February 04, 2022

பதிவு-13-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-13-செயற்கரிய-

திருக்குறள்

 

என்று மக்கள்

தங்கள் எண்ணங்களை

பலத்த

கைத்தட்டல்களுக்கு

நடுவிலும்

ஆரவாரங்களுக்கு

இடையிலும்

வெளியிட்டனர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலை

அலெக்சாண்டர்

செய்து

காட்டியதன் மூலம்

மக்கள்

செல்வாக்கைப்

பெற்றான்

மக்களுடைய

ஆதரவைப் பெற்றான்

 

மக்கள்

செல்வாக்கு

பெறுவது

அவ்வளவு எளிதல்ல.

மக்கள்

ஆதரவைப்

பெறுவதும்

அவ்வளவு எளிதல்ல

மக்கள் செல்வாக்கை

மக்கள் ஆதரவை

தன்னுடைய

வீரத்தினாலும்

அறிவினாலும்

அலெக்சாண்டர்

பெற்றான்

 

இதனைக் கண்ட

அலெக்சாண்டர்

தந்தை

மன்னன் பிலிப்

மற்றும்

தாயார் ஒலிம்பியஸ்

ஆகியோர்

மகிழ்ச்சி

அடைந்தனர்.

 

அலெக்சாண்டர்

யாரும்

செய்யாத செயலை,

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்தான்

அதனால்

மக்களுடைய

பாராட்டை மட்டுமல்ல

மக்களின்

ஆதரவையும்

பெற்றான்

அதனால் தான்

மாவீரன்

அலெக்சாண்டர்

என்ற

பெயரைப் பெற்று

காலத்தை வென்று

இன்றும்

வரலாற்றில்

அழிக்க முடியாத

சக்தியாக

திகழ்ந்து கொண்டு

இருக்கிறான்

அலெக்சாண்டர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

""""செயற்கரிய

செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா

தார்.""""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

 

--------சுபம்

 .//////////////////////////////////////////////////////




 

 

பதிவு-12-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-12-செயற்கரிய-

திருக்குறள்

 

ஜீலம்

நதிக்கரையில்

அந்தக்

குதிரையைப்

புதைத்து

அந்த இடத்தில்

நகர் ஒன்றை

அமைக்கிறான்

அலெக்சாண்டர்

அதற்குத் தன்

அருமைக்

குதிரையின்

நினைவாக

பியூசிபேலியா

என்று

பெயரிடுகிறான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய தாய்

ஒலிம்பியஸ் பார்க்க

அவர் அறை

செல்கிறான்.

அம்மா நான்

குதிரையை

அடக்கி விட்டேன்.

அப்பா பியூசிபேலஸ்

குதிரையை எனக்கு

வாங்கிக் கொடுத்தார்.

 

அப்பா என்னை

வீரன் என்றார்.

நான் வெற்றி

பெறுவதற்காகவே

பிறந்தவன் என்றார்

இந்த உலகத்தையே

வெல்லப்

போகிறேன் என்றார்

உன் வெற்றியின்

ஆரம்பம்

இங்கு தான்

தொடங்குகிறது

என்றார்.

 

இவ்வாறாக

அலெக்சாண்டர்

சொல்லிக் கொண்டு

இருக்கும் போதே

ஒரு தாயாக தன்

மகனின்

பெருமையை

நினைத்து

மகிழ்ச்சி

அடைந்து கொண்டே

இருந்ததால்

அலெக்சாண்டரின்

தாய் ஒலிம்பியஸ்

கண்களிலிருந்து

ஆனந்தக் கண்ணீர்

வழிந்து

கொண்டிருந்தது

அவள் வாயிலிருந்து

வார்தைகள்

வரவில்லை.

 

அந்த சமயம்

பார்த்து வெளியே

ஆரவாரம் கூச்சல்

கேட்கிறது

அலெக்சாண்டரைப்

பார்க்க வேண்டும்

என்று மக்கள்

கூடி இருந்தனர்.

குரல் கேட்டு

வெளியே வந்த

அலெக்சாண்டர்

மக்களைப் பார்த்து

கையை அசைக்கிறான்.

 

அலெக்சாண்டரைப்

பார்த்தவுடன் மக்கள்

அலெக்சாண்டர் வாழ்க

அலெக்சாண்டர் வாழ்க

என்று கைதட்டி

ஆரவாரம் செய்தனர் 

 

எங்களை வாழ

வைப்பீர்கள் என்ற

நம்பிக்கை

எங்களுக்குப்

பிறந்திருக்கிறது

 

எங்கள் வருங்காலம்

உங்களின் கைகளில்

இருக்கிறது

 

எங்களை நீங்கள்

பாதுகாப்பீர்கள்

எங்களை வாழ

வைப்பீர்கள்

என்ற நம்பிக்கை

எங்களுக்கு

பிறந்திருக்கிறது

 

எங்கள் நாடு

பாதுகாப்பாகவும்

அமைதியாகவும்

இருக்கும்

என்று நம்புகிறோம்

 

நாங்கள் அனைவரும்

உங்கள் பக்கம்

இருக்கிறோம்

உங்கள் வார்த்தைக்கு

கட்டுப்படுகிறோம்

நீங்கள் இடும்

கட்டளைகளை

ஏற்று நடக்கிறோம்.

