October 11, 2019

பிறந்தநாள்-10-10-2019


            பிறந்தநாள்-10-10-2019

அன்பிற்கினியவர்களே,

“10-10-2019 அன்று
பிறந்தநாள் கண்ட எனக்கு
வாழ்த்து தெரிவித்த
உலகம் முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்,
அன்பு உள்ளங்கள்
மற்றும்
நேரில் வந்து வாழ்த்து
தெரிவித்த அனைத்து
உயிரனைய உறவுகளுக்கும்
என் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்”

“நான் ஒரு
DATA ENTRY COMPANY-ல்
வேலை செய்து
கொண்டிருந்த காலகட்டம்
என் கீழ் 30 பேர்
பணிபுரிந்து வந்தார்கள்”

“இந்த சூழ்நிலையில்
மேனேஜர் என்னை
கூப்பிட்டு புதிய
PROJECT வந்திருக்கிறது
அதற்கு 5 நாள் தான்
TIME 10-10- DEMO
பண்ண வேண்டும் என்று
சொன்னார் அங்கே மற்ற
TEAM களுக்கும் அதே
சொல்லப்பட்டது ;
நான் சொன்னேன்
10-ம் தேதி எனக்கு
பிறந்தநாள் என்னை
9-ம் RELEASE  பண்ணுங்கள் ;
10-10 எனக்கு விடுப்பு
கொடுங்கள் என்றேன் ;
பார்த்துக் கொள்ளலாம்
என்று சொன்னார் ;”
சொன்னபடி என்னை
9-ம் தேதி RELEASE
பண்ணவில்லை ;
மேனேஜர் என்னைப் பார்த்து
பாலா எல்லாவற்றையும்
பார்த்தது நீ தான்
10-ம் தேதி வந்து
முடித்து விட்டு சீக்கிரம்
கிளம்பி விடு என்று
சொன்ன போது
4 நாள் வீட்டிற்குக்
கூட செல்லாமல்
ஆபிஸில் இருந்து
வேலை செய்த எனக்கு
மன வருத்தத்தை அளித்தது
கோபத்துடன் இருந்தேன் ;”

“10-ம் தேதி காலை
அனைத்தையும் சரிபடுத்தி
முறைப்படுத்தி விட்டேன்
முழு வேலை
முடிய காலதாமதம்
ஆகும் இதனால்
மனம் வருத்தப்பட்ட
நான் பணியாளர்கள் டீ
சாப்பிடும் இடம் சென்று
டீ சாப்பிட்டுக்
கொண்டிருந்தேன்”

“அங்கே இருந்தவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்
கண்ணதாசன் மிகப்
பெரிய கவிஞர்
அவர் எழுதிய பாடல்களில்
ஒரு பாடலில் உள்ள
கவிதை வரிகளான

“அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி”

என்ற பாடலில் உள்ள
கவிதை வரிகளைப்போல்
எழுதமுடியாது என்று
பேசிக்கொண்டிருந்ததை
கேட்டுக் கொண்டிருந்த
நான் கோபத்தில்
சும்மா இருக்காமல்
அவர்களை அழைத்து
அம்மா கண்ணதாசன்
மிகப்பெரிய கவிஞர் சரி
அதில் எந்தவித மாற்றுக்
கருத்துக்கும் இடம் இல்லை ;
ஆனால் கண்ணதாசன்
எழுதிய அந்தப்
பாடலில் உள்ள கவிதை
வரிகளைப் போல்
எழுத முடியாது என்று
சொல்லக்கூடாது ;
யாரும் முயற்சி செய்து
இருக்க மாட்டார்கள் ;
என்று தான் சொல்ல
வேண்டுமே தவிர
அந்த பாடலைப் போல
எழுதுவது எளிமையானது
தான் என்றேன் ;”

“ அந்த அறையில்
இருந்தவர்கள் அனைவரும்
என்னை சுற்றி
வந்து விட்டனர்
இவ்வளவு பேசுகிறீர்களே
உங்களால் எழுத
முடியுமா என்றனர் ?
ஏன் முடியாது
என்னால் முடியும் என்றேன்;
அப்படி என்றால்
எழுதுங்கள் என்றனர்
இது ஒன்றும் பெரிய
விஷயமில்லை - நான்
கொஞ்சம் வெளியே
சென்று விட்டு வருகிறேன்
SECTION-க்கு  வாருங்கள்
எழுதித் தருகிறேன்
என்று சொல்லி விட்டு
வெளியே சென்று விட்டு
அரை மணி நேரம்
கழித்து என் SECTIION
வந்த போது அனைத்து
TEAM உறுப்பினர்கள்
SHIFT CHANGE
நேரமாக இருந்ததால்
அனைவரும் இருந்தனர் ;”

“ஒரு பெண் வந்து
என்னிடம் சொன்னார்
நீங்கள் கவிதை எழுதுவதாக
சொன்னீர்களாம்
அதனால் தான் அனைவரும்
வந்திருக்கிறார்கள் என்ற
செய்தியைக் கேட்டு
அதிர்ச்சி அடைந்தேன்;”

“ஒருவர் வந்தார் பாலா
நீ கவிதை எழுதும்
வரை நாங்கள் WAIT
பண்ணுகிறோம் ;
கவிதை எழுது
என்றார்கள் - எனக்கு
என்ன செய்ய வேண்டும்
என்று தெரியவில்லை ;
கட்டாயம் கவிதை எழுதித்
தான் ஆக வேண்டும்
என்ற நிலைக்கு
கொண்டு வந்து விட்டார்கள் ;
நான் சரி கவிதை
நான் எழுத மாட்டேன்
நான் சொல்லிக்
கொண்டே வருகிறேன்
யாரேனும் எழுதுங்கள்
என்றேன் அப்படி செய்ய
உங்களால் முடியுமா என்று
அனைவரும் ஆச்சரியத்தால்
வாய் பிளந்தார்கள் “

“மைக் என்னிடம்
கொடுக்கப்பட்டது ;
நான் கவிதை சொல்லத்
தொடங்கினேன் முடியும்
வரை எந்தவித
சத்தமும் இல்லாமல்
அமர்ந்து இருந்த
150 பேரும் நான்
கவிதையை சொல்லி
முடித்த போது
BALA HAPPY BIRTHDAY
என்று அனைவரும் ஒரே
மாதிரி எழுப்பிய ஒலி
அந்த அறையையே
அதிர வைத்தது ;”

நான் சொன்ன
கவிதை இது தான்

“உன்னைத் தான்
முதலில் தான்
பார்த்துத் தான்
மனதில் தான்
காதல் தான்
வந்தது தான்”

“வந்ததால் தான்
உன்னைத் தான்
காதலித்துத் தான்
திருமணம் தான்
முடிக்கத் தான்
விருப்பம் தான் “

“உனக்குள் தான்
இல்லை தான்
காதல் தான்”

“இருந்தால் தான்
என்னைத் தான்
காதலித்துத் தான்
திருமணம் தான்
செய்வாய் தான்”

“முடியாமல் தான்
போனதால் தான்
பைத்தியமாகத் தான்
மாறித் தான்
போய்த் தான்
விட்டேன் தான்
நான் தான்”

“இது தான் நான்
சொன்ன கவிதை
மறக்க முடியாத
பிறந்த நாள்களில்
இதுவும் ஒன்று”

----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-10-2019
////////////////////////////////////////////////