May 14, 2020

பரம்பொருள்-பதிவு-241


              ஜபம்-பதிவு-489
            (பரம்பொருள்-241)

“காதல்
காமம் கடவுள்
மூன்றும்
கடவுள் தன்மை
உடையது
என்பதை
உணர்ந்து
கொள்ள
முடியாதவர்களால்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகளை
புனிதமாக
பார்க்க முடியாது”

“எந்த ஒரு
செயலையும்
நம்முடைய
முன்னோர்கள்
காரணம்
இல்லாமல்
செய்ய
மாட்டார்கள்
உண்மையை
மக்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்ற
நோக்கத்தில் தான்
செய்வார்கள்”

“நம்முடைய
முன்னோர்கள்
செய்து
வைத்த
செயலில்
உள்ள
உண்மைகளை
புரிந்து
கொள்ளாதவர்கள்
தான் அதை
இகழ்வார்கள்”

“கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
வடித்து
வைத்ததற்கு
காரணம்
உண்மைகளை
அனைவரும்
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்
தான் ;
தெரியாத
விஷயங்களை
தெரியாதவர்கள்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்
தான் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்பதை
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகத்
தான் ;”

“ஆனால்
இந்த
உண்மைகளை
உணராதவர்கள்
அதை
ஆபாசம்
என்று
பார்க்கிறார்கள்
அவ்வளவு தான் ;”

“வாழ்வின்
ரகசிய
வேர்களை
அறிந்து
கொள்ள
வேண்டும்
என்றால்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகள்
புனிதமானவை
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானவை
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூனறும்
ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை
என்பதையும் ;
மூன்றும்
புனிதமானது
என்பதையும் ;
உணர்ந்து
கொள்ள
வேண்டும் “

“மனிதனுடைய
வாழ்க்கைக்குத்
தேவையான
அனைத்து
ரகசியங்களையும்
அனைத்தையும்
நம்முடைய
முன்னோர்கள்
இந்து மதக்
கோயில்களில்
மறைத்து
வைத்துள்ளனர்
என்பதை
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-240


               ஜபம்-பதிவு-488
             (பரம்பொருள்-240)

“ஒரு பெண்
பருவம்
அடைந்தவுடன்
பெற்றோர்கள்
தங்கள்
பிள்ளைகளை
கோயிலுக்கு
அழைத்து
செல்வார்கள் ;
கோயிலுக்குள்
கோயிலைச்
சுற்றி வரச்
சொல்லுவார்கள் ;
அவர்கள்
செதுக்கப்பட்ட
அந்த
சிலைகளை
பார்ப்பார்கள் ;
தெரியாத
விஷயத்தை
தெரிந்து
கொள்ள
முயற்சி
செய்வார்கள் ;
அதைப் போல
பல முறை
வரும் போது
எந்த
விஷயத்தை
தெரிந்து
கொள்ள
வேண்டுமோ
அதைப்
பற்றித்
தெரிந்து
கொள்வார்கள் ; “

“காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலில்
இல்லாமல்
தனியாக
வேறு ஒரு
இடத்தில்
வடிக்க
வேண்டாம்
என்று
நம்முடைய
முன்னோர்கள்
கருதினார்கள்
ஏனென்றால்
காமம்
என்பது
புனிதமானது
அது புனிதமான
இடத்தில் தான்
இருக்க
வேண்டும்
புனிதமான
இடத்தில்
இருந்து தான்
பார்க்க
வேண்டும்
தனியாக ஒரு
இடத்தை
தேர்ந்தெடுத்து
அந்த
இடத்தில்
அத்தகைய
சிலைகளை
உருவாக்கி
அதை
பார்க்க
வைத்தால்
அது
சுற்றுலா
தலமாகி
விடும்
காமம் தன்
மதிப்பை
இழந்து விடும்
காமம்
வேடிக்கை
பொருளாகி
விடும்
என்ற
காரணத்தினால்
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்ற
காரணத்தினால்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்தனர்’ “

“ஆனால்
இன்று
அந்த
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
பார்ப்பவர்கள்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
உள்ள
சிலைகளை
ஆபாச சிலை
என்று
கிண்டல்
செய்கிறார்கள்
விவரம்
தெரியாதவர்கள் ;
அறிவு
குறைந்தவர்கள் ;
புத்தி
பேதலித்தவர்கள் ;
உண்மை
என்ன
என்று
தெரியாமல்
பிதற்றுவார்கள்“

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்பதை
உணர்ந்து
கொண்டவர்களால்
மட்டுமே
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்து
வைக்கப்பட்ட
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
புனிதமாக
பார்க்க முடியும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-239


               ஜபம்-பதிவு-487
             (பரம்பொருள்-239)

காமம் :
“கணவனும்
மனைவியும்
தாம்பத்ய
உறவு கொண்டு
காமத்தின்
உச்சத்தில்
இருக்கும் போது
மனம் இல்லாத
நிலையில்
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்வார்கள் ;
அவ்வாறு
தரிசனம்
செய்தவர்களால்
மட்டுமே
தாம்பத்ய
உறவின்
புனிதத்
தன்மையை
உணர்ந்து
கொள்ள
முடியும் ;
அவர்களால் தான்
வாழ்வின்
ரகசிய
வேர்களை
அறிந்து
கொள்ள
முடியும் ; “