 

நீங்கள் நீடூழி

வாழ வேண்டும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-11-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-11-செயற்கரிய-

திருக்குறள்

 

நாடுகள்

மண்டியிடப் போகிறது

எதிரிகள்

அழிக்கப்படப்

போகிறார்கள்

மக்கள் ஆதரவு

தரப்போகிறார்கள்

 

நண்பர்கள்

துணையாக இருக்கப்

போகிறார்கள்

 

தோல்வி உன்னை

அணுகாது.

வெற்றி உன்னை

அணுகாமல் இருக்காது

.

இது வரை

யாரும் படைக்காத

புதிய வரலாற்றைப்

படைக்கப் போகிறாய்.

 

இன்று நீ

பெற்ற

வெற்றி தான்

உன்

வாழ்க்கையின்

தொடக்கம்

 

வெற்றியை

நோக்கி செல்

என்று

கூறிக்கொண்டே

தன் மகன்

அலெக்சாண்டரை

கட்டித் தழுவிக்

கொள்கிறான்

மன்னன் பிலிப்

 

மன்னன் பிலிப்

சொன்னது போல

பியூசிபேலஸ்

குதிரையை வாங்கி

அலெக்சாண்டரிடம்

கொடுக்கிறான்.

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டருக்கு

உரிமையானது

சொந்தம் ஆனது

 

அலெக்சாண்டர்

எங்கு எல்லாம்

சென்றானோ

அங்கு எல்லாம்

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது.

அலெக்சாண்டருடன்

பல போர்களில்

கலந்து கொண்டது

 

அலெக்சாண்டர்

பியூசிபேலஸ்

குதிரையுடன்

இணைந்து பல

போர்களை

வென்றான்.

பியூசிபேலஸ்

இறுதிக்

காலம் வரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது

 

கிமு.326 ஜுலை

மாதம்

இந்தியாவின்

ஜீலம் நதிக்கும்

சீனாப் நதிக்கும்

இடைப்பட்ட

பகுதியான

தற்போதைய

பஞ்சாப் என்று

அழைக்கப்படும்

பகுதியை ஆண்ட

அரசனான

போரஸ் என்கிற

புருஷோத்தமன்

எது வந்தாலும்

சரி அந்நியனுக்கு

அடிபணிய

மாட்டேன்.

என்று

அலெக்சாண்டரை

எதிர்த்துப் போர்

புரிந்தான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய

வாழ்க்கையிலேயே

அப்போது தான்

முதன் முதலாக

ஒரு உண்மையான

வீரனைப் பார்த்தான்

 

இந்தப் போரில் தான்

பியூசிபேலஸ்

குதிரை பலத்த

காயங்களுடன்

மரணம் அடைந்தது

 

பியூசிபேலஸ்

மறைந்த

பிறகு தான்

அலெக்சாண்டரை

விட்டுப் பிரிந்தது.

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-10-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-10-செயற்கரிய-

திருக்குறள்

 

அலெக்சாண்டரின்

வீரத்தைப் பார்த்த

அந்த

மைதானத்தில்

கூடியிருந்த மக்கள்

அனைவரும்

ஆச்சரியப்பட்டனர்

தங்கள்

மகிழ்ச்சியை

வெளிப்படுத்தினர்.

தங்களுடைய

மகிழ்ச்சியை

வெளிப்படுத்தும்

விதமாக

அலெக்சாண்டரை

வாழ்த்தினர்

அந்த

மைதானத்தில்

கூடி இருந்த

மக்கள்

அனைவரும்

எழுந்து நின்று

கை தட்டி

ஆரவாம்

செய்தனர்

 

அலெக்சாண்டர்

வாழ்க

என்ற கோஷம்

அந்த

மைதானத்தையே

அதிரச் செய்தது.

 

யாரும்

செய்யாத செயலை,

யாராலும்

செய்ய

முடியாத செயலை

அலெக்சாண்டர்

செய்து காட்டினான்.

 

குதிரையை

அடக்கிய

அலெக்சாண்டர்

தனது தந்தையை

நோக்கி வந்தான்.

மன்னன் பிலிப்

அலெக்சாண்டரை

கட்டித் தழுவினான்.

 

என்ன சொல்வது

என்று தெரியாமல்

வார்த்தைகளின்றி

தவித்துக் கொண்டு

இருந்த மன்னன்

பிலிப் தன்னுடைய

மகனைப் பார்த்து

பேசத் தொடங்கினான்.

 

என் மகனே

அலெக்சாண்டர்

அடங்காத

குதிரையை

அடக்கியதன் மூலம்

நீ ஒரு திறமையான

வீரன் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்.

வெற்றி பெறுவதற்கு

வீரம் மட்டும்

போதாது

அறிவும் வேண்டும்

என்று

நிரூபித்து

இருக்கிறாய்

 

எத்தகைய

பிரச்சினையையும்

உன்னால் சமாளித்து

வெற்றி பெற

முடியும் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்

யாரும் செய்யாததை

யாராலும்

செய்ய முடியாததை

உன்னால் செய்ய

முடியும் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்

 

இவைகளை நீ

மக்கள்

முன்னிலையில்

நிரூபித்து

இருக்கிறாய்

மக்கள் அனைவரும்

ஏற்றுக் கொள்ளும்

வகையில்

நிரூபித்து

இருக்கிறாய்

 

உனக்குக் கிடைத்த

இந்த வெற்றி

இந்தக் குதிரையுடன்

முடிந்து

விடப்போவதில்லை

உன்னுடைய

வெற்றிப் பயணம்

இன்று தான்

தொடங்கி இருக்கிறது

 

பல

போர்க்களங்களைக்

காணப் போகிறாய்.

பல வெற்றிகளைக்

குவிக்கப் போகிறாய்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////