்
கேட்காமல் இருந்தாலோ?
பெரியோர்கள் வார்த்தைகளை
மதிக்காமல் இருந்தாலோ ?
பெரியோர் காட்டும் நல்வழியில்
நடக்காமல் இருந்தாலோ ?
அத்தலைமகன்
மட்டுமல்ல அக்குடும்பமும்
கஷ்டப்படத் தான் நேரும்"

"பஞ்சபாண்டவர்களின்
தலைமகன் தர்மர்
நல்ல குணநலன்களைக்
கொண்டவனாக
இருக்கின்ற காரணத்தினால்,
பாண்டவர்களாகிய
நீங்களும் உங்களைச்
சார்ந்தவர்களும் பல்வேறு
துன்பங்களை அனுபவித்தாலும் ;
கஷ்டத்தில் கவலையுற்றாலும் ;
மன அமைதியுடன்
இருக்கிறீர்கள் ;"

"கௌரவர்களின்
தலைவமகன்
துரியோதனன்
நல்ல குணநலன்கள்
இல்லாமல் இருக்கின்ற
காரணத்தினால் கௌரவர்களும்
அவரைச் சார்ந்தவர்களும்
அனைத்து செல்வங்களை
வைத்திருந்தும் மன அமைதி
இல்லாமல் தவிக்கிறார்கள்"

"ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக இருப்பது
எவ்வளவு முக்கியம் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்"

"அதைப் போல ஒரு
நாட்டின் தலைமகனான
அரசனும் நல்லவனாக ;
மக்கள் மனம்
அறிந்து நடப்பவனாக ;
மக்கள் குறைகளை கேட்டு
அதை நிவர்த்தி
செய்பவனாக ;
இருந்தால் மட்டுமே
ஒரு நாட்டையும் ;
நாட்டிலுள்ள மக்களையும்
எந்தவிதமான மன
குறையும் இல்லாமல்
மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முடியும் ;"

"அந்த விதத்தில்
குடும்பத்தின் தலைமகனாக ;
நாட்டின் தலைவனாக ;
தர்மத்தின் காவலனான
தர்மரே இருக்கும் போது
பாண்டவர்களுக்கும்
இந்திரபிரஸ்தத்திற்கும்
என்ன குறை
ஏற்படப்போகிறது
என்று சொல்லிக் கொண்டே
திரௌபதியை நோக்கி
பேசத் தொடங்கினார்
நாரதர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------15-10-2019
//////////////////////////////////////////