“தாம்பத்ய உறவு
கொள்ளும் போது
வைக்கப்படும்
தீபத்துடன்
கூடிய விளக்கு
தொடுத்த பூ ;
தொடுக்காத பூ ;
பழவகைகள் ;
இனிப்பு ;
ஊதுபத்தி ;
ஆகிய
அனைத்தும்
கடவுளுக்கும்
படைக்கப்படுகிறது “

“கடவுளுக்கு
என்ன
படைக்கப்
படுகிறதோ
அவைகள் தான்
தாம்பத்ய
உறவு
கொள்ளும் போது
தாம்பத்ய உறவு
கொள்ளும்
அறையிலும்
வைக்கப்படுகிறது “

“அதாவது
நம்முடைய
முன்னோர்கள்
காமத்தை
கடவுளாக
பார்த்தனர் ;
காமத்தை
கடவுளாக
பார்த்த
காரணத்தினால்
தான்
கடவுளுக்கு
படைக்கப்
படுவதை
காமத்தில்
ஈடுபடுவதற்கும்
பயன்படுத்தினர்”

“காதலின்
ஆழத்தில்
காமத்தின்
உச்சத்தில்
கடவுள்
தன்மையை
எப்படி உணர
முடியுமோ ?
அவ்வாறே
கடவுளாக
மாறும்
போதும்
கடவுள்
தன்மையை
உணர
முடியும் ?
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
கடவுள்
தன்மையில்
ஒன்றாக
சந்திக்கின்றன
என்பதையும் ;
உணர்ந்தவர்களால்
வடிக்கப்பட்டதே
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்ப
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகள் “

“கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
வடித்து
வைத்ததின்
முக்கியமான
நோக்கம்
தெரியாத
விஷயங்களை
மக்கள்
அனைவரும்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும்
நாகரிகம்
வளர்ச்சி
அடையாத
அந்த
காலத்தில்
தாம்பத்தியத்தில்
ஈடுபடும்
விஷயங்களை
அனைவரும்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும்
தான்”


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-238


               ஜபம்-பதிவு-486
             (பரம்பொருள்-238)

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
ஒன்றுடன்
ஒன்று
பிணைந்தது ;
ஒன்றுடன்
ஒன்று தொடர்பு
கொண்டது ;
இந்த மூன்றையும்
ஒன்றிலிருந்து
ஒன்றை
தனித்தனியாக
பிரிக்க முடியாது ;
மூன்றும்
ஒன்றுக்குள்
ஒன்று அடங்கி
இருக்கிறது ;
இந்த மூன்றின்
முக்கிய
நிலைகளில்
மனம் என்பது
இருக்காது ;
மனம் என்பது
இல்லாத
காரணத்தினால்
காலம் என்பது
இருக்காது ;
இதனால்
இந்த மூன்றும்
கடவுள் தன்மை
வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது ;
என்பதை
உணர்ந்தவர்களால்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்து
வைத்தனர் “

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
ஒன்று
என்று
உணர்ந்தவர்களால்
மட்டுமே
இத்தகைய
சிலைகளை
வடிக்க முடியும் “

“மூன்றும்
ஒன்று என்று
உணர்ந்தவர்களால்
மட்டுமே
இத்தகைய
சிலைகளின்
கடவுள் தன்மையை
உணர்ந்து
பார்க்க
முடியும் “

“கடவுளை
எவ்வளவு
புனிதமாக
நம்முடைய
முன்னோர்கள்
பார்த்தார்களோ
அவ்வளவு
புனிதமாக
காதலையும்
காமத்தையும்
நம்முடைய
முன்னோர்கள்
பார்த்தார்கள் “

காதல் :
“காதல்
செய்யும்
காதலன்
காதலி ஆகிய
இருவருமே
காதலின்
ஆழத்திற்கு
சென்று
காலம்
இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்து இருந்தால்
காதலுக்கு
தடையாக
யார் இருந்தாலும்
அவர்களை
எதிர்க்க
இவர்கள்
தயங்க
மாட்டார்கள்
எந்த ஒன்றையும்
இழப்பதற்குத்
தயாராக
இருப்பார்கள் ;
மரணத்தைக்
கண்டு கலங்க
மாட்டார்கள் ;
காதலுக்காக
தங்கள்
உயிரையே
கொடுப்பதற்குக்
கூட தயாராக
இருப்பார்கள் ;”

“இது தான்
உண்மையான
காதல் ;
இவர்கள் தான்
உண்மையான
காதலர்கள் ;
இவர்கள் தான்
காதலின்
ஆழத்திற்கு
சென்று
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்தவர்கள் ;”

“காதலின்
ஆழத்திற்கு
சென்று
மனம் இல்லாத
நிலையில்
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம் செய்து
இருந்தால்
மட்டுமே
இந்த நிலையில்
இருப்பார்கள்;
மற்ற காதலர்கள்
இவ்வாறு
இருக்க
மாட்டார்கள் ;”

“இவர்கள் தான்
காதலின்
ஆழத்தில்
கடவுள்
தன்மையை
உணர்ந்தவர்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////