May 14, 2020

பரம்பொருள்-பதிவு-237

               ஜபம்-பதிவு-485
              (பரம்பொருள்-237)

“மனம்
என்பது
எந்த நிலையில்
இருக்காதோ
அங்கு
காலம் என்பது
இருக்காது ;
காலம்
என்பது
எந்த நிலையில்
இருக்காதோ
அங்கு தான்
கடவுள் தன்மை
என்பது
இருக்கும் ; “

“காதலின்
ஆழத்தில்
இருக்கும் போது ;
காமத்தின்
உச்சத்தில்
இருக்கும் போது ;
கடவுளாகவே
மாறும் போது ;
மனம் என்பது
இருக்காது ;
மனம் என்பது
இருக்காத
காரணத்தினால்
காலம் என்பது
இருக்காது ;
காலம் என்பது
இந்த நிலையில்
இல்லாத
காரணத்தினால்
இந்த மூன்றும்
கடவுள் தன்மை
வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது “

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
கடவுள் தன்மை
வாய்ந்தவை
மட்டுமில்லை
மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை “

“மூன்றுக்கும்
உள்ள தொடர்பை
அறிந்து கொண்டால்
மட்டுமே
எந்த ஒன்றையும்
தனிப்பட்ட
முறையில்
அறிந்து
கொள்ள முடியும் “

“எந்த
ஒன்றையும்
தனிப்பட்ட
முறையில்
அறிந்து கொள்ள
வேண்டும்
என்றால்
மூன்றையும்
அறிந்து
கொண்டால்
மட்டுமே
முடியும் “

“மூன்றில்லாமல்
ஒன்றை
மட்டும்
அறிய
முடியாது
தனிப்பட்ட
முறையில்
எந்த
ஒன்றையும்
அறிய
முடியாது “

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
ஒரே புள்ளியில்
அதாவது
மனம் இல்லாத
நிலையில்
காலம் இல்லாத
நிலையில்
கடவுள்
தன்மையில்
ஒன்றாகச்
சந்திக்கின்றன “

“காதல் என்று
எடுத்துக்
கொண்டால்
அதில்
காமம்
கடவுள்
இரண்டும்
இருக்கும் “

“காமம் என்று
எடுத்துக்
கொண்டால்
அதில்
காதல்
கடவுள்
இரண்டும்
இருக்கும் “

“கடவுள் என்று
எடுத்துக்
கொண்டால்
அதில்
காதல்
காமம்
இரண்டும்
இருக்கும் “

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
கடவுள்
தன்மையாகக்
கருதப்படுவதால்
ஒன்றுக்குள்
ஒன்று இருக்கும் “

“மூன்றையும்
தனித்தனியாக
வேறுபடுத்தி
அறிய முடியாது ;
மூன்றையும்
ஒன்றாகத் தான்
அறிந்து
கொள்ள முடியும் ;
மூன்றையும்
ஒன்றாக
அறிந்து
கொண்டால்
மட்டுமே
தனிப்பட்ட
நிலையில்
ஒன்றை
அறிந்து
கொள்ள முடியும் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment