September 07, 2016

1-இயேசு கிறிஸ்து-போகர்- தானான மோட்ச-பதிவு-77(பாகம்-1)

இயேசு கிறிஸ்து-போகர்- தானான மோட்ச-பதிவு-77(பாகம்-1)


""""பதிவு எழுபத்துஏழை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்."
-------மத்தேயு - 27 : 61

"ஆயத்தநாளுக்குப் பின்னான மறு நாளிலே பிரதான ஆசாரியாரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:"
-------மத்தேயு - 27 : 62
"ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருபேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது."
-------மத்தேயு - 27 : 63
"ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்."
-------மத்தேயு - 27 : 64
"அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடிய மட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்."
-------மத்தேயு - 27 : 65
"அவர்கள் போய் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்."
-------மத்தேயு - 27 : 66
"ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்"
-------மத்தேயு - 28 : 01
"அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்"
-------மத்தேயு - 28 : 02
"அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது"
-------மத்தேயு - 28 : 03
"காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்"
-------மத்தேயு - 28 : 04
"தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்."
-------மத்தேயு - 28 : 05
"அவர் இங்கே இல்லை தாம் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்"
-------மத்தேயு - 28 : 06
"சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் கான்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்"
-------மத்தேயு - 28 : 07

"அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்"
-------மத்தேயு - 28 : 08
"அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்"
-------மத்தேயு - 28 : 09
"அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள் நீங்கள் போய் என் சகோதரர் கலிலேயாவுக்குப் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்."
-------மத்தேயு - 28 : 10

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும்
எட்டு நிலைகளில் ஏதேனும்
ஒன்றில் பாதிக்கப்பட்டிருப்பர்
அல்லது
எட்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றையோ
அல்லது சிலவற்றையோ
பிறர் மீது பயன்படுத்தி இருப்பர்

இந்த எட்டு நிலைகளில் ஏதேனும்
ஒன்றில் கூட பாதிக்கப்டாதவரோ
இந்த எட்டு நிலைகளில் ஏதேனும்
ஒன்றினால் பிறரை பாதிக்கப்படாமல்
செய்யாமல் இருப்பவரோ
யாரேனும் இருக்க முடியாது.

மனிதராகப் பிறந்து விட்ட ஒவ்வொருவரும்
இந்த எட்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றினால்
பாதிக்கப்பட்டோ அல்லது
மற்றவரை பாதிப்பு அடையச் செய்தவராகவோ இருப்பார்.

இந்த எட்டு நிலைகளை
நான்கு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்
ஒவ்வொரு பிரிவும் இரண்டு நிலைகளைத்
தன்னுள் கொண்டுள்ளது
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள இந்த இரண்டு நிலைகளும்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை
ஒன்றை விட்டு ஒன்று பிரியாதவை.

இந்த நான்கு பிரிவுகளும்
வெவ்வேறு தன்மைகளைத் தன்னுள் கொண்டிருந்தாலும்
அதில் உள்ள நிலைகள்
ஒரே விதமான பண்புகளைத்
தன்னுள் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நிலைகள் என
நான்கு பிரிவுகளுக்கு எட்டு நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு பிரிவும்
வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட
நிலைகளைக் கொண்டுள்ளது;
ஒவ்வொரு நிலையும் வெவ்வேறு விதமான
தன்மைகளைத் தன்னுள் கொண்டது;

நான்கு பிரிவுகளும்  ஒன்றொன்றுக்கொன்று
வேறுபாடு இருப்பது போல் தோன்றினாலும்
இவைகள் ஒன்றொன்றுக்கொன்று
நெருங்கிய தொடர்பு கொண்டவை.

சமுதாயம் இந்த எட்டு நிலைகளை
எப்படி பயன்படுத்துகிறது
எந்த காலத்தில் பயன்படுத்துகிறது
எந்த சூழ்நிலையில் பயன்படுத்துகிறது என்பதை
அதை பயன்படுத்தும் நிலைகளைக்
கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும்
இந்த எட்டு  நிலைகளில் ஏதேனும்
ஒன்றில் இருக்கலாம்
அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்
என்பதை அவர்கள் இருக்கும்
நிலைகளைக் கொண்டே
எந்த நிலைகளில் இருக்கிறார்கள் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.

இந்த எட்டு நிலைகளும்
பெரிய திரை, சின்னத்திரை,
ஊடகங்கள், எழுத்துதுறை, தொழில்துறை என
பலவகைப்பட்ட தொழில்களிலும்
இந்த எட்டு வகையான நிலைகள்
பயன் படுத்தப் பட்டு வருகிறது.

அந்த எட்டு நிலைகளை
இந்த சமுதாயம் எப்படி பயன்படுத்தி வருகிறது
என்பதை வெட்ட வெளிச்சமாக
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
பெரிய திரை எனப்படும்
சினிமாத் தொழிலின் மூலம்
தெரிந்து கொள்ளலாம்.

சினிமாத் துறையில் நிகழும்
நிகழ்வுகளைக் கொண்டே
இந்த எட்டு நிலைகளைத் தெரிந்து
கொள்ளலாம் என்றாலும்,
அனைத்து துறைகளிலும்
நாம் வேலை செய்யும்
தொழிலகங்களிலும்,
அலுவலகங்களிலும்,
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்,
கூட நாம் தெரிந்து கொள்ளலாம்

முதல் பிரிவு:
முதல் பிரிவில் உள்ள இரண்டு நிலைகள்
ஒன்று     ஒருவருக்கு திறமை இல்லாவிட்டாலும்
                                       சமுதாயம் தனக்கு தேவை என்றால்
                                       அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இரண்டு   ஒருவருக்கு திறமை இருந்தாலும்
    சமுதாயம் தனக்கு தேவை இல்லை என்றால்
    அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாது.

சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர்
இவரால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்
என்று நினைத்தால்,
இவர் வளர்ந்தால் நம் நிலை உயரும்
என்று நினைத்தால்,
இவர் நம் சாதிக்காரர் இவர் வளர்ந்தால்
நல்லது என்று நினைத்தால்,
இவர் நம் மொழிக்காரர் இவர் வளர்ந்தால்
நல்லது என்று நினைத்தால்,
இவர் உயர்வதன் மூலம் நம் நிலை
உயரும் என்று நினைத்தால்,
இவர் வளர்வதன் மூலம் தங்கள் செல்வாக்கு
உயரும் என்று நினைத்தால்,
இவர் வளர்ச்சி நம் வாழ்க்கையின் வளர்ச்சி
என்று நினைத்தால்,
இவர் நம் சொந்தக் காரர் இவர் வளர்ந்தால்
நம் சொந்தங்கள் அனைவரும் வளர்வர்
என்று நினைத்தால்,
அதற்காக சம்பந்தப்பட்ட நபரை
வளர்ப்பர்.

அவருக்கு திறமையே இல்லாவிட்டாலும் - என்ன
ஒரு திறமை என்று புகழ்வர்
விளம்பரங்கள் கொடுத்து அவரை
ஒன்றும் இல்லாதவரை
திறமை இல்லாதவரை
திறமை உள்ளவர் போலவும்
விளம்பரம் செய்வர்.
நான்கு பேரைக் கூட்டி வந்து
அவர் போல் யார் இருக்கிறார்
என்று புகழ் பாடுவர்.

ஏதாவது ஒரு படத்தில் நடித்தால்
ஆகா என்ன அழகாக நடித்து இருக்கிறார்;
அந்த காட்சியில் அவர் நடிப்பு அற்புதம்;
இந்த காட்சியில் அவர் நடிப்பு அற்புதம்;
அவர் படத்திற்கு படம்
அவர் நடிப்பு கூடிக்கொண்டே போகிறது;
அவர் நடிப்பு பிரகாசித்துக் கொண்டே
போகிறது;
இந்த நிலையில்
இவர் நடித்துக் கொண்டே போனால்
இவர் நடிப்பின் எல்லைகளைத் தொட்டு விடுவார்;
சிறந்த நடிகர் என்று பெயர் பெறுவார்;
சிற்நத ஒரு சிறந்த நடிகர்;
இவரைப் போல நடிப்பதற்கு ஆள் இல்லை
என்ற பெயர் பெறுவார்;
படத்திற்கு படம் இவர் நடிப்பின்
தன்மை மாறிக் கொண்டே போகிறது;
நடிப்பு தன்மை கூடிக் கொண்டே போகிறது;
நடிப்பு கற்றுக் கொண்டே வருகிறார்;
என்று புகழ்வர்.

மக்களில் ஏமாந்த சிலரையும்
பணத்திற்காக துதி பாட சிலரையும்
கூட்டிக் கொண்டு வந்து
அவர் நடிப்பு பிரமாதாம்
அவர் நடிக்கும் படங்கள் அருமை
என்று சொல்ல வைக்கும்.

திறமையே இல்லாதவரை
ஒன்றுமே தெரியாதவரை
நடிப்பு கற்றுக் கொள்ளாதவரை
நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்பவரை
சமுதாயம் தேவைப்படும் போது
உயர்ந்த நிலைக்கு கொண்டு வைத்து விடுகிறது.
அதாவது,         
          ஒருவருக்கு திறமை இல்லாவிட்டாலும்
     சமுதாயம் தனக்கு தேவை என்றால்
     அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இது ஒன்றாம் நிலை.

நிறைய திறமைகள் இருந்தாலும்;
அதை வெளிப்படுத்தி கடினமாக நடித்தாலும்;
படத்திற்கு படம் வெவ்வேறு விதமாக
நடிப்பை வெளிப்படுத்தினாலும்;
படத்திற்கு படம் வித்தியாசமான
கதை அம்சம் நிறைந்த படங்களில் நடித்தாலும்;
உயிரைக் கொடுத்து நடித்தாலும்;
சிறப்பான வேடம் ஏற்று நடித்தாலும்;
இவரால் நமக்கு பயன் இல்லை;
இவர் வளர்வதால் நமக்கு ஒரு
உபயோகமும் இல்லை;
இவர் நம் சாதிக்காரர் இல்லை;
இவர் நம் மொழிக்காரர் இல்லை;
இவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை;
இவர் வளர்வதால் நமக்கு
எந்த விதத்திலும் முன்னேற்றம் இல்லை;
இவர் வளர்வால் நமக்கு
எந்தவிதத்திலும் உபயோகம் இல்லை;
என்று நினைத்து,
சமுதாயத்தில் உள்ள சிலர்
வளர நினைப்பவரை,
வளர்ந்து கொண்டே வருபவரை,
அவரை வளர விடாமல் என்ன
என்ன செயல்களைச் செய்ய முடியுமோ,
எந்த எந்த செயல்களைச் செய்தால்
அவரை வீழ்த்த முடியுமோ,
எந்ந் செயல்களைச் செய்தால்
அவருக்கு திறமை இல்லை என்று
நிரூபிக்க முடியுமோ,
எந்த செயல்களைச் செய்தால்
அவர் படங்கள் நன்றாக இல்லை
என்று மக்களை சொல்ல வைக்க முடியுமோ,
எந்த செயல்களைச் செய்தால்
அவரை மேல் நிலைக்கு வராமல் தடுக்க முடியுமோ,
அந்த செயல்களைச் செய்து
உண்மையான திறமை இருப்பவர்களை;
உயர்வான நிலைக்கு வர வேண்டும்
என்ற லட்சிய வெறி கொண்டவர்களை;
செய்யும் தொழியை தெய்வமாக மதிப்பவர்களை;
தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற
கொள்கை கொண்டவர்களை;
உயர்ந்த நிலைக்கு வர விடாமல்
சதி திட்டம் தீட்டி
குறுக்கு வழிகளைக் கையாண்டு
உண்மையான திறமைகளைக் கொண்டு
உயர்ந்த நிலைக்கு வளர்ந்து கொண்டு வருபவர்களை
சமுதாயம் வளர விடாமல் தடுக்கும்.
அதாவது,
          ஒருவருக்கு திறமை இருந்தாலும்
சமுதாயம் தனக்கு தேவை இல்லை என்றால்
அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாது.
இது இரண்டாம் நிலை

சமுதாயம் தனக்கு தேவைப்பட்டால்
திறமை இல்லாவிட்டாலும்
அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும்
சமுதாயம் தனக்கு தேவை இல்லை என்றால்
அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு வராது

இரண்டாவது பிரிவு
இரண்டாவது பிரிவு என்பது
மூன்றாவது நிலை மற்றும் நான்காவது நிலை
ஆகியவற்றைத் தன்னுள் கொண்டது.
மூன்று  சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர்
                                    தங்களை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்காக
    தங்கள் தவறான செயல்களை மறைக்க
                                   தேவைப்படும் போது ஒருவரை வளர்ப்பர்.
நான்கு  சமுதாயத்தில் தங்களுக்காக
                                     தவறான செயல்களைச் செய்வதற்காக
                                     வளர்த்து விட்ட நபரால்
      தங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தால்
      அவரை அழித்து விடுவர்

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளோர்;
செல்வம் படைத்தவர்கள்;
பதவியில் உள்ளவர்கள்;
அதிகாரம் படைத்தவர்கள்;
அரசியல்வாதிகள்;
பொருளாதாரத் துறையில் உள்ளவர்கள்;
பொருளாதாரத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள்;
செல்வச் செழிப்பில் மிதப்பவர்கள்;
தங்கள் உயர் நிலையை காப்பாற்றிக் கொள்வதற்காகவும்;
தங்கள் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காகவும்;
தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்;
தங்கள் பதவியை காத்துக் கொள்வதற்காகவும்;
தங்கள் மேல் எந்த கரையும் படாமல்
தற்காத்துக் கொள்வதற்காகவும்;
தான் நல்லவன் என்பதை
இந்த சமுதாயம் தொடர்ந்து
நம்ப வேண்டும் என்பதற்காகவும்;
தான் உயர்ந்த உள்ளம் படைத்தவன் - என்று
இந்த சமுதாயம் நம்ப வேண்டும் என்பதற்காகவும்;
தான் கருணை உள்ளம் கொண்டவன் என்பதை
இந்த சமுதாயத்தில் காட்டுவதற்காகவும்;
ஏழைகளுக்காக இரங்குபவன் என்பதை
இந்த சமுதாயம்
நம்ப வேண்டும் என்பதற்காகவும்;
அநீதி கண்டு ஆர்த்தெழுபவன்;
கொடுமை கண்டு கொதித்தெழுபவன்;
அக்கிரமம் கண்டு குரல் கொடுப்பவன்;
இல்லாதவர்களைக் கண்டு வருந்துபவன் - என்று
இந்த சமுதாயம் நம்ப வேண்டும் என்பதற்காகவும்;
இந்த சமுதாயம்
தங்களை ஒரு நிலையில் வைத்துள்ளதை
தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்;
ஏற்கனவே தவறு செய்தவர்
யாரேனும் இருந்தாலோ - இல்லை
நல்லவர் யாரேனும் இருந்தாலோ,
ஏழைகள் யாரேனும் இருந்தாலோ,
ஏமாந்தவர் யாரேனும் இருந்தாலோ,
அவரை பயன்படுத்திக் கொள்வார்கள்.

நல்லவர்களாக நடிப்பவர்கள் தொடர்ந்து
தங்களுடைய இருட்டு வேலைகளுக்கு
கெட்டவர்களாக ஆக்கப் பட்டவர்களை பயன்படுத்தி
மக்களை குருடர்களாக்கி விடுவார்கள்;
தங்கள் குற்றச் செயல்களை
கெட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள்
மூலம் செய்வார்கள்;
இவர்களுடைய தவறுகள் அவர்கள்
மூலமாக செய்யப்படும்;
இவர்களுடைய குற்றங்கள் அவர்கள்
மூலமாக செயல்படுத்தப்படும்;
இவர்களுடைய கறுப்புப்பணம் அவர்கள்
மூலமாக வெளிப்படும்;
சமுதாயத்தால் குற்றம் என்று கூறப்படும்
தொழில்கள் அனைத்தும்
இவர்கள் மூலம் செய்யப்பட்டு
அதன் மூலம் கிடைக்கும் வருவாய்
அவர்கள் எடுத்துக் கொள்வர்.

அவர்களுடைய குற்றங்கள்
இவர்கள் மூலமாக வெளிப்படும்
இவர்கள் குற்றங்கள் செய்யச் செய்ய
அவர்களுடைய நிலை உயரும்
பொருளாதாரம் ஏற்றம் பெரும்
இவர்களை வைத்து அவர்கள் உயர்வர்.
அதாவது,
சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர்
         தங்களை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்காக
         தங்கள் தவறான செயல்களை மறைக்க
         தேவைப்படும் போது ஒருவரை வளர்ப்பர்.
இது மூன்றாம் நிலை

சமுதாயம் தனக்கு தேவைப்படும் போது
தங்கள் குற்றங்களை மறைக்க ஒருவரை
உருவாக்கும்.

உருவாக்கப்பட்டவர்
நல்ல பெயரில் உயர்ந்த நிலைக்கோ
கெட்ட பெயரில் உயர்ந்த நிலைக்கோ
வந்து விடுவர்.
குறுக்கு வழிகள் பலவற்றையும்
தெரிந்து கொள்வர்.

பணம் படைத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்;
செல்வாக்கு நிரம்பியவர்களின் அனுசரனை கிடைக்கும்;
பதவியில் உள்ளவர்களின் இணைப்பு கிடைக்கும்;

சமுதாயத்தில்
நல்லவர்களாக நடிப்பவர்கள்
கெட்டவர்களாக ஆக்கப்பட்டவர்களால்
தங்களுக்கு ஆபத்து
என்று நினைத்தால்,
இவர்கள் மாட்டிக் கொண்டு தங்களை
மாட்டி விட்டு விடுவார்கள்
என்று நினைத்தால்,
இவர்கள் மாட்டினால் தாங்களும் மாட்டுவோம்
என்று நினைத்தால்,
இவர்கள் வாய் திறந்தால் தங்கள்
குற்றங்கள் வெளிப்படும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால் தங்கள்
அந்தரங்க வாழ்க்கையின் அசிங்கங்கள் வெளிப்படும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால் தங்கள் பெயருக்கு
களங்கள் ஏற்படும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால் இவ்வளவு நாட்கள்
தாங்கள் சேர்த்து வைத்த நற்பெயருக்கு
களங்கள் ஏற்படும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால் தங்கள் வாழ்க்கை
மண் மேடாகி விடும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால்
தங்கள் வாழ்க்கையின்  அசிங்கங்கள்
வெட்ட வெளிச்சமாகி விடும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால் உயர் நிலையில் உள்ள
தங்கள் வாழ்க்கை
தாழ்வான நிலைக்கு வந்து விடும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால்
தங்கள் வாழ்க்கை அஸ்தமனமாகி விடும்
என்று நினைத்தால்,
இவர்கள் பேசினால்
தங்கள் வாழ்க்கை
அதல பாதாளத்திற்கு போய்விடும்
என்று நினைத்தால்,
கெட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் பேசினால்
தங்கள் நிலை தாழ்ந்து விடும்
என்று நினைத்தால்,
யாரெல்லாம் சேர்ந்து தங்கள்
குற்றங்களை மறைக்க
தங்கள் தவறான வாழ்க்கையை மறைக்க
யாரை கெட்டவராக உருவாக்கினார்களோ
அவர்களை அழித்து விடுவர்
அவரை கொன்று விடுவர்.

அவரை இந்த சமுதாயத்தில் மட்டுமில்லை
அவரை இந்த நாட்டில் மட்டுமில்லை
அவரை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவர்.
அதாவது அவரை கொன்று விடுவர்.

சமுதாயத்தில் தங்களுக்காக குற்றச் செயல்கள்
புரிவதற்காக வளர்த்து விட்ட நபரால் தங்களுக்கு
ஆபத்து என்று தெரிந்தால் அவரை
அழித்து விடுவர்
அதாவது,
சமுதாயத்தில் தங்களுக்காக
        தவறான செயல்களைச் செய்வதற்காக
        வளர்த்து விட்ட நபரால்
        தங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தால்
        அவரை அழித்து விடுவர்

இது நான்காம் நிலை

மூன்றாம் பிரிவு
மூன்றாம் பிரிவு இரண்டு நிலைகளைத்
தன்னுள் கொண்டது
அதாவது ஐந்தாம் நிலை மற்றும்
ஆறாம் நிலை.

ஐந்து   சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
                                சமுதாயத்திற்கு நல்லது
                                ஆனால் அவரால் தங்களுக்கு ஆபத்து என்று
                                தெரிந்தால் அவரை அழித்து விடுவது.
ஆறு   சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
                                சமுதாயத்திற்கு நல்லது
                                ஆனால் தங்களுக்கு ஆபத்தில்லை என்று
                                 தெரிந்தால் அவரை வளர விட்டு விடுவது.

சமுதாயத்தில்
நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்
அன்பில் சிறந்தவராய்;
ஆன்மீகத்தில் உயர்ந்தவராய்;
இரக்கம் மிகுந்தவராய்;
ஈவதில் சிறந்தவராய்;
உண்மையே உருவானவராய்;
ஊரே வணங்குபவராய்;
எளிமையே வடிவானவராய்;
ஏழைகளின் தலைவரானவராய்;
ஐந்நிலமும் வணங்குபவராய்;
ஒழுக்கத்தை போதிப்பவராய்;
ஓம் ஆனவராய்;
ஔஷதம் மிக்கவராய்;
இருப்பவர்.

சமுதாயத்தில் நிலவி வரும்
கொடுமைகளைக் கண்டு கொதிப்பவர்;
அறியாமையைக் கண்டு வருந்துபவர்;
ஏழ்மையைக் கண்டு கலங்குபவர்;
அறியாமையைக் கண்டு நொறுங்குபவர்;
சிறந்த உள்ளம் படைத்தவர்;
உண்மையைப் பேசுபவர்;
நேர்மையாக இருப்பவர்;

ஆண்டான்டு காலமாக இருந்து வரும்
அறியாமை இருட்டு விலக வேண்டும்;
அடிமைத் தனம் ஒழிய வேண்டும்;
சாதிப் பகை மறைய வேண்டும்;
மொழி வெறி மாய வேண்டும்;
பகுத்தறிவு சிந்தனை விதைக்கப் பட வேண்டும்;
ஏழ்மை நிலை களையப்பட வேண்டும்;
சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும்;
அறியாமை இருள் விலக வேண்டும்;
துரோகங்கள் களையப்பட வேண்டும்;
உண்மை அறியணை ஏற வேண்டும்;
பொய்கள் புதைக்கப்பட வேண்டும்;
போலிகள் கழு ஏற்றப்பட வேண்டும்;
நன்மைகள் விளைய வேண்டும்;
இன்பங்கள் பூக்க வேண்டும்;
சந்தோஷங்கள் மலர வேண்டும்;
கவலைகள் ஓட வேண்டும்;
துன்பங்கள் கரைய வேண்டும்;
கண்ணீர் ஆவியாக வேண்டும்;
இழப்புகள் மறைய வேண்டும்;

முன்னேற்றத்தின் வித்து விதைக்கப் பட வேண்டும்;
உயர்வுகளின் சாளரங்கள் திறக்கப்பட வேண்டும்;
இன்பங்களின் ஊற்றுக்கள் சுரக்க வேண்டும்;
மகிழ்ச்சியின் காற்றை சுவாசிக்க வேண்டும்;
சந்தோஷத்தின் கனவுகள் உயிர்ப்பெற வேண்டும்;
அன்பு அரியணையில் ஏற வேண்டும்;
கருணை அரசாட்சி செய்ய வேண்டும்;
இரக்கம் உயர்வு பெற வேண்டும்;

என்ற சிந்தனைகளை தாங்கி
என்ற நினைவுகளை
கொள்கைகளாக ஏற்று,
என்ற நினைவுகளை
மனதில் தாங்கி,
சமுதாயத்திற்காகவும்,
சமுதாய முன்னேற்றத்திற்காகவும்,
நாட்டிற்காகவும்,
நாட்டு மக்களுக்காகவும்,
தன் சுயநலத்தை பார்க்காமல்
பொது நலம் ஒன்றே தன் குறிக்கோள் - என்று
வைத்துக் கொண்டு,
சமுதாயத்திற்கு சேவை செய்ய வருவோர்
புரட்சியின் வித்தாக கருதப்படுவர்.

அவர்களால் தான் வரலாறு மாற்றப்படும்
புது சரித்திரம் எழுதப்படும்
அத்தகையவர்கள் பல நூற்றாண்டுகள்
கடந்து தோன்றுவர்.
ஆனால் அவர்களை
சிலரே புரிந்து கொள்வர்.
பலரால் புரிந்து கொள்ள முடியாது

உண்மையான இதயம் கொண்டோர்
நேர்மையான நெஞ்சம் கொண்டோர்
இத்தகையவரை புரிந்து கொள்வர்.

இத்தகைய சிறப்பு மிக்கவர்
வளர்வது என்பது
சமுதாயத்திற்கும்
சமுதாய மக்களுக்கும் நல்லது.

சுகத்தில் திளைப்பவர்;
சுகபோக வாழ்வு அனுபவிப்பவர்;
பதவி சுகத்தை சுவைப்பவர்;
அதிகார போதையில் ஆடுபவர்;
செல்வச் செழிப்பில் சிரிப்பவர்;
பணத்தில் குளிப்பவர்;
சாதி வெறியில் தள்ளாடுபவர்;
பிரிவினையை ரசிப்பவர்;
பகைமையை மூட்டி ஆதாயம் தேடுபவர்;
பிரிவினையை ஏற்படுத்தி உயர்வைத் தேடுபவர்;
இயலாமையைப் பயன்படுத்தி
முன்னேற்றத்தைக் காண்பவர்;
அறியாமையைப் பயன்படுத்தி
மேல் நிலைக்கு வருபவர்;
ஆகியோர் ஒன்று கூடி சிந்தித்து
இத்தகைய சுயநல விரும்பிகள்
ஒன்றுகூடி திட்டம் தீட்டி
பொதுநலம் கொண்டவர்கள்
சமுதாயத்தில் உயர்வது என்பது
சமுதாயத்திற்கு வேண்டுமானால்
நல்லதாக இருக்கலாம் - ஆனால்
தங்களுக்கு நல்லது அல்ல
என்று உணர்ந்தால்
சுயநல விரும்பிகள்
பொது நலம் கொண்டவர்களை
அழித்து விடத் துடிக்கும்.

ஏமாற்று வேலைகள் பல செய்து
கூலிக்கு ஆட்களை ஏற்பாடு செய்து
ஏமாற்றுக் காரர்களை உருவாக்கி
கபட வேடதாரிகளை உலவவிட்டு
பொய் குற்றம் சாட்டி
உண்மையான பொது நலம்
கொண்டவர் இருந்தால்
சமுதாயத்திற்கு நல்லதல்ல - என்று
சமுதாயத்தை நம்ப வைத்து
பொதுநலம் கொண்டவரை
அழித்து விடத் துடிப்பவர்
துணிந்து அவரை அழித்து விடுவர்
சமுதாயத்தின் நிலையை
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்
அவரைக் கொன்று விடுவர்.

சமுதாயத்திற்கு நல்லது செய்ய வரும் ஒருவரை
அவர் உயர்ந்தால் தங்களுக்கு ஆபத்து
என்று தெரிந்தால்
அவரைக் கொன்று விடுவர்.
அதாவது,
சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
        சமுதாயத்திற்கு நல்லது
        ஆனால் அவரால் தங்களுக்கு ஆபத்து என்று
        தெரிந்தால் அவரை அழித்து விடுவது.
இது ஐந்தாம் நிலை.

பொதுநல எண்ணத்தைக் கொண்டு
நல்ல குணங்களைக் கொண்டு
சமுதாயத்திற்கு நல்லது செய்தாலும்,
சமுதாயம் இவரால் உயர்ந்தாலும்;
சமுதாயம் இவரால் மாற்றம் அடைந்தாலும்;
சமுதாயம் இவரால் மேன்மை பெற்றாலும்;
சமுதாயம் இவரால் உயர்வுகளைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் நல்ல நிலைகளைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் சுயமரியாதைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் பகுத்தறிவு பெற்றாலும்;
சமுதாயம இவரால் மகிழ்ச்சியைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் இன்பங்களைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் சந்தோஷங்களைப் பெற்றாலும்;
சமுதாயம் இவரால் நன்மைகளைப் பெற்றாலும்;
இவர்களால் நல்ல நிலைகளைப் பெற்ற
பொது நலம் கொண்டவர்களால்
தங்களுக்கு ஆபத்து இல்லை என்று
சுயநல விரும்பிகள் நினைத்து
தங்களுக்கும்,
தங்கள் பதவிக்கும்,
தங்கள் அதிகாரத்திற்கும்,
தங்கள் சுகமான வாழ்க்கைக்கும்,
எந்த வித ஆபத்தும் இல்லை என்று
தெரிந்தால் அவரை விட்டு விடுவர்.

சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
சமுதாயத்திற்கு நல்லதாக இருந்தாலும்
அவர்களால் தங்களுக்கு ஆபத்து இல்லை
என்று உணர்ந்தால்
அவர்களை விட்டு விடுவர்.
அதாவது,
சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
       சமுதாயத்திற்கு நல்லது
       ஆனால் தங்களுக்கு ஆபத்தில்லை என்று
                  தெரிந்தால் அவரை வளர விட்டு விடுவது.

இது ஆறாம் நிலை

நான்காம் பிரிவு
நான்காவது பிரிவில் இரண்டு
நிலைகள் உள்ளன
ஏழாம் நிலை மற்றும் எட்டாம் நிலை.

ஏழு பணக்காரராக இருந்து தவறு செய்தால்
                           தனது தவறை மறைக்க ஏமாந்தவன்
                           ஏழையாக இருப்பவன் மீது
                           போட்டு விடுவது
     எட்டு ஏழையாக இருப்பவன் தவறு செய்தால்
                           ஏழைதான் மாட்டிக் கொள்வான்

ஒரு பணக்காரன்
பணபலம் நிறைந்தவன்;
அதிகாரம் படைத்தவன்;
ஒரு தவறு செய்தால்
ஒரு தவறை தெரிந்தே செய்தால்
தான் செய்யும் தவறு
தவறு என்று தெரிந்தே செய்தால்
தவறு செய்தால் மாட்டுவோம்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்தால் தண்டனை கிடைக்கும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்தால் மாட்டிக் கொள்வோம்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
பல்வேறு விதமான அவமானங்கள் ஏற்படும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
வாழ்க்கை வீணாகி விடும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
கெட்ட பெயர் ஏற்படும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
தன் குடும்பத்தாருக்கு
அவமானங்கள் ஏற்படும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
தன் குடுபத்தாரின் வாழ்க்கை பாதிக்கப்படும்
என்று தெரிந்து இருந்தாலும்;
தவறு செய்து மாட்டிக் கொண்டால்
தன் பரம்பரை
குற்ற உணர்ச்சியால் அவமானப் படும்
என்று தெரிந்து இருந்தாலும்;
துணிந்து தவறு செய்வது
எதற்காக என்றால்,
ஏமாந்தவன் எவனாவது கிடைப்பான்;
ஏழை எவனாவது கிடைப்பான்;
பழியை அவன் மேல்  போட்டு விட்டு
நாம் தப்பி விடலாம்
என்ற நினைப்பில் தான்
தவறை துணிந்து செய்கிறான்.

பணத்தால்
தான் செய்த தவறை
மறைத்து விடலாம்;
அதிகாரத்தால்
தான் செய்த தவறை
மறைத்து விடலாம்;
பதவியால் தான் செய்த
தவறை  மறைத்து விடலாம்;
என்ற நினைப்பில் தான்
உள்ளவன் தவறு செய்கிறான்.

அவன் தவறு செய்தாலும்
அவனால் வாழ்வு பெற்றோர்;
பணத்திற்கு ஆசை பட்டோர்;
பணத் தேவை உள்ளோர்;
அவனை நம்பி உள்ளோர்;
அவன் மேல் குற்றம்
செய்ததிற்கான தவறு விழக் கூடாது
என்ற நினைப்பில் உள்ளோர்;
அவன் செய்த தவறை
மறைக்க பெரும் முயற்சி எடுத்து கொள்ளும்.

தவறு செய்து விட்டு இருப்பவனை
அவன் நல்லவன் போலவும்.
அவன் தவறே செய்யாதவன் போலவும்.
அவன் ஒன்றும் அறியாதவன் போலவும்.
அவனுக்கு ஒன்றுமே தெரியாதது போலவும்.
இந்த சமுதாயம் நடிக்கும்.

அவன் தவறு செய்யவில்லை என்றால்
யார் தவறு செய்தது என்று
இந்த சமுதாயம் கேட்கும் என்று நினைத்து
ஏழையாக யார் கிடைக்கிறாரோ,
ஏமாந்தவர் யார் கிடைக்கிறாரோ,
அறியாதவர் யார் கிடைக்கிறாரோ,
அவரை மாட்டி விட்டு விடும்
குற்றவாளியாக மாற்றி விடும்
குற்றவாளியாக்கி விடும்.

அன்று முதல் இன்று வரை
நாம் வரலாற்றை எடுத்துக் கொண்டால்
அதிகாரத்தில், பணபலத்தில்,
பதவியில் உள்ளவர்கள் தவறு செய்தால்
ஏழையாக இருப்பவன்
அப்பாவியாக இருப்பவன்
ஒன்றும் தெரியாமல் இருப்பவன்
ஆகியோரில் யாரையேனும் பிடித்து
இச் சமுதாயம் மாட்டி வைத்து விட்டு
பணக்காரரை தப்ப வைத்து விட்டிருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பணக்காரராக இருந்தால்
எந்த குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம்;
எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்;
ஆனால் தப்பி விடலாம்;
என்ற நினைப்பில் தான்
குற்றங்களைத் துணிந்து செய்கிறது.

ஊடகத் துறை
அனைத்து குற்றங்களையும்
மறைத்து விடும் என்பதை
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை
வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அதாவது,
பணக்காரராக இருந்து தவறு செய்தால்
      தனது தவறை மறைக்க ஏமாந்தவன்
      ஏழையாக இருப்பவன் மீது
           போட்டு விடுவது

இது ஏழாம் நிலை

ஆனால்
ஏழையாக இருப்பவன்
சிறிய தவறு செய்தாலும்
பெரிய விஷயமாக மாற்றி விட்டு
அதில் ஆதாயம் தேடும் இச்சமுதாயம்.

ஏழையாக இருப்பவன் தவறு செய்தால்
அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது
தண்டனையில் மாட்டிக் கொள்வான்
அவனை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்.

ஏழையாக இருப்பவன்
எந்த செயலைச் செய்தாலும்
யோசித்து நிதானித்து செய்ய வேண்டும்
அவனை அறியாயமல் தவறு நிகழ்ந்தாலும்
அந்தத் தவறே பெரியதாக
படம் பிடித்து காட்டப்பட்டு
அந்தத் தவறு,
சரியாக விசாரிக்கப்படாமல்,
சரியாக ஆராயப்படாமல்,
சரியாக விசாரணை செய்யப்படாமல்,
சரியாக புலன் விசாரணை செய்யப்படாமல்,
சரியாக குற்றத்திற்கான காரணங்கள்
கண்டு பிடிக்கப்படாமல்,
ஏழையாக இருப்பவனை
இச் சமுதாயம் குற்றவாளியாக்கி விடும்

ஆகவே ஏழை தவறு செய்தால்
பார்த்து  செய்ய வேண்டும்
ஏனென்றால் அவன் தப்பிக்க வழியே இல்லை
பணக்காரன் தவறு செய்தால்
பார்த்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை
ஏனென்றால் அவன் தவறு செய்தால்
மாட்டிக் கொள்ள மாட்டான்
அவனை அந்த
குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்க
இச்சமுதாயம் அவனுக்கு உதவும்
அதாவது
ஏழையாக இருப்பவன் தவறு செய்தால்
           ஏழைதான் மாட்டிக் கொள்வான்
இது எட்டாம் நிலை

இந்த எட்டு நிலைகளும்
சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது

நான்கு பிரிவுகளில் இந்த
எட்டு நிலைகளும் அடங்கி
சமுதாயத்தில் இயங்கி வருகிறது
அதாவது சமுதாயம் இந்த
எட்டு நிலைகளைப்
பயன்படுத்தி வருகிறது என்பதை
இச் சமுதாயத்தை உற்று நோக்குவதன்
மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த எட்டு நிலைகளில்
ஐந்தாவது நிலை மிகவும் முக்கியமானது
புரட்சிகரமானது.
அதாவது,
சமுதாயத்தில் ஒருவர் வளர்வது
        சமுதாயத்திற்கு நல்லது
        ஆனால் அவரால் தங்களுக்கு ஆபத்து என்று
        தெரிந்தால் அவரை அழித்து விடுவது.

இந்த ஐந்தாவது நிலைக்குள் இருப்பவர்
தான் இயேசு கிறிஸ்து
இவர் வளர்வது
இவர் இந்த சமுதாயத்தில் இருப்பது
இந்த சமுதாயத்திற்கு நல்லதாக இருக்கிறது.
ஆனால் தங்களுக்கு நல்லதாக இல்லை - என்று
சுயநல எண்ணம் கொண்டவர்கள் எண்ணியதால்
தங்கள் பதவிக்கு ஆபத்தாக இருக்கிறது
என்று நினைத்ததால்
கூலிக்கு ஆள் பிடித்து
பொய் குற்றம் சுமத்தி
அறியாத மக்களை 
எது உண்மை என்று தெரியாமல் வைத்து விட்டு
உண்மையானவரை
குற்றவாளி என்று மக்களில்
ஒரு பகுதியினரை சொல்ல வைத்து
அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள்
பதவியில் உள்ளவர்கள்
ஆகியோரை பிடித்து
ஆகியோரின் தயவால்
ஆட்சி செலுத்துபவரை
வலுக்கட்டாயமாக தண்டனை தரச் செய்து
மக்களின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன்
அவரை சிலுவையில் அறைந்தனர்.

சிலுவையில் அறையப்பட்ட
இயேசு கல்லறையில் மூடப்பட்டார்.
மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்
கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.

பிரதான ஆசாரியாரும், பரிசேயரும்
பிலாத்துவினிடத்தில் வந்து
இயேசு மூன்று நாள் கழித்து
நான் எழுந்திருப்பேன்
என்று சொன்னது எங்களுக்கு
ஞாபகம்  இருக்கிறது

ஆகவே இயேசுவினுடைய சீஷர்கள்
இராத்திரியிலே வந்து இயேசுவைக்
கொண்டு போய் பின்பு
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
என்ற சொல்வார்கள்
இயேசு சொன்னபடியே செய்தார்
என்று சொல்வார்கள்
அவர்கள் அவ்வாறு சொல்லாமல்
இருக்க வேண்டுமென்றால்
நீர் மூன்று நாள் வரைக்கும்
கல்லறையைப் பத்திரமாக
பாதுகாப்பாக வைக்கும்படி
கட்டளையிட வேண்டும் என்றார்கள்.

அதற்குப் பிலாத்து அவர்களிடம்
உங்களுக்குத்தான் காவல் சேவகர்கள் உண்டே
அவர்களை வைத்து முடிந்த வரைக்கும்
பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்கள் அனைவரும் கல்லறைக்கு சென்றார்கள்
கல்லறைக்கு முத்திரைபோட்டு காவல் வைத்து
கல்லறையைப் பத்திரப் படுத்தினார்கள்.

ஓய்வு நாள் முடிந்தது
வாரத்தின் முதல் நாள் விடிந்து வருகிறது
மகதலேனா மரியாளும்
மற்ற மரியாளும் கல்லறையைப்
பார்க்க வந்தார்கள்.

அப்பொழுது பூமி மிகவும் அதிர்ந்தது
கர்த்தருடைய தூதன்
வானத்தில் இருந்து இறங்கி வந்தான்
வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளினான்
அதின்மேல் உட்கார்ந்தான்
தூதனுடைய உருவம் பார்ப்பதற்கு
பிரமிப்பை ஏற்படுத்துவது போல் இருந்தது.
அவன் அணிந்திருந்த வஸ்திரம்
அதாவது மின்னல் போலவும்
உறைந்த மழையைப் போலவும்
வெண்மைத் தன்மை உடையதாகவும் இருந்தது.

அந்த தூதன் பார்க்க வந்த
ஸ்திரீகளை நோக்கி,
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் பயப்படாதீர்கள்,
நீங்கள் இயேசுவைத் தேடித் தானே
இங்கே வந்திருக்கிறீர்கள்;
நீங்கள் சிலுவையில் அறைப்பட்ட
இயேசுவைத் தேடுகிறீர்கள்;
என்று அறிவேன்.

இயேசு இங்கே இல்லை
இயேசு தாம் சொன்ன படியே
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
சொன்னபடியே செய்தார்
சொன்னபடியே நிகழ்ந்தது.

இயேசு இறந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
வாருங்கள் வந்து 
கர்த்தரை வைத்த இடத்தை
வந்து பாருங்கள் என்றான்.

இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்
அந்த தூதன்
இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்
என்பதைக் காணுங்கள்;
கண்டதை சொல்லுங்கள்;
அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்; - என்று
அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்
அவர் உங்களுக்கு முன்னே
கலிலேயாவுக்குப் போகிறார்
அங்கே அவரை நீங்கள் காண்பீர்கள்
இந்த விவரங்களை
உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

வார்த்தைகள் என்பது முக்கியமானவை
வார்த்தைகளை யார் சொல்கிறார்கள்
என்பதை வைத்துத் தான்
வார்த்தைகள் மதிப்பிடப்படுகின்றன;
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொண்டு
வார்த்தைகளை சொன்னவர்களை மதிப்பிடுவதில்லை;

வார்த்தைகளை சொன்னவர்களை வைத்துத் தான்
வார்த்தைகளின் அர்த்தங்கள் மதிப்பிடப்படுகின்றன
அதனால் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய
உயர்ந்த அர்த்தங்களைக் கொண்ட
வார்த்தைகள் இழக்கப்பட்டு விட்டன.
நாம் வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களைக் கொண்டு
ஒருவரை மதிப்பிடுவதில்லை
ஒருவர் சொல்லும் வார்த்தைகளை வைத்துத் தான்
வார்த்தைகளின் அர்த்தங்கள் மதிப்பிடப்படுகின்றன.
அதனால் தான் பல்வேறு பிரச்சினைகள்
எழுகின்றன.

பதவியில் உள்ளவர்கள்;
அதிகாரத்தில் உள்ளவர்கள்;
செல்வாக்கு நிறைந்தவர்கள்;
ஆகியோர் சொல்லும்
வார்த்தைகள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன.

அவர்கள் சொல்லும்
வார்த்தைகளின் அர்த்தம்
சரியாக இல்லாவிட்டாலும்,
தரம் குறைவாக இருந்தாலும்,
வார்த்தைகளுக்கு சொல்லும் அர்த்தத்திற்கும்
உண்மையான அர்த்தத்திற்கும்
வேறுபாடு இருந்தாலும்,
வார்த்தைகளின் அர்த்தம்
புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும்,
வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் இருந்தாலும்,
வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாக இல்லாவிட்டாலும்,
வார்த்தைகளின் அர்த்தம் குழப்பும் நிலையில் இருந்தாலும்,
வார்த்தைகளின் அர்த்தம் தெளிவற்று இருந்தாலும்,
வார்த்தைகளின் அர்த்தம் சிந்தனையற்ற நிலையில் இருந்தாலும்,
பதவியில் உள்ளவர்கள்;
அதிகாரத்தில் உள்ளவர்கள்;
செல்வாக்கு நிறைந்தவர்கள்;
ஆகியோர் சொல்லும்
வார்த்தைகள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன.

பதவியில் உள்ளவர்கள்;
அதிகாரத்தில் உள்ளவர்கள்;
செல்வாக்கு நிறைந்தவர்கள்;
ஆகியோரால்
ஆதாயம் பெறுவோர்;
அண்டி பிழைப்போர்;
சார்ந்து இருப்போர்;
அவர் தயவை நாடி இருப்போர்;
அவரை வைத்து பிழைப்பு நடத்துவோர்;
அவர்களுடைய
வார்த்தைகளின் அர்த்தம் அற்புதம்
என்று புகழ்வர்;
போற்றி மகிழ்வர்;

ஆனால்,
அந்த வார்த்தைகளின் உண்மை அர்த்தத்தை
ஒரு சாதாரணமானவன் கூறினால்,
எந்த விளம்பரமும் இல்லாதவன் கூறினால்,
சமுதாயத்தில் புகழ் பெறாதவன் கூறினால்,
சமுதாயத்திற்கு
இவன் யார் என்று தெரியாதவன் கூறினால்,
அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது
ஏற்றுக் கொள்ளத் தயங்கும்.
வார்த்தைகளின் அர்த்தத்தை புறக்கணிக்கும்
ஏற்றுக் கொள்ளாது.

சமுதாயத்தில் இந்த நிலை
காலம் காலமாக நீடித்துக் கொண்டே வருகிறது
அந்தஸ்தில் உள்ளவர்கள் சொல்லும்
வார்த்தைகளில் அர்த்தம் இல்லையென்றாலும்
அந்த வார்த்தைகளை சொன்னவரை பாராட்டும்;
அந்தஸ்தில் இல்லாதவர்
சொல்லும் அதே வார்த்தைகளின் அர்த்தம்
சரியான அர்த்தம் நிறைந்ததாக இருந்தாலும்
அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது
பாராட்டாது;

அதாவது இந்த சமுதாயம்
வார்த்தைகளின் அர்த்தத்தை வைத்து
ஒருவரை மதிப்பீடு செய்வதில்லை;
ஒருவர் சொல்லும் வார்த்தைகளின்
அர்த்தத்தை வைத்து
ஒருவரை மதிப்பீடு செய்கிறது.

வார்த்தைகளை சொன்ன தூதன்
யார் என்று பார்க்கவில்லை
வார்த்தைகள்
என்ன அர்த்தத்தை சொல்லுகின்றன
என்ன அர்த்தத்தை சொல்ல வருகின்றன;
எந்த உண்மையை சொல்லுகின்றன
எந்த உண்மையை சொல்ல வருகின்றன;
எந்த கருத்தை சொல்லுகின்றன
எந்த கருத்தை சொல்ல வருகின்றன;
சொல்லிய வார்த்தைகளின் அர்த்தம்
உணமையானது என்று உணர்ந்தார்களே ஒழியே
அவர்கள் தூதன் சொன்னதால்
அது உண்மை என்று நம்பவில்லை.

காலம் காலமாக எதற்காக
காத்துக் கொண்டிருந்தார்களோ
அது நடந்து விட்டது
அந்த செய்தியை
தூதன் சொன்னான்
எல்லோருக்கும் தெரிந்த செய்தியை
தூதன் சொன்னான்
உண்மையின் அர்த்தத்தை
தெரிந்து கொண்டார்களே ஒழிய
சொன்னது யார் என்று  பார்க்கவில்லை.

இதைப்போல் உண்மையின் அர்த்தத்தை
யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல்
வார்த்தைகளின் அர்த்தத்தை பார்த்த
அந்த ஸ்திரீகளைப் போல
இந்த சமுதாயம் இருந்தால்
உண்மையின் அர்த்தம்
என்றும் நிலைத்து இருக்கும்;
இல்லையென்றால் உண்மையின் அர்த்தம்
வெளிவராமல் முடங்கி விடும்;

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற
செய்தியைக் கேட்ட
அந்த ஸ்தீரிகள்
பயத்தோடும் அதிகப்படியான சந்தோஷத்தோடும்
அந்த கல்லறையை விட்டு
சீக்கிரமாய் புறப்பட்டு போனார்கள்.

இயேசு மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்த செய்தியை
அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

அவர்கள் இயேசுவின் சீடர்களுக்கு
அறிவிக்க சென்ற போது
இயேசு அவர்களுக்கு தாமே
எதிர்ப்பட்டு வாழ்க என்றார்.
அவர்கள் உயிர்த்தெழுந்த
இயேசுவை நேரில் கண்டனர்
அவர்கள் கிட்டவந்து
அவர் பாதங்களைத் தழுவி,
அவரைப் பணிந்து கொண்டு
வணக்கம் செலுத்தினார்கள்
அவரை வணங்கினார்கள்.

அன்பும், கருணையும்,
உண்மையும், நேர்மையும்,
யார் உள்ளத்தில் இருக்கிறதோ
அவரைத் தேடி
கடவுளே நேரில் வருவார்.

அதனால் தான் இயேசு
அந்த ஸ்திரீகளைக் காண
நேரில் வந்தார்.

இயேசுவை நேரில் கண்ட சந்தோஷத்தில்
அவரை வணங்கினர்
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி
பயப்படாதிருங்கள்
நீங்கள் போய் என் சகோதரர்
கலிலேயாவுக்குப் போகும்படி
அவர்களுக்குச் சொல்லுங்கள்
அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

எழுதிவைக்கப்பட்டது
எழுதி வைக்கப்பட்டது போல்
நடந்து விட்டது;
சொல்லி வைக்கப்பட்டது
சொல்லி வைக்கப்பட்டது போல்
நடந்து விட்டது;
எதிர்பார்த்தது
எதிர்பார்த்தது போல்
நடந்து விட்டது;
நடக்க வேண்டியது
நடக்க வேண்டியது போல்
நடந்து விட்டது;
எது நடக்க வேண்டுமோ அது
நடந்து விட்டது;
எதற்காக இந்த சமுதாயம்
காத்துக் கொண்டிருந்ததோ
அது நடந்து விட்டது;
காலம் காலமாக எதை
இந்த சமுதாயம்
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்ததோ
அது நடந்து விட்டது.

இயேசு மூன்றாம் நாள்  உயிர்த்தெழுந்தார்
அதை உண்மையானவர்களுக்கு
நேர்மையானவர்களுக்கு
வெளிப்படுத்தினார்.
அந்த உண்மையானவர்களால்
இந்த உலகம்
உண்மையை உணர்ந்து கொண்டது
என்கிறது பைபிள்.
---------இதன் தொடர்ச்சி
           இயேசு கிறிஸ்து-போகர்- தானான மோட்ச-பதிவு-77(பாகம்-2)

------------பார்க்கவும், படிக்கவும